Monday, April 30, 2012

ome Remedies For kidneys

The kidneys and the bladder play important roles in the body. The main function of the kidneys is to remove excess fluid and waste products from the body through the urine. They also regulate the body's potassium and sodium levels, as well as its pH balance, and produce hormones that affect other organs, including erythropoietin (which stimulates red blood cell production) and renin (which helps blood flow). Since the kidneys are such a vital body organ, any injury or disease that interferes with kidney function has the potential to be very serious. Kidney disease is actually a catch-all term that includes diseases ranging from kidney stones and urinary tract infections to more serious disorders such as glomerulonephritis and polycystic kidney disease. Although each kidney condition has its own unique characteristics, certain symptoms are associated with the majority of kidney problems.
These include a frequent urge to urinate, chills, fluid retention (puffiness in the face and limbs or resulting weight gain), back pain (felt just under the ribs), vomiting, fever, pain, nausea, loss of appetite, and a burning sensation during urination. The urine may be cloudy or bloody. Both kidneys are usually affected by any kidney disease. If the ability of the kidneys to filter blood is seriously damaged, excess fluid and wastes may build up in the body. This causes symptoms of kidney failure and severe swelling.
The bladder is a hollow organ with muscular walls that is part of the urinary tract. Urine continuously drains into the bladder from the kidney. In an adult, the bladder can hold about two cups of urine. As the bladder fills, it causes discomfort and, hence, the urge to urinate.
Bladder infections and inflammation can occur in any area of the bladder and servicing tissue. The most common bladder disorder, cystitis, is an infection or inflammation of the bladder. Symptoms of cystitis include a frequent urge to urinate (even though the bladder may be empty), excessive night urination, and dark or cloudy urine with an unpleasant or strong odor. Lower abdominal pain and a painful, burning sensation on urination may accompany the infection. There may be blood in the urine, and you may suffer chills, fever, loss of appetite, nausea, vomiting, and back pain.
In addition to the herbs listed below, other beneficial herbs include barberry, bilberry, horsetail, marshmallow, sarsaparilla, and speedwell.
Home remedies for kidneys

Home remedies for kidneys #1:
1 teaspoon Oregon grape root
1 teaspoon wild cherry root
2 cups water
Place the above herbs in a pan and cover with the water; bring the mixture to a boil; reduce heat and simmer for 3o minutes; cool and strain. Place a tablespoon of the resulting tea in an 8-ounce glass of water and stir well. Drink one to two tablespoons at a time, up to one cup a day.
Home remedies for kidneys #2: TO IMPROVE URINE FLOW
1 teaspoon horseradish root
1 teaspoon queen of the meadow
1 teaspoon parsley
1 cup boiling water
Combine the above herbs and cover with the boiling water; steep for 3o minutes; strain. Take one tablespoon of the mixture in a glass of apple juice, three or four times daily.
Home remedies for kidneys #3:
1 teavoon black currant
1 teaspoon pipsissewa
1 cup boiling water
Combine the above herbs and cover with the boiling water; steep for 15 minutes; strain. Use two to three times daily for inflammation of the bladder, up to three cups a day, for no more than three days.
Home remedies for kidneys #4:
1 teaspoon uva urei leave and atente
1 teaspoon Oregon grape
2 cups water
Place the herbs in a pan and cover with the water. Bring to a boil and boil for 3o minutes; strain. Take as needed.
web sources

Engr.Sulthan
30 பொன் மொழிகள்

பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்

சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.


10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்


21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

24. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்

25. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்

26. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

27. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

28. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

29. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

30. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
தொகுப்பு: குலசை.சுல்தான்
மிரளும் அம்மாக்கள்!

காலை நான்கு மணிக்கு சென்னை, சென்ட்ரலில் அந்த ரயில் வந்து நிற்கிறது. பயணிகள் அனைவரும் இறங்கிக் கலைந்த பின்பும், அங்கேயே நிற்கிறார்கள் இரண்டு பதின்பருவச் சிறுவர்கள். கையில் பையும் இல்லை; காசும் இல்லை. கண்களில் களேபரம். எங்கே போவது? எப்படிப் போவது?

சென்னை, எக்மோரில் தென் தமிழகத்திலிருந்து வரும் அந்த ரயில் வந்து நிற்கிறது. ஏதோ சாதித்துவிட்ட ஆசையில் ஒரு சிறு பெண் இறங்குகிறாள். ஆனால், தான் ஆசையுடன் பார்க்க வந்த சினிமா நடிகரின் வீட்டுக்குப் போகும் வழி தெரியவில்லையே என்கிற பயம் வந்தவுடன், கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது. சமூக விரோத கும்பல் அவளை நெருங்குகிறது. அங்கிருக்கும் பிச்சைக்காரர், ரயில்வே போலீஸிடம் விரைந்து சென்று விவரம் சொல்ல, அந்தச் சிறுமி அவர்களிடம் தஞ்சமடைகிறாள்.

’பள்ளிக்கூடம் போகிறேன்’ என்று கிளம்பி வீட்டை விட்டு வெளியேறிய சுரேஷ், தன் சொந்த ஊரிலிருந்து சென்னை வரும் பஸ்ஸில் ஏறினான். கோயம்பேடு வந்து இறங்கியவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பசி தாங்கமுடியாமல் எச்சில் தட்டு கழுவும் வேலைக்குச் சேர்ந்தான், அங்கிருக்கும் ஹோட்டல் ஒன்றில்! அரசு அலுவலர்களான அம்மா, அப்பா தேடிக் கண்டுபிடித்துவிட்ட பின்பும் வீட்டுக்குத் திரும்ப அவன் விரும்பவில்லை என்பது பெரும் சோகம்.

"இப்படி... அம்மா, அப்பாவிடம் கோபித்துக் கொண்டோ, சண்டை போட்டுக் கொண்டோ வீட்டை விட்டு ஓடிவரும் பதின்பருவ சிறுவர் – சிறுமிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இதில் சிறுமிகளின் எண்ணிக்கைதான் அதிகம்" என்கிறது தமிழகக் காவல்துறை.



''எம்பொண்ணுக்கு படிக்கறதுல அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா, அவ நல்லா படிச்சு வாழ்க்கையில முன்னேறணுமேனு ‘படி... படி...’னு சொல்வேன். இப்போ எல்லாம், ‘ரொம்ப படுத்தினாஸ வீட்டை விட்டு ஓடிப்போயிடுவேன்’னு சொல்றா. எனக்கு உயிரே போறமாதிரி இருக்கு. அதனால் படினு சொல்றதையே நிறுத்திட்டேன். படிப்பைவிட புள்ளைதானே முக்கியம்..?!"- இப்படி மனம் பிழியும் வருத்தத்துடன் சொல்லும் அம்மாக்களும் இப்போது அதிகரித்துக் கொண்டிருப்பதிலிருந்தேஸ பிரச்னையின் வேர் எங்கிருக்கிறது என்பதை நாம் ஒருவாறு யூகித்துக்கொள்ள முடியும்.

வீட்டை விட்டு ஓடிவரும் குழந்தைகளை மீட்கும் ‘சைல்ட் ஹெல்ப் லைன்’ ஒருங்கிணைப்பாளார் பெல்சி, இதைப்பற்றி பேசும்போது, "10 – 17 வயதுக்குட்பட்ட பிள்ளைகள்தான் அதிகமாக வீட்டைவிட்டு ஓடுகிறார்கள். வீட்டில் ‘படி.... படி....’ என்று படுத்துவதால் ஓடிவரும் குழந்தைகள், பெரும்பாலும் ஏழைக் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள் என்றொரு தவறான புரிதல் இருக்கிறது. நடுத்தர வர்க்கத்து வீட்டுக் குழந்தைகளும், நல்ல வேலைகளில் இருக்கும் பெற்றோர்களின் குழந்தைகளும் இதில் அடக்கம்.

‘அம்மா, அப்பா என்னைச் சரியா கவனிக்கறது இல்ல. என்கிட்ட உட்கார்ந்து பேசக்கூட அவங்களுக்கு நேரமில்ல. வெறுத்துப் போயி வந்துட்டேன்’, ‘எங்கப்பா குடிச்சிட்டு வந்து தினம் தினம் பண்ற அக்கிரமம் தாங்க முடியல’, ‘எப்பப் பார்த்தாலும் படிக்கச் சொல்லியே அடிக்கறாங்க’ என்றெல்லாம் கண்ணீர் வழியக் காரணம் சொல்லும் குழந்தைகளும் இருக்கிறார்கள்" என்ற பெல்சி,"

விவாகரத்து பெற்று, அல்லது கணவனை விட்டுப் பிரிந்து தனித்து வாழ்கிற பெண்களின் குழந்தைகளும் அதிகமாக ஓடி வருகிறார்கள். அப்பாவுக்கு, திருமணத்துக்குப் பிறகு இன்னொரு உறவு இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் குழந்தைகள், அதுவே விவாகரத்தான அம்மா இன்னொரு உறவை ஏற்றால், அதை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவ தில்லை. அக்கம்பக்கத்தினரின் விமர்சனத்தையும் எதிர்கொள்ள முடியாமல், ஓடிவருகிறார்கள்" என்று இதன் பின் இருக்கும் சமூகப் பிரச்னையையும் உடைத்தார்.



"வீட்டை விட்டு ஓடி வருகிறவர்களில் ஆண் குழந்தைகளைவிட, பெண்கள்தான் அதிகம் என்கிற உண்மைஸ மிகுந்த பேரதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்களா அல்லது கடத்தப்படுகிறார்களா என்கிற காரணத்தைக் கண்டறிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கான சமூகக் காரணங்களையும் உளவியல் காரணங்களையும் அதன் வேரின் ஆழத்தில் இருந்து ஆராய வேண்டிய தருணம் இது என்பதற்கான அபாய மணிதான் இந்தத் தகவல்" என்கிறார் சமூக ஆர்வலர் ஷீலு.

குழந்தை உலகில் உறுத்திக் கொண்டிருக்கும் இப்பிரச்னைகளுக்கு, தாய்மை நிறைந்த அக்கறையுடன் தீர்வுகளை அடுக்குகிறார் குழந்தைகள் மனநல சிறப்பு மருத்துவர் ஜெயந்தினி."வேகமாக நகரும் இன்றைய வாழ்க்கைச் சூழலில், குழந்தைகளுக்கு எந்த சிறு ஏமாற்றத்தையோ, கஷ்டத்தையோ தாங்கும் மனது இருப்பதில்லை. இதுதான் குழந்தைகளிடம் இருக்கும் பிரச்னை. கல்வியும், வீட்டுச் சூழலும் அந்த தன்னம்பிக்கையை, பொறுமையை, எந்தப் பிரச்னையையும் எதிர்நோக்கும் மனசக்தியை அவர்களுக்கு வளர்ப்பதில்லை. கூடவே, டி.வி. நிகழ்ச்சிகளால் வேறு அதிகமான பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

இப்படி வளரும் குழந்தைகள்தான் படிப்பு, ஹோம் வொர்க், தான் விரும்பும் பொருளை வாங்குவது என்ற காரணங்களுக்காக அம்மாவை இப்படி பயமுறுத்தும். அம்மாவிடம் சொன்னால் உணர்வுபூர்வமாக அவள் மிகவும் பயப்படுவாள் என்று குழந்தை புரிந்து வைத்திருக்கிறது. அப்படி அம்மாவை பயமுறுத்தி காரியம் சாதிக்கும் குழந்தைஸ உச்சபட்சமாக, தான் சொன்னதை நிரூபிக்க வீட்டை விட்டும் வெளியேறும்.

சூழ்நிலையில் தவறு இருக்கும் குழந்தை, தான் விரும்பாத, தன்னை அச்சுறுத்தும் அந்தக் சூழ்நிலையில் இருந்து தப்பிப்பதற்காக அப்படிச் செய்வாள். குடும்பத்தில் எப்போதும் குழந்தைகள் முன்பு சண்டை போட்டுக்கொள்ளும் பெற்றோர், தினம் தினம் அடித்து மிரட்டும் குடிகார அப்பா, பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் உறவுக்காரர்கள்ஸ இவைஎல்லாம்தான் குழந்தைகள் வெறுக்கும் சூழல்கள். இந்தச் சூழ்நிலையில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும் வீட்டை விட்டு ஓடுவார்கள்" என்ற டாக்டர், குழந்தைகளை அணுகும் விதம் பற்றியும் பகிர்ந்தார்.



"குழந்தை முதல் முறை ‘நான் வீட்டை விட்டு ஓடிப்போயிடுவேன்’ என்று சொல்லும்போது பயந்துவிடாமல், அவனை அடித்து துன்புறுத்தாமல் அந்த விஷயத்தை விட்டுவிட வேண்டும். வீட்டை விட்டு ஓடிப்போனால் எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதையும்; உணவு, உடை, படிப்புகூட கிடைக்காமல் ஏங்கும் பலநூறு குழந்தைகள் இருக்க, எக்ஸாம் ஃபீவர், விரும்பிய சைக்கிள் கிடைக்காதது என அந்தக் குழந்தைக்கு இருக்கும் மன வருத்தங்கள் எல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதையும் அன்பாகச் சொல்லி புரியவைக்க வேண்டும்.

சில குழந்தைகள் மிக ஆக்ரோஷமான மனநிலையில் இருந்தால், மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது!" என்று பாஸிட்டிவ் வழிகாட்டினார் ஜெயந்தினி!கடந்த ஓராண்டில் மட்டும் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்த 225 குழந்தைகளை மீட்டுள்ளனர் காவல் துறையினர். ஆனால், அவர்களின் கவனத்துக்கு வராமல் காலம் முழுக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுவர்கள் எத்தனை பேர் என்பதை எப்படி அனுமானிப்பது?இந்தப் பட்டியலில் உங்கள் குழந்தையும் சேரத்தான் வேண்டுமா?

நன்றி: அவள் விகடன்
--


ALAVUDEEN
குடல் புண் (அல்சர்) - சில உண்மைகள்

வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் இருக்கலாம்.

குடல் புண் என்றால் என்ன?

இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டு. இதை அமில குடல் புண்நோய் என்றும் அழைக்கிறோம்.

புண் எதனால் ஏற்படுகிறது?

குடல் புண் தோன்றுவதற்கரிய காரணங்கள் இதுவரை தெளிவாக அறியப்படவில்லை இருப்பினும் புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன. சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் போன்ற மருந்துகளின் காரணமாகவும் குடல் புண் வருகிறது.

குடல் புண் வகைகள்

குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1) வாய்வுக் கோளாறால் ஏற்படும் குடல் புண் .

2) சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.

குடற்புண் இருப்பதை அறிவது எப்படி?

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாகக் கொள்ளலாம்.

இந்தப் பகுதியில் ஏற்படும் அசெளகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம். சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ் வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாகக் காணப்படுகிறது.

சில நேரங்களில் அமில நீரானது வாந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம், வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு, அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும். இந்த மாதிரியான அசெளகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம்.

ஒருநபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார். என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும். சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

சிலருக்கு இவ்வலி, குறிப்பிட்ட இடைவெளிவிட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாகக் கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம்.

மருத்துவம் செய்யாவிட்டால்...

குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யாவிட்டல், ரத்தக் கசிவும் சமயத்தில் உதரப் போக்கும் ஏற்படும். ரத்தக் கசிவின் காரணமாக, அரைத்த காபிக் கொட்டை போன்று கருஞ்சிவப்பு நிறத்தில் ரத்த வாந்தி எடுப்பார், வலி நிவாரணியான ஆஸ்பரின் போன்றவற்றை சாப்பிட்டால் மிக மோசமான ரத்தப் போக்கு ஏற்படும். அதிகமான ரத்தப் போக்கோ அல்லது ரத்தக் கசிவோ மிகவும் அபாயகரமானதாகும்.

இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புக்கள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படுகிறது. அதனால், வயிற்று அறை தோல்களில் வீக்கம் ஏற்படுகிறது. இதை உடனடி அறுவைச் சிகிச்சை மூலமே குணப்படுத்த முடியும்.

சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.இதுவும்அறுவைச் சிகிச்சையால்தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்..

செய்யக்கூடாதவை

0 புகைபிடிக்கக் கூடாது.

0 மது, காபி பானங்களை குடிக்கக் கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது.

0 அதிகமாகச் சாப்பிடக்கூடாது.

0 பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

0 சாப்பிட வேண்டிய உணவுகளைத் தவிர்க்கக் கூடாது.

0 சாப்பிட்டவுடன் முன்பக்கமாகச் சாய்வதோ, வளைவதோ கூடாது. அப்படிச்செய்தால் சாப்பிட்ட உணவு தொண்டைக் குழிக்குள் வந்து சேரும். இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

0 இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் கூடாது.

0 மனநிலையை தடுமாற விடக் கூடாது.

0 அவசரப்படக் கூடாது.

0 கவலைப்படக் கூடாது.

0 மருத்துவ ஆலோசனைகளை அலட்சியப்படுத்தக் கூடாது.

செய்ய வேண்டியவை

0 குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும்

0 தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

0 அதிக வாழைப் பழங்களைச் சாப்பிட வேண்டும்.

0 தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவையூட்டிய லஸ்ஸி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

0 மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.

0 இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும்.

0 இருக்கமாக உடை அணியக் கூடாது.

0 மருத்துவரின் ஆலோசனைப்படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்திக் கொள்ளலாம்.

0 யோகாசனம், தியானம் முதலியவற்றைப் பயில வேண்டும்.

0 எப்போதும் ஜாலியா இருக்க வேண்டும்

0 அலுவலக வேலைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும்.

0 முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும்.

0 சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

குடல் புண்ணுக்கு மருத்துவம் என்ன?

அனேக மருத்துவர்கள் பூரண ஓய்வையும் அதிகமான தூக்கத்தையும் சிபரிசு செய்கிறார்கள். தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், கவலைகள் குடல் புண்ணை அதிகப்படுத்தும், புகை பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது முதலியவற்றை விட வேண்டும். அமிலத்தை நடுநிலையாக்கும் மருந்துகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். தூக்க மருந்துகளையும் தேவைப்பட்டால் மன அமைதி தரும் மருந்துகளையும் சாப்பிட வேண்டும். இவை தவிர, தற்காலத்தில் புரோபான்தளின், சிமிடிடின், ராணிடிடின், •பாமாடிடின், சுரால்பேட், முதலியவும் பயன்படுகிறது, சிமிடிடின்தான் அதிகம் சிபரிசு செய்யப்படுகிறது. எந்த மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படிதான் சாப்பிட வேண்டும்.

குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்ன?பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளைக் கீழே காணலாம். சத்தான சரிவிகித உணவு.

0 குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம்.

0 காபி, மது, காற்று அடைக்கப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும்.

0 டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. இருப்பினும் பால் கலக்காத டீயைச் சாப்பிடக் கூடாது. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்தக் கொள்ள வேண்டும்.

0 வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.

0 மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

0 பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

0 பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசெளகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

0 பால் சாப்பிடுவதை யாரும் சிபரிசு செய்வதில்லை.

- Dr.அம்புஜவல்லி, தஞ்சாவூர்.

-- http://ping.fm/2CflX


ALAVUDEEN
சர்வதேச ஓட்டுநர் உரிமம் (International Driving Licence) பெறுவது எப்ப‍டி?

December 17th, 2011, vidhai2virutcham
படித்தவர்கள் (உங்களோடு சேர்த்து)39
டிரைவிங் லைசன்ஸ் தொடர்பான பல்வேறு விஷயங்களையும் கடந்த இரண்டு இதழ்களில் வாசகர்களுக்கு விளக்கிய சென்னை-மேற்கு வட்டார ப் போக்குவரத்து அதிகாரி இன்னும் பல உபயோகமா ன தகவல்களையும் கூறி னார். அவற்றின் தொகுப்பு …
இங்கே வழங்கப்பட்ட ஓட் டுநர் உரிமத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் அமெரிக்கா சென்றா ல் அங்கே அவர் வாகனம் ஓட்ட முடியுமா?
இந்தியாவிலிருந்து, அமெரிக்காவுக்கோ அல்லது வேறு நாடுகளுக் கோ செல்பவர்கள், அங்கே சென்றவுடனே வாகனம் ஓட் ட வேண்டிய அவசியம் ஏற் படலாம். அந்த நாட்டில் டிரை விங் லைசென் ஸுக்கு விண் ணப்பித்து, அது கிடைக்கும் வரை காத்திருக்க முடி யாத சூழ்நிலையில், இங்கே இருந் து செல்லும்போதே இன்டர் நேஷனல் டிரைவிங் லைசெ ன்ஸ் பர்மிட் வாங்கிக்கொண்டு செல்லலாம். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்த த்தின்படி, அந்த டிரை விங் பர்மிட், அந்த நாட்டில் ஓராண்டு காலத் துக்குச் செல்லுபடி யாகும்.
சர்வதேச வாகனம் ஓட்டுநர் உரிமையை வாங்குவது எப்படி?
ஒருவர் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் மட்டுமே,இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் லைசென்ஸுக்கு விண் ணப்பிக்க முடியும். அதற்கு ரிய 4ஏ விண்ணப்பத்தைப் பூர் த்தி செய்து, அதனுடன் டிரை விங் லைசென்ஸ், பாஸ்போ ர்ட், விண்ணப்பதாரர் எந்த நா ட்டுக்குச் செல்கிறாரோ அதற் குரிய விசா, பயண டிக்கெட் பிரதி, மருத்துவச் சான்றிதழ், மூன்று பாஸ்போர்ட் சைஸ் போட் டோக்கள் ஆகியவற்றை இணை த்து ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டு ம். விண்ணப்பித்த அன்றே, இன்டர்நேஷனல் லைசென்ஸ் வழங்கப் பட்டுவிடும்.
இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவத ற்கான லைசென்ஸ் வைத்திரு ந்து, கார் ஓட்டக் கற்றுக் கொண் டால், அவருக்கு இரண்டு வகை யான வாகனங்களையும் ஓட்ட தனி லைசென்ஸ் வழங்கப்படுமா ? இரண்டுக்குமாக சேர்த்து ஒரே லைசென்ஸ் வழங்கப்படுமா?
இரண்டு சக்கர வாகனம் ஓட்ட லைசென்ஸ் வைத்திருப்பவர். கார் ஓட்டுவதற்கு முதலில் பழகு நர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கெனவே இரண்டு சக்கர வாகனத்துக்குண்டான லைசென்ஸ் இருப்பதால் சாலைவிதிமுறைகள் குறித்த தேர்வு எழுதுவதில் விலக்கு அளிக்கப் படும். முப்பது நாட்களுக்கு கார் ஓட்டப் பழகியவுடன், விண்ண ப்பம் 8 ஐ பூர்த்தி செய்து விண் ணப்பிக்க வே ண்டும். வாகன ஆய்வாளர் முன்பாக நீங்கள் கா ரை ஓட்டிக் காட்ட, அவர் திரு ப்தி அடைந்தால், இரண்டு சக் கரம், நான்கு சக்கரம் என இர ண்டு வகை வாகனங்களை யும் ஓட்டுவதற்கு புதிதாக ஒரே லைசென்ஸ் வழங்கப்பட்டுவிடும்.
ஒருவருக்கு வழங்கப்பட்ட லைசென்ஸ் அதில் குறிப்பிடப்பட்டுள் ள தேதியில் காலாவதியாகிறபோது புதுப்பித்துக் கொள்ள என்னவழிமுறை பின்பற்ற வேண் டும்?
பொதுவாக, போக்குவரத்து அல்லாத வாகனங்களை ஓட் டுவதற்கு உரிமம் பெற விண் ணப்பிப்பவர்களுக்கு ஐம்பது வயது வரை செல்லத்தக்க ஓட்டுநர் உரிமங்கள் வழங்க ப்படும். அதன் பிறகு, அத னை நீட்டிக்க விரும்புபவர்கள், அதற்குரிய படிவம் 9 ஐ பூர்த்தி செய் து, உரிய கட்டணம் செலுத்தி, மருத்துவச் சான்றிதழுடன் விண்ண ப்பித்தால், அது பரிசீலிக்கப்பட்டு ஐந்தாண்டு காலத்துக்கு ஓட்டுநர் உரிமம் அனுமதிக்கப்படும். போக்குவரத்து வாகனங்கள் என்றால் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.
இப்போது இரு சக்கர வாக னமோ (பைக்) காரோ வாங்கு ம்போது 15 ஆண்டுகளுக்கு செ லுத்த வேண்டிய சாலை வரி யை ஒரே தடவை யில் ‘ஆயுள் கால வரி’ என்ற பெயரில் வசூ லித்து விடுகிறார்களே? இப்படி ஒரே தவணையில் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமா?
1998ஆம் ஆண்டிலிருந்து போக்குவரத்து அல்லாத பிரிவில் வரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஆயுட்கால வரியாக வசூலிப்பது நடைமு றையில் உள்ளது. வாகன உரிமையாளர் களுக்கும், அர சாங்கத்துக்கும் இது செளக ரியம்தானே? போக்குவர த்து வாகனங்களுக்கு காலாண்டு, அரையாண்டு, ஒரு ஆண்டு மற் றும் ஐந்தாண்டுகளுக்கு வரிப்படி சாலை வரி செலு த்த முடியும். (இன்னொரு வி ஷயம், வாகனம் வாங்குகிறபோது சாலை வரி என்ற பொதுவான பெயரில் செலுத்தும் தொகையில், வாகனங்க ளுக்காக செலுத்தப் படும் சாலை வரியைத் தவி ர, வாகன பதிவுக் கட்டணம், சாலை பாதுகாப்பு வரி, சே வைக் கட்டணம் என்று இன் னும் சில செலவுகள் அடக் கம்).
ஒருவர் கார் வாங்கும்போது ஆயுள் வரி செலுத்துகிறார். சில ஆண்டுகள் கழித்து, அவ ர் ஆந்திராவுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகிவிடுகிறார். தனது காரை ஆந் திராவுக்குக் கொண்டு செல்லும்போது, அங்கே மறு படியும் சாலை வரி கட்ட வேண்டுமா?
ஆமாம். சாலை வரி என்பது அந்தந்த மாநிலங்களுக்கு செலுத்தப்படும் வரி. எனவே, நீங்கள் உங்கள் வாகனத்தை ஒரு மாநிலத்திலிருந்து இன் னொரு மாநிலத்துக்கு எடுத் துக் கொண்டு செல்லும்போ து, அங்கே அதை மறுபடியும் ரெஜிஸ்டிரேஷன் செய்யும் பட்சத்தில், அப்படிச் செய்துவிட்டு, அத ற்குரிய ஆதாரங்களுடன் எங்களுக்கு விண்ணப்பித்து, மீதி வருட ங்களுக்குரிய வாகன வரியை நீங்கள் திரும்பிப் பெற வழி உண்டு. உதாரணமாக வாகனம் வாங் கிய ஐந்தாவது ஆண்டில் நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து வேறு மாநிலத்து க்கு வாகனத்தை எடுத்துக் கொண் டு சென்று மீண்டும் பதிவுசெய்தா ல், மீதி பத்து ஆண்டுகளுக்குரிய வாகன வரியை நீங்கள் ரீஃ பண்டு வாங்கிக் கொள்ள முடி யும்.
வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பா ட்டுச் சான்றிதழ் ஏன் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது?
இன்று காற்று மண்டலம் எந்த அளவுக்கு மாசுபட்டுப் போயிருக்கி றது என்பதையும், இதில் வாகனங்களிலிருந்து வெளிப்படும் புகை க்கு எந்த அளவுக்கு பங்கு இருக் கிறது என்பதையும், நான் சொ ல்லித் தெரிந்துகொள்ள வேண் டியதில்லை. இந்த நிலைமை இன்னமும் மோசமாகாமல் தடுத்து நிறுத்த வேண்டிய கட மையும், பொறுப்பும் நம் அனைவருக்குமே உண்டு. அத னால்தான், அரசாங் கம் வாக னங்களி லிருந்து வெளிப்படும் புகை இன்ன அளவுக்கு அதிக மாக இருக்கக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்துள்ளது.
அதன்படி, வாகன உரிமையாள ர்கள் அனைவரும் தங்களுடை ய வாகனங்களை மாசுக் கட் டுப்பாட்டு பரிசோதனைக்குட்ப டுத்தி, சான்றிதழ் பெற்று அதை யும் வாகனம் ஓட்டுகிறபோது கையில் வைத்திருக்க வேண் டும். இந்தப் பரிசோதனையை, அரசாங்கத் தால் அங்கீகரிக்கப் பட்ட மாசுக் கட்டுப்பாட்டு பரி சேதனை மையங்களில் மட்டு மே செய்ய முடியும். இதற்கென அரசாங்கம் நிர்ணயித் திருக்கும் கட்டணம் செலுத்தி, பரிசோதனை செய்து, சான்றிதழ் பெற வேண்டியது சட்டப்படி கட்டாயமாகும். இந்தச் சான்றிதழ் களுக்கான ஆயுட் காலம் ஆறு மாதங்கள். மாசுக் கட்டு ப்பாடு சான்றி தழுடன், கூடவே ஒரு ஸ்டிக்கர் டோக்கனும் கொடுக்கப் படும். அந்த ஸ்டிக்கரை வாகனத்தி ல் ஒட்டி வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மா சுக்கட்டுப்பாட்டு பரிசோதனை செ ய்து, சான்றி தழ் பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனப் பரிசோதனை யின்போது, அதிகாரியிடம் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழைக் காட்ட வில்லையென்றால், வாகன த்தின் ரகத்துக்கு ஏற்ப அபராதம் வசூலி க்கப்படும்.
இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!

கோபம் – இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு.
தாய், தந்தையர் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக கோபிக்கிறார்கள். அதை அக்குழந்தைகள் புரிந்துகொண்டால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைகிறது. அக்கோபத்தை பிள்ளைகள் தவறாக புரிந்துகொண்டால், அங்கு பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் பாசம் பறிபோய்விடுகிறது.
அதேபோல் மனைவி தன் கணவன் மீது கோபம் கொள்கிறாள் அல்லது கணவன் தன் மனைவி மீது கோபம் கொள்கிறான். அது பொய் கோபமாக, ஊடலாக இருந்தால், அது இன்பமாக மாறிவிடுகிறது. அதே கோபம் உண்மையான கோபமாக இருந்தால் இருவரின் வாழ்க்கையும் நிம்மதியற்று போய்விடுகிறது. சில சமயம் அக்கோபம் புயலாக மாறி இருவரும் பிரிந்து வாழுதல் அல்லது பெரும் விவாகரத்து வரை அழைத்துச் செல்கிறது.
கோபத்தால் பலர் தங்களுடைய உடல் நலத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள். இப்படி பல விளைவுகளை ஏற்படுத்தும் இந்த கோபத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைக் காண்போம்.
அல்லாஹ் தன் திருமறையில் 3:134 வசனத்தில் கோபத்தைப் பற்றி குறிப்பிடும் போது, (பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார்கள் என்று கூறுகிறான்.
ஒரு முறை ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களிடம், ‘எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டார். கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் பதில் சொன்னார்கள். அவர் மீண்டும், மீண்டும் பல முறை உபதேசியுங்கள் என்று கேட்டபோது அப்போதும் நபியவர்கள் கோபம் கொள்ளாதே என்றே பதில் சொன்னார்கள். (அபூஹுரைரா (ரலி) – புகாரி, திர்மிதீ, அஹ்மத்).
கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் திரும்ப திரும்ப கூறியதிலிருந்து நாம் கோபத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்பதை விளங்கிக்கொள்ளலாம். சமுதாயத்தினரிடையே குழப்பம், உறவுகள் பிரிவு, உடல் நலக் கேடு என எல்லா வகையிலும் இந்த கோபம் முக்கிய ஆணிவேராக அமைகிறது.
யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் உண்டாகட்டும்!) என்று சற்றே மாற்றி ஸலாம் கூறினர். நபி (ஸல்) அவர்கள், வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். அப்போது அருகில் இருந்த ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்களை கோபப்பட்டு சபிக்கும் விதமாக, அலைக்குமுஸ்ஸாமு வத்தாமு (உங்களுக்கு மரணமும், இழியும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவே! அருவருப்பாகப் பேசுபவளாக இருக்காதே! என்று கண்டித்தார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான்தான் அவர்கள் சொன்னதற்கு, வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று பதில் சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று திருப்பிக் கேட்டார்கள். (ஆயிஷா (ரலி) – புகாரி, முஸ்லிம்).
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த யூதர்கள் கூறியதற்கு, இப்படி கோபமாக பதில் சொன்னதற்கு நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். எதிரிகளிடமும் மென்மையான போக்கை கடைப்பிடித்து அவர்களை திருத்துவதே நபியவர்களின் அழகிய வழிமுறை. ஏன் நபி (ஸல்) அவர்கள் மென்மையான போக்கைக் கையாண்டார்கள்? காரணம், நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா (ரலி) – புகாரி, முஸ்லிம்).
அதேப் போல் ஒரு முறை பள்ளியில் சிறுநீர் கழித்த கிராமவாசி ஒருவரை நபித்தோழர்கள் கோபம் கொண்டு தாக்க முயன்றபோது, அவர்களைத் தடுத்து நிறுத்தி, சிறுநீர்பட்ட அந்த இடத்தை தம் கைகளால் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்தது நபியவர்களின் மென்மையின் உச்சக்கட்டம். இதேப் போல் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது இறைமறுப்பாளர்கள் கடுமையாக நடந்து கொண்டார்கள். அவர்களிடமும் கோபம் கொள்ளாமல் மென்மையான போக்கைக் கையாண்டு அந்த உடன்படிக்கையில் வெற்றிப் பெற்றது மென்மைக்குக் கிடைத்த வெற்றியேத்தவிர கோபத்தால் கிடைத்த வெற்றியல்ல.
மென்மையை இழப்பவன் நன்மையை இழப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) – முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).
பொதுவாக கோபம் கொள்பவர் தன் நிலையை இழந்துவிடுவார். அதனால்தான் அரபியில் ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், முடிவு வருத்தம் என்று சொல்வார்கள். இதேப் போல் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்: Anger is a short madness (கோபம் என்பது ஒரு அரைப்பைத்தியம்). உண்மையில் பைத்தியக்காரன் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியமாட்டான். கோபம் கொண்டவரும் அதேபோல் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் இருப்பார்கள். கோபத்தில் இருப்பவர்கள் கூறுவார்கள், கோபம் வந்தா நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்வார்கள். தமிழில் கூட கோபதைப் பற்றி ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்று சொல்வார்கள். உண்மையில் கோபம் கொண்டு எழுந்து அதற்கான செயலில் ஈடுபடும் போது அநீதீ, அட்டூழியம், உறவுகள் பிரிவு சில சமயம் கொலைக் கூட செய்வார்கள்.
சிலருக்கு கோபம் வந்தால் அந்த கோபத்திற்கு காரணமான நபரைப் பார்த்து, அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள். அதுவும் தாயையும், அக்காவையும் விபச்சாரம் செய் என்று கருத்துப்பட உள்ள வார்த்தைகளை கூறுவார்கள். இது எல்லா சமுதாயத்தினரிடமும் சர்வசாதாரணமாக இருக்கிறது. திட்டுவதுதான் சண்டைக்கும், கொலைக்கும் முக்கிய காரணமாக அமைகிறது.
கெட்டவார்த்தைகள் பேசுபவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) – அஹ்மத், இப்னுஹிப்பான்) மற்றொரு ஹதீஸில்: தன் நாவால் வெட்கம் கெட்ட விஷயங்களைப் பேசுபவனையும், கெட்டவார்த்தைகள் கூறுபவனையும் அல்லாஹ் மிகவும் வெறுக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுதர்தா (ரலி) – திர்மிதீ). திட்டக்கூடியவனாகவோ, சாபமிடுபவனாகவோ, கெட்ட செயல்கள் செய்யகூடியவனாகவோ, கெட்டவார்த்தை பேசுபவனாகவோ ஒரு மூமின் இருக்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ, அஹ்மத், இப்னுஹிப்பான்). கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான், கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மூமின்களாக இருக்கமுடியாது என்றால் எந்த அளவுக்கு இந்த அசிங்கமான கெட்டவார்த்தைகளின் பாதிப்புக்கள் இருக்கும் என்பதை உணரவேண்டும்.
சிலர் கோபத்தினால் அதற்கு காரணமானவரை சபிப்பார்கள். சபிக்கும் போது என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் சபித்துவிடுவார்கள். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது, அதன் பின் விளைவு என்ன என்பதை பற்றிச் சிறிது கூட கவலைப்படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மற்றவரை ஒருவர் சபிக்கும் போது அந்து சாபம் வானத்திற்கு செல்கிறது. அங்கே வானத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது வலது புறமும், இடது புறமும் அலைந்து திரிகின்றது. அங்கும் வழி கிடைக்காததால், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது. (அபுதர்தா (ரலி) – அபூதாவூத்). மற்றொரு ஹதீஸில், ஒருவர் மற்றவரை பாவி என்றோ, காபிர் என்றோ அழைத்தால், அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, காபிராக) இல்லையாயின், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுதர் (ரலி) – புகாரி).
பொதுவாக கோபமும், பொறாமையும் உடன் பிறந்தவர்கள் என்று சொல்லலாம். காரணம் பொறாமையின் உச்சக்கட்டம்தான் கோபம். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினரைப் பிடித்த பொறாமை மற்றும் கோபம் ஆகிய வியாதிகள் உங்களையும் பீடித்துள்ளன. அவை (இரண்டும்) மழித்துவிடக்கூடியவை. முடியை மழிக்கும் என்று கூறமாட்டேன் எனினும் அவை மார்க்கத்தையே மழித்துவிடும் என்று கூறினார்கள். (ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) – திர்மிதீ, அஹ்மத்)
இந்த இரண்டு குணங்களான பொறாமை மற்றும் கோபம் ஆகியவற்றை கொண்ட சமுதாயத்தினர் சிறப்பாக வாழ்ந்ததாக வரலாறே கிடையாது. இருக்குமிடம் தெரியாமல் அழிந்தார்கள் என்பதே உண்மை. நபி யூஸுப் (அலை) அவர்கள் மீது பொறாமையும், கோபமும் கொண்டு, தன்னுடைய தம்பி என்றும் பார்க்காமல் பாழும் கிணற்றில் தள்ளினார்கள். இறுதியில் அவர்கள் தன் தம்பியிடம்தான் தஞ்சம் புகுந்தார்கள். இது பொறாமை மற்றும் கோபதால் விளையும் தீமையைப் பற்றி திருக்குஆன் கூறும் உண்மைச் சம்பவம்.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் கோபத்தை விடுவதே சிறந்தது.
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்!
சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்!
இணையத்திலிருந்து
Engr.Sulthan
Economical Rights to the Women

Islam gave economical rights to the women 1,300 years before the West.

An adult Muslim woman can own, she can dispose or disown any of her property without consulting any one, irrespective whether she is married or she is single.

In 1870, it was the first time in England, that the West recognized the rights of the married woman, where she was allowed to own or dispose any of her property without consultation.

I do agree that the women were given their economical rights 1300 years ago - these are ancient rights - but the question is – ‘are they modernizing or outdated?’

Women on Job:

A women in Islam, if she wishes to work she can work - There is no text in the Qur’an or the authentic Hadith which prevents or makes it prohibited for a woman to do any work, as long as it is not unlawful, as long as it is within the preview of the Islamic Shariah, as long as she maintains her Islamic dress code.

But natural, she cannot take up jobs, which exhibit her beauty and body - Like for example, modeling and film acting, and such kind of jobs.

Many of the professions and jobs which are prohibited for the woman are also prohibited for the man, for example serving alcohol, working in gambling dens, doing any unethical or dishonest business. All these jobs are prohibited for both men and women.

A true Islamic society requires women to take up profession such as doctors.

We do require female Gynecologists, we do require female nurses, we do require female teachers.

But, a woman in Islam has got no financial obligations - The financial obligation is laid on the shoulders of the man in the family - Therefore she need not work for her livelihood.

But in genuine cases, where there are financial crisis in which both the ends do not meet, she has the option of working.

Here too, no one can force her to work - She works out of her own, absolute free will.

Financial Security for Women:

A woman in Islam has been given more financial security, as compared to the man.

As I told you earlier, the financial obligation is not put on her shoulder - It is put on the shoulder of the man in the family. It is the duty of the father or the brother, before she is married and the duty of the husband or the son, after she is married to look after her lodging, boarding, clothing and financial aspects of her.

Compulsory Marital Gift for a Woman:

When she gets married, she is on the receiving end.

She receives a gift - she receives a dower or a marital gift, which is called as ‘Meher’.

And it is mentioned in the Qur’an in Surah Nisa, Ch.4 Verse No.4 which says, ‘Give to the woman in dower, a marital gift’.

For a marriage to solemnize in Islam, ‘Meher’ is compulsory.

But unfortunately in our Muslim society here, we just keep a nominal ‘Meher’ to satisfy the Qur’an, say 151 Rupees, or some people give 786 Rupees and they spend lakhs and lakhs of Rupees on the reception, on the decoration, on the flowers, on the lunch parties, on the dinner parties.

In Islam, there is no lower-limit, nor is there an upper limit for ‘Meher’ - But when a person can spend lakhs of Rupees on the reception, surely the ‘Meher ’ should be much more.

There are various cultures which have crept into the Muslim societies, specially in the Indo-Pak area.

They give a small amount of ‘Meher’ and they expect the wife to give a fridge, to give a T.V set, they expect the wife to give an apartment, to give a car, etc., and a large sum of dowry, depending upon the status of the husband.

If he is a graduate, they may expect 1 lakh - If he is an engineer they may expect 3 lakhs - If he is a doctor they may expect 5 lakhs.

Demanding dowry from the wife, directly or indirectly is prohibited in Islam.

If the parents of the girl give the girl something out of their own free will, it is accepted - But demanding or forcing directly or indirectly, it is prohibited in Islam.

No Financial Liabilities:

If a Woman works, which she does not have to - whatever earning she gets, it is absolutely her property.

She need not spend on the household - if she wants to spend it is her free will.

Irrespective how rich the wife is, it is the duty of the husband to give lodging, boarding, clothing and look after the financial aspects of the wife.

In case of divorce or if a wife gets widowed, she is given financial support for the period of ‘Iddah’ - and if she has children, she is also given child support.

Right to Inherit:

Islam gave the right to the women to inherit, centuries ago.

If you read the Qur’an - in several verses, in Surah Nisa, in Surah Baqarah and in Surah Maidah, it is mentioned that a woman, irrespective she is a wife or she is a mother, or a sister, or a daughter, she has a right to inherit. And it has been fixed by God Almighty in the Qur’an.
source:aboutislamandmuslims.blogspot.in
Engr.Sulthan
__._,_.___
அறிவோம் அரிச்சுவடி- ஓ,ஓள,ஃ

ஓ தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது பதினோராவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஓகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஓவன்னா" என்பது வழக்கம்.



"ஓ" யின் வகைப்பாடு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ஓ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
இனவெழுத்து

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இம்மூன்று வித அடிப்படையிலும், ஓ என்பது ஒ க்கு இன எழுத்தாக அமையும்[2].
சொல்லில் ஓகாரம் வரும் இடங்கள்



'ஓ' எழுதும் முறை
தனி ஓ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம், ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் ஓ சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[3]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙோ, ஞோ, டோ, ணோ, யோ, ரோ, லோ, வோ, ழோ, ளோ றோ, னோ ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் டோ, யோ, ரோ, லோ போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். டோக்கியோ, யோவான், ரோடு, லோரன்ஸ் (இலங்கை வழக்கு) என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.

ஓகாரம் தனித்து நின்றும், மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும். ஆனால் ஞகர மெய்யுடன் ஓகாரம் சொல்லுக்கு இறுதியில் வராது[4]. ஏகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.
"ஓ" வும் மெய்யெழுத்துக்களும்

ஓ வுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஓகார உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. [5]. இதனால், ஓகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஓகாரத்தைக் குறிக்கும் இரட்டைக் கொம்பு குறியீட்டையும் கால் குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.

18 மெய்யெழுத்துக்களோடும் ஓகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
மெய்யெழுத்துக்கள் சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர் வரிவடிவம் பெயர்
க் இக்கன்னா க் + ஓ கோ கோவன்னா
ங் இங்ஙன்னா ங் + ஓ ஙோ ஙோவன்னா
ச் இச்சன்னா ச் + ஓ சோ சோவன்னா
ஞ் இஞ்ஞன்னா ஞ் + ஓ ஞோ ஞோவன்னா
ட் இட்டன்னா ட் + ஓ டோ டோவன்னா
ண் இண்ணன்னா ண் + ஓ ணோ ணோவன்னா
த் இத்தன்னா த் + ஓ தோ தோவன்னா
ந் இந்தன்னா ந் + ஓ நோ நோவயன்னா
ப் இப்பன்னா ப் + ஓ போ போவன்னா
ம் இம்மன்னா ம் + ஓ மோ மோவன்னா
ய் இய்யன்னா ய் + ஓ யோ யோவன்னா
ர் இர்ரன்னா ர் + ஓ ரோ ரோவன்னா
ல் இல்லன்னா ல் + ஓ லோ லோவன்னா
வ் இவ்வன்னா வ் + ஓ வோ வோவன்னா
ழ் இழ்ழன்னா ழ் + ஓ ழோ ழோவன்னா
ள் இள்ளன்னா ள் + ஓ ளோ ளோவன்னா
ற் இற்றன்னா ற் + ஓ றோ றோவன்னா
ன் இன்னன்னா ன் + ஓ னோ னோவன்னா
வரிவடிவம்

தமிழில் ஓகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறே எப்போதும் இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஓகாரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.


தொல்காப்பியம் ஒகரத்தின் இயற்கை புள்ளி பெற்று நிற்றல் என்று கூறுவதால், ஒகரத்துக்கும் ஓகாரத்துக்கும் இருந்த வேறுபாடு ஒரு புள்ளியே என உணரலாம். இதனால் ஓகாரமே புள்ளியில்லாத அடிப்படைக் குறியீடாக அமைந்தது தெளிவு. இவ்வேறுபாடுகளைக் கல்வெட்டு எழுத்துக்களில் காணமுடியவில்லை. பிந்திய தமிழ் கல்வெட்டுக்களில் ஒகரமும், ஓகாரமும் வேறுபாடு இன்றி எழுதப்பட்டது தெரிகிறது. பிற்காலத்தில் வீரமாமுனிவரே ஓகாரத்தைக் குறிக்க அடியில் சிறிய சுழியொன்றைச் சேர்த்து அதனை ஒகரத்திலிருந்து வேறுபடுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

ஓகாரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஓகாரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஓகாரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.


பிரெய்லியில் ஓகாரம்

கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதலாவது, மூன்றாவது வரிசைகளில் இடது பக்கப் புள்ளியும் இரண்டாவது வரிசையில் வலப்பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அது ஓ வைக் குறிக்கும். இதை கீழே உள்ள படம் காட்டுகிறது.


பாரதி பிரெய்லியில் ஏகாரம்

ஔ தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது பன்னிரண்டாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஔகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஔவன்னா" என்பது வழக்கம்.


"ஔ" வின் வகைப்பாடு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ஔ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
இனவெழுத்து

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இந்த அடிப்படைகளில், ஔ என்பது உ க்கு இன எழுத்தாகும் என்கிறது நன்னூல்[2].
சொல்லில் ஔகாரம் வரும் இடங்கள்


'ஔ' எழுதும் முறை
தனி ஔ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் ஔ சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[3]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙௌ, சௌ, ஞௌ, டௌ, ணௌ, யௌ, ரௌ, லௌ, ழௌ, ளௌ றௌ, னௌ ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல் சகரத்துடனும், யகரத்துடனும் ஐகாரம் சொற்களுக்கு முதலில் வரும் என்கிறது. தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் ரௌ, லௌ போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். ரௌத்திரம், லௌகீகம் என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
ஔகாரம் தனித்தோ, மெய்களோடு சேர்ந்தோ சொல்லுக்கு இறுதியில் வருவதில்லை. ககர மெய்யுடனும், வகர மெய்யுடனும் மட்டுமே ஔகாரம் சொல்லுக்கு இறுதியில் வரும். ஔகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.

ஆய்த எழுத்து

ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்னும் வேறு பெயர்களும் உண்டு.
ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன.
('தொல்காப்பியம்', எழுத்திகாரம் ~ 500 B.C.)
இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும்.
எ.கா:
அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்
இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய்

வரலாறும் இலக்கணமும்
உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்துமொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரிவடிவ எழுத்து தோன்றியது.
"அ" என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து. "அ" என எழுதினால் அது வரிவடிவ எழுத்து.
காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துகள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன.
உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர்மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று, தனியொரு எழுத்தாக இருப்பதால் "தனிநிலை" எனப்படுகிறது.
இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளிகளாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப் பெயர் பெற்றுள்ளது.
ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது.
வழக்காற்றில் இதை "ஆய்த" எழுத்து என்றே கூறுவர். "ஆயுத" எழுத்து எனக்கூறுவது தவறு.
பத்துவகைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆய்த எழுத்து கூறப்பட்டுள்ளது. இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆய்த எழுத்து, ஓசை குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும்பொழுது, "ஆய்தக்குறுக்கம்" என்ற சார்பெழுத்து ஆகிறது.
ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃகு, அஃது என்பன போன்று வரும்.
கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என ஆய்தக்குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும்பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னருமே வரும்.
ஆய்தம் என்பது பொதுவாக, கருவி எனப் பொருள்படும். ஆயினும், போர்க் கருவிகளையே ஆய்தம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆய்தம் எனப் பெயர்பெற்றது.
போர்வீரனின் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு, வட்ட வடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத்தில் கைப்பிடி இருக்கும். மறுபக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டுவதுபோல் இடித்துத் தாக்கும். அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆய்தம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப் பெற்றது.
போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்கருவிகளில் சூலமும் ஒன்று. சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும். அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலு�
பணிவு - வாழ்வை உயர்த்தும் பண்பு

சிலர் நிறைய திறமை, அறிவு இருந்தும் வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாக போராடியே அடைகிறார்கள். ஆனால் அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் கூட எளிதில் நல்ல வேலை , அந்தஸ்து என உயர்ந்த நிலைக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் எளிதில் கிடைக்கிறது.

வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்பவர்களை உற்று நோக்கினால் அவர்களுகிடையே ஒரு ஒற்றுமை தெரியும். அவர்களிடம் பிரதானமாக பணிவு என்னும் குணம் மேலோங்கி இருப்பதைக் காணலாம்.

ஒருவன் தன் தலை முடியைத் தானே தூக்கி தன்னை மேலே உயர்த்திக்கொள்ள முடியாது. சுற்றியுள்ளவர்கள் தான் அவனது பணிவால் ஈர்க்கப்பட்டு பணிவுடைய ஒருவனை தனக்கு மேலே தூக்கி இருத்துவார்கள்.

இங்கே பணிவு என்று குறிப்பிடுவது தற்பெருமை இன்றி அடக்கமாக இருப்பதாகும். அடிமையாகவோ சுயமரியாதையின்றி இருப்பதோ அல்ல. பிறரது சுய மரியாதையை தாக்காமல் இருப்பது. காக்காய் பிடித்தல் முகஸ்துதி எல்லாம் பணிவு ஆகாது இது ஏமாற்று. மனிதர்கள் காலில் விழுவதும் பணிவாகாது அடிமைதனமிது. சுயமரியாதை அற்ற கீழான செயல். தீமைகளுக்கு பணிவதும் கூடாது.

மற்றவர்களை புண்படுத்தாத, பிறரை மதிக்கும் பிறர் உணர்வை புரிந்து கொண்டு நடக்கும் பணிவு ஒருவரை லிப்டில் உயரே போவது போல் வாழ்வில் உயரச்செய்யும். மற்றவர்கள் படிப்படியாகக் கஸ்டப்பட்டுத் தான் ஏற வேண்டும். ஓசையை யாரும் விரும்ப மாட்டார்கள். மெல்லிய இசை தான் மனதை மயக்கும்.

பெற்றோர் பேச்சு கேட்கும் பணிவுள்ள பிள்ளைகளுக்கு தான் அதிகம் பாசம் கிடைக்கிறது. அவர்கள் தேவைகள் கேட்காமலேயே நிறைவேற்றப்படுகிறது. அதுவே பள்ளியிலும் தொடர்கிறது . ஆசிரியர்கள் அடிப்பதில்லை. சிறப்பாக கவனித்து பாடம் சொல்லிக்கொடுகிறார்கள். பாராட்டுகிறர்கள். அதிக மார்க் வாங்குகிறார்கள். பணிவு நல்ல நட்பை தருகிறது, எளிதில் வேலை கிடைக்க உதவுகிறது. பணி உயர்வுக்கு பிறரிடமிருந்து சிபாரிசு பெற்றுத்தருகிறது. போட்டிகள் பொறாமைகள், எதிர்ப்புகள், தடைகள் எதுவும் இருக்காது.

மற்றவர்கள் கருத்துக்கு எதிர் கருத்தை கூட பணிவுடன் சொல்லும்போது அதற்கு நிச்சயம் அங்கீகாரமோ கவனிப்போ இருக்கும். இனிமையாக் பேசுதலும் பிறர் நலனில் அக்கறை காட்டுதலும் எப்போதும் நமக்கு பல மடங்காகத் திருப்பிக் கிடைக்கும். திறமையான பாய்மரக்கப்பல் மாலுமிகள் காற்றின் சக்தியைக் கொண்டே காற்றுக்கு எதிர் திசையில் கூட கப்பலை செலுத்த கூடியவர்கள்.

அதிகமான கல்வி, புகழ், பதவி, அதிகாரம், செல்வம் நம்மிடம் சேர்ந்தால் அதைக் கொண்டு பிறர் பயன் பெறும் வரை தான் நமக்கு உயர்வு. மாறாக அது தரும் செருக்கால் மற்றவர்களது உணர்வுகள் காயப்படும் போது நாம் நாம் கீழ் நோக்கி செல்லத் தொடங்குகிறோம். அப்படி பிறர் நோகும் படி மமதையில் வாழ்பவர்கள் கீழே விழ நேர்ந்தால் அவன் கதி மாட்டிக்கொண்ட பிக் பாக்கட் கதி தான்.

அறிவை , அதன் பலனை பிறருக்கு பகிர்ந்து கொள்ளாத அறிவாளிகளை யாரும் மதிப்பதும், விரும்புவதுமில்லை. யாருக்கும் பயன் படாத பணத்தை காக்கும் பணக்காரனைப் பற்றி தெரிந்து கொள்ள திருடனைத் தவிர யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. புகழ் வரும்பொது தன்னடக்கத்தை பேண வேண்டும். புகழ் மமதையை தருமானால் மமதை விரைவில் அந்த புகழை அழித்து விடும்.

கல்வியும் சிந்தனையும் ஒருவனுக்கு சாபக்கேடாக கூட மாறலாம். கல்வியும் சிந்தனையும் ஒருவனை, அவனது உலகத்தை விரிவு படுத்துகிறது. அதோடு சேர்ந்து அவனது ஈகோவும் அதாவது "தான்" என்ற அகந்தையும் வளர்கிறது. பிறருக்கும் அவனுக்கும் இடையே முதலாளி தொழிலாளி போன்ற இடைவெளி அதிகரிக்கிறது. தனித்தனி தீவுகளாக மாறுகிறார்கள். இதனால் தான் கற்றவர்கள் ஒத்துப்போவதில்லை. படித்தவர்கள் தான் அதிகம் விவாகரத்து செய்கிறார்கள். கற்றவர்கள் தான் அதிகம் குழம்புகிறார்கள். உதாரணம் பாருங்கள் நாட்டு வைத்தியத்தில் எல்ல நோயும் வாதம், பித்தம், கபம் என்பதில் அடங்குகிறது. ஆங்கில மருத்துவத்தில் இதற்கு எத்தனை பிரிவுகள் தேவைப்படுகிறது. ஒரு கணினியியல் இன்று எத்தனை பிரிவுகளில் அறியப்படுகிறது. எத்தனை வித லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உள்ளன.

பிறர் பேச்சை காது கோடுத்து கேட்பதும் பணிவு தான். தன்னடக்கம் உடையவனது அதிகாரம் மந்திரக்கோல் போன்றது. பணிவுள்ளவன் தான் சிறந்த தலைவனாக முடியும். அரசு இயந்திரத்தின் பல் சக்கரங்கள் பலருக்கும் பதவி மட்டும் தான் அடையாளம். அதிகார போதையில் பொதுமக்களிடம் பணிவின்றி நடந்து கொண்டவர் பலரும் பதவி போன பின் கிழிந்த துணி தரை துடைக்க போவது போல் ஆகி விடுகிறர்கள். ரவுடிகள் வாழ்வின் பிற்பகுதியில் அனாதை பிணமாகிறார்கள்.

சில பெரிய வியாபார ஸ்தாபனங்களில் முதலாளியே கஸ்டமர்களை கும்பிட்டு வரவேற்பார்கள். அல்லது அதற்கென்றே தனி ஆள் நியமித்திருப்பார்கள். அவர்கள் போடும் கும்பிடுகள் தான் அந்நிறுவனத்தின் மூல தனம். வாடிக்கையாளர்களை மதிக்காத எந்த கம்பனியும் உருப்பட்டதில்லை. customer is always right என்பதும் இது தான்.

தன்னைச் சுற்றித்தான் உலகம் எனும் மாயையை ஒழித்து, உலகத்தில் தான் ஒரு பாகம் எனும் அகந்தயற்ற நிலை மிக உயர்வான நிலை. எதையும் நாம் கொண்டுவரவில்லை, எதையும் எடுத்துச் செல்லப்போவதுமில்லை. எதையும் புதிதாகஅறிகிறோம் அன்றி எதையும் நாம் உருவாக்கி விடவும் இல்லை. நம் உலகத்தில் தான் மாற்றங்களை ஏற்படுத்துகிறோம். பூமி சுழல்வதை நிறுத்தும் சக்தி நமக்கில்லை பின் ஏன் அகந்தை?

இறைவன் இருக்கிறான் என நம்புவதும் இல்லை என்று நம்புவது அவரவர் நம்பிக்கை. அவரவர் நிலை பாடு .இரண்டுமே சரிதான். அது இறைவன் என்று கொண்டாலும் சரி நம்மை சுற்றியுள்ள உலகம் என்று கொண்டாலும் அந்த மாபெரும் சக்திக்கு நம் வாழ்வின் போக்கை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு உண்டு என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. அந்த சக்தியிடம் பணிவு காண்பிக்க வேண்டும். இந்த செல்வமும் புகழும் இறைவன் தந்தது அது இறைவனுக்கே சொந்தம் என்பது பணிவின் சின்னம். சந்தோசத்தை, வெற்றியை உலகத்தோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். இதில் இறைவன் என்பது நான் நீங்கலாக உள்ள உலகம் எனவும் பொருள் கொள்லலாம். இப்படி தன்னை சுற்றியுள்ளதை பெருமைப்படுத்தும் தன்னடக்கமான உள்ளம் ஜொலிக்கும் . காரணம் தன்னை சுற்றியுள்ள உலகத்தின் பிரதிபலிப்பு தான் "தான்" என்பது.

எல்லா மதங்களும் முதலில் பணிவை, கீழ் படிதலை அல்லது அகந்தை அறுக்கத்தான் போதிக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்தே கடைபிடிக்க வேண்டிய முதன்மை பண்பு இது தான்.இந்த ரகசியத்தை புரிந்து கொள்ளாதவர் வாழ்க்கைப் பயணம் மிக கஸ்டமான பாதையில் .

source: http://ping.fm/oTyHI
உணவில் நச்சுத்தன்மை:83 லட்சம் டாலர் இழப்பீடு வழங்க KFC-க்கு நீதிமன்றம் உத்தரவு!

28 Apr 2012
கான்பெர்ரா:ஆஸ்திரேலியா குடும்பத்தினருக்கு 83 லட்சம் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க ஃபாஸ்ட்புட் உலகின் புகழ்பெற்ற கெண்டகி ஃப்ரைட் சிக்கனுக்கு(கே.எஃப்.சி) நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கெண்டகி ஃப்ரைட் சிக்கனின் டிவிஸ்டர் வ்ராப்பர் என உணவை சாப்பிட்டதால் மூளையில் பாதிப்பு ஏற்பட்ட ஆஸ்திரேலிய சிறுமை மோனிகா ஸமானின் குடும்பத்தினருக்கு இத்தொகையை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2005-ஆம் ஆண்டு சிட்னியில் கே.எஃப்.சியின் ரெஸ்ட்ராண்டில் ட்விஸ்டர் வ்ராப்பரை சாப்பிட்ட சிறுமிக்கு நச்சுத்தன்மை ஏற்பட்ட மூளை பாதிப்படைந்தது. பேசும் சக்தியையும், நடக்கும் சக்தியையும் இழந்த அச்சிறுமி வீல்சேரில் நடமாடுகிறார்.

நீதிமன்ற தீர்ப்பில் நிராசை அடைந்துள்ளதாகவும், மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கே.எஃப்.சி அறிவித்துள்ளது. உணவின் தரம் குறித்து உறுதிச்செய்வதில் கே.எஃப்.சி நிறுவனம் தோல்வியை தழுவியதாக நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
--


ALAVUDEEN
Personal Hygiene in Islam

Muslims enjoy the highest standard of personal hygiene of all the people in the world. In Islam, cleanliness and purification are not only requirements for the performance of worship, or when embracing Islam, but are part of a Muslim’s very faith. Allah says in the Qur’an: "Truly, Allah loves those who turn unto Him in repentance and loves those who purify themselves (by taking a bath and cleaning and washing thoroughly their private parts, bodies, for their prayers etc.)." (Al Baqarah: 222)
Cleanliness in Islam is of three kinds:
1- Purification from impurity (i.e. to attain purity or cleanliness, by taking a bath ghusl or performing ablution wudu’ in states in which a bath or ablution is necessary or desirable according to Islamic Law.
2- Cleansing one’s body, dress or place from an impurity of filth.
3- Removing the dirt or grime that collects in various parts of the body, such as cleaning the teeth and nostrils, the trimming of nails and the removing of armpit and pubic hair.
Ghusl
This is when all parts of the body are thoroughly washed. Ghusl is required of every Muslim after sexual intercourse, after wet dreams, after child-birth, and after post-partum bleeding (40-days flow of blood, and final yellowish discharge has completely stopped), and each month after menstruation and final yellowish discharge has stopped.
Wudu’
This simple ablution is necessary before prayer in the following cases:
1- after urinating or defecating;
2- if one breaks wind;
3- if one falls asleep lying down;
4- if one loses consciousness;
5- if one directly touches the genitals;
6- if one becomes excited, leading to a subsequent discharge.
The above cases also nullify one’s ablution, requiring a fresh one. Allah says in the Qur’an: "O you who believe! When you intend to offer prayer, wash your faces and your hands (forearms) up to the elbows, rub (by passing wet hands over) your heads, and (wash) your feet up to ankles. If you are in a state of Janaba, purify yourself (bathe your whole body)…." (Al-Ma’idah: 6)
Also on this issue, Abu Hurairah (may Allah be pleased with him) quoted Allah's Messenger (peace and blessings be upon him) as saying, "The prayer of a person who does hadath (passes, urine, stool or wind) is not accepted until he performs (repeats) the ablution." A person from Hadaramout asked Abu Hurairah, "What is 'hadath'?" Abu Hurairah replied, "'Hadath' means the passing of wind from the anus." (Sahih Al-Bukhari, Volume 1, Book 4, Number 137)
Merits of ablution:
Part of the merits of ablution is that it earns Muslims a special name by which they will be called on the Day of Judgment; the name is Al-Ghurr-ul-Muhajjalun (People of shinning bodily parts), due to performing ablution in proper way. Nu’aim Al-Mujmir reported: "Once I went up the roof of the mosque along with Abu Hurairah (may Allah be pleased with him). He performed ablution and said, ‘I heard the Prophet (peace and blessings be upon him) saying: On the Day of Resurrection, my followers will be called Al-Ghurr-ul-Muhajjalun from the traces of ablution and whoever can increase the area of his radiance should do so (by performing ablution in the most perfect manner.’" (Sahih Al-Bukhari, vol. 1, hadith No. 138)
Tayamum (Dry Ablution)
This is performed by putting or striking lightly the hands over clean earth and then pass the palm of each on the back of the other, blow off the dust then pass them on the face. It is performed instead of wudu and ghusl (in case of ritual impurity, etc.). Allah says in the Qur’an: "… But if you are ill or on a journey or any of you comes from answering the call of nature, or you have been in contact with women (i.e., sexual intercourse) and you find no water, then perform tayammum with clean earth and rub therewith your faces and hands. Allah does not want to place you in difficulty, but He wants to purify you, and to complete His Favor on you that you may be thankful." (Al-Ma’idah: 6)
To illustrate the importance of Muslims maintaining their high level of personal hygiene, the following points are specifically mentioned by Prophet Muhammad (peace and blessings be upon him) on answering the call of nature.
`A’ishah, the Mother of the Faithful (may Allah be pleased with her): "The Prophet (peace and blessings be upon him) used his right hand for getting water for ablution and taking food, and his left hand for his evacuation and for anything repugnant." (Sunan Abu Dawud)
Abu Hurairah (may Allah be pleased with him) reported: "The Messenger of Allah (peace and blessings be upon him) said: ‘Be on your guard against two things which provoke cursing.’ They (the Companions present there) said: ‘Messenger of Allah, what are those things which provoke cursing?’ He said: ‘Easing on the thoroughfares or under the shades (where people take shelter and rest).’” (Reported by Muslim)
http://ping.fm/hCais
Engr.Sulthan
__._,_.___
Amazing Medical Facts of the Body part-13


241. One in every 2000 babies is born with a tooth.
242. Pregnancy in women lasts on average of about 270 days from the time of conception till birth.
243. Sneezing too hard can cause rib fracture and suppressing the sneeze can cause damage to the blood vessels of head or neck.
244. On freeze drying, 10 % of body weight is contributed by the micro organisms of our body.
245. About 80 % of ultra- violet rays from the sun can get through the cloud and can cause sunburn or tan even on a cloudy day.
246. The human stomach contains about 35 million small digestive glands.
247. The ovaries of a female contain about 600,000 immature eggs at birth.
248. The human body has 4 million pain sensitive structures.
249. Each lung contains 300-350 million respiratory units called alveoli.
250. Human blood contains 22,000 million cells.
251. Human skin is re-newed itself every 5 weeks.
252. A New stomach lining is formed every five days.
253. A human ear contains about 24,000 fibers in it.
254. The largest cell in the woman is the egg or ovum present that is released from the ovaries.
255. Women burn fat more slowly than men.
256. The leg bone is the fastest growing bone in the human body.
257. There are 22 bones in the human skull.
258. A muscle called the diaphragm controls the human breathing process.
259. The human brain is made up of more than 10 billion nerve cells and over 50 billion other cells and weighs about less than three pounds.
260. 2/3 of the human body is made up of water.


source:medindia.net

Engr.Sulthan

Saturday, April 28, 2012

Respected brother in Islam,
Assalamu alaikum (warah...).Hope this e-mail would find you in the best of your health with the mercy of Allah!
We have been working for especially the orphan, poor, and reverted muslims girls to get Islamic studies, academic studies, marriage aid and marriage arrangements since 2006. Now 52 poor reverted Muslim students are studying here. They are provided free food, accommadation, uniform dress 2 sets, school fees, free cost of notes, medical expenses, etc.
Our Kind Request to help four poor, etheem and reverted Muslim brides (Marriage Aid).
There are four poor, etheem and reverted muslim girls to be married on different dates on the next month. Details of brides and the marriage date is given below as follows.
1 .S.Mubeena alias Jameela parveen.The bride’s family is very poor. Her mother U.Mehrunnisa has arranged this marriage. Her father is a mentally challenged person and he has left his home a year ago. Her marriage is proposed to be held on 2.05.2012 at Mohammadhiyapuram mosque in Dindigul. Jamath letter is attached herewith for your kind consideration.
2. M.Benasir, daughter of S. Mohammed hanifa, belongs to a poor reverted muslim family at Thimmminayakanpatti in Theni district. More than 100 families has reverted to Islam in this village. Her marriage is proposed to be held on 31.05.2012.Jamath letter is attached herewith for your kind perusal.
3. M.Ramzan begam, daughter of A.S.Mohammed kaleel , belongs to a poor reverted muslim family at Thimminayakanpatti village in Theni district. Her marriage is proposed to be held on 27.05.2012. Jamath letter is attached herewith for your kind help.
4. S. Firdous Banu, daughter of A.Sikkender, belongs to a poor family at residing at 102, Kannabiran kovil street, Pallavaram in Chennai. Her marriage is proposed to be held on 30.05.2012 in pallavaram Noorul masjid in Chennai.
These four girls are eligible to get Zakat. The amount required is minimum Rs. 30,000 per each bride. Please help and arrange the amount for the sake of Allah. If you arranged to help the brides, we can send the proof for the same after their marriage, insha Allah. We have attached the request letters by Jamath and Marriage invitation card
Our Account details:
RAHMATH ETHEEMKHANA,
A/C No: 31585201803,
State bank of India, Thevaram Branch,
Or
A/C No: 951651916’
Indian Bank, Thevaram branch.

May Allah bestow all the best to all of you in this world and the world to come!
May Allah help you for getting sound health and long peaceful life!!
May Allah also help you for your wealth gets improved!!! Ameen.
With regards
S.Rejina Fathima Alima,
Secretary,
Rahmath Etheemkhana,
Thevaram,
Theni-Dt.
Cell: 9944377681 , 9787522735
Phone: 04554-254427
Source: http://ping.fm/6TgMQ

தினம் ஒரு கப் காரட் ஜூஸ்

Posted by Sathik Ali

இதை விட சிறந்தது இல்லை எனும் அளவு காரட் ஜூஸ் சிறப்பு வாய்ந்தது.
உயிர் சத்துகள் நிறைந்த காரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது. செலவு குறைந்த சத்துணவு இது. புதிய காரட்டுகளை மிக்ஸியில் உடனுக்குடன் அரைத்து அருந்துவதே நல்லது.
குழந்தைகள், முதியோர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் யாவருக்கும் நல்லது.
காரட் சாறுடன் எலுமிச்சம் பழமும் புதினாவும் கலந்து உப்பு சேர்க்காமல் அருந்தினால் மலச்சிக்கல் மாறும்.
காரட்டில் அதிக அளவு காணப்படும் வைட்டமின் A கண்களுக்கு நல்லது. தினமும் அருந்தினால் கண் எரிச்சல், தளர்ச்சி நீங்கி பார்வை ஒளி பெறும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும், புத்திகூர்மை உண்டாகும். காரட் சாறுடன் ஏழு எட்டு பாதாம் பருப்புகள் உண்டு வந்தால், மூளை விழிப்புடன் இருக்கும். மூளைக்கு நல்லது. பைத்தியம் குறையும்
முடி கொட்டாது நீளமாக வளரும்.
வைட்டமின் B அதிகம் உள்ளது. எளிதில் ஜீரணமாகும்.
நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் காரட் சாறு பருகுவது நல்லது. வாய்வு பிடிப்பு நீங்கும். வயிற்றை சுத்தமாக்கும்.
குடல்வால் நோய் வராது. கல்லீரல், மற்றும் வயிற்றில் கற்கள் அல்லது புண்கள் இருந்தால் காரட் ஜூஸ் நல்ல மருந்து.
இதயத் துடிப்பைச் சீராக்கும். இரத்தம் உறைந்து இதய அடைப்பு ஏற்படுவதிலிருந்து காக்கும்.
மஞ்சள் காமாலை சீக்கிரம் குணமாக தினமும் காரட் சாறு அருந்துவது நல்லது.
இரத்தப் புற்றுக்கு தினமும் காரட் சாறு அருந்த ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தலை சுற்று, மயக்கம் வராமல் காக்கும்
வயிற்றில் பூச்சிகளை மருந்தின்றி வெளியேற்றும், தோல் வரட்சி நீங்கி பளபளப்பாகும், முகப்பரு பருக்கள் மறைந்து சிவப்பழகு கூடும்.
நெஞ்சுவலி, மூட்டு வலி முதுகுவலி மறையும்.
சூதகக் கட்டு ஏற்படாமலிருக்கவும், மாத விலக்கு சரியான கால இடைவெளியில் ஏற்படவும் தினமும் ஒரு டம்ளர் காரட் சாறு அருந்தவும்.
தரமான தாய்ப்பால் தொடர்ந்து கிடைக்க காரட் சாறு அருந்தவும்.
ஒல்லியானவர்கள் மற்றும் இரத்த சோகையுள்ளவர்கள் தினசரி அருந்தவும்.
தேவை இல்லாத யூரிக் அமிலத்தை காரட் சாறு இரத்தத்தில் கட்டுப் படுத்துகிறது. இதனால், மூட்டுவீக்கம் மற்றும் வாத நோயாளிகள் வலிநீங்கி குணம் பெறுகிறார்கள்.
உருளைக் கிழங்கை விட 6 மடங்கு அதிக சுண்ணாம்புச் சத்து காரட்டில் உள்ளது. இது எளிதில் ஜீரணிக்கப்படுவதால், எலும்புகள் உறுதி பெறுகின்றன. பெண்கள் எலும்பு மெலிந்து உடைந்து போகும் நோயில் இருந்து தப்பிக்கலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு காரட்டிலுள்ள Tocokinin என்ற பொருள் இன்சுலின் போல் இருந்து உதவுகிறது.
காரட் ஜுஸில் உள்ள வைட்டமின் ‘ஈ’ மலட்டுத் தன்மையை மாற்றும்.
கர்ப்பிணிகள் தினமும் 25 gm காரட் பச்சையாக உண்டால் மலக்கட்டு, போலி வலி,களைப்பு நீங்கி குழந்தை நிறமாக வலுவாகப் பிறக்கும்.
காரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி, பசும் பாலில் போட்டு அவித்து, சிறிது தேன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் இளைப்பு நீங்கும்.உடல் வலுப்படும் .எடை கூடும்.நோய் வராது.
காரட் துண்டுகளை பசும்பாலில் அவித்து அதோடு உலர் திராட்ச்சையும், தேனும் கலந்து பெரியவர்களுக்கு கொடுக்க உடல் வலுவாகும்.வயிற்று நோய்கள் மாறும்.
தோல் நீக்கி நறுக்கிய காரட்டுடன் ,பச்சைக் கொத்த மல்லி,இஞ்சியை தேவையான அளவு சேர்த்து தயிரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து உண்ண வயிறு தொடர்பான நோய்கள் மாறும்.வரட்சி நீங்கி முகம் பொலிவாகும். மூளை பலப்படும்.
இத்தனை சிறப்பு நிறைந்த காரட் ஜுஸை தினமும் ஒரு கிளாஸ் அருந்தினாலே போதும். அதிகம் அருந்தினால் மூலத் தொந்தரவுகள் வர வாய்ப்புண்டு.

காரட் மில்க் ஷேக் 1:
ஒரு கப் தேங்காய் துருவல் ஒரு கப் காரட் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கால் தேக்கரண்டி ஏலக்காயும் சேர்த்து வடிகட்டவும்.அதோடு தேவையான அளவு தண்ணீர், சீனி கலந்து பரிமாறவும். தேங்காய்க்கு பதில் பாலும் பயன் படுத்தலாம்


காரட் மில்க் ஷேக் 2:
இரண்டு காரட்டை துருவி தண்ணீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து எடுக்கவும். 4 பாதமை ஊற வைத்து தோல் நீக்கவும். ஒரு டம்ளர் பால் எடுத்து வைக்கவும். அவித்த காரட் துருவல் மற்றும் பாதாமுடன் சிறிது பால் சேர்த்து விழுதாக அரைத்து அதோடு மீதியுள்ள பால் மற்றும் ஒரு மேசைக்கரண்டி வெனிலா ஐஸ் கிரீம், இரண்டு ஐஸ் க்யூப்கள், ஒன்றரை மேசைக்கரண்டி பொடித்த சீனி, ஒரு சிட்டிகை குங்குமப் பூ சேர்த்து கலந்து பரிமாறவும்.
'எலுமிச்சை' சர்வ ரோக நிவாரணி!


எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.
மனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. எலுமிச்சையின் தாயகம் பாரதம்தான். முதன்முதலாக 1784-ல் கார்ஸ்வில் ஹெம்மீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார்.
மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மைப்படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார். உதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஒழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாகப் பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.
கண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.
100 கிராம் எலுமிச்சை பழத்தில்,
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
எலுமிச்சையின் பயன்கள்:
வயிறு பொருமலுக்கு:
சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்துத் தொல்லைக் கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.
தாகத்தைத் தணிக்க:
தற்போது கோடைக்காலத்தின் ஆரம்பத்தில் இருக்கிறோம். கோடை வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு கப் நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு:
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.
கல்லீரல் பலப்பட:
எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.
தலைவலி நீங்க:
ஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.
நீர்க் கடுப்பு நீங்க:
வெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சினை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச்சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும். இரத்தக் கட்டுக்கு உடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க சுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.
பித்தம் குறைய:
எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.
எலுமிச்சை தோல்:
எலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்றவற்றிற்கு நல்லது. நகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.
* எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.
* எலுமிச்சம் பழச்சாற்றை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.
* தாதுவைக் கெட்டிப்படுத்தும்.
* உடல் நமைச்சலைப் போக்கும்
* மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.
* மூலத்திற்கு சிறந்த மருந்தாகும். எலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.
Web sources
Engr.Sulthan
லாபம் கொழிக்கும் கூடை பொம்மை தயாரிப்பு!


















சந்தோஷமான தருணங்களில், ஒருவருக்கு வழங்கும் பரிசுப்பொருட்கள் அந்த சந்தோஷத்தை இரட்டிப்பாக மாற்றும். பரிசுப்பொருள் விலை உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பெறுபவர் மனதைக் கவர்வதாக இருக்க வேண்டும். விலை குறைந்த, அதே நேரம் பாரம்பரியம், நவீனம் கலந்து சிறப்பாக வடிவமைக்கப்படும் கூடை பொம்மைகள், பரிசுப்பொருளாக வழங்க நல்ல தேர்வு. கூடை பொம்மைகள் தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை காந்திபுரத்தை சேர்ந்த பத்மா. அவர் கூறியதாவது: 15 ஆண்டுகளுக்கு முன்பு கைவினைப்பொருட்கள் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது. பரிசு பொருள் விற்கப்படும் பொம்மைகள் செய்து கடைகளுக்கு விற்றேன். படிப்படியாக பல்வேறு வகையான பொம்மைகளை தயாரித்தேன். திருப்பூர் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களிடம் வெளிநாட்டு வர்த்தகர்கள் ஆர்கானிக் காட்டன் பொம்மைகள் செய்து தர ஆர்டர் கொடுத்தனர். ஆர்டர் எடுத்த நிறுவனங்கள் என்னிடம் பொம்மைகள் தயாரித்து வாங்கி ஏற்றுமதி செய்தனர். இதன் மூலம் தொழில் பெருகியது. பொதுவாக பொம்மைகள் செய்வது கை தையல் மூலம் தான். உற்பத்தி அதிகம் செய்ய வேண்டி வந்ததால் பவர் தையல் மெஷின் மூலம் பெரிய பொம்மைகளை தைத்தும், மெஷினில் தைக்க முடியாத சிறிய பொம்மைகளை மட்டும் கை தையல் மூலமும் தயாரித்து வருகிறேன். 4 பேர் பணிபுரிகின்றனர். மாதம் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை மதிப்பிலான பொம்மைகள் உற்பத்தி செய்கிறேன். 25 சதவீத லாபம் உள்ளது.

ஒரே மாதிரியான பொம்மை தயாரிப்பதை விடுத்து புதுமையான வடிவத்தில் தயாரிக்க வேண்டும். பொம்மையை கூடையில் வைத்து கொடுத்தால் புதுமையாக இருக்கும். அதையும் பொக்கே போல் கொடுத்தால் நவீனமாக இருக்கும்.கைப்பிடி உள்ள கூடைக்குள் தலையை மட்டும் காட்டியவாறு இருக்கும் நாய்க்குட்டி பொம்மைகள் வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது. கூடை பொம்மைகளை அடிப்படையாக கொண்டு மேலும் பல புதுமைகள் புகுத்தலாம். ஒன்றில் இருந்து இன்னொன்றை உருவாக்கலாம். பரிசு பொருட்களை பொறுத்தவரை புதிதாக இருந்தால் வரவேற்பு அதிகமாக இருக்கும். இவ்வாறு பத்மா கூறினார். முதலீடு:வீட்டின் ஒரு அறை போதுமானது. சார்ட் பேப்பர், வெல்வெட் துணி வெட்ட ஒரு டேபிள் (ரூ.4 ஆயிரம்), மூலப்பொருட்கள் மற்றும் தயாரித்த பொருட்களை வைக்க அலமாரி (5 ஆயிரம்), பெரிய கத்தரி 1, சிறிய கத்தரி 2 (ரூ.400), பிளாஸ்டிக் டிரே 2 (ரூ.100) , செலோ டேப் ஸ்டாண்ட் (ரூ.150). மொத்தம் ரூ.9,650. உற்பத்தி செலவு: ஃபர் கிளாத், அதன் திடத்திற்கேற்ப மீட்டர் ரூ.300 முதல் ரூ.350 வரை. செயற்கை பஞ்சு (பைபர் காட்டன்) கிலோ ரூ.100, (ஒரு மீட்டர் ஃபர் கிளாத், ஒரு கிலோ செயற்கை பஞ்சு மூலம் 100 பொம்மைகள் செய்யலாம்.), கூடை விலை அதன் அளவுக்கேற்ப ஒன்று ரூ.5 முதல் ரூ.10 வரை. பொக்கே பேக்கிங் ஷீட் (சலபன் பேப்பர்) ஒன்று ரூ.3, ஒரு பொம்மைக்கான மூக்கு, கண் பட்டன்கள் ரூ.2. ரிப்பன் ரோல் ரூ.1. சிறிய கூடை பொம்மை செய்ய ரூ.20ம், பெரியவை செய்ய கூடை மற்றும் பொம்மையின் அளவுக்கேற்ப ரூ.40 வரை செலவாகும். ஒரு நாளைக்கு (8 மணி நேரம்) சிறிய பொம்மைகள் 40, பெரியவை 20 தயாரிக்கலாம். ஒருநாள் உற்பத்தி செலவு ரூ.800.மாதம் 25 நாளில் ஆயிரம் சிறிய கூடை பொம்மை அல்லது 500 பெரிய கூடை பொம்மை உற்பத்திக்கு ரூ.20 ஆயிரம் தேவை. வருவாய்: சிறிய கூடை பொம்மை ரூ.30, பெரியது ரூ.60க்கு விற்கலாம். மாத வருவாய் ரூ.30 ஆயிரம். செலவு ரூ.20 ஆயிரம். லாபம் ரூ.10 ஆயிரம். லாபம் உழைப்பு கூலியாக கிடைக்கிறது. சந்தை வாய்ப்பு: தற்போது சிறிய ஊர்களில் கூட பரிசு பொருட்கள் கடைகள் வந்து விட்டன. தயாரித்த பொம்மைகளை பேன்சி ஸ்டோர், கிப்ட் கடைகள் ஆகியவற்றுக்கு விற்கலாம். சிறிய கூடை பொம்மையை ரூ.30க்கு வாங்கும் கடைக்காரர்கள் ரூ.50க்கு குறையாமல் விற்கிறார்கள். நேரடியாக விற்றும் லாபம் சம்பாதிக்கலாம். கூடை பொம்மை பொக்கே பார்க்க ஆடம்பரமாக இருக்கும். ஆனால் விலை குறைவு என்பதால் நிறைய பேர் விரும்பி வாங்குகின்றனர். இதனால் சந்தை வாய்ப்புகள் நன்றாக உள்ளது. கூடை பொம்மை மட்டுமல்லாமல் பல்வேறு ரகங்களில் பொம்மைகள் தயாரித்து விற்கலாம். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பொம்மை தயாரிக்க பயிற்சி : கோவை வேளாண் பல்கலைக்கழகம், கோவை அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பெண்களுக்கு மட்டும் பொம்மை தயாரிப்பு பயிற்சி கற்பிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் பொம்மை தயாரிக்க பயிற்சி மையங்கள் பல உள்ளன.தயாரிப்பது எப்படி? கூடை பொம்மை களை மார்பு வரை தயாரித்தால் போதுமானது. நாய், பூனை, கரடி, குரங்கு குட்டிகள், குழந்தை வடிவங்களில் தேவையான அளவுகளில் பொம்மைகளை தயாரிக்கலாம்.பொம்மையை உருவாக்க, தேவையான தையல் அளவுகளை சார்ட் பேப்பரில் உருவாக்கி கொள்ள வேண்டும். அது கை, உடல், முகம் ஆகிய பாகங்களை கொண்டிருக்கும். அவற்றை கொண்டு தைக்க வேண்டிய ஃபர் துணிகளின் பின்புறம் வைத்து மார்க்கர் பேனாவால் அவுட்லைன் வரைந்து வெட்டி கொள்ள வேண்டும். வெட்டியவற்றின் உட்புறமாக கை தையல் போட வேண்டும். அதை கெட்டி தையல் என்பார்கள். தைக்காமல் விட்ட பகுதி வழியாக செயற்கை பஞ்சை சமமாக பரவும்படி திணித்து உள்புறத்தை நிரப்ப வேண்டும். பொம்மைக்கு கண், மூக்கு பட்டன்களை பொருத்த வேண்டும். சில பொம்மைகளுக்கு கூடுதலாக காது, வாய் பட்டன்களையும் பொருத்தலாம். பொம்மையின் கீழ் பகுதி வட்டமாக திறந்திருக்கும், அதை கூடையின் மேல் திறப்பை மூடும் அளவிற்கு வட்டமாக வெட்டிய சார்ட் பேப்பர் துண்டுகளில் வைத்து, விளிம்புகளில் பசை தடவி ஒட்டி மூட வேண்டும். இப்போது பொம்மை தயார். பின்னர், ரெடிமேடாக வாங்கிய பிரம்பு கூடையின் கைப்பிடி, மேல், கீழ் புற விளிம்பு ஆகியவற்றில் சன்னமான கலர் ரிப்பன்களை சுற்ற வேண்டும். கூடை மேல் ஏற்கனவே தயாரான பொம்மைகளை வைத்தால் கூடை பொம்மை தயார். கிப்ட் பேக்கிங் ஷீட்டில் கூடை பொம்மையை வைத்து பூக்களை கொண்டு பொக்கே செய்வது போல் பேக்கிங் செய்ய வேண்டும். செலோ டேப் கொண்டு ஒட்டி, பேக்கிங் ஷீட்டில் ரிப்பன் கட்டினால் கூடை பொம்மை பொக்கே தயாராகி விடும்.

Engr.Sulthan
__._,_.___
சிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா?

வியாழன், 26 ஏப்ரல் 2012 22:13 விமர்சனம் - செய்தி விமர்சனம்
E-MAIL | PRINT |
inShare1
தம்புள்ளையில் நடந்தது என்ன?

ஏப்ரல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தம்புள்ளை மாநகரில் பௌத்த பிக்குகள் தலைமையில் சுமார் 2000 சிங்கள பௌத்தர்கள் மாபெரும் பேரணியொன்றில் கலந்துகொண்டனர்.


Read more about சிங்கள இனவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்களா? [4499] | செய்தி விமர்சனம் | விமர்சனம் at www.inneram.com

http://ping.fm/YeH3r
Learn Quran


http://ping.fm/PJAtd


Reciting Quran without pondering




http://ping.fm/oS1cG
=
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?" என்கிற கேள்வி எழும்போதே "எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'?" என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது.
உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்-படுத்தியுள்ளது.
என்ஜினீயரிங் துவங்கி பி.பி.ஏ-வில் முடிகிற அந்தத் துறைகளையும் அவற்றின் முக்கியத்-து-வத்தையும் பற்றி இங்கே விளக்கமாகச் சொல்-கிறார் சேலத்தைச் சேர்ந்த கல்வி ஆலோசகர் மற்றும் திறனாய்வாளரான ஜெயபிரகாஷ் காந்தி.
''பொதுவாக பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல் மிகவும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடிந்து விடுகிறது. தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது, நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் சேர்வது.. என்றெல்லாம் முடிவெடுக்கவே கூடாது.
எந்தத் துறைக்கான தேவை தற்போது அதிகமாக உள்ளது, அதில் நமக்கு விருப்பம் இருக்கிறதா, அதற்கான போட்டியில் நமக்கான இடத்தை நம் மதிப்பெண்கள் நமக்கு பெற்றுத் தந்து விடுமா.. என்பவை உள்ளிட்ட செறிவான அறிவுடனும், விசாலமான பார்வையுடனும் நமக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.


காரணம்.. படித்து முடிக்கும்போதே.. பல நேரங்களிலும் 'கேம்பஸ் இன்டர்வியூ உபயத்தால் முடிக்கும் முன்னரே.. பல ஆயிரங்கள் சம்பளத்தோடு உடனடி வேலை.. சில வருடங்களிலேயே லட்சத்தை தொடும் அளவுக்கு சம்பள உயர்வு.. வெளிநாட்டு வேலை வாய்ப்பு.. என இத்துறையில் பெருகிக் கொண்டே இருக்கும் தேவைகள்தான்!
பி.இ படிப்பைப் பொறுத்தவரை உங்களின் கட் ஆஃப் மார்க் 180-க்கு மேலே இருந்தால், கல்லூரிக்கு முக்கியத்துவம் கொடுத்து கோர்ஸை தேர்ந்தெடுங்கள். அதற்குக் கீழ் என்றால், கோர்ஸூக்கு முக்கியத்துவம் கொடுத்து கல்லூரியை தேர்ந்தெடுங்கள்.
காலத்துக்கேற்ப அத்தனை புதிய மாற்றங்களையும் வாரி எடுத்து வளர்ந்து வரும் பொறியியல் கல்வியில், இப்போது இன்னும் புதுப் புதுத் துறைகள் வந்துள்ளன. வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே இருக்கும் துறைகளை விட, இன்று இவைதான் 'மோஸ்ட் வான்ட்டட்' ஆக உள்ளன.
அவை என்னென்ன என்று பார்க்கலாம்..

இதன் காரணமாக கெமிக்கல், செராமிக்ஸ், மெட்டலர்ஜி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் என எந்தத் துறைக்கான உற்பத்தியாக இருந்தாலும், அதில் இந்தப் பொறியாளர்களுக்கான வேலை உறுதியாக இருக்கிறது. பொறியியல் படிப்புகளிலேயே எந்தத் துறையில் வேண்டுமானாலும் பணியாற்ற முடிகிற ஒரே படிப்பு இதுதான்.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பு உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இந்தப் படிப்புக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பார்கள்.






என்.ஐ.எஸ்.ஈ.ஆர்., தன் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் மூவாயிரத்தை ஸ்காலர்ஷிப்-பாக வழங்கி ஊக்குவிக்கிறது.
கிட்டத்தட்ட இருபத்தோராம் நூற்றாண்டு அறிவியல் யுகத்தின் அத்தனை புதிய அம்சங்களையும் பயிலக் கொடுக்கும் இந்த கோர்ஸில், முதல் இரண்டு செமஸ்டர்களுக்கு அடிப்படை பாடங்களும், மூன்றாவது செமஸ்டரில் இருந்து ஸ்பெஷலைஸ்டு பாடங்களும் கற்பிக்கப்படும். அடாமிக் எனர்ஜி பற்றிய ஆய்வு மற்றும் வளர்ச்சித் துறையிலும், தனியார் ஆய்வு நிலையங்களிலும் இதற்கான வேலை வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன.
இந்தப் படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வான 'நெஸ்ட்', 'ஹோமி பாபா சென்டர் ஃபார் சயின்ஸ் எஜுகேஷன்'-ன் மேற்பார்வையில் இந்தியாவின் பல நகரங்களிலும் நடத்தப்படுகிறது.
இந்தத் தேர்வு, பொதுப் பிரிவு, மேத்ஸ், ஃபிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி என ஐந்து பாகங்களாக பிரித்து நடத்தப்படும்! வினாக்கள் 'அப்ஜக்டிவ்' முறையில் அமைந்திருக்கும்.


விண்வெளி ஆய்வுத் துறைகள், பாதுகாப்புத் துறைகள், அரசு, தனியார் விமான நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் ஏரோஸ்பேஸ் என்ஜினீயரிங் படித்தவர் களுக்கான வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது.
இது சென்னை ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி, கோவை, அமிர்தா யூனி வர்சிட்டி மற்றும் சென்னை, எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ளது. இங்கெல்லாம் இதற்கான சிறப்பு நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கின்றனர்.






பயோ சென்ஸார்ஸ், எலெக்ட்ரோ கெமிக்கல் சென்ஸார்ஸ், எரிபொருட்கள் மற்றும் பேட்டரி உற்பத்தி போன்ற சிறப்பு மிக்க துறைகளில் எலெக்ட்ரோ கெமிக்கல் என்ஜினீயர்களுக்-கான வேலை வாய்ப்புகள் உள்ளன.
இந்தக் கல்வி காரைக்குடியில் உள்ள 'சிக்ரி' (சி.இ.சி.ஆர்.ஐ - சென்ரல் எலெக்ட்ரோகெமிக்கல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்)-ல் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் இதற்கு மாணவர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.






மருந்துகளை தயாரிக்கப் பயன்படுத்தும் உயிர்வேதிப் பொருட்களைப் பற்றி படிக்கும் இந்த பார்மாஸ¨ட்டிகல் என்ஜினீயரிங், ஒரு தனித்துவமான பாடப்பிரிவாகவே கருதப்படு-கிறது.
புதிய புதிய மருந்துகள் நாள்தோறும் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருந்தாலும், அவற்றுக்கான தேவை அதை விட அதிகமாகவே இருப்பது நிதர்சனம். எனவேதான் இந்தப் படிப்புக்கான வேலைவாய்ப்புகளும் நிறைய இருக்கிறது.
தமிழ்நாட்டில் இந்தப் பாடப்பிரிவை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏ.சி. காலேஜ் ஆஃப் டெக்னாலஜி, திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி, அண்ணா யூனிவர்சிட்டி ஆகியவை வழங்குகின்றன.





வேதியியல் தொழிற்சாலைகள், தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகளில் இதற்கான வேலை வாய்ப்பு நிறையவே உள்ளது. ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் இப்போது இந்தத் துறையில் கால் பதித்திருப்பது, இதற்கான எதிர்கால தேவையை உறுதி செய்கிறது.
திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகம், சென்னை, திருச்சி, அண்ணா பல்கலைக்கழகம் போன்றவற்றில் இதற்கான கோர்ஸ்கள் உள்ளன. தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படு-வார்கள்.








இப்போது மருத்துவமனைகளில் நாம் பார்க்கிற எம்.ஆர்.ஐ. மற்றும் ஈ.சி.ஜி. உபகரணங்கள், நோய் கண்டறியும் மருத்துவ மெஷின்கள் முதலியவை இந்தத் தொழில் நுட்பத்தினால் உருவாக்கப்பட்டவையே.
இப்படியான கருவிகளை கட்டமைப்பது, அவற்றை மருத்துவமனைகளில் நிறுவுவது, அதன் கட்டுப்பாடு, பாதுகாப்பு உள்ளிட்ட பொறுப்புகள் அடங்கியது இதற்கான வேலைவாய்ப்பு. நாளுக்கு நாள் புதிய முயற்சிகள் புகுத்தப்படும் மருத்துவத் துறையில் இந்தப் படிப்பை முடித்த வர்களுக்கான தேவையும் பெருகிக் கொண்டே செல்கிறது.
தற்போது தமிழ்நாட்டில் பதினான்கு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் இந்தப் படிப்புக்கு தமிழ்நாடு பொது கவுன்ஸிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

என்ஜினீயரிங் மேத்ஸ், மெக்கானிக்ஸ், மெஷின் காம்போனென்ட் டிசைன், தெர்மோ டைனமிக்ஸ், பவர் என்ஜினீயரிங், ரோபோடிக்ஸ் போன்ற பாடப்பிரிவுகள் அடங்கிய இந்தப் படிப்பு, கோவையில் உள்ள குமரகுரு மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் உள்ள கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் அவினாசி-யிலுள்ள மஹாராஜா பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.
அண்ணா யூனிவர்சிட்டியின் கீழ் இயங்கும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பொது கவுன்சிலிங் மூலமும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் அவர்களால் நடத்தப்படும் நுழைவுத் தேர்வு மூலமும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.







ஆண், பெண் என இரு பாலருக்குமான இந்தப் படிப்பு, கேரளாவில் உள்ள கொச்சின் யூனிவர்சிட்டி ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்-னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா யூனிவர்சிட்டி உள்ளிட்ட பல கல்லூரி-களில் உள்ளது. அந்தந்த கல்வி நிறுவனங்கள் சேர்க்கைக்-கான நுழைவுத் தேர்வினை நடத்து-கின்றன.


இதன் மூலம் விவசாயிகளின் பிரச்னைகளுக்-கும் ஆய்வாளர்களின் தேடல்களுக்கும் தீர்வு எடுக்க திட்டங்கள் முடுக்கப்படும். மாணவர்-களை இதற்காக தயார்படுத்தும் படிப்புதான் 'பி.டெக். அக்ரிகல்ச்சர் இன்ஃபர்மேஷன் டெக்னா-லஜி'. நாட்டில் எழுபது சதவிகிதம் வரை உள்ள விவசாய சமுதாயத்துக்கு இனி வரும் நாட்களில் இன்னும் தனி கவனம் தரப்படும் என்பதால், இதற்கான வேலை வாய்ப்புக்கும் அதிக நம்பிக்கை உள்ளது.
அக்ரிகல்ச்சுரல் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், டெவலப்மென்ட்டல் எகனாமிக்ஸ், மல்டிமீடியா டெக்னாலஜி, ஃபார்ம் ஆட்டோமேஷன், ஆபரேட்டிங் சிஸ்டம்ஸ் போன்ற பாடப் பிரிவுகள் உள்ளடங்கிய இந்தப் படிப்பை இந்தியாவிலேயே முதல் முறையாக சென்ற வருடத்தில் இருந்து கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகம் அளிக்கிறது. இதற்காக தனியாக இந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Thanks & Regards,

KAMIL.V.A.J
Dubai - U.A.E.

3 attachments — Download all attachments View all images Share all images
image002.jpg
33K View Share Download
image009.jpg
30K View Share Download
image014.jpg
22K View Share Download
காலம் போன்றதொரு காலம்

-வி.எஸ்.முஹம்மது அமீன்

காலம் நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது.மரணத்திடம் மிகப் பத்திரமாய் நம்மை ஒப்படைத்து விட்டு அது நகர்ந்து

சென்றுகொண்டே இருக்கிறது.கால ஓட்டத்தின் பயணத்தில் நமக்கு அனுதினமும் அனுபவங்களை அது சொல்லித்தருகிறது.

காலம் கடந்தும் காலம்தான் பலவற்றை நமக்கு உணர்த்துகிறது.

விரல்பிடித்து நடைபயின்று விளையாட்டுக்காட்டும் காலம் கடைசி காலத்தில் கைத்தடியாய் நம் நடை தாங்குகிறது.

காலம் காட்டித்தரும் கோலங்கள் எத்தனை எத்தனை..!
அதே சூரியன்; அதே காற்றுஅதே விடியல்; ஆனால் எல்லா நாட்களும் வெவ்வேறானவை.

ஒரு நாள் நம்மை அழவைக்கும்; மறு நாள் நம்மை சிரிப்பூட்டும்.
ஒரு பொழுது பட்டாம்பூச்சியாய் பறக்கவைக்கும்; மறு பொழுது நொடித்துப்போட்டு முடக்கிவைக்கும்.
சில நேரங்களில் வசந்தக் காற்றாய் நெஞ்சை வருடும் தென்றல்; சில நேரங்களில் சுழற்றியடிக்கும் சூறாவளி.
பூக்களின் ஸ்பரிசம் சில கணங்களில்; முட்களின் வாசம் சில கணங்களில்.
முத்தங்கள் சிலபோது; எச்சில் உமிழும் சிலபோது.
நறுமணம் நாசிக்காற்றில் குடியிருக்கும்; முடை நாற்றம் சில நேரம் மூக்கடைக்கும்.

காலக் கண்ணாடியின் வண்ணங்கள் நொடிக்கு நொடி மாறிக்கொண்டேயிருக்கின்றன.ஆனால் காலம் கருப்பா, சிவப்பா என்று நாம்
விவாதித்துக் கொண்டிருக்கின்றோம்.

காலத்தை யாரும் நின்று பார்ப்பதில்லை. ‘முன்பொரு காலத்தில்..’என்று எப்போதுமே திரும்பித் திரும்பி பழைய காலத்திலேயே பாடம்
தேடிக்கொண்டிருக்கின்றோம்.

அதே காலம்; அதே மனிதன்.ஆனால் நேற்று மிகப்பிரியாமான அதே விசயம் இன்று மிக அருவருப்பாய் தோன்றுகிறது.
நேற்றைய தேவதைகள், இன்று ராட்சசிகள். நேற்று வெல்லப்பாகாய் இனித்துக் கிடந்ததெல்லாம் இன்று வேப்பங்காயாய் கசந்து
போகிறது.ஒட்டி உயிராடிய உறவுகள் இன்று வெட்டி உறவறுந்து நிற்கும். நேற்றைய அழகுகள்; இன்றைய அசிங்கங்கள்.

காலத்தின் கோமாளிகளைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறது காலம்.அரசியல்வாதிகளைப் போல் காலக்கோமாளிகள் வேறவரும்
இலர்.

‘உங்கள் பொன்னான வாக்குகளை உதய சூரியன் சின்னத்தில்’ என்று கை கூப்பி உச்சி வெயிலில் திறந்த வெளி வேனில் வியர்வை
துடைத்து வந்த அதே மனிதர் அதிக பட்சம் அடுத்த ஐந்து வருடங்களில் நமது பொன்னான வாக்கை இரட்டை இலை சின்னத்தில்’என்று
கைகூப்பி அதே வெயிலில் அதே வேனில் அதேபோல் வியர்வை துடைத்து, அதேபோல் இளித்துக்கொண்டு...
மீண்டும் சூரியனுக்கு,மீண்டும் இரட்டை இலைக்கு... பின்னே காலம் கை கொட்டிச் சிரிக்காதா இந்தக் கோமாளிகளைப் பார்த்து...!!

நேற்று நடுவீதியில் பழக்கடை முதியவரிடம் முதுகு வளைந்து ஓட்டுப் பொறுக்கிய அதே மனிதன் அடுத்த ஓரிரு தினங்களில்
மாண்புமிகு அமைச்சர் அவர்களாய்..ஒளிப்படங்களுக்கு புன்னகைத்துக் கொண்டிருப்பார்.

காலம் சிலரை உயரத்தில் வைத்து உச்சி முகர்கிறது.சிலரை காலடியில் போட்டுச் சவட்டுகிறது.கால உறையை பிரித்துப் பார்க்கும்போது
வேதனையை அல்லது மகிழ்வைத் தரும்.அது எப்போது வேதனையைத் தரும்? எப்போது மகிழ்வைத் தரும்? யாருக்கும் தெரியாத
மர்மங்களாய் காலம் சுவாரஸ்யப்பட்டுக் கிடக்கிறது.

அடுத்த வினாடிக்கு உத்தரவாதம் இல்லாத சுவாரஸ்யம்.அடுத்த அடி பூந்தோட்டத்திலா, தீக்குன்றத்திலா..? தெரியவே தெரியாத
நடைப்பயணம். பொசுக்கென்று நொடிப்பொழுதில் பிணமாய்க் கிடத்திப் போட்டுவிடும்.

ஒரு நாளின் எல்லா அலைப்பேசி அழைப்புகளும் ஒன்றாய் இருப்பதில்லை.
அதிகாலையில் எழுந்தவுடன் மனைவியிடமிருந்துதான் அழைப்புவர வேண்டும்’என கையெழுத்திடப்படாத ஒப்பந்தம் என்றும்
ஒன்றுபோல் இருப்பதில்லை.காரணங்களைச் சொல்லி நிற்கிறது நிறைய நாட்களில்..

முதல் அழைப்பில் ‘வாப்பா...எப்ப வருவீங்க..? உங்கள தேடுது வாப்பா! அமீரா என்னப் பாத்து சிரிக்கிறாப்பா..!எனக்கு... எனக்கு.....
சாக்லேட் வாங்கிட்டு வருவீங்களா...?’என்ற செல்லக் குரலில் உயிர் நனைப்பாள் என் முர்ஷிக்குட்டி.

அடுத்த அழைப்பு நண்பனிடமிருந்து ‘பணம் இன்னிக்கு ரொம்பத் தேவைப்படுது.கண்டிப்பாய் வேணும்’ என்று பணப்பாரம் ஏற்றும்.
செல்லக் குரல் மறந்து பணம் தேடியலையும் மனசு.

அடுத்த சில மணித்துளிகளில் வரும் அழைப்போசையில் சொந்தக்காரரின் மரணச் செய்தி வரும்.அந்த உறவினரின் முகம்.அவருடனான
நெருக்கம். அவரின் குண நலன்கள். மலக்குல் மெளத் வந்தபோது அவர் என்ன செய்திருப்பார்? இப்போது கபர் குழியில் மண்மூடிப் போக
அவருடைய நிலை என்ன?’ என்று அவரையே சுற்றிக் கொண்டிருக்கும் மனசு.

அடுத்த அலைப்பேசி அழைப்பில் அலுவலக வேலையொன்று வரும்.எல்லாமும், எல்லாரும் மறந்து போக, மண்டைக்குள் ஏறி
உட்கார்ந்துகொள்ளும் அலுவலகப் பணி.

பணிமூழ்கிக் கிடக்கையிலே ‘ஊரின் ஒழுக்கச் சீர்கேட்டைச் சொல்லி ரெளத்திரம் ஏற்றிப் போகும் மற்றொரு அலைப்பேசி அழைப்பு.

அடுத்தடுத்து வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு செய்திகளாய்...!
மீண்டும் நண்பன் ‘காலைல போன் பண்ணேனே பணம் என்னாச்சுடே?!’என்பான்.

காலச் சுழற்சியை நின்று அவதானிக்கும் போதுதான் அதன் பரிணாமங்கள் தெரியத்தொடங்கும்.

நேற்றுகளில் படிப்பினை பெறுவதன் மூலம், இன்றுகளைப் பயன்படுத்துவதன் மூலம், நாளைகளைத் திட்டமிடுவதன் மூலம் காலப்
பயன்பாடு நம்மில் பெரும் பலன் நல்கிப்போகும்.

காலம் பொன் போன்றது என்று யார் சொன்னது?
காலம் காலம் போன்றதுதான்.அதனை எதனுடன் ஒப்பிட்டாலும் அந்த ஒப்புமையை காலம் தோலுரித்துப் போட்டுவிடும்.

எத்தனை அழகாய், ஆழமாய், அறிவாய், செறிவாய், நபி(ஸல்) அவர்கள் உபதேசித்திருக்கின்றார்கள்.

ஐந்து விஷயங்களுக்கு முன் ஐந்து விஷயங்களை அரிதாய்க் கருதுங்கள்
1. முதுமைக்கு முன் இளமையையும்
2. நோய்க்கு முன் உடல் நலத்தையும்
3. வறுமைக்கு முன் செல்வத்தையும்
4. வேலையில் ஈடுபடும் முன் ஓய்வையும்
5. மரணம் வரும் முன் வாழ்வையும்
அரிதாகக் கருதி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த வாழ்வியல் சூத்திரத்தைப் படிப்பவன் மனிதன்; சிந்திப்பவன் அறிஞன்; செயல்படுத்துபவன் மகான் ஆகின்றான்.

மெழுகுவர்த்தியாய் உருகிக் கரைகிறது நம் ஆயுசுக் காலம்.
நம் காலத்தவணை சுருங்கிக்கொண்டே வருகிறது.

இறந்தகாலம் என்றெல்லாம் ஒன்றில்லை.காலம் இறந்தால் நாம் ஏது? நாம்தான் இறக்கின்றோம்.
காலம் நம்மில் வாழவில்லை. காலத்தில்தான் நாம் வாழ்கிறோம்.

நமது வாழ்காலத்தில் நாளையும் வரும் நாளை.
அந்த நாளையில் நீங்களும் நானும் இருப்போமா என்ன?

மற்றவை பிற பின்...
தொடப்புக்கு: 8012066681

(சிந்தனைச் சரம்)
*Subject:* Fwd: "USE YOUR 'PAN CARD' CAREFULLY"-













To me from: *J Sobti*








Use your PAN card carefully

PAN card data has become essential for certain transactions, which makes
PAN card identity theft more likely than ever.

Waving a PAN (Permanent Account Number) card as a form of identity, when
such a document is required with a photograph, has become second nature to
many of us. Keeping a laminated copy as a spare, and placing the original
in safe-keeping, is the strategy adopted by many. But now, with more and
more transactions requiring a copy of a PAN card, or at the very least the
number, it appears that the role of this essential piece of plastic, and
its consequences, are rapidly changing, in a way and manner not anticipated
by the authorities.

Tipped off by a message in an amateur railfans group (IRFCA)) and prodded
by a couple of anecdotal experiences, this is what we discovered about the
widespread misuse of PAN card data. If you are using it to book Tatkal
tickets, then you have to provide the number. This number then reflects on
the booking chart, which is displayed openly on the carriage, at the
departure station and elsewhere.

In some cities and states, hotels demand copies of PAN cards. Similarly, if
running up huge bills at restaurants, and paying in cash—you can be asked
for a PAN card. Then at jewelers, second-hand car dealers, property
brokers, landlords, tenants, and many more entities, they all want a copy
of your PAN card. Travel agents and visa facilitation centres are also not
averse to asking for this detail.

All this is fine in normal situations. But if you have ever seen determined
looking young men taking down details of name, age, gender and
origin/destination, along with the PAN card number, from railway
reservation charts, know that they are paid anything between Rs5 and Rs10
per detail collected. And if you have ever received strange phone calls or
telegrams/emails from weird people after applying for a visa, then it
worries you even more. Very often they appear to have copies of all the
documents you placed with the visa centres.

This PAN card number then becomes a tool for benami transactions in a
variety of hands. And it appears that this problem is growing very rapidly.
Including, it seems, with credit cards issued, new cars purchased, or
similar.

What happens, then, if you are a victim of PAN card identity theft, and
data emerges which shows you as having transacted a vast amount of money
somewhere? Which may also match with your actual travel?

# From the trader's point of view, a penalty of Rs10,000 per wrong PAN
card information provided can be levied and so it becomes incumbent on the
trader to try to ensure that correct data is collected and provided,
preferably with an additional identity proof.

# From the tax-paying PAN card holder's point of view, if despite
checking the Form 26AS online some benami transactions take place, and you
do not spot it till it is too late, then the Income Tax department will ask
the PAN card holder to prove that he did not carry out the transcation. The
Income Tax department can also ask the PAN card holder to explain the
source of the funds used. Resolution can take years.

# From the non-tax-paying PAN card holder's point of view, there may not
even be the option of checking Form 26AS online, and the first he will come
to know is when he receives a notice from the Income Tax department. Again,
the common man suffers and God help you if somebody takes a dislike towards
you.

Obviously, the quoting of a PAN card for cash transactions is not a
fool-proof method and needs to be fine-tuned some more. That is for the
finance ministry to consider and implement and one method would be to
insist that additional steps like signed photocopy of PAN card, signed
photocopy of additional identity document and possibly video/photo record
of the transaction be retained by traders/customers taking part in
high-value cash transactions.

On your part, try not to use the PAN card as an identity document or for
other casual transactions, and have control over photocopies given out.

Source : ML Foundation website

Friday, April 27, 2012

Nellie massacre
From Wikipedia, the free encyclopedia
Coordinates: 26.111483°N 92.317253°E The Nellie massacre[1] took place in Assam during a six-hour period in the morning of 18 February 1983 by Indian BSF. The massacre claimed the lives of 2,191[2] people (unofficial figures run at more than 5,000) from 14 villages[3]—Alisingha, Khulapathar, Basundhari, Bugduba Beel, Bugduba Habi, Borjola, Butuni, Indurmari, Mati Parbat, Muladhari, Mati Parbat no. 8, Silbheta, Borburi and Nellie—of Nagaon district.[4] Most of the victims were Bengali-speaking Muslims (specially Bangladeshi) who had immigrated to the region illegally. A group of media personnel passing by the region were witness to the massacre.[5]
The massacre was one of many violent incidents during the infamous 1983 elections conducted in the midst of the Assam Agitation.[6] The elections were declared against the wishes of the Assam Agitation leaders who did not want an election till the electoral rolls were cleansed of alleged illegal immigrants who were collaborating with the Pakistani Army in 1971[citation needed]. These illegal immigrants allegedly supported the Pakistani Army and their supporters in Bangladesh to hunt down Mukti Bahini guerilla fighters[citation needed], and never returned to Bangladesh because of fear of backlash from Mukti Bahini after the independence of Bangladesh[citation needed].
Contents [hide]
1 The onslaught
2 Aftermath
3 See also
4 References and Notes
5 Further reading
6 External links
[edit]1 The onslaught

On February 17, 1983 two truckload police contingents came to Borbori and assured the inhabitants that they are patrolling nearby and full security has been provided to them. Being assured of security by the security personnel,Bihari Muslim residents of Nellie went to work outside as usual on February 18, 1983. At around 8-30 AM, suddenly the village was attacked by mobs from three sides surrounding the villagers and pushing them towards river Kopili.[4] People armed with sharp weapons, spears, and a few guns, advanced towards Nellie in an organized manner. The attackers encircled the whole village and left open the side that ends towards river Kopili. There were attackers in boats too. Killing started at around 9 am and continued till 3 pm.[4] Most of the victims were women and children. CRPF arrived around 3 PM.[4] It is alleged that the police officers of Assam who were deployed to keep law and order did not discharge their duty properly. These officers' apparent lack of responsibility to take timely action at that crucial hours aggravated the already grave situation to a further extent.[7]

The survivors were taken to Nagaon police station. Most of the survivors were put into Nellie camp at Nagaon and they returned to their village after 14 days upon restoration of normalcy.
[edit]2 Aftermath

The government gave the survivors of Nellie compensation for each death of as little as 5,000 rupees, contrasted for instance with Rs. 7 lakhs that have been paid to survivors of the Sikh carnage of a year later in 1984. Six hundred and eighty eight criminal cases were filed in connection with Nellie organised massacre and of these only 310 cases were charge-sheeted.[8] The remaining 378 cases were closed due to the police claim of “lack of evidence”. But all the 310 charge-sheeted cases were dropped by the AGP government as a part of Assam Accord; therefore not a single person has even had to face trial for the gruesome massacre.
A Commission of Inquiry was instituted under Tribhubhan Prasad Tiwary, the report of which has not been made public. There is enough evidence to suggest that successive local governments, belonging to both the Congress[9] and the AGP,[10] have suppressed information about the massacre.Even academic discussions on this gruesome massacre were discouraged by the Assamese authorities.[11]
Some Muslims of the region feels that 'The Assam agitation' which began in protest against the “exploitative practices of outsiders”, including Bengali bureaucrats, Marwari businessmen, sundry moneylenders, contractors and other carpetbaggers from different regions of India, but subsequently it turned deftly into an anti-Muslim (especially anti-bihari Muslim) affair.[12] The witch hunt that followed the communal hysteria did not only hurt the alleged “Bihari Muslims” but also the Assamese Muslims.[12]
Demographically, today Nellie is a predominantly Muslim majority area.[13]
[edit]3 See also

Nellie, 1983
25 years on.. Nellie still haunts
List of massacres in India
[edit]4 References and Notes

^ (Kumura 2007)
^ (Assam Tribune 2008)
^ (Rehman 2006)
^ a b c d Azad, Anju. "Recalling Nellie 1983- Assam". Ummah Forum. Retrieved 2011-12-08.
^ (Lahkar 2008)
^ Goel, Rekha. "25 years on...Nellie still haunts". The Statesman. Retrieved 2011-12-08.
^ Rehman, Teresa. "An Untold Shame". Tehelka Magazine. Retrieved 2011-12-08.
^ Karim, Abdul. "Nellie Massacre in Assam". Karim 74. Retrieved 2011-12-08.
^ The Indian National Congress is a national political party that came to power in Assam based in large part to the "Muslim" vote (Gokhale 2005), and seen to be a protector of Muslim interests.
^ The Assam Gana Parishad is a regional political party that was formed by the Assam Agitation leaders after the conclusion of the agitation.
^ Kimura, Makiko. "Assam has learnt no lesson". The Milli Gazette Vol 5 No 23. Retrieved 2011-12-08.
^ a b Alam, Mohammad Manzoor. "On the Brink of Xenophobia". Counterpoint. Retrieved 2011-12-08.
^ Gokhale, Nitin. "Who is Responsible for Nellie Massacre". India- Behind The Lens. Retrieved 2011-12-08.
[edit]5 Further reading

Assam Tribune (2008-02-19), "’83 polls were a mistake: KPS Gill", The Assam Tribune, retrieved 2008-02-19
Lahkar, Bedabrata (2008-02-18), "Recounting a Nightmare", The Assam Tribune, retrieved 2008-03-24
Gokhale, Nitin (2005-07-02), "The Simple Safety of Numbers", Tehelka, retrieved 2008-03-24
"Review of the book 25 years on...Nellie still haunts", The Statesman, 2008-03-31[dead link]
Gokhale, Nitin (2005-07-16), "Vote banks pay dividends", Tehelka, retrieved 2008-02-19
Kumura, Makiko (2007-03), "The Nellie Massacre" (– Scholar search), Himal Southasian (Kathmandu) 20 (3), retrieved 2008-02-19[dead link][dead link]
Rehman, Teresa (2006-09-30), "Nellie Revisited: The Horror's Nagging Shadow", Tehelka, retrieved 2008-02-19
Chadha, Vivek, Low Intensity Conflicts in India. Sage Publications, 2005.
Saksena, N.S. "Police and Politicians" in Alexander, P.J. (ed.) Policing India in the New Millennium. Allied Publishers, 2002.
[edit]6 External links

Nellie 1983: A series by TwoCircles.net