Thursday, August 20, 2009

ஊசிப் பட்டாசு



உருவத்தில் சிறிசு

சத்தத்தில் பெரிசு

என்றுமே ஊசிப் பட்டாசு



விடிந்தால் பொழுது எழுப்புதல் கஷ்டம்

பால் கொடுத்தால் பாதி அதில் நஷ்டம்

உணவளிப்பதோ அதை விடக் கஷ்டம்



ஏனிந்தக் கோணங்கி என்றே கேட்டால்

கோணலானாலும் குறும்பானாலும் நான்

என்றுமே உன்னுடையதாக்கும்

என்றே சொல்லி ஓடுதையா தெருவினிலே

எங்கள் வீட்டு ஊசிப் பட்டாசு



by நடராஜன் கல்பட்டு

No comments: