Thursday, May 31, 2012

நாட்பட்ட வலிகள் அணுகுவது எப்படி?

வாழ்க்கைத் துணைவரின் அணுகுமுறையால் நாட்பட்ட வலிகளின் பாதிப்பு அதிகமாகலாம்....


வலிகள் என்றாலே வேதனையும் துன்பமும்தான். அதை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்குத்தான் அதன் தீவிரம் புரியும். அதிலும் முக்கியமாக நீண்டகாலமாகத் தொடரும் நாட்பட்ட வலிகள் (Chronic Pain) வேதனை அளிப்பது மிக மிக அதிகம். உடல் ரீதியாக மட்டுமின்றி, உளரீதியாகவும் கூட.

மூட்டு நோய்களோடு வாழ்தல் பற்றி மேலும் படிக்க இது இணைப்பு.

குடும்பத்தில் ஒருவருக்கு வலி

வலிகளின் தீவிரத்தைப் பற்றி சிந்திப்போமா?

உங்களை ஒரு பெண் என வைத்துக் கொள்வோம்.

உங்களுக்கு சில காலமாகவே இடுப்பு வலி தொடர்ந்து வருகிறது. அதனோடு கூட்டவும், துப்பரவு செய்யவும், சமைக்கவும் சிரமமப்படுகிறீர்கள். சிரமப்பட்டேனும் உங்கள் நாளாந்த வேலைகளைச் செய்து வருவதைத் தவிர்க்கவில்லை.



இருந்தபோதும் நீங்கள் உங்கள் வலியைப் பற்றி எப்பொழுது பிரஸ்தாபித்தாலும்
கணவர் அதை அக்கறையோடு செவிமடுப்பதில்லை என வைத்துக் கொள்வோம்.
அவர் அலட்சியமாக பனடோலைப் போட வேண்டியதுதானே என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார்.
அக்கணத்தில் உங்கள் மன நிலை எப்படி இருக்கும்.
கோபம் வரலாம்,
எரிச்சல் ஏற்படலாம்,
கவலையும் அழுகையும் கைகோத்து வரலாம்.
இவை எதுவும் இல்லையேல் 'இந்த மனிசனுக்குச் சொல்லிப் பிரயோசனம் இல்லை' என்ற வெறுப்பில் அவரோடு மனம்விட்டுப் பேசும் எண்ணமே விட்டுப் போய்விடலாம்.

இது அனுபவத்தில் நாம் நிதம் காண்பதுதானே! ஆனால் அண்மையில் இதனை ஒரு ஆய்வாகச் செய்திருக்கிறார்கள்.

நாட்பட்ட வலியானது தம்பதிகளிடையே
தொடர்பாடலை குறைக்கிறது.
கலந்துரையாடுவது விட்டுப் போகிறது.
இதனால் அவர்களிடையே புரிந்துணர்வு குறைந்து போகிறது.
இவற்றின் பலனாக பாதிக்கப்பட்டவரின் வலியைச் சமாளிக்கும் திறன் குறைந்து போகிறது என்பது இந்த ஆய்வில் தெரிந்தது.

முன்னைய ஆய்வுகள்

குடும்ப உறவில் ஒருவர் மற்றவரது உணர்வுளைப் புரிந்து, அதற்கு மதிப்பளித்து, ஆறுதலிப்பதானது நன்மை பயக்கும் என முன்னைய ஆய்வுகள் உறுதி செய்திருந்தன்.
இதனால் அவர்களிடையே நெருக்கம் அதிகரிக்கிறது.
நம்பிக்கை இறுக்கமாகிறது.
உணர்வுகள் தம்மை அலைக்களிக்க விடாது அவற்றை அடக்கியாளும் வல்லமையைக் கொடுக்கிறது.

மாறாக துணைவர் மற்றவர்களின் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் அலட்சியப்படுத்தி, உதாசீனப்படுத்தினால் அல்லது சினங்கொண்டு விரோதமாக நோக்கினால்
அவர்களின் குடும்ப உணர்வில் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது.
விட்டுக் கொடுப்புகள் குறைந்து குடும்ப உறவைப் பாதிக்கும்.
மன விரக்தியும் ஏற்படலாம்
என்பதும் முன்னைய ஆய்வுகளில் தெளிவாகியிருந்தது.

இந்த ஆய்வு

நாரி உழைவு, இடுப்பு வலி, தசைப்பிடிப்புகள் பல்வேறு வலிகளால் பாதிக்கப்பட்டவர்களிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வில் வெளிவந்த விடயம் ஆய்வாளர்களை மட்டுமல்ல உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கும். சிறிய ஆய்வுதான் 58 பெண்களையும் 20ஆண்களையும் கொண்டது.



உணர்வு ரீதியாக அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்த ஆய்வின் முடிவுகள் எதிர்மாறாக இருக்கிறது.
வலியால் துன்பப்படும் ஆண்கள் தங்கள் மனைவிமாரின் எதிர்மறையான உணர்வுப் பிரதிலிப்பால் அதிகமான பாதிப்பிற்கு உள்ளானதாக தெரிந்தது.
வலி இருந்தால் மட்டுமின்றி ஏனைய பொழுதுகளிலும் மனைவியின் பாராமுகம் கணவர்களின் மனத்தை அதிகமாகச் சஞ்சலப்படுத்தியிருந்தது.



பெண்கள் மென்மையானவர்கள். அவர்கள் மனது பூப்போன்றது. அவர்கள் வலி, வேதனை, இடர் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது அதிகம். எனவே வலிகளை மோசமாக உணர்வர், பாராமுகத்தால் வாடுவர் என்பன நம்பிக்கை. மாறாக, வலிமையுள்ளவர்கள் என நம்பப்படும் ஆண்கள் தாம் இவ் ஆய்வில் வலிகளால் பாதிப்புற்றது ஏன்?

'பாரம்பரிய எண்ணங்களின் அடிப்படையில்
ஆண்கள் தங்கள் குடும்பத்திற்காக உழைப்பவர்கள் என்ற பாத்திரத்தை வகிக்கிறார்கள்.
ஆனால் வலியானது அதனைச் சரியான முறையில் ஆற்ற முடியாத நிலையைத் தோற்றுவிக்கிறது
என ஆண்கள் கருவதால் இந் நிலை ஏற்பட்டிருக்கலாம்' என இந்த ஆய்வைச் செய்த Wayne State University in Detroit and the Norwegian Center for Addiction Research குழவினர் சார்பில் Laura Leong கருத்து கூறியுள்ளார்.
உங்களுக்கான செய்தி என்ன?

இந்த ஆய்வு முடிவுகள் உங்களுக்கு எப்படிப் பயன்படும். நீங்களா உங்கள் துணைவரா மற்றவரில் அதிக அக்கறை காட்டுபவர் எனக் கண்டு பிடித்து மகிழவா, அல்லது யார் உதாசீனப்படுத்துகிறார் எனக் கண்டு பிடித்து குற்றம் சாட்டி வாழ்க்கையை மேலும் நரகமாக்கவா?

நிச்சமாக இல்லை.
மற்றவரின் வலியை மதித்து அதனால் அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை அனுதாபத்துடன் நோக்க வேண்டும்.
பரிவு காட்ட வேண்டும்.
ஆறுதல் சொல்ல வேண்டும்.
ஒத்தாசை செய்ய வேண்டும்.



அது மட்டுமல்ல! தொடர்ச்சியாக வலிப் பிரச்சனைக்காக மருத்துவரிடம் போகும் கணவன் மனைவியாக இருவரும் சேர்ந்து செல்லுங்கள்.

இது நோயைக் கணிக்க மட்டுமல்ல வேறு விதத்திலும் மருத்துவருக்கு உதவும். மருந்துகளும் ஆலோசனைகளும் ஒருவருக்கு மட்டும் போதுமானதா அல்லது மற்றவருக்கும் ஏதாவது தேவைப்படுமா எனத் தீர்மானிக்கவும் உதவும்.


SOURCE: American Pain Society, news release, December 2011


Engr.Sulthan
Mosquito Trap - A Cheap Way
It may not be very useful for killing mosquitoes in USA but it seems most useful for 3rd World Countries. Plz don't forget to forward this message as much you can, it may save someone's LIFE.


Forwarded by a doctor. It might be useful.
CAUTION:
This information may cause massive loss of jobs in insecticides companies, but it could save thousands of innocent lives from the cruel fate of dengue.

DIY is so easy and its costs are unbelievably negligible.
Eradicate Aedes and dengue.

FIGHTING DENGUE MUST START AT EVERY HOME.
Mosquito trap (Dengue prevention)
Its just a mix of water, brown sugar and yeast.

1. Cut a plastic bottle in half, keep both parts. Can be soft drink bottle.
2. Take the lower portion of the bottle. Dissolve the brown sugar in hot water.
Let it cool down to ~70 deg F.
3. Add the yeast. Carbon dioxide will form(This will attract the mosquitoes)
4. Cover the bottle with a dark wrap and insert in the top portion upside down like a funnel. Place it in a corner in your house.
5. In 2 weeks you will be surprised by the number of mosquitoes killed.
web sources
Engr.Sulthan


Engr.Sulthan
ஒரே ரயிலைத் தவறவிடுவீர்களா?

Can you afford to miss the only train ?

ரமேஷ் ஒரு இளைஞன்.... தனது பட்டப் படிப்புக்குப் பிறகு ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர விண்ணப்பித்திருந்தான். அவன் படித்த படிப்புக்கு அந்தக் கம்பெனியில் மட்டும்தான் வேலை கிடைக்கும் நாளை காலைப் பத்து மணிக்கு அவனுக்கு சென்னையில் இன்டர்வ்யூ. தனது ஊரில் இருந்து சென்னை செல்ல ஒரே ட்ரெயின் தான் உள்ளது. அதுவும் இன்று இரவு பத்து மணிக்குப் புறப்படுகிறது.... இதோ இன்னும் சில நிமிடங்களே உள்ளன வண்டி புறப்படுவதற்கு...... ரயில் நிலையத்தை அப்போதுதான் அடைந்தான் ரமேஷ்... ஆனால் அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது அவனுக்கு... தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு... அவனது பரமவிரோதிகளான சொக்கலிங்கமும் நடராஜனும் அவன் முன்பதிவு செய்திருந்த அதே கம்பார்ட்மெண்ட்டில் அவனது இருக்கைக்கு அருகில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். ரமேஷுக்கு அவர்களை அறவே பிடிக்காது.... வெறுப்பென்றால் அவ்வளவு வெறுப்பு... இவர்களோடு அமர்ந்து நான் பயணம் செல்வதா?..... முடியவே முடியாது..... ஏறிய அதேவேகத்தில் ரயிலில் இருந்து இறங்கியும் விட்டான் ரமேஷ்!

. தூர நின்று யோசித்தான் ரமேஷ். ஆனால் நாளை எனக்கு நடக்க இருப்பதோ அவ்வளவு முக்கியமான இன்டர்வ்யூ! இந்த வண்டியை விட்டு விட்டால் வேறு வழியே கிடையாது. இவ்வாய்ப்பை தவற விட்டால் எனது எதிர்காலமே கேள்விக்குறிதான்! எனக்கு வாழ்வா அல்லது சாவா என்பதைத் தீர்மானிப்பது நாளைய இன்டர்வ்யூ...... என்ன செய்ய? இவர்களுக்காக எனது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவதா?

இல்லை இல்லை எனக்கு என் வேலை முக்கியம்! நோக்கம் முக்கியம்!.எதிர்காலம் முக்கியம்!... வருவதை சந்திப்போம்!.... ஒரு தீர்மானத்தோடு கம்பார்ட்மெண்ட்டுக்குள் நுழைந்தான் ரமேஷ்!

இங்கு ரமேஷின் நிலையில் புத்தியுள்ள யாராக இருந்தாலும் அவ்வாறுதானே தீர்மானிப்பார்கள்! .....ஏன் இந்த உதாரணம் சொல்லப் படுகிறது தெரியுமா?

இன்று பல மாற்று மத அன்பர்கள் இஸ்லாம்தான் உண்மையான இறைமார்க்கம் என்பதை உணர்கிறார்கள்.

= இதில் மூடநம்பிக்கைகள் இல்லை.

= வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இல்லை.

= புரோகிதர்கள் இல்லை,

= மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டுதல் இல்லை.

= தீண்டாமை இல்லை, சாதிக் கொடுமைகள் இல்லை .

= வழிபாட்டில் வேற்றுமை பாராட்டுதல் இல்லை

= பகுத்தறிவுக்கு ஒவ்வாத போதனைகள் இல்லை.

= பெற்றோரைப் புறக்கணித்தல், வரதட்சனை, பெண்சிசுக் கொலை, போன்ற வன்கொடுமைகள் இல்லை.

இன்னும் இவைபோன்ற எண்ணற்ற இஸ்லாத்தின் சிறப்புகளால் கவரப்பட்ட பலர், “எல்லாம் சரி, ஆனால் முஸ்லிம்கள் சிலரின் அல்லது பலரின் நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு புறம்பாக இருக்கிறதே!” என்று கூறி இந்த இறைமார்க்கத்தைப் புறக்கணித்து நிற்கிறார்கள். இவர்கள் சிந்திப்பதற்காகத்தான் மேற்படி உதாரணம் சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட சகோதர சகோதரிகள் சிந்திக்க வேண்டிய விடயம் இதுதான்......

நாம் அனைவரும் ஒரே மனிதகுலத்தின் அல்லது குடும்பத்தின் அங்கத்தினர்களே.. நமது இறைவனும் ஒரே ஒருவனே. நாம் வாழும் இடமும் ஒன்றுதான்.. நாம் வாழும் காலகட்டமும் ஒன்றுதான். நமக்கு நேர்வழிகாட்டுவதற்காக இறைவன் அருளிய மார்க்கமும் ஒன்றாகத்தானே இருக்க முடியும்? நமக்கு மட்டுமல்ல, நம் மூதாதையர்களுக்கும் இறைவன் ஒரே மார்க்கத்தைத் தான் அருளியிருந்தான். அதுதான் இறைவனுக்குக் கீழ்படிதல் என்ற மார்க்கம். அதுவே அரபு மொழியில் இஸ்லாம் என்று இன்று அறியப்படுகிறது. இதைப் பின்பற்றினால் நாளை மறுமையில் நாம் சொர்க்கத்தை அடையலாம் இல்லையேல் நாம் சென்றடைவது நரகத்திற்குத்தான்!

ஆக, இன்று சொர்க்கம் செல்ல இஸ்லாம் என்ற ஒரு வாகனம்தான் எஞ்சியுள்ளது. இவ்வாகனத்தில் சில விரோதிகள் ஏறிவிட்டார்கள் என்ற காரணத்துக்காக உங்கள் நீண்ட எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வீர்களா?

மறுமையோடு ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்க்கை என்பது கடல் நீரில் நம் விரலை முக்கி எடுத்தால் விரல் நுனியில் காணும் அரை சொட்டு நீரளவுதான் என்பது நபிகளாரின் கூற்று.. மறுமை என்பதோ முடிவில்லாதது. அங்கு நமது இருப்பிடம் ஒன்று சொர்கத்திலோ அல்லது நரகத்திலோதான் அமையும். மூன்றாவதாக ஒரு இருப்பிடம் கிடையாது. நாளைய நமது மறுமை இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்து செயல்பட வேண்டிய தேர்வுக் களம் இதுவே.

இவ்வுலகு என்பது ஒரு பரீட்சைக் கூடம் போன்றது. இங்கு நாம் காணும் யாவருமே பரீட்சைக்கு உட்படுத்தப்படுகிறோம். அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, அல்லாதவர்களாக இருந்தாலும் சரி, வெறும் முஸ்லிம் பெயர்தாங்கிகளாக இருந்தாலும் சரியே. தனது எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிற ஒரு பரீட்சையை எழுதிக்கொண்டு இருக்கும் ஒரு பொறுப்புணர்வுள்ள மாணவன் தனது சக மாணவன் பரீட்சைக்கூடத்தில் அமர்ந்து கொண்டு சேட்டைகள் செய்துகொண்டும், வேடிக்கை பார்த்துக்கொண்டும் இருக்கிறான் என்பதற்காக தனது இலட்சியங்களை வீணடிக்க மாட்டான். வாய்ப்பு கிடைத்தால் சகமாணவனுக்கு நினைவூட்டலாம் அல்லது எச்சரிக்கலாம். பின்விளைவுகளை எடுத்துரைத்து அவனை திருத்த முயற்சிக்கலாம். ஆனால் தனது குறிக்கோளைத் தவற விடமாட்டான். அதுபோலத்தான் இவ்வுலகிலும் நாம் செயல்படவேண்டும்.

ஆக, நாம் ஒவ்வொருவரும் நமக்கு மோட்சம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் இறைவன் நமது காலட்டதிற்க்காக அனுப்பியுள்ள தூதர் மூலமாக அனுப்பபட்ட இந்த இஸ்லாம் என்ற மார்க்கத்தை ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்பது தெளிவு. மாறாக முன்னோர்களின் வழி என்றும் முன்னாள் இறைத்தூதர்களின் வழி என்றெல்லாம் சொல்லி எதைப் பின்பற்றினாலும் மோட்சத்தை அடைய முடியாது. இறைவன் தனது திருமறையில் தெளிவாக எச்சரிப்பதைப் பாருங்கள்.

3:19 .epr;rakhf ,];yhk; jhd; my;yh`;tplj;jpy; (xg;Gf;nfhs;sg;gl;l) khHf;fkhFk;;. Ntjk; nfhLf;fg;gl;ltHfs; (,Jjhd; cz;ikahd khHf;fk; vd;Dk;) mwpT mtHfSf;Ff; fpilj;j gpd;dUk; jk;kpilNaAs;s nghwhikapd; fhuzkhf (,jw;F) khWgl;ldH;. vtH my;yh`;tpd; அத்தாட்சிகளை epuhfhpj;jhHfNsh> epr;rakhf my;yh`; (mtHfSila) fzf;ifj; Jhpjkhf Kbg;ghd;.

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

நபிகள் நாயகம் வருவதற்குமுன் வேதம் வழங்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களைத்தான் இங்கு வேதக்காரர்கள் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

இறுதியாக இஸ்லாத்திற்குப் புறம்பாக பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு சில வார்த்தைகள்.... நீங்கள் உங்களுக்கு இறைவன் அளித்த அருட்கொடையாம் இஸ்லாத்தின் அருமையை உணராது இன்னும் உங்கள் தவறான போக்கைத் தொடர்வீர்களானால் இறைவன் உங்களை தனது தண்டனைகள் மூலம் அழித்துவிட்டு உங்களின் இடத்தில் இஸ்லாத்தின் அருமைகளை உணர்நது உறுதியாகப் பின்பற்றும் மக்களை உங்கள் இடத்தில் குடியமர்த்துவான் என்று திருமறை எச்சரிக்கிறது.

47:38 ......vdNt (rj;jpaj;ij) ePq;fs; Gwf;fzpg;gPHfshapd;> cq;fsy;yhj (NtW xU) r%fj;jhiu mtd; gjpyhff; nfhz;L tUthd; gpd;dH> cq;fisg; Nghd;W mtHfs; ,Uf;fkhl;lhHfs;.

(திருக்குர்ஆன் நற்செய்தி மலர் – மே இதழில் இருந்து....)

--
வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம் (தொடர்-1)
May 30th, 2012 by publisher#999
- மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :

மறுமையை நம்புவது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும், மறுமையை நம்புவதென்பது மரணத்திற்கு பின் மறுமை என்னும் வாழ்வு இருக்கின்றது என்பதாகும், மறுமையில் அல்லாஹ் நல்லடியார்களுக்கு சுவர்க்கத்தையும், இறை நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். சுவர்க்கம் என்றால் என்ன, அதில் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதை கூறி, அதன் பக்கம் மக்களை ஆர்வம் காட்ட வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அச்சுவர்க்த்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பையும் அதற்குரிய அமல்கள் செய்யும் நல்வாய்ப்பினையும் தந்தருள்வானாக.! இப்போது வாருங்கள்,அந்த சுவர்க்கத்தை பார்வையிடுவோம்.

சுவர்க்கத்தின் பெயர்கள்:

1. அல் ஜன்னத்

2. தாருஸ் ஸலாம்

3. தாருல் குல்த்

4. தாருல் முகாமத்

5. ஜன்னதுல் மஃவா

6. ஜன்னாத்து அத்ன்

7. தாருல் ஹயவான்

8. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்

9. ஜன்னாத்துன்னயீம்

10. அல் மகாமுல் அமீன்

11. மக்அது ஸித்க்

12. கதமு ஸித்க்

சுவர்க்க வாசலின் பெயர்கள்

1. பாபு முஹம்மது

2. பாபுத்தவ்பா

3. பாபுஸ்ஸலா

4. பாபுஸ்ஸவ்ம் (அர்ரைய்யான்)

5. பாபுஸ்ஸகாத்

6. பாபுஸ்ஸதகாத்

7. பாபுல் ஹஜ்ஜி வல்உம்ரா

8. பாபுல் ஜிஹாத்

குர்ஆனில் சுவர்க்கம்

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.(அவர்களை நோக்கி) ”சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்). மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர். ”என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்). இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர். நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன, இன்னும், ”நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.) ”நீங்கள் செய்து கொண்டிருந்ததன் (நன்மையான) காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள். ”உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன, அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்” (எனக் கூறப்படும்). 15:45 – 73

அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது. கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள். இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்). தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களை சுற்றி கொண்டுவரும். (அது) மிக்க வெண்மையானது. அருந்துவோருக்கு மதுரமானது. அதில் கெடுதியும் இராது. அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர். இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள். (தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள். (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள். 37:40-50

பயபக்தியுடையவர்கள் நிச்சயமாக (அவர்கள்) அச்சமற்ற இடத்தில் இருப்பார்கள். சுவனச் சோலைகளிலும், நீர் ஊற்றுகளிலும் (இருப்பார்கள்). ஸுன்துஸ், இஸ்தப்ரக் (ஆகிய அழகிய பட்டாடைகள், பீராம்பரங்கள்) அணிந்து ஒருவரை ஒருவர் முகம் நோக்கி இருப்பார்கள். இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹுருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம். அச்சமற்றவர்களாக, சகல விதக்கனிவகைகளையும், அங்கு கேட்டு(ப் பெற்றுக்) கொண்டுமிருப்பார்கள். முந்திய மரணத்தைத் தவிர, அங்கு மரணத்தை அவர்கள் அனுபவிக்கமாட்டார்கள்; மேலும் (இறைவன்) அவர்களை நரகத்தின் வேதனையை விட்டும் காப்பாற்றிவிட்டான். (இதுவே) உம்முடைய இறைவனின் அருள் கொடையும்; இதுவே மிகப் பெரிய வெற்றியுமாகும். 44:51 – 57

(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது ஒருவரையொருவர் முன்னோக்கியவாகளாக அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள். தெளிந்த பானங்களால் நிரம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்). (அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை வலிக்குள்ளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள். இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் விரும்பும் பட்சிகளின் (பறவைகளின்) மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்). (அங்கு இவர்களுக்கு) ஹுருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்). (இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும். அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். ‘ஸலாம், ஸலாம்’ என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்). இன்னும் வலப்புறத்தார்கள்! – வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்; (நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும் இன்னும், நீண்ட நிழலிலும், (சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும், ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் – அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்). நிச்சயமாக (ஹுருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி அப்பெண்களைக் கன்னிகளாகவும்; (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும், பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்). 56:15-40

நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) ‘நயீம்’ என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்கிகளைப்) பார்ப்பார்கள். அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அதன் முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும். அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முர்புகள் அருந்துவார்கள். 83:22-28

இன்னும் இது போன்ற பல வசனங்களும் இத்தொடரில் உள்ளது. சுருக்கத்திற்காக இத்துடன் முடிக்கிறேன்.

மறுமையில் அல்லாஹ்வின் சந்திப்பு

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது அவர்கள் வானில் பதினான்காம் பக்கத்து நிலவை(பரிபூரண சந்திரனை) பார்த்தார்கள். அப்பொழுது கூறினார்கள். நீங்கள் இந்த நிலவைப் பார்ப்பதைப் போல(கியாமத் நாளில்)உங்கள் ரப்பைக் கண் கூடாகக் காண்பீர்கள். அவனைப் பார்ப்பதில் உங்களுக்கு எந்தக் குழப்பமும் இருக்காது. (புகாரி, முஸ்லிம்)

சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழைந்ததும், அல்லாஹுதபாரக வதஆலா, அவர்களிடம் வேறு எதனையும் நீங்கள் நாடுகிறீர்களா? அதனை நான் உங்களுக்கு அதிகப் படுத்துகிறேன். என்று கூறுவான். அதற்கவர்கள், எங்கள் இரட்சகனே! நீ எங்களின் முகங்களை வெண்மையாக்கி விட்டாய். எங்களை சுவர்க்கத்தில் நுழையச் செய்து விட்டாய். நரகை விட்டும் எங்களைக் காப்பாற்றி விட்டாய். (நீ எங்களுக்கு எல்லா விதமான அருட்கொடைகளையும், இன்பங்களையும், அளித்து விட்டாய்! இனி எங்களுக்கு வேறு என்ன வேண்டும்) என்பார்கள்.

அப்பொழுது அல்லாஹ் தனக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள திரையை அகற்றி விடுவான். (அப்பொழுது அவர்கள் தங்கள் இரட்சகனைப் பார்க்கும் பாக்கியத்தை பெறுவார்கள்) தங்கள் இரட்சகனைப் பார்ப்பதை விட வேறு எந்தப் பொருளும் அவர்களுக்குப் பிரியமானதாகக் கொடுக்கப்படவில்லை. (அவர்களது இரட்சகனைப் பார்ப்பதே எல்லாவற்றையும் விட அவர்களுக்கு மிகப் பிரியமானதாக இருக்கும்) முஸ்லிம்: ஸுஹைபு(ரலி)

இன்ஷா அல்லாஹ் தொடரும்..

வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம் (தொடர்-2)

--


ALAVUDEEN
வாருங்கள், சுவர்க்கத்தை பார்வையிடுவோம் (தொடர்-1)
May 30th, 2012 by publisher#999
- மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ :

மறுமையை நம்புவது ஈமானின் அடிப்படைகளில் ஒன்றாகும், மறுமையை நம்புவதென்பது மரணத்திற்கு பின் மறுமை என்னும் வாழ்வு இருக்கின்றது என்பதாகும், மறுமையில் அல்லாஹ் நல்லடியார்களுக்கு சுவர்க்கத்தையும், இறை நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தையும் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். சுவர்க்கம் என்றால் என்ன, அதில் கிடைக்கும் இன்பங்கள் என்ன என்பதை கூறி, அதன் பக்கம் மக்களை ஆர்வம் காட்ட வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அச்சுவர்க்த்திற்கு செல்லக்கூடிய வாய்ப்பையும் அதற்குரிய அமல்கள் செய்யும் நல்வாய்ப்பினையும் தந்தருள்வானாக.! இப்போது வாருங்கள்,அந்த சுவர்க்கத்தை பார்வையிடுவோம்.

சுவர்க்கத்தின் பெயர்கள்:

1. அல் ஜன்னத்

2. தாருஸ் ஸலாம்

3. தாருல் குல்த்

4. தாருல் முகாமத்

5. ஜன்னதுல் மஃவா

6. ஜன்னாத்து அத்ன்

7. தாருல் ஹயவான்

8. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ்

9. ஜன்னாத்துன்னயீம்

10. அல் மகாமுல் அமீன்

11. மக்அது ஸித்க்

12. கதமு ஸித்க்

சுவர்க்க வாசலின் பெயர்கள்

1. பாபு முஹம்மது

2. பாபுத்தவ்பா

3. பாபுஸ்ஸலா

4. பாபுஸ்ஸவ்ம் (அர்ரைய்யான்)

5. பாபுஸ்ஸகாத்

6. பாபுஸ்ஸதகாத்

7. பாபுல் ஹஜ்ஜி வல்உம்ரா

8. பாபுல் ஜிஹாத்

குர்ஆனில் சுவர்க்கம்

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவனபதிகளிலும், நீரூற்றுகளிலும் (சுகம் பெற்று) இருப்பார்கள்.(அவர்களை நோக்கி) ”சாந்தியுடனும், அச்சமற்றவர்களாகவும் நீங்கள் இதில் நுழையுங்கள்” (என்று கூறப்படும்). மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள். அவற்றில் அவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது; அவற்றிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர். ”என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்). இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர். நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன, இன்னும், ”நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.) ”�

Wednesday, May 30, 2012

http://ping.fm/Wzikh

Indian boy solves 350-year old math puzzle set by Newton

The writer has posted comments on this articleIANS | May 26, 2012, 06.35PM IST



LONDON: A 16-year-old Indian origin schoolboy in Germany has managed to crack puzzles that baffled the world of maths for more than 350 years, it was reported here on Saturday.



Shouryya Ray, from Dresden, has been hailed a genius after working out the problems set by Sir Isaac Newton.



Ray solved two fundamental particle dynamics theories which physicists have previously been able to calculate only by using powerful computers, Daily Mail reported.



His solutions mean that scientists can now calculate the flight path of a thrown ball and then predict how it will hit and bounce off a wall.



Ray only came across the problems during a school trip to Dresden University where professors claimed they were uncrackable, the newspaper said.



"I just asked myself, 'Why not?'," explained Ray.



"I didn't believe there couldn't be a solution," he added.



Ray began solving complicated equations as a six-year-old but says he's no genius.



After arriving from Kolkata four years ago without knowing any German, Shouryya is now fluent in the language.



His intelligence was quickly noted in class and he was pushed up two years in school - he is currently sitting his exams early, the Mail said.



Regards

J. Jahir Hussain
அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-20
*சுனில் ரான்டே என்பவர் பம்பாயில் உள்ள "நேச்சுரல் கிஸ்ட்ரி சொஸைட்டி' என்ற இடத்தில் பாம்பு பிடிப்பவராக வேலை செய்கிறார். இவர் தன்னுடைய ஆறாவது வயதில் ஒரு பாம்பை பிடித்தார். அன்றிலிருந்து இன்று வரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ளார். இவர் பிடித்த பாம்புகளிலேயே மிகவும் பெரியது 15 அடி நீளமுள்ள பைத்தான் என்ற மலைப் பாம்பு.

*டில்லியிலுள்ள முனிசிபல் கார்ப்பரேஷனில் எலிகளுக்கு என்றே ஒரு தனி பிரிவு உள்ளது. அதில் 97 பேர் வேலை செய்கின்றனர். அதில் 74 பேர் எலி பிடிப்பவர்கள்; மற்றவர்கள் அவர்களை சூப்பர்வைஸர் செய்யும் அதிகாரிகள் ஆவர். இந்த டிபார்ட்மென்ட்டில் எலிப்பிடிப்பதற்கான கருவிகள் எதுவுமே இல்லை என்பதுதான் விசேஷமே!

*சுவீடன் நாட்டை சேர்ந்த 19 வயது பெண் ஒரு ரெஸ்டாரென்ட் ஒன்றில் வெயிட்ரஸ் ஆகப் பணி புரிகிறார். ஒரு நாள் ஒரு வயதான பெண்மணி இவருக்கு கொடுத்த டிப்ஸ் தொகையை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 30 ஆயிரம் ரூபாயை கொடுத்திருந்தார் அந்த பணக்காரக் கிழவி.

*ஒன்பது வயது சிறுவன் அருப்மன்னா வெஸ்ட் பெங்காலைச் சேர்ந்தவன். இவன் 2004 செப்டம்பர் மாதம் தூங்க ஆரம்பித்தான். அன்று முதல் இன்று வரை தூங்கிக் கொண்டே இருக்கிறான். இவனுக்கு சாப்பாடு கொடுப்பதற்கும், பாத்ரூம் அழைத்துசெல்வதற்கு மட்டுமே பெற்றோர் இவனை எழுப்புவர். மற்ற நேரங்களில் எல்லாம் இவனை எழுப்பவே முடியாது. பல மருத்துவர்களிடம் காட்டியும் எந்த மருத்துவராலும் இவனது நிலைக்கு காரணம் கண்டு பிடிக்க முடியவில்லை.

* பாம்பு, பல்லி, ஆமை, முதலை போன்ற ஊர்வனவற்றில் ஏறத்தாழ ஐந்தாயிரம் வகைகள் உள்ளன.

* உலகில் ஏறத்தாழ 500 எரிமலைகள் உள்ளன.

* ஒட்டகம் ஒரே நேரத்தில் 90 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.

* ஏப்ரல் என்ற பெயர் "ஏப்பிரிரே' என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது. "எல்லாம் இனிதே நிகழும்' என்பது இதன் அர்த்தம்.

* பாரதியார் "பாரதி' என்ற பட்டம் பெற்ற போது அவருக்கு வயது 11.

* ஆங்கிலப் பாடல்கள் எழுதத் துவங்கிய போது சரோஜினி நாயுடுவுக்கு வயது 13.

* அரசியலில் முழு மூச்சுடன் ஈடுபடத் துவங்கிய போது காமராஜருக்கு வயது 17.

* பல்லிகளில் 2,500 வகைகள் உண்டு.

* பாம்பு போல பல்லியும் தனது மேல் தோலை உரிக்கும்.

* பல்லிகள் மாதக் கணக்கில் உணவின்றி உயிர் வாழும் இயல்பு கொண்டது.

* வாழும் இடத்துக்கு ஏற்ப நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை பல்லிகளுக்கு உண்டு.

* வீட்டுப் பல்லிகள் இரண்டு ஆண்டுகளே உயிர் வாழும்.

*பத்திரிகைச் செய்தியாளர்களை நிருபர்கள் என்கிறோம். ஏன் தெரியுமா? முன்பெல்லாம் செய்தியாளர்கள் கடிதங்கள் மூலமே பத்திரிகைகளுக்குச் செய்திகளை அனுப்பி வந்தனர். வடமொழியில் "நிருபம்' என்றால் கடிதம் என்று பொருள். நிருபங்கள் எழுதி வந்ததால் செய்தியாளர்களும் நிருபர்கள் என அழைக்கப்பட்டனர்.

* வெட்டுக் கிளிக்கு கால்களில் தான் காதுகள் உள்ளன.

* நியூசிலாந்தில் காகமே கிடையாது.

* காகத்திற்கு காதுகள் கிடையாது. கண்ணின் பின்புறமுள்ள துளையின் வழியே கேட்கிறது.

* சவுதி அரேபியா நாட்டில் நதிகளே கிடையாது.

* சீனாவின் புனித விலங்காக வணங்கப்படும் விலங்கு பன்றி.

* உலகிலேயே அதிகமாக முட்டையிடும் உயிரினம் கரையான் தான்.

* எலி, கங்காரு ஆகியவை மிக குறைந்த அளவே தண்ணீர் அருந்துகின்றன.

* ஆஸ்திரேலியாவில் இருக்கும் கங்காருவின் உயரம் 6 அடி. உடலில் பையை உடைய ஒரே விலங்கினம் கங்காரு. கங்காருவின் வால் 4 அடிக்கு மேல் நீளமானது. ஒரே தாவலில் இது 25 முதல் 30 அடிவரை தாண்டி விடும். இதன் குட்டிகள் பிறக்கும் போது கருஞ்சிவப்பு நிறத்திலிருக்கும். கங்காருகள் பொதுவாக பயந்த சுபாவம் கொண்டவை. கங்காருகளின் நாடு ஆஸ்திரேலியா ஆகும்.

இணையத்திலிருந்து
Engr.Sulthan
__._,_.___
Reply to sender | Reply to group | Reply via web post | Start a New Topic
Messages in this topic (1)
RECENT ACTIVITY: New Members 2
Visit Your Group
This group contains Basics of Islamic information in tamil language, discussion about islam, FAQ. which is mainly to clarify non-muslims wrong-opinion about islam and looking brotherhood from them. All the members are invited to share each others thoughts about islam and share the Islamic information what you have. Please try to send message in tamil language. talk about religion only and don’t mix society activity here. Insulting any religious information will not be accepted.

1. No one/Groups/Country/Leader/Community is an example for islam and islam doesn’t say anybody as an example for islam after muhammed(PBUH) because nobody knows what’s inside individuals heart. So don’t mix society with religion and don’t blame religion for individual/groups/country/community’s activity/mistakes.

2. Don’t decide/argue individual opinion as Islam or any country law as Islamic law until you get proof clarification from Quran & hadees.

3. Don’t consider individual comments/decision as total Muslims decision

Recommended to talk about Muslim society at http://ping.fm/kH1Mt & tamil-muslim-subscribe@yahoogroups.com

Recommended islamic website in tamil : www.a1realism.com / www.tamilislam.com
பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்

ஃபாத்திமா நளீரா

[ வயது போய் முதுமையை அணைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்கள், குழந்தைப் பருவத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதனை குழந்தைகளாக இருந்து பெரியவர்களான இந்தப் பிள்ளைகளுக்கு ஏன் புரியாமல் போகிறது? தன்னை அள்ளியணைத்துக் கொஞ்சி மகிழந்த நினைவுகள் ஏன் அகன்று விடுகின்றன?
சமுதாயத்தில் தலை தெரிய ஆரம்பித்தவுடன் அல்லது தனக்கென்று ஒரு குடும்பம் உருவானவுடன் பாசமெல்லாம் பறந்தோடி விடுகிறது. இந்தப் பிள்ளைகளின் அன்பு அவ்வளவு சீக்கிரம் சுருங்கி விடுகிறது. நெஞ்சில் சுமந்து பாதுகாத்த பெற்றோரை எப்படித்தான் கண்ணீர் விட வைக்கின்றனரோ தெரியாது. பிள்ளைகளுக்குப் புரையேறினால் கூடப் பதறும் இவர்களுக்கா இந்தக் கேட்பாரற்ற நிலைமை?

பிள்ளைகள் விட்ட குறைகள், தவறுகள் (மன்னிக்க முடியாத தவறுகள்) தாய், தந்தையர் மன்னித்து மறைத்து சமுதாயத்தில் ஓர் உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும் என்று போராடிய பெற்றோரையே எதிர்காலத்தில் குற்றவாளிகளைப் போன்று கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்கின்றனர். தாம் மணம் முடித்தவர்கள் முன்னிலையிலேயே அவமானப்படுத்தும் பிள்ளைகளும் இல்லாமல் இல்லை.]



"ஆலயத்துக்கு அருகில் இருப்பவன்தான் வழிபாட்டுக்குக் கடைசியாக வருவான்" என்பது போல், தன் அருகிலுள்ள பெற்றவர்களை ஏனோ தானோ என்று பொடு போக்காகப் பார்ப்பதும் தூரத்திலுள்ள சொந்த பந்தங்களுடனும் சமுதாய மட்டத்தில் அந்தஸ்தில் உயர்ந்து நிற்பவர்களுடன் சுமூகமான உறவைப் பேணி இறுக்கமான இணக்கத்துடன் முகமூடி அணிந்து வாழ்வதும் இன்றைய இளைய தலைமுறையான பிள்ளைகளுக்குப் பெஷன் ஆகிவிட்டது.

பெற்றோர்கள் கடனாளிகளாகவும் பிள்ளைகள் பங்காளிகளாகவும் மாறிவிட்ட காலம் இது. வாழ்க்கை முறை யதார்த்தத்தை அப்படியே மாற்றி விட்டது. நிலவைக் காட்டிச் சோறு ஊட்டி பிள்ளைகளை மகிழ்வித்த பெற்றவர்களின் பிற்காலம் ஊட்டி, ஊட்டி வளர்த்த அந்தப் பிள்ளைகளினால் கண்களில் ஒளியையே இழந்து கண்ணீரில் முகம் கழுவ வைக்கப்படுகின்றனர். கலங்கித் தவிக்கின்றனர்.

நவீன யுகத்தில் சில போலியான வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்ப அல்லது கட்டியவளின் கண்டிப்பான கட்டளைக்கு இணங்க பாசத்தில் கலப்படம் கலந்து தாய், தந்தையரின் உள்ளத்தில் மாறாத வடுக்களை ஏற்படுத்துகின்றனர் இன்றைய இளைஞர்கள். இவ்வாறான பெற்றோர்கள் ஒரு பாவப்பட்ட ஜென்மங்களாக பிள்ளைகளின் கண்களுக்கு உறுத்தப்படுகின்றனர்.

காலூன்றி, கையுயரும் வரை பராமரிப்பு, பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எல்லா வசதிகளுக்கும் பெற்றோர் தேவைப்படுகின்றனர். ஆனால், சமுதாயத்தில் தலை தெரிய ஆரம்பித்தவுடன் அல்லது தனக்கென்று ஒரு குடும்பம் உருவானவுடன் பாசமெல்லாம் பறந்தோடி விடுகிறது. இந்தப் பிள்ளைகளின் அன்பு அவ்வளவு சீக்கிரம் சுருங்கி விடுகிறது. நெஞ்சில் சுமந்து பாதுகாத்த பெற்றோரை எப்படித்தான் கண்ணீர் விட வைக்கின்றனரோ தெரியாது. பிள்ளைகளுக்குப் புரையேறினால் கூடப் பதறும் இவர்களுக்கா இந்தக் கேட்பாரற்ற நிலைமை?

வயது போய் முதுமையை அணைத்துக் கொண்டிருக்கும் இவர்கள், குழந்தைப் பருவத்துக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதனை குழந்தைகளாக இருந்து பெரியவர்களான இந்தப் பிள்ளைகளுக்கு ஏன் புரியாமல் போகிறது? தன்னை அள்ளியணைத்துக் கொஞ்சி மகிழந்த நினைவுகள் ஏன் அகன்று விடுகின்றன?

தாய், தந்தையரின் கருத்துகள் கூட பெரும்பாலான பிள்ளைகளிடத்தில் அரங்கத்தில் ஏற்றுக் கொள்ளப்படாத அரளிப் பூவாக இருக்கின்றன.இவர்களின் பேச்சுகள், புத்திமதிகள், கருத்துகள் குடும்ப சபைகளில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. சாதாரண நண்பர்களுக்கு அல்லது மூன்றாம் நபருக்குக் கொடுக்கும் முன்னுரிமை கூடத் தாய், தந்தையருக்குக் கொடுக்கப்டுவதில்லை. மாறாக அவர்களின் இதயங்களில் இரத்தத்தைக் கசியச் செய்கிறார்கள்.

இதனால்தானோ முதியோர் இல்லங்கள் முந்திக் கொண்டு முன்னணியில் நிற்கின்றன? மேலும் சில பிள்ளைகள் பெற்றோரை தம்முடனேயே கண்ணும் கருத்துமாகத் வைத்துக் கொள்கின்றனர். இவர்கள் வேறு உறவினர்கள் அல்லது சகோதரர்கள் வீட்டில் இருந்தாலும் கரிசனையுடன் தம்முடனேயே வைத்துச் சோறு போடும் பிள்ளைகளும் இல்லாமல் இல்லை. இவர்கள்தான் தனிக் குடித்தனம் செய்பவர்கள். சுய நலத்துக்காகச் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப பெற்றோர்களை வாங்கிக் கொள்கின்றனர்.

உதாரணங்களாகப் பின்வருவனவற்றைப் பட்டியலிடலாம்.

1. வேலைக்குச் செல்லும் தம்பதி என்றாலும் அல்லது கணவன் மாத்திரம் வேலைக்குச் சென்றாலும் மனைவிக்கு ஒத்தாசை பேரன், பேத்திகளை பராமரித்துப் பாதுகாப்பது, வீட்டுப் பாதுகாப்பு என்ற சுயநல எண்ணம்.

2. பெற்றவர்களைப் பராமரிக்காமல் விட்டு விட்டார்கள் என்ற சமுதாயத்தின் குற்றச் சாட்டிலிருந்து தப்பித்துக் கொள்வது.

3. வேலையாளுக்குக் கொடுக்கும் பணம் மீதமாவதுடன் வேலைகளையும் பொறுப்புகளையும் வயதானவர்களின் தலையில் சுமத்தி விட்டு இவர்களுக்கு ஓய்வு எடுக்க ஒரு நல்ல வசதியான சந்தர்ப்பம்.

4. மூன்றாம் நபரை வைத்துக் கொண்டு வீணாகச் சந்தேகப்படுவதனை விட பெற்றோருக்கு முதலிடம் என்ற போலிப் போர்வையில் பழிகளிலிருந்து தப்பித்துக் கொள்வது. எனத் தொடர்ந்து கொண்டே போகலாம்.

இதுவும் ஒரு மறைமுகமான முதியோர் இல்லம்தான் என்பதனைப் பெற்றோர்கள் மறந்து விடுகின்றனர். நம் பிள்ளைகள், பேரன், பேத்தி என வெகுளித்தன அறியாமையினால் தொடர்ந்து கடை வழிகளிலும் சமையல் அறைகளிலும் பாடசாலை என்றும் வயது போன காலத்தில் தாய், தந்தையர் சீரழிகின்றனர். கணவன் அல்லது மனைவி இறந்து விட்டால் பிள்ளைகளின் விரல் நுணி அசைவை எதிர்பார்த்து நின்ற பெற்றோர் பாவப்பட்ட ஜெகன்மங்கள்தான். பெற்றேர்களைத் தன்னுடன் வைத்துக் கொள்கின்றேன் என்ற போர்வையில் சிறை வாசத்தைக் கொடுக்கும் இவர்கள், சகல வேலைகளையும் அட்டை இரத்தம் உறுஞ்சுவது போல் தமது பெற்றோரிடமிருந்து உறுஞ்சி விடுகின்றனர். வயது போன காலத்தில் ஓய்வாக, சந்தோஷமாக, அமைதியாக இருக்க நினைத்தாலும் வீட்டுச் சூழல் அவர்களைத் தட்டி எழுப்பி விடுகிறது. தள்ளாத வயதிலும் அன்பினாலும் கருணையினாலும் பாசத்தினாலும் மென்மேலும் தம் குழந்தைகளுக்காகப் பாடுபடுகின்றனர்.

தொடர்ந்து பிள்ளைகளுக்கும் பரம்பரைகளுக்கும் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தியாகத்தில் தாய், தந்தை முழுமையான திருப்தி கண்டாலும் பிள்ளைகள் சுயநல திருப்தியே பெறுகின்றனர். (விதி விலக்கான உண்மையான பாசமான சில குழந்தைகளும் உள்ளனர்)

நாம் பிள்ளைகளைப் பராமரித்தது போன்று எதிர்காலத்திலும் பிள்ளைகள் நம்மை பராமரிப்பார்கள் என்று நம்புவது சேற்றில் காலை விடுவதற்குச் சமன். அனாதைகளைப் போல் அவலத்தில் துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திணறும் பெற்றோர்களே அதிகம். இயலாத காலத்தில் என்னவெல்லாமோ எண்ணி, ஏங்கிக் கண்ணீர் வடிக்கின்றனர்.

மேலும், சில பிள்ளைகள் தம்முடைய சில சுயநலத் தேவைகளுக்காக தன்னை வளர்த்து ஆளாக்கிய பேற்றோரை விட்டு விலகுவதும் அல்லது அதற்கேற்றாற் போல் போலித்தனமான நொண்டிக் குற்றச்சாட்டுகளைக் கூறி தமது பிழைகளை மறைக்க பெற்றோர்கள் மீது பழி சுமத்தி மெல்ல, மெல்ல விலகி ஒதுங்குவதும் நாளாந்தம் நடந்தேறிக் கொண்டே இருக்கின்றன.

பிள்ளைகள் விட்ட குறைகள், தவறுகள் (மன்னிக்க முடியாத தவறுகள்) தாய், தந்தையர் மன்னித்து மறைத்து சமுதாயத்தில் ஓர் உயர்ந்த இடத்துக்கு வர வேண்டும் என்று போராடிய பெற்றோரையே எதிர்காலத்தில் குற்றவாளிகளைப் போன்று கூண்டில் நிறுத்தி கேள்வி கேட்கின்றனர். தாம் மணம் முடித்தவர்கள் முன்னிலையிலேயே அவமானப்படுத்தும் பிள்ளைகளும் இல்லாமல் இல்லை.

இதற்குத்தான் கூடிய வயதுடன் வாழ்வதனை ஒரு சாபமாகப் பெற்றோர் நினைக்கும் அதே வேளை, அதிகளவு வயது வாழ்வு பிள்ளைகளையும் எரிச்சலடைய வைக்கிறது. முகம் சுழிக்க வைக்கிறது. அதிகளவு முதுமை இவர்களை ஒதுக்குப் புறமாக ஒதுக்கி வைக்கிறது. இவர்களின் ஓரிரு வார்த்தைகளைக் கூடச் செவி கொடுத்துக் கேட்கவும் நேரமிருக்காது. தமக்கும் என்றாவது ஒருநாள் இந்த நிலை நேரும் என்பதனை பிள்ளைகள் எண்ணிப் பார்ப்பது இல்லை.

மேலும் பிள்ளைகளின் சில நடவடிக்கைகள், அழுத்தங்கள் போன்றன இவர்களுக்கு மன உளைச்சலைத் தோற்றுவித்து உளவியல் ரீதியில் நோய்களை ஏற்படுத்துகிறது. தளர்ந்த நரம்புகளில் இறுக்கமான வார்த்தைகளினால் நிலை குலைவையும் உண்டாக்குகிறது. பாதுகாப்பற்ற நிலையினால் பதறித் தவிக்கின்றனர். சில பெற்றோர்களுக்குச் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன என்ற போர்வை இருந்தாலும் பேச்சுத் துணை இல்லாத தனிமையில் மனம் பாதிக்கப்பட்டு புலம்பலாக மாறுவதும் உண்டு. அவர்கள் தங்கள் கடந்த கால வாழ்வை எண்ணிக் கலங்குவது கண்ணீரை வரவழைக்கும்.

சகல சௌகரியங்களுடனும் மதிப்புடனும் வாழ்கின்றனவர்கள் கர்வப்படலாம்ஸஸ பெற்றவர்கள் அருகில் பூப்போல் இருந்தால் மாத்திரமே! அப்படி அமையாதவிடத்துப் பிள்ளைகள் எல்லாம் "விமோசனம் இல்லாத சாபத்துக்குரிய நோயை"ப் போன்றவர்கள்.

நாம் பெற்றோர்களிடத்தில் மிகவும் நீதியாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். நாம் எப்படிப்பட்ட கல்விமான்களுடனும் புத்தி ஜீவிகளுடனும் செல்வந்தர்களுடனும் நட்புப் பாராட்டி, சீராட்டினாலும் பெற்றவர்களின் பிரார்த்தனைதான் இம்மையிலும் மறுமையிலும் அங்கீகிரிக்கப்படும் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோரைத் திட்டுவது, வீட்டை விட்டுத் துரத்துவது, அவர்களை ஒதுக்கி வைப்பது, வேலைக்காரர்கள் போல் நடத்துவது இப்படிப்பட்ட பெரும்பாவங்களை விட்டும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அவர்களைப் பார்த்து முகங்சுழிக்கும் உரிமை கூட எமக்கு இல்லை. அவர்களை இதயத்தில் சுமக்காவிட்டாலும் பரவாயில்லை. நோய்வினை செய்யாமல் இருந்தால் போதும்.

நன்றி: வீரகேசரி வாரமஞ்சரி

source: http://ping.fm/7CvYJ
--


ALAVUDEEN

Tuesday, May 29, 2012

இஸ்லாத்தில் இணைய விரும்பினார் கம்யூனிஸ்ட் தலைவர் லெனின்..!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி, அதே
பெயருடைய எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம்!
திரைப்பட இயக்குனர் ஒருவருக்கு, நாகர்கோவிலில் திருமணம். "அவசியம் வர
வேண்டும்...' என அழைத்திருந்தார்.
குப்பண்ணா, லென்ஸ் மாமா உட்பட ஏழு பேர் வண்டி ஏறினோம். எக்ஸ்பிரஸ் என்று
பெயரே தவிர, நிதானமாகத்தான் செல்லும் அந்த ரயில்; எனவே, படிப்பதற்கு
நிறைய புத்தகங்கள் எடுத்துச் சென்று இருந்தேன்.

பெரியசாமி அண்ணாச்சி, தம் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த வாழைப் பூ
வடையை அனைவருக்கும் வினியோகித்தார். வடையை சுவைத்துக் கொண்டே, "ரஷ்ய
தேசத்தின் சிற்பி லெனின், "மதம் ஒரு அபின்' என்று சொன்னது தானே நமக்குத்
தெரியும்... ஆனால், அவர் இஸ்லாத்துடன் இணைய விரும்பினார் என்பது
தெரியுமா?' என குப்பண்ணாவை நோக்கி ஒரு குண்டை வீசினேன்.

"என்னப்பா... திடுக்கிடும் சேதி எல்லாம் சொல்றே...' என அதிர்ச்சி
விலகாமல் என்னிடம் கேட்டார். புத்தகப் பையில் இருந்த பழைய, "முஸ்லீம்
முரசு' என்ற இதழை எடுத்து, குப்பண்ணாவிடம் கொடுத்தேன். 50 ஆண்டுகளுக்கு
மேலாக வெளிவந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய இலக்கிய இதழ் அது. அவ்விதழில்
தான், "லெனின் இஸ்லாத்தில் இணைய விரும்பினார்...' என்ற பொருளில் ஒரு
கட்டுரை வெளியாகி இருந்தது.

எல்லாருக்கும் கேட்கும்படி, வாய்விட்டு கட்டுரையை படிக்க ஆரம்பித்தார் குப்பண்ணா...
ஜார் இன கொடுங்கோல் ஆட்சி அஸ்தமனமான பின், ரஷ்யாவின் அதிபரானார் லெனின்;
கம்யூனிச ஆட்சியை பிரகடனப்படுத்தினார். அப்போது தன்னுடைய நெருங்கிய
சகாக்களின் கூட்டத்தைக் கூட்டினார். அக்கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையின்
முக்கியப் பகுதிகள்:

நாம் நம்முடைய ஆட்சியை நிறுவுவதில் வெற்றி பெற்று விட்டோம். இந்த ஆட்சி
நீடிக்க வேண்டுமானால், மானிட இயலுக்கு ஒத்து வருகிற ஒரு வாழ்வியலைக்
கடைபிடிக்க வேண்டியது மிக அவசியமாகிறது. மானிடத் தன்மைகள் பூர்த்தி அடைய,
வெறும் ரொட்டி மட்டும் போதாது.
அவன் ஆத்மாவைத் திருப்திப்படுத்த, ஒரு மதமும் தேவைப்படுகிறது. நான் எல்லா
மதங்களையும் மிக ஆழமாக அலசி ஆராய்ந்து பார்த்தேன். கம்யூனிச
சித்தாந்தங்களுடன் ஒத்து வருகிற எந்த மதமும் என் கண்களுக்குப்
படவில்லை... ஒரே ஒரு மார்க்கத்தைத் தவிர!

தற்சமயம் அந்த மார்க்கத்தின் பெயரை நான் வெளியிட விரும்பவில்லை. இதைப்
பற்றி நீங்கள் நன்கு சிந்திக்கவும், ஆலோசிக்கவும் உங்களுக்கு கால அவகாசம்
தருகிறேன். அவசரப்படாமல் ஆற, அமர நன்றாக சிந்தியுங்கள்!

இந்தக் கேள்வி, கம்யூனிசத்திற்கு வாழ்வா, சாவா என்ற கேள்வி. எந்த அளவு
நேரம் வேண்டுமோ, அந்த அளவு நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நான்
கொண்டுள்ள கருத்து, தவறாக இருக்கலாம். ஆனாலும், நாம் நிதானமாக, பொறுமையாக
யோசிக்க வேண்டும்.

கம்யூனிச கோட்பாட்டின் உலகவியல் கொள்கைக்கு ஒத்து வருகிற மார்க்கம்
இஸ்லாம் ஒன்றே என நான் நினைக்கிறேன்...' என்றார் லெனின். லெனினின் இந்தப்
பேச்சைக் கேட்ட கூட்டத்தினர் மத்தியில் சலசலப்பு. லெனின் குறுக்கிட்டு
கூறினார்: ஓராண்டு கழித்து, இதே இடத்தில் நாம் கூடுவோம். அதுவரை எந்த
மதத்தை நாம் ஏற்றுக் கொள்வது என்பது பற்றி சிந்தித்து ஒரு முடிவுக்கு
வருவோம்... என்று கூட்டத்தை முடித்தார்.

பிரிட்டிஷ் அரசின், உளவு பிரிவுக்கு இந்த செய்தி எட்டியது. கம்யூனிச
சக்திகளும், இஸ்லாமிய சக்திகளும் ஒன்றிணைந்தால், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்
அதோ கதிதான் என அஞ்சியது. இந்த ஆபத்தை தடுத்து நிறுத்த, "கடவுள்
மறுப்புக் கொள்கையான மார்க்ஸ் கொள்கை இஸ்லாத்திற்கு ஏற்புடையது தானா?'
எனக் கேள்வி எழுப்பி, எகிப்தில் உள்ள, "அல் அஸ்ஹா' பல்கலையில் பணியாற்றிய
மார்க்கப் பெரியவர்களுக்கு சேதி அனுப்பி, விளக்கம் கேட்டது பிரிட்டிஷ்
அரசு!

பிரிட்டிஷ் அரசின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாத மார்க்கப் பெரியவர்கள்,
"கம்யூனிசமும், இஸ்லாமும் ஒரு போதும் இணைய முடியாது...' என்ற, "பத்வாவை'
அந்த ஆலிம்கள் வழங்கினர். இதைத் தான் பிரிட்டிஷ் அரசு விரும்பியது.

உடனடியாக அந்த, "பத்வாவை' லட்சக்கணக்கில் அச்சிட்டு, இஸ்லாமிய நாடுகளில்
வினியோகம் செய்ய ஏற்பாடு செய்தது பிரிட்டிஷ் அரசு. இதை அறிந்த லெனின்
அதிர்ச்சி அடைந்தார்; செய்வது அறியாமல் தவித்தார்...

— கட்டுரையைப் படித்து முடித்த குப்பண்ணா, "இது மெய்தானா?' என்பது போல
விழித்தார்; மற்றவர்களும்...!
திகைப்பிலிருந்து விடுபட்ட குப்பண்ணா, "பாரதிய ஜனதாவை மதவாதக் கட்சி
என்று கூறி, காங்கிரசோடு சேர்ந்து கூத்தடித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் இது
பற்றி என்ன சொல்கின்றன?' எனக் கேள்வி எழுப்பினார்!
இரத்தம் (Know about Blood)


இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்” என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப் பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.
ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?
ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள் தொகைக்கு ஏறக்குறைய இணையான அளவுக்கு இருக்கும்.
ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் உற்பத்தியாகின்றன.

ரத்த சிவப்பு அணுகளின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் ரத்த சோகை வராது.
ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
ரத்த வெள்ளை அணுக்களை படைவீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போராடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்” அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்” அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்” போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தக் கசிவை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?


ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர். வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்ததை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருள்கள் இருக்கும். தீக்காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?


ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா” என்ற பொருளும் உள்ளது.
ரத்த அழுத்தம் என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் ‘பம்ப்’ செய்யும் போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.
உடலில் ரத்த பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெரியுமா?
ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோ மீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செலுத்தும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.
மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும் போது எடுத்துச் செல்வது என்ன?
எல்லாத் திசுக்களுக்கும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து,மாவுச்சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்து வந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.
24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு எவ்வளவு தெரியுமா?
24 மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகரிப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.
தலசீமியா என்பது தொற்றுநோயா?
இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந்நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந்நோய் வரவாய்ப்பில்லை.
மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?
மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிரிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?
ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்ரினோஜன் என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்ரினோஜன் உள்ளது.
ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?


ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. ‘A’, ‘B’, ‘AB’, ‘O’ (ஓ) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர ‘A1’, ‘A2’என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு. ‘O’ பிரிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான், ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு ‘யுனிவர்சல் டோனர்’ என்று பெயர்.
ரத்தம் எவ்வாறு குரூப் வாரியாக பிரிக்கப்படுகிறது?
ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிரிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் A ஆன்டிஜன் இருந்தால், A குரூப் ஆகும். B ஆன்டிஜன் இருந்தால் B குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் AB குரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (ஓ) குரூப் ஆகும்.
ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தை, ஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?
செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்கவேண்டும் அல்லது குழந்தைப்பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்கவேண்டும். இளம்பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக்கூடாது.
ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?
கர்ப்பம் தரிப்பதற்கு முன்பே கணவன்-மனைவி இருவரும் ரத்தப்பிரிவை சோதனை செய்வது அவசியம். கணவன்-மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தரித்தவுடனேயே மகப்பேறு மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.
கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப்பிரிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?
கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள் உற்பத்தியாக வழிவகுத்துவிடும்.
ஆர்எச் பாசிட்டிவ், ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிரிக்கப்படுகிறது?
ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி, பிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன?
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின் போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்துவிடும் அபாயம் உண்டு.
தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்), பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி?
நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசிபோட வேண்டும். இந்த ஊசிக்கு “Anti D” என்று பெயர்.
ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?
வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச்சோதனைகள் அவசியம்.
யார் ரத்த தானம் செய்யக்கூடாது?


உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி,சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் ஆகியோர் ரத்ததானம் செய்யக்கூடாது.
மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?
இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்துவிடலாம்.
தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?
புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்திரியை நான்கு முதல் ஆறு மணி நேரத்திற்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.
ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?
நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்தம் தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்ப தும் நல்லது. ரத்தம் தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தை விடக் குறைவுதான்.
ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?
ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்ல�
Healthy cooking secrets II

Instead of frying the pappad just apply oil or ghee on the pappad and keep it in the MW. you will get very nice fried one with in a min. Try this.


You can do this for 'kuzh vathal' and also 'Javvaasi vathal' also. In my family we do this often.



For cheese toast or for other dishes use melted or grilled cheese. Use grated cheese instead of slices; you’ll use less.


Instead of potato chips, make potato wedges, and bake them in the oven instead of frying.

Try using other veges instead of – or combined with – potatoes for interesting mash. Pumpkin, chow chow or onion or cauliflower all make tasty and healthy mash.You can use any type of greens also in this.


Grated fruit and vegetables like apple, carrot and beetroot can replace some of the sugar and fat in baking recipes.

Wholemeal flour can substitute for white flour in baking and adds fiber. Experiment with your favorite recipes: start by replacing a quarter of the white flour with wholemeal. Up to two-thirds of the flour in most recipes could be wholemeal.

Icing on cakes can be replaced with a combination of filtered yogurt and honey, fruit or drinking chocolate.

Add chopped dates or figs to replace some of the sugar in cakes and slices. These add a chewy texture and extra fiber.


While making custard, always use low fat milk. You won’t notice it in the final product.

Plain yogurt is delicious when served with some grated fruit. Add a little grated, dark chocolate for an extra touch,for children.



For a good breakfast in a hurry: - fruit, yogurt, milk and oats for a complete breakfast in a drink.

Keep a small container of nuts in your desk drawer for a simple, instant snack.

Vegetable soup and whole grain toast makes a warming, hearty lunch.

Buy reduced-fat versions of dairy products, meat and prepared meals.

Buy whole grain or brown versions of bread, pasta and rice.

Replace potato chips with rice crackers or pita crisps.


Replace 1 cup cream with 1 cup light & creamy evaporated milk, combined with 1 tablespoon cornflour.


Use coconut-flavored evaporated milk instead of coconut milk.

Use Light Cream Cheese spread is an excellent butter substitute on toast, sandwiches and fruit bread; it’s low in fat and tastes great.

Use fresh fruit with low-fat plain yogurt instead of using sweetened yogurt on cereal.

Enjoy healthy cooking!
web sources

Engr.Sulthan
__._,_.___
இந்திய மருத்துவத்துறையின் லட்சணத்தை தோலுரித்த அமீர்கான்





















“மக்களை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும்” இது சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் விவாதம் செய்த இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவரிடம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அமீர்கான் வைத்த கோரிக்கை.

ஸ்டார் ப்ளஸ், டிடி, விஜய் டிவி என மூன்று சேனல்களிலும் ஞாயிறு காலை 11 மணிக்கு சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அமீர்கான் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாராமும் முக்கியமான பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு விவாதம் நடைபெறுகிறது.

முதல் வாரத்தில் பெண்கருக்கொலையை மையமாக வைத்து விவாதம் நடைபெற்றது. கருவில் இருக்கும் குழந்தையை ஆணா, பெண்ணா என்று கண்டறிந்து கூறுவதோடு பெண் குழந்தை என்றால் அவற்றை கருவிலேயே அழிக்கும் கொடுமை பற்றி விவாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நாடுமுழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக ராஜஸ்தான் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெண் கருக்கொலைக்கு காரணமான ஸ்கேன் சென்டர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இந்திய மருத்துவத்துறையில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது பற்றியும் இந்திய மருத்துவத்துறையின் லட்சணம் பற்றியும் புட்டு புட்டு வைத்தார் அமீர்கான். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாதிக்கப்பட்டவர்களின் கருத்து அதிர்ச்சியளிக்கும் படியாக இருந்தது. ஆபரேசன் என்று கூறி பல லட்சம் ரூபாயை கறந்து விட்டு உயிரைக்கூட காப்பாற்ற முடியாத கையாலாகாத மருத்துவர்களைப் பற்றியும், மருத்துவமனைகளைப் பற்றியும் கூறியது நெஞ்சத்தை பதை பதைக்கச் செய்தது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ கவுன்சிலின் சேர்மன் பேசிய போது அவரிடம் மருத்துவர்களுக்கான கொள்ளை கோட்பாடு பற்றி அமீர்கான் கூறினார். மருத்துவம் என்பது தொழில் அல்ல எனவே மருத்துவர்கள் இதை தொழிலாக பார்க்க கூடாது. சேவையாகத்தான் செய்யவேண்டும். எந்த ஒரு மருத்துவரும் நோயாளியிடம் அவருடைய நோயைக் பற்றி பயமுறுத்தும் வகையில் கூறக்கூடாது. அதேசமயம் அவருக்கு உள்ள நோயைப் பற்றி கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். மருத்துவர்கள் பிற மருத்துவமனைக்கு நோயாளியை அனுப்பும் போது அதற்கு கமிசனோ வேறு எந்த அன்பளிப்போ பெறக்கூடாது என்பது கொள்கை.

இந்த கொள்கையில் ஒன்றைக்கூட தற்போது மருத்துவர்கள் பின்பற்றுவதில்லை. நோயாளிகளுக்கு நோயினால் ஏற்படும் வேதனையையும், வலியையும் விட மருத்துவமனை நிர்வாகத்தினர் வழங்கும் பில் தொகையே அதிக வேதனை தருவதாக இருக்கிறது என்ற கருத்தை முன் வைத்தார்.

இதையேதான் ரமணா படத்தில் விஜயகாந்த், “ கடவுளுக்கு அடுத்தபடியாக மக்கள் கையெடுத்துக் கும்பிடுவது டாக்டர்களைத்தான். உங்களை நம்பி வந்த நோயாளிகளை பணத்துக்காக இப்படி ஏமாத்துறீங்களே” என்று கேட்பார். இன்றைக்கு பெரும்பாலான கார்ப்பரேட் மருத்துவமனைகள் நோயாளிகளின் கழுத்தில் கத்திவைக்கும் வேலையைத்தான் செய்கின்றன. வசூல்ராஜாக்களாக செயல்படும் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இன்றைக்கு பெருகி வருகின்றன.

அரசு மருத்துவமனைகளின் மீது ஏற்படும் நம்பிக்கையின்மையினாலேயே நடுத்தர வர்க்கத்தினர்கள் கார்ப்பரேட் மருத்துவமனைகளை நாடுகின்றனர். அவர்களின் நிலையை அறிந்த பின்னரும் நோய்க்கு ஏற்ற சிகிச்சையை மட்டுமே அளிக்காமல் மருத்துவமனையில் இருக்கும் மெஷினுக்கும் சேர்த்து மருத்துவமனை நிர்வாகங்கள் பில் போடுகின்றன. இப்படி நோயாளிகளை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவரிடம் கேட்டுக்கொண்டார் அமீர்கான்.

மருத்துவர்கள்தான் இப்படி என்றால் மருந்துகளின் விலையோ யானை விலை குதிரை விலையாக இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஏழை மக்களுக்கு சகாயவிலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் அரசே மருந்தகங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு மருந்தை தனியார் மருந்தகங்களில் வாங்குவதற்கும் அரசு மருந்தகங்களில் வாங்குவதற்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் வித்தியாசம் இருக்கிறது. மருத்துவர்களின் கொள்ளை ஒருபக்கம் மருந்தகங்களின் கொள்ளை ஒருபக்கம் என இரண்டு பக்கமும் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றனர் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து நோயாளிகள்

இன்றைக்கும் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்காக சேவை மனப்பான்மையோடு மருத்துவமனைகளை நடத்திவரும் மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். எவ்வளவு பெரிய நோய் என்றாலும் அதனை எளிதாக குணப்படுத்தும் மருத்துவர்களை கடவுளுக்கு சமமாக மதிக்கும் மக்கள் இருக்கின்றனர். நாற்பது வருடங்களுக்கு மேலாக கிராமப்புற மக்களுக்காக மருத்துவ சேவை செய்து வரும் டாக்டர் ஆர். முத்துகிருஷ்ணன் எம்.எஸ்., அவர்களிடம் சத்யமேவ ஜெயதே நிகழ்சியில் அமீர்கான் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர் வருத்தத்துடன் இந்த கருத்தை ஒத்துக்கொள்வதாக கூறினார்.

கார்ப்பரேட் மருத்துவமனைகள் இன்றைக்கு நோயாளிகளின் கழுத்தில் கத்தியை வைத்துதான் பணத்தை வசூல் செய்கின்றன என்பதை அவர் ஒத்துக்கொண்டார். மருத்துவத்தொழில் செய்யும் தன்னுடைய அனுபவத்திலேயே தனது சொந்தக்காரர்களுக்கே இதுபோன்ற நிலை ஏற்பட்டதாகவும் உதாரணத்துடன் தெரிவித்தார்.

நடுத்த குடும்பத்தைச் சேர்ந்த ஆசாரி தொழில் செய்யும் ஒருவரின் மகள் அபாயமான சூழ்நிலையில் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாயை வசூல் செய்த பின்பே மருத்துவமனை நிர்வாகம் அவர்களை டிஸ்சார்ஜ் செய்த்தாகவும் அவர் கூறினார். கார்ப்பரேட் மருத்துமனைகள் எதுவும் மருத்துவத்துறைக்கான கொள்கை, கோட்பாடுகளை பின்பற்றுவதில்லை என்றும் அவர் கூறினார். எனவே சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் கூறியதைப்போல நோயாளிகளை ஏமாற்றும் மருத்துவர்களின் லைசென்ஸ்களை ரத்து செய்வதில் தவறு எதுவும் என்றும் டாக்டர் முத்துகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Know about Caffeine




Does it seem like everyone is walking around carrying a cup of coffee or an energy drink these days? People usually like the way these drinks taste, but many say they drink them for the caffeine boost. You may not realize that the side effects of caffeine may out weigh the benefit of feeling more alert. Too much caffeine can make you feel “jittery” and nervous. It can also make your blood pressure and heart rate go up. This guide was created to help you learn about caffeine so you can make healthy choices about your caffeine intake.

Take Aways

Caffeine is considered a drug. Having too much caffeine can make you feel nervous or jittery.
The effects of caffeine can last up to 6 hours.
If you think you are having too much caffeine, the best way to cut back is to do it slowly.
What is caffeine?
Caffeine is naturally found in the leaves, beans, seeds, and fruits of many plants. It is also added to some foods and drinks and some pain relievers such as headache medicine. Caffeine is considered a drug. It works by exciting your nervous system which may make you feel more awake and alert. Having too much caffeine is not healthy, and caffeine can be addictive. Although caffeine is not stored in our bodies, the effects can be felt for up to 6 hours.

What are some sources of caffeine?
Common sources of caffeine include coffee, tea, some soft drinks, energy drinks, chocolate, some over the counter medicines, and some prescription medications. Teens usually get caffeine by drinking soda and energy drinks. Sodas such as Pepsi®, Coca-Cola®, Sunkist®, and Mountain Dew® and popular energy drinks such as Redbull®, Full Throttle®, and Monster® contain caffeine. Some companies such as Pepsi® and Coca-Cola® also make decaffeinated soda. Look for the word(s) “decaffeinated” or “caffeine free” on the can or bottle. Sprite® and Fresca® are two types of soda that do not contain any caffeine.

How much should I have?
The amount of caffeine that is safe for teens to have in a day has not been determined, but moderate amounts of caffeine (300 milligrams or less per day) is considered safe for adults. Teens who are having more then 300 milligrams a day should try to cut down on the amount of caffeine they are having.

What are the side effects with caffeine?



The effect caffeine has on a person depends on how sensitive a person is to it. Sensitivity is affected by body weight, the amount of caffeine a person has, and how often they have it. Some teens who are more sensitive to caffeine will feel stronger effects with smaller amounts than others who are less sensitive to it.

Having too much caffeine can cause side effects like “the jitters”, restlessness, anxiety, insomnia (trouble sleeping), headaches, high blood pressure and a fast heart rate. Caffeine is a diuretic, which means that it will make you have to urinate (pee) more often. It can be dehydrating if you are in the heat or working out because unlike sports drinks (such as Gatorade®), caffeinated drinks do not replace the water and minerals that you loose when you sweat. If you have caffeine in combination with some medications used for ADHD, asthma, and certain heart conditions, the side effects (such as feeling like you have the jitters) can be more noticeable and uncomfortable. It is important that you ask your health care provider if you should avoid caffeine.

How can I lower the amount of caffeine I have every day?
If you think you are having too much caffeine and would like to stop, the best way to do so is to cut back slowly. Stopping too fast can lead to headaches, fatigue or lack of energy, and irritability or crankiness for a few days.

The amount of caffeine you take in can be lowered by having “caffeine-free” or “decaffeinated” foods and drinks instead of the caffeinated ones. Cutting back on the amount of caffeine you are having may make you feel tired at first, but your energy levels will return to normal in a few days.

The following table lists how much caffeine is in some popular drinks.

*For coffee and tea products, the range varies depending on the brewing method, the type of plant and the brand.

Source: U.S. Food and Drug Administration and National Soft Drink Association

Tea
Typical Milligrams of Caffeine *Range of Milligrams of Caffeine
Black tea bag (8fl. oz. cup) 40 25-110
Iced tea (8fl. oz. glass) 25 9-50

Soda
Typical Milligrams of Caffeine
Coca-Cola® (12fl. oz.) 34
Pepsi® (12fl. oz.) 38
Sunkist® (12fl. oz.) 41
Mountain Dew® (12fl. oz.) 55

Other Drinks
Typical Milligrams of Caffeine *Range of Milligrams of Caffeine
Cocoa Beverage
(8fl. oz.)
6 3-32
Chocolate Milk Beverage
(8fl. oz.) 5 2-7

The following table lists how much caffeine is in some chocolate products.

*For coffee and tea products, the range varies depending on the brewing method, the type of plant and the brand.

Source: U.S. Food and Drug Administration and National Soft Drink Association

Chocolate Product
Typical Milligrams of Caffeine *Range of Milligrams of Caffeine
Milk Chocolate (1 oz.) 6 1-15
Dark Chocolate,
Semi-Sweet (1 oz.) 20 5-35
Baking Chocolate (1 oz.) 26 26
Chocolate-Flavored Syrup (1fl. oz.) 4 4


Although caffeine may give you an energy boost, it might cause you to feel irritable and more tired when it wears off. It is important to think about the positive and negative effects of caffeine and talk to your health care provider to make sure it is safe for you to have caffeine-containing drinks, foods, and medications.
sources:Regha Healthcare Center
Engr.Sulthan
முன்னேறுவதற்கான வழி என்ன?



மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்குமே, வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு இருக்கும். சிலருக்கு, கடைசி மூச்சு வரை கூட, இந்த எண்ணம் இருக்கும். முன்னேறுவதற்கான வழிகளைக் கற்றுக் கொடுக்க ஏராளமான புத்தகங்கள், வகுப்புகள், தனி படிப்புகள் இருந்தாலும், எல்லாருக்குமே அவை பொருந்துமா என்பது கேள்விக்குறியே.

"பிரைடே' என்ற துபாய் பத்திரிகையில், எலிசபெத் என்ற எழுத்தாளர், 10 வழிமுறைகளை எழுதியுள்ளார். அவை:

1. உயர் பதவியை அடைய, போட்டி மனப்பான்மை தேவை. போட்டி என்பது, மற்றவர்களை "போட்டுக் கொடுத்து' முன்னுக்கு வருவது அல்ல. உங்கள் திறமையை அதிகரித்து, தொடர்ந்து அதை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு கட்டத்தில், உங்கள் திறமை இவ்வளவு தான் என்ற தீர்மானத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்படும். அது தான் உங்கள் எல்லைக் கோடு. அது என்ன என்பதை கண்டுபிடிக்கும் வரை, தொடர்ந்து உழைக்க வேண்டும்.

2. உயர் பதவியை அடைய வேண்டும் என்ற வேகத்தில், நான்கு கால் பாய்ச்சல், எட்டு கால் பாய்ச்சலில் செல்வதை விட, ஒவ்வொரு வேலையையும் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். இப்படிச் செய்தால், அனைத்து வேலைகளிலும் நீங்கள் அத்துப்படி ஆகி விடுவீர்கள். உச்சப் பதவியில் அமரும் போது, உங்கள் கீழ் பணியாற்றும் யாரும் உங்களை எளிதில் ஏமாற்றி விட முடியாது.

3. ஒரு வேலையை முழுதுமாகக் கற்று முடிக்கும்போது, உங்கள் தன்னம்பிக்கை உயரும். தொடர்ந்து அதே பணியைச் செய்தபடி இருந்தால், அந்தப் பணியை வேகமாகச் செய்து முடித்து, "அடுத்து என்ன வேலை செய்யலாம்?' என்று சிந்திக்கத் துவங்கி விடுவீர்கள். இதுவே முன்னேற்றத்துக்கான அடிப்படை.

4. உங்கள் வீட்டை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்களோ, அந்த அளவு அலுவலகத்தையும் நேசிக்க வேண்டும். உங்கள் வீட்டின் மூலை முடுக்குகளை நீங்கள் அறிந்து வைத்துள்ளது போல், அலுவலகத்தையும் அறிய வேண்டும். அலுவலகத்தை உங்கள் வீடாக நினைத்துக் கொண்டால், வீட்டை அழகாக நிர்வகிப்பது போல, அலுவலகத்தையும் அழகாக நிர்வகிப்பீர்கள்.

5. அனைத்தையும் அறிந்து கொண்டு, நடுநிலையுடன் செயல்பட்டு, நீண்ட நேரம் அலுவலகத்தில் அமரும் பழக்கம் உள்ளவராக இருந்தால், நீங்கள் நினைத்தபடி வேலைகள் நடக்கும்; அலுவலகக் கட்டுப்பாடுகள் கூட உங்களிடம் மண்டி இடும்.

6. நீங்கள் தற்போது பணியாற்றும் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள, நிறைய பொறுமை, சகிப்புத் தன்மை தேவை. இதைக் கைகொண்டால், உங்களை அனைவரும் மதிப்பர்; உங்களை நம்பி வேலைகள் தானாக வந்து சேரும்.

7. எங்கு பணி புரிந்தாலும், நீங்கள் நீங்களாகவே இருங்கள். அப்போது தான் உங்கள் தனித்துவம் வெளிப்படும்.

8. "இந்த வேலை போரடிக்கிறது; வேறு வேலை பார்க்கலாமா...' என்று, நிலையற்ற வகையில் சிந்திக்காதீர்கள். உங்களால் செய்ய முடிந்த பணியைத் தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் திறமைக்கு மீறிய வேலையை நீங்கள் செய்யவில்லை. போரடிக்கும் வேலையை வேகமாகச் செய்து முடித்தால், அடுத்த வேலை தானாகவே உங்கள் மடியில் வந்து விழும்.

9. "இது முடிஞ்சாச்சு... அடுத்து என்ன...' என்று பரபரப்பாக, வேகமாக ஓடியபடியே இருந்தாலும், ஒரு நாள், மீண்டும் பழைய இடத்திற்கே தான் வரவேண்டி இருக்கும். இதற்கு ஏன் வாழ்க்கையை அனாவசியமாக "டென்ஷன்' படுத்திக் கொள்கிறீர்கள்? நிதானமாக, கவனத்துடன் தற்போதைய பணியைச் செய்து கொண்டே இருந்தால், நிலையான முன்னேற்றம் ஏற்படும்.

10. மற்றவர்கள், "டென்ஷனுடன்' ஓடுவதைப் பார்த்து ரசித்தபடி அமர்ந்திருங்கள். நீங்கள் "ரிலாக்ஸ்' ஆகி விடுவீர்கள்.
நீங்கள் உயர் பதவி வகிப்பவரா? எப்படி முன்னேறினீர்கள்? எடுங்கள் பேனாவை,
--
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? (Al-Quran, The Last Testament from ur God)

Regards,
Meera Kamal
Source : payanullathagaval@googlegroups.com
Web alert: Google warns of internet blackout on July 9


WASHINGTON: Search giant Google has issued a warning to its millions of users that they could lose the ability to connect to the internet in July due to a computer virus. The problem began when international hackers ran an online advertising scam to take control of infected computers around the world.

In a highly unusual response , the FBI set up a safety net months ago using government computers to prevent internet disruptions for those infected users , but that system will be shut down on July 9, killing connections for those people . The FBI has run a campaign for months, encouraging people to visit a website that will inform them whether they are infected and explain how to fix the problem.

After July 9, infected users won't be able to connect to the internet. According to Fox News, Google has now planned to throw its weight into the awareness campaign . The site will be rolling out alerting to users via a special message that will appear at the top of the Google search results page for users with affected computers, CNET reported.

Monday, May 28, 2012

Muslim community protests against random arrests

The Milli Gazette

Published Online: May 28, 2012

New Delhi, 28 May 2012: Muslim community leaders today sent a strong letter to Mr P Chidambaram, Union Home Minister and Mr Wajahat Habibullah, Chairman, National Commission for Minorities protesting against the continuous saga of arrests of Muslim youth on unproven "terror" charges. The following is the text of the letter signed by a number of community leaders:

28 May 2012
New Delhi
Respected Sir,

Alarmed as the Muslim community is at the resumed serial, at random and unending saga of arrests of Muslim youth from various parts of the country on apparently no tangible charges, two more such recent incidents are agitating the community and we find it necessary to bring the same to your kind attention for urgent redressal:
1. Mr Fasih Mahmood, an engineer in Jubail, Saudi Arabia, according to media reports in both Saudi Arabia and India, was deported to India on 13 May this year at Indian government’s request on alleged “terror” charges and so far there is no information about his whereabouts.
2. Two very young Kashmiri students, studying in a reputed madrasa (Jamiatul Falah at Bilaryaganj, district Azamgarh, U.P.) were arrested by some unknown security agency at Aligarh station on 24 May while travelling on Kaifiyat train from Azamgarh to Delhi to visit their ailing cousin who had come to the capital for medical treatment. The name of the agency and the two boys’ whereabouts are not known despite efforts at both Delhi and Lucknow.

The Muslim community is pained to see this continuing saga which has earlier seen Journalist Kazmi’s arrest while seemingly there is no evidence against him. We request you to kindly look into the above two matters on an urgent basis in order to offer some solace to the families of these victims who have fell foul of the security agencies’ ultra vigilance where victims are picked up on mere suspicion without any real, hard and tangible proof and thereafter they are kept under illegal detention while the agencies try to somehow obtain some incriminating “evidence” or secure their forced confession via torture which is illegal and against India’s international obligations. These illogical incidents are seriously eroding the Muslim community’s goodwill towards UPA.

Yours sincerely,

Dr Zafarul-Islam Khan, President, All India Muslim Majlis-e Mushawarat
For and on behalf of
Mujtaba Farooq, Chairman, Coordination Committee for Indian Muslims
Muhammad Ahmad, Political Secretary, Jamaat-e Islami Hind
Abdul Hameed Nomani, Secretary, Jamiat Ulama-e Hind
Dr Tasleem Rahmani, President, Muslim Political Council of India
Dr SQR Ilyas, General Secretary, Welfare Party of India
Zaheer Zaidi, President, Shia Point
Maulana Muhsin Taqwi, President, National Council of Shia Ulama
Shuaib Shaikh, Secretary, Students Organisation of India
AK Kidwai, Secretary, Association for Protection of Civil Rights
Maulana Ataur Rahman Qasmi, Director, Shah Waliullah Institute
[End]
Remedies for minor ailments-part-6

Memory Improvement
• Prepare a mixture of 1 teaspoon honey and a pinch of finely powdered cinnamon (dalchini). Take it every night regularly.
• Take ½ teaspoon black cumin (kala jeera) powder and mix it with honey. Eat small quantities of it twice a day.
• Mix 1 teaspoon each amla root powder and white sesame seed (safed til) powder. Add 1 teaspoon honey and eat every day for a few days.

Nose Blockage Due To Cold
• Make a very fine powder taking equal quantities of cardamom (chhoti illaichi) seeds, cinnamon (dalchini), black pepper (kali mirch) and cumin (jeera). Sniff this powder frequently to induce sneezing.

Old Age Problems
• Boil 1 teaspoon ginger (adrak) in 1 cup water till reduced to ½ cup. Add to it ½ cup cow's milk, 2 pieces of cardamom (chhoti illaichi), 5 strands of saffron (kesar) and 1 teaspoon sugar. Drink in the morning.

Obesity
• Mix lime juice with honey and water. Drink a glass of this every morning.
• Mix 3 teaspoon lime juice with ¼ teaspoon powdered black pepper (kali mirch) and 1 teaspoon honey along with 1 cup water and drink for 3 months.
• Take 1 teaspoon lime juice in a cup of water every morning.
• Eat 10 fresh, fully grown curry leaves (curry patta) every morning for 3 to 4 months.
• Eat a tomato before breakfast.

Warning: The reader of this article should exercise all precautionary measures while following instructions on the home remedies from this article. Avoid using any of these products if you are allergic to it. The responsibility lies with the reader and not with the site or the writer.
This information is solely for informational purposes. IT IS NOT INTENDED TO PROVIDE MEDICAL ADVICE and should not be treated as a substitute for the medical advice of your own doctor.
Engr.Sulthan
__._,_.___
சற்று இளைப்பாற தமிழ் நிழல் தேடிப் போவோம் வாங்க! பழமொழிகள் சில காண்போம்...
பழமொழிகள்



ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
ஆசை வெட்கம் அறியாது.
ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
ஆடிப் பட்டம் தேடி விதை.
ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
ஆடும் திரிகை அசைந்து நிற்குமுன், ஓடும் சிந்தை ஒன்பதாயிரம்.
ஆட்டுக்கு வால் அளவறிந்து வைத்திருக்கிறது.
ஆட்டக்காரி ஆகவில்லை என்பதற்காகத் தோட்டக்காரியைச் சிங்காரித்தது போல.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
ஆத்துக்குப் போயும் வேர்த்து வடிஞ்ச கதையா
ஆயிரங்காலம் நெல்லுக்கு ஒரு அந்துப்பூச்சி போதும்.
ஆயிரம் தலை கண்டால் ஒரு கோயிலைக் கண்டது போல
ஆயிரம் வந்தாலும் அவசரப் படாதே
ஆயிரம் காசு கொடுத்துக் குதிரை வாங்கியவனுக்கு, அரை காசு கொடுத்துச் சீனி வாங்க முடியலையாம்!
ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.
ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும்.
ஆரால் கேடு, வாயால் கேடு.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
ஆழமறியாமல் காலை இடாதே.
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.
ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
ஆழம் தெரியாமல் காலை விடாதே.
ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
ஆனைக்கும் அடிசறுக்கும்.
ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
Engr.Sulthan
The Solar Blood is in the Street
Solar Industry Cliffs Notes

I've had lots of requests lately to shed some light on the solar industry.By Nick Hodge
Tuesday, May 22nd, 2012
And it isn't hard to see why...

That's a one-year chart of the Dow Jones versus the Market Vectors Solar Energy ETF (NYSE: KWT), which holds well-known names like First Solar (NASDAQ: FSLR), Suntech (NYSE: STP), and SunPower (NASDAQ: SPWR).
As you can see, the solar ETF has lost almost 80% of its value.
Let's see if we can figure out why, draw some historical comparisons, and find a way to make some money from this still nascent market.
Economies of Scale
Put on your freshman econ hat for a second while I give you a textbook definition:
In economics, economies of scale refers to the cost advantages that an enterprise obtains due to expansion. There are factors that cause a producer’s average cost per unit to fall as the scale of output is increased.
Just think about the computer industry, to which I like to compare the solar industry.
In 1946 the first ever general purpose computer weighed 27 tons and cost over $5 million to build.
No company was getting rich selling those. Economies of scale had to be created, whereby the cost of production decreases as more units are produced and more customers are attracted.
I think today is the 1946 of the solar industry.
Dismissing it now would be just as foolish as dismissing the computer industry back then.
Solar Cliff's Notes
The main argument against solar is that it's expensive. That's true — but so was the first computer.
The important thing to notice is that it's getting cheaper.
And at this stage in the game, that's actually detrimental.
When solar stormed on the scene in 2004 and 2005, it was touted as a panacea to rising oil prices and An Inconvenient Truth.
Actually, it's neither.
It's just one part of the energy industry. That said, it's susceptible to the same booms and busts as any other industry.
Back then the main ingredient was polysilicon. And it was expensive... exorbitantly expensive.
It sold for about $100/kilogram in 2006, but more than quadrupled to $400/kilogram by 2008.
Two things happened as a result:
Countries introduced subsidies to help consumers afford solar panels; and
Companies looked for other ways to make solar panels with less or no polysilicon.
The first gave us the feed-in tariff programs in Europe that led to widespread solar adoption in Germany, Spain, and a few others. But as the Great Recession ensued, governments began taking a knife to those subsidies.
The second spawned the development of other solar technologies, like cadmium telluride and copper indium gallium selenide (CIGS). Those are the technologies used by First Solar (NASDAQ: FSLR) and Solyndra, respectively.
As it turned out, the monumental spike in polysilicon prices leading up to 2008 was a red herring.
Between then and now, prices have plummeted from $400/kilogram all the way down to $23/kilogram last week.


You've already seen the impact that's had on the market. Cheap silicon is killing competitive technologies.
Solyndra went bankrupt. So did Energy Conversion Devices. First Solar (NASDAQ: FSLR) has lost 90% of its value since last summer.
Makers of traditional crystalline solar panels have only fared moderately better...
When European nations started cutting subsidies, demand all but collapsed and took German and Chinese solar companies with it.
Q-Cells and SolarWorld were once the most dominant players in the industry. Now they're struggling to survive.
Chinese firms had it so bad, they were selling panels to the United States below market price, which led us to declare a 31% tariff on Chinese-imported panels last week.
The solar blood is in the streets.
Economics Again
Subsidy cuts and margin squeezes are part of an industry's maturation.
Those two hurdles, plus the current oversupply of polysilicon, will ebb.
Current lackluster demand and stiff competition from decade-low natural gas prices are forcing innovation and cost reduction.
There will also be consolidation.
This is all part of an industry's natural growth cycle.
The point here is that the industry is out of favor because prices are falling rapidly. That's what's supposed to happen.
And as prices fall, customers will once again be attracted. You know, all that supply and demand stuff.
In fact, it's already happening...
Solar attracted more than half of all clean energy investments last year, fetching $128 billion — up 44% from 2010. Installations were up 54% to 29.7 GW.
Once that hits the balance sheets, strong solar companies will start to rise once again. I'm looking at JA Solar (NASDAQ: JASO) on the module side and MEMC (NYSE: WFR) on the silicon side.
Apple (NASDAQ: AAPL) shares fell from $26 to $8 in 2000... That's where solar is now.
Call it like you see it,

Nick Hodge
The Solar Blood is in the Street: Solar Industry Cliffs Notes

In 1946 the first ever general purpose computer weighed 27 tons and cost over $5 million to build.
I think today is the 1946 of the solar industry...
and dismissing it now would be just as foolish as dismissing the computer industry back then.
-----இன்றைய நாளைப் பயனுடையதாக்கிக் கொள்வோம்!





சில நேரங்களில் காலம் மிக மிக மெதுவாக நகர்வது போல நமக்குத் தோன்றும். நாம் பொறுமையிழந்து வேகமாக கடந்து செல்ல முயல்வோம். வேறு சில நேரங்களில் நன்மையான காரியம் ஒன்றை செய்ய நினைத்து, அதை செயல் படுத்துவதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்போம். ஏதோ ‘நாளை நமது கையில்’ என்று நிச்சயமாக நமக்குத் தெரிவது போல! கடந்த காலத்தை புரட்டிப் பார்த்தால் நாம் இது போல தள்ளிப் போட்டு பிறகு செய்யாமலே போன பல காரியங்கள் நினைவுக்கு வரும். இப்படி தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டே நாம் வாழ்வின் பெரும்பகுதியை செலவளித்து விட்டோம். கடந்து போன அக்கால கட்டத்தில் நாம் நமது மறுமை வாழ்விற்காக சேகரித்துக் கொண்டது மிக சொற்பமாகத் தான் இருக்கும். காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.

திருமறையின் இந்தச் சின்னஞ்சிறு அத்தியாயம், ஒரு பேருண்மையை பறைசாற்றுகிறது. ஒவ்வொரு வினாடியும் காலம் கழிந்து கொண்டே இருக்கிறது. அதோடு சேர்ந்து நம் வாழ்வும்தான்! இதை பெரும்பாலும் நாம் உணர்வதில்லை! மாறாக, யாரெல்லாம் நற்காரியங்களைச் செய்து நன்மைகளை தமது கணக்கில் வரவு வைத்துக் கொண்டார்களோ, அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள். காலத்தை தம் கைவசப் படுத்தியவர்கள்!

ஒரு நல்ல செயலை, ஒரு நல்ல சொல்லை, ‘அப்புறம் செய்யலாம்’ ‘அப்புறம் சொல்லலாம்’ என நாம் தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தால், அந்த ‘அப்புறம்’ வராமலே போய்விடலாம். கானல் நீரைப் போல நம் கண்ணுக்குத் தெரிந்து பின் காணாமல் போய் விடலாம். இவ்வுலகில் ஒரு நாடோடியைப் போல அல்லது வழிப்போக்கனைப் போல வாழப் பழகிக் கொள். மண்ணறைக்குச் சென்று விட்டவர்களின் நினைவை மனதில் இருத்திக் கொள். காலையில் எழும்போது மாலை வரை (உயிரோடு) இருப்போம் என்று உறுதி கொள்ளாதே! மாலையை அடைந்தால் (மறுநாள்) காலை வரை இருப்போம் என்றும் உறுதி கொள்ளாதே! நோயுறுமுன் உன் உடல் நலத்தைப் பயன்படுத்திக் கொள். மரணம் வருமுன் உன் வாழ்வைப் பயன் படுத்திக்கொள்.

நம்மிடம் ஒரு மூட்டை விதை நெல்லும் அதை பயிரிட வளமான நிலமும் கொடுக்கப்பட்டால் நாம் என்ன செய்வோம்? நம் வருங்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு அந்த விதை நெல்லை விதைத்து அதன் விளைச்சலை அறுவடை செய்வதைத்தான் விரும்புவோம். அப்படி இல்லாமல் அந்த விதை நெல்லை அலட்சியமாக தூக்கி எறிந்தால் பிற்காலத்தில் கைசேதமடையப் போவது நாம்தானே!

நம் வாழ்நாளின் ஒவ்வொரு நிமிடமும் ஒரு விதை நெல்லைப் போன்றதே! அதை எவ்வகையில் விதைத்தால் மறுமையில் நன்மைகளை அறுவடை செய்யலாம் என்பதையே வாழ்க்கை நெறி நமக்கு விளக்குகிறது.

நமக்குள் தோன்றும் தீய எண்ணங்களையும் வீணான செயல்களையும் கடினமான வார்த்தைகளையும் வேண்டுமானால் இன்னொரு நாளைக்காக தள்ளிப் போடுவோம். இதற்கான ‘இன்னொரு நாள்’ வராமலே போனால் கூட சரிதான்! ஆனால், நமது நல்ல எண்ணங்கள், செயல்படுத்த வேண்டிய நல்ல காரியங்கள், அன்பை வெளிப்படுத்தும் சொற்கள் மற்றும் செயல்கள், இவற்றை தள்ளிப் போட்டதெல்லாம் போதும்! இவற்றை காலம் உள்ள போதே, இன்றே, இப்பொழுதே நிறைவேற்றுங்கள்.

Sunday, May 27, 2012

அட்டைப் பெட்டிகள் தொழில்


டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மருந்துப் பொருட்கள், ஜவுளிகள், கண்ணாடிப் பொருட்கள், பிஸ்கெட், சோப் என பல வகையான பொருட்களை பேக்கிங் செய்து பத்திரமாக எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படுபவை அட்டைப் பெட்டிகள். அட்டைப் பெட்டிகளை நமக்குத் தேவையான அளவில் உருவாக்கிக் கொள்வதோடு, அதை மறுசுழற்சி முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதால் இதற்கிருக்கும் வர்த்தகப் பயன்பாடு மிக அதிகம்.

சந்தை வாய்ப்பு!

அட்டைப் பெட்டியின் பயன்பாடு ஆண்டுக்கு 10% வளர்ச்சி கண்டு வருகிறது. அதனால், புது யூனிட்கள் தொடங்குவதன் மூலம் இந்தத் தொழிலில் இருக்கும் தேவையை நன்கு பயன்படுத்திக் கொள்ள முடியும். மற்ற தொழிலில் இல்லாத ஒரு வசதி இதில் இருக்கிறது. அட்டைப் பெட்டிகளைத் தயாரித்து அதை நல்ல விலைக்கு விற்பது ஒருபுறமிருக்க, தயாரிப்பின் போது பெட்டிகள் கிழிந்து போனாலோ டேமேஜ் ஆனாலோகூட பதறாமல் அவற்றையும் விற்றுவிடமுடியும். இவற்றை வாங்குவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். அதற்கான டிமாண்டும் இருக்கிறது.

சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத இந்தத் தொழிலுக்கு இருக்கும் மரியாதை அதிகம்தான்.

உற்பத்தித் திறன்!

நாம் இங்கே பார்க்க இருப்பது ஆண்டுக்கு 400 டன் உற்பத்தித் திறனுக்கானது.

நிலம் மற்றும் கட்டடம்!

மொத்தமாக இந்த உற்பத்தித் திறனுக்கு 2,000 சதுர அடி இடம் தேவைப்படும். இதில் 1,500 சதுர அடியில் கட்டடம் இருக்க வேண்டும்.

மின்சாரம் மற்றும் தண்ணீர்!

நாள் ஒன்றுக்கு 500 லிட்டர் தண்ணீர் மற்றும் 50 ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும்.

மூலப் பொருட்கள்!

அட்டைப் பெட்டி தயாரிக்க முக்கிய மூலப் பொருள் கிராப்ட் பேப்பர் எனப்படும் பேப்பர் ரோல். பேப்பர் ரோலின் அடர்த்திக்கு ஏற்றவாறு அட்டையின் தன்மை மாறும். 100 எம்.எம். முதல் 200 எம்.எம். வரையிலான பேப்பர் ரோல்கள் உள்ளன. இந்த அடர்த்தியைப் பொறுத்தே அட்டைப் பெட்டியின் கனமும், உழைப்பும் இருக்கும். இதன் விலை கிலோவுக்கு 22 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கிறது.

இயந்திரம்!

மூலப் பொருட்கள் தொடங்கி, கடைசியாக அட்டைப் பெட்டி உருவாகும்வரை மொத்தம் ஆறு இயந்திரங்கள் தேவை. இவற்றின் விலை எட்டு லட்சம் ரூபாய் வரை ஆகும். இந்த ஆறு இயந்திரங்களும்

பஞ்சாப் மாநிலத்தில் கிடைக்கிறது. பிற மாநிலங்களில் தயாராகும் இயந்திரங்கள் தரத்தில் சிறந்ததாக இருப்பதில்லை. ஜப்பானில் இருந்து இறக்குமதி ஆகும் ஒரே ஒரு ஆட்டோமேட்டிக் இயந்திரம், இந்த ஆறு இயந்திரங்களின் வேலையைச் செய்துவிடும். ஆனால், இதன் விலை ஒரு கோடி ரூபாய். அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டுமெனில், இந்த இயந்திரத்தை வாங்கலாம்.

தயாரிப்பு முறை!

1. கார்கேஷன்: இந்த மெஷினில்தான் அட்டைப் பெட்டி செய்வதற்கான முதல் படி தொடங்கு கிறது. பேப்பர் வடிவிலான ஷீட் இந்த கார்கேஷன் மெஷினைக் கொண்டு ஸ்பிரிங் வடிவில் மடிக்கப் படுகிறது. இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டு ஆட்கள் தேவை.

2. பேப்பர் கட்டிங் மெஷின்: இந்த மெஷின் மூலம் பெட்டியின் அளவுக்கு ஏற்ப பேப்பரை வெட்டிக் கொள்ளலாம். இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டு ஆட்கள் தேவை.

3. பேஸ்ட் மெஷின்: இந்த மெஷினில் ஸ்பிரிங் போன்ற வடிவிலான பேப்பரை நடுவில் வைத்து, அதன் இரு பக்கங்களிலும் பேஸ்ட் தடவி பேப்பர் ஒட்டப்படுகிறது. இப்படி செய்யப்படும் அட்டையானது மூன்று அடுக்குகளைக் கொண்டி ருக்கும். இந்த அடுக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அட்டைப் பெட்டியின் தரம் கூடும். இப்படி ஒன்பது அடுக்கு வரை போடப்படுகிறது. இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டிலிருந்து மூன்று ஆட்கள் வரை தேவை.

4. ரோட்டரி மெஷின்: தயாராகும் அட்டையை பெட்டிக்கேற்ப கட் செய்வது மற்றும் பெட்டி செய்ய ஏதுவாக ஓரங்களை மடக்க பயன்படும் மடிப்புகளைச் செய்து தருவது ஆகியவை இந்த மெஷினின் வேலை. இந்த வேலையைச் செய்ய குறைந்தது இரண்டு ஆட்கள் தேவை.

5. ஸ்லாட்டிங் மெஷின்: மடிக்கப்பட்ட அட்டைகளில் பின் அடிப்பதற்கு தகுந்தவாறு ஆக்குவது. இந்த வேலையைச் செய்ய குறைந்தது ஒரு ஆள் போதும்.

6. டிச்சிங் மெஷின்: இந்த மெஷினின் வேலை, தயாரித்த பெட்டியின் நான்கு பக்கத்தினையும் மடக்கி பின் அடிப்பது. இந்த வேலையைச் செய்ய இரண்டு ஆட்கள் தேவை.

இந்த அட்டைப் பெட்டி தயாரிக்க ஒருநாளில் சுமார் 12 பேர்கள் தேவைப்படுவார்கள். ஒரு ஷிப்ட்டில் பெரிய பெட்டி எனில் ஐந்நூறும் சின்ன பெட்டி என்றால் ஆயிரமும் தயார் செய்யலாம்.

பிளஸ்

அதிக பயன்பாடு இருக்கும் தொழில் என்பதால், தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

மைனஸ்

மூலப் பொருளான பேப்பர் ரோலின் விலை ஏற்ற இறக்கம் காண்பது.

பேக்கிங் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த அட்டைப் பெட்டி தயாரிப்பு தொழிலுக்கு எக்காலத்திலும் டிமாண்ட் இருக்கும் என்பதால் புதிதாக தொழில் துவங்க விரும்புபவர்கள் தாராளமாக இதில் இறங்கலாம்.

நான் இந்தத் தொழிலைத் தொடங்கி 12 வருஷம் ஆகிறது. இந்தத் தொழிலை பொறுத்தவரை, முதலீடுதான் முக்கியம். நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது என்னிடம் குறைந்த அளவு முதலீடே இருந்தது. அப்புறம் வங்கியில் கடன் வாங்கித்தான் தொழில் தொடங்கினேன். இப்போது நன்றாகத் தொழில் வளர்ந்திருக்கிறது. பலரும் இந்தத் தொழிலுக்கு வந்திருப்பதால் பலமான போட்டி இருக்கவே செய்கிறது. இந்தத் தொழிலைப் பொறுத்தவரை பெட்டியின் தரம்தான் வாடிக்கையாளர்கள் சாய்ஸ். வாடிக்கையாளர்கள் என்ன அளவு மற்றும் தடிமனில் பெட்டி செய்து தரச் சொல்கிறார்களோ, அதனை சரியாகச் செய்து தர வேண்டும். தற்போது விற்பனையில் 20 சதவிகிதம் லாபம் கிடைக்கிறது. பெட்டியின் தரம் உயர்ந்து, விலை சற்று குறைவாக இருந்தால் உங்களைவிட்டு வாடிக்கையாளர்கள் எங்கும் போக மாட்டார்கள்.
Thnxs:Company Name: PREMIUM INTERNATIONAL
Street Address: 65, PAVALIAN STREET
City: SIVAKASI
Province/State: Tamil Nadu
Country/Region: India
Zip: 626123
Telephone: 91-4562-277375
Mobile Phone: 09842927732
Fax: 91-4562-277357

Engr.Sulthan
Amazing Medical Facts of the Body-part 20
381. A childs ability to learn can increase or decrease by 25 % or more depending on whether the child grows up in a stimulating environment.
382. On an average a persons head has 100, 000 to 150, 000 hair.
383. A single hair has the ability to support up to 100 grams of weight and the whole hair has the ability to support up to 12 tones of weight.
384. The pigment of human hair is produced in the shaft of hair beneath the skin.
385. In lifetime, the human heart pumps about 1 million barrels of blood, which is enough to fill more than three tankers.
386. The width of an average human brain is 140 mm.
387. It takes 5- 30 seconds to chew food.
388. Swallowing of the food takes about 10 seconds.
389. The enzyme in the stomach that breaks down alcohol is produced less in men than women.
390. In a year on an average person sleeps for 122 days out of 365 days.
391. There are around 9,000 taste buds present on the tongue.
392. Capillaries are so small that it would take ten of them to equal the thickness of a human hair.
393. It is impossible to tickle our selves.
394. In a human body, the small intestine is 21 feet and the large intestine is 6 feet long.
395. For every 24 hours, in a healthy adult, more than a gallon of water containing over an ounce of salt is absorbed from the intestine.
396. The right side of the human brain is responsible for self-recognition.
397. Men listen with the left side of the brain and women use both sides of the brain.
398. In a lifetime, the human kidneys clean over 1 million gallons of blood.
399. Identical twins have identical DNA but not identical fingerprints.
400. Babies recognize sounds while in mothers womb.
Engr.Sulthan

Saturday, May 26, 2012

1. If you see children Begging anywhere in INDIA , please contact:
> "RED SOCIETY" at 9940217816. They will help the children for their
> studies.
>
> 2. Where you can search for any BLOOD GROUP, you will get thousand's of
> donor address.www.friendstosupport.org
>
> 3. Engineering Students can register in www.campuscouncil.com
> * *to attend Off Campus for 40 Companies.
>
> 4. Free Education and Free hostel for Handicapped/Physically Challenged
> children.
> Contact:- 09842062501 &09894067506.
>
> 5. If anyone met with fire accident or people born with problems in their
> ear, nose and mouth can get free PLASTIC SURGERY done by Kodaikanal PASAM
> Hospital .Everything is free. Contact : 045420-240668,245732
> "Helping Hands are Better than Praying Lips"
>
> 6. If you find any important documents like Driving license, Ration card,
> Passport, Bank Pass Book, etc., missed by someone, simply put them into any
> near by Post Boxes. They will automatically reach the owner and Fine will
> be collected from them.
>
> 7. By the next 10 months, our earth will become 4 degrees hotter than what
> it is now. Our Himalayan glaciers are melting at rapid rate. So let all of
> us lend our hands to fight GLOBAL WARMING.
> -Plant more Trees.
> -Don't waste Water & Electricity.
> -Don't use or burn Plastics
>
> 8. It costs 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all
> Human beings on earth.
> "TREES DO IT FOR FREE"
> "Respect them and Save them"
>
> 9. Special phone number for Eye bank and Eye donation:04428281919 and
> 04428271616(Sankara Nethralaya Eye Bank). For More information about how to
> donate eyes plz visit these sites.http://ping.fm/gLTG2
>
> 10. Heart Surgery free of cost for children (0-10 yr) Sri Valli Baba
> Institute Banglore. 10.
> Contact : 09916737471
>
> 11. Medicine for Blood Cancer!!!!
> 'Imitinef Mercilet' is a medicine which cures blood cancer. It is
> available free of cost at "Adyar Cancer Institute in Chennai". Create
> Awareness. It might help someone.
> Cancer Institute in Adyar, Chennai
> Category: Cancer
> Address:
> East Canal Bank Road , Gandhi Nagar
> Adyar
> Chennai -600020
> Landmark: Near Michael School
> Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,
> 044-22350241 044-22350241
>
> 12. Please CHECK WASTAGE OF FOOD
> If you have a function/party at your home in India and food gets wasted,
> don't hesitate to call 1098 (only in India ) - Its not a Joke, This is the
> number of Child helpline.
> They will come and collect the food. Please circulate this message which
> can help feed many children.
> AND LETS TRY TO HELP INDIA BE A BETTER PLACE TO LIVE IN
> Please Save Our Mother Nature for
> "OUR FUTURE GENERATIONS"
>
> Please don't delete this without forwarding.
> Let it reach the 110 Crores Indians and the remaining if any. ****
K A Rahiman
Coimbatore
Air India subsidy as Haj Subsidy to fool the pilgrims.
The Haj subsidy was established in 1973, when the Indian government abolished sea travel as an means of making the Hajj; to compensate, the government began subsidising the difference between sea and air fares.
Since 1994 the round trip cost to Jeddah, Saudi Arabia has been fixed at 12,000 (US$239.4) per pilgrim.
Air India is paid Rs. 62000 per person whereas one could buy a Delhi-Jeddah-Delhi air ticket for Rs, 18000.
The major subsidy was to Air India and not to the person undertaking Haj!
The haj committee has only to arrange the air trip on open tender.
They name Air India subsidy as Haj Subsidy to fool the pilgrims.
16000 Muslims still displaced in Gujarat

The Milli Gazette
Published Online: May 24, 2012
Print Issue: 16-31 May 2012
Ahmedabad: Janvikas, an NGO in Gujarat has just published a detailed survey report which shows that while over 200,000 people were displaced during the 2002 violence in Gujarat, over 16,000 people are still living in 83 refugee camps across the state 10 years later.

Surviving without basic infrastructure facilities like roads, electricity and gutter lines, the victims are victimised by the system’s laissez-faire approach in solving their issues.

Some of these victims narrate tales of their miserable existence beside garbage dumps and living in places that are nothing short of dump yards themselves.

They were speaking at a convention titled ‘Gujarat’s internally displaced: Ten years later’, which is part of the programmes organised by several NGOs under Insaf ki Dagar Par event. The convention was held by Janvikas here on 30 April. Recounting tales of horror that continue even after a decade, Shama Banu Ansari, a resident of a relief colony said, “I have been living in a pathetic condition for the last 10 years. We lack basic facilities and our complaints to government officials fall on deaf ears.” She said that the water which flows out of the overflowing gutters and right into her colony has even killed a girl, not to mention about the others who have fallen ill from the unhygienic living conditions.

Rohit Prajapati, secretary of People’s Union For Civil Liberties (PUCL), said it is high time the government, that would like everyone to believe that there are no riot-affected in the state, takes a hard look at reality. “It is time they made a package for the internally displaced and also helped those who want to return to their villages,” said Prajapati. He further said those who live in riot colonies are people who don’t dare to return to their original place due to threat to their lives.

Several other victims apart from activists include Prakash Shah of Movement for Secular Democracy (MSD) and Vijay Parmar, CEO of Jan Vikas. These are the people who cannot dare to return to their original place of residence and have, since 2002, been residing in shelters built by NGOs and Muslim charitable organisations.
To read the Janvikas report, visit: http://ping.fm/J4XJa
உலகத் தரத்திலான இஸ்லாமிய (ஆங்கிலப்) பாட நூல்கள்!! ---ஓர் அறிமுகம்
அஸ்ஸலாமு அலைக்கும்.....

இந்தியாவிலும் வளைகுடா நாடுகளிலும் நாம் குறிப்பிட்டுப் பரிந்துரைக்கும் மார்க்க நூல்கள் கிடைக்கும் முகவரிகள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இந்த விவரங்களுடன் கே-டிக்கில் மீண்டும் ஒரு முறை வெளியிட்டு உதவுங்கள்.

மார்க்க ஆர்வம் மிக்க பெற்றோர்களுக்கும் நம் இளைய சமுதாயத்திற்கும் நாம் காலத்தால் செய்யும் நன்மையாக இன்ஷா அல்லாஹ் இது இருக்கும்.

நன்றி.

வஸ்ஸலாம்.

-Yembal Thajammul Mohammad
_________________________________________________________________________________________

நலமே செய்யும் பண்பாளன் நாயன் அல்லாஹ் திருப்பெயரால்....

மாணவர்க்கான மார்க்கக் கல்வி!
உலகத் தரத்திலான
அரிய நூல்கள்!! ஆங்கில மொழியில்!!

உலகக் கல்விக்கு எவ்வளவுதான் உயர்ந்த இடம் கொடுத்துப் பெரும் பொருள் செலவழித்து நம் மக்களைப் படிக்க வைத்தாலும், நம் மக்கள் மார்க்கக் கல்வியைப் பெற வேண்டுமே என்று எண்ணி ஏங்கும் தமிழ் முஸ்லிம்கள் உலகெங்கும் இருந்துவருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே!அவர்களுக்கெல்லாம் பயன்படக்கூடிய ஒரு கல்வி ஆலோசனையாக இந்த மின்னஞ்சலை உள்ளன்போடும் பணிவன்போடும் சமர்ப்பிக்கிறோம்.

இக்காலத்தில் பெரும்பாலான பிள்ளைகள் ஆங்கில வழிக்கல்வியே பயில்வதால் அவர்களுக்கெல்லாம் பயன்படக் கூடிய இருவகைப் பாட நூல்களை இங்கு அறிமுகப் படுத்த விரும்புகிறோம்.அவையாவன:

1.மழலையர் பள்ளியிலிருந்து உயர் நிலைப் பள்ளிவரை பயிலும் முஸ்லிம் மாணவ மாணவியர் தாமே விரும்பிக் கற்கும் விதத்தில் அவரவர் வயதிற்கேற்ப மார்க்க அறிவையும் உணர்வையும் பேணுதலையும் பெறத்தக்க வகையில் அழகிய முறையில் நுட்பமாக உளவியல் கண்ணோட்டத்தோடு வடிவமைக்கப் பட்ட ஆங்கிலப் பாட நூல்கள்.
1.English Poetry Books:Rhythm 1 to 9 parts
2.English Prose Books:
Basics of Islam:(A)
Islamic Primer,(B)
Pre-Primer,(C)
Basics of Islam 1 to 8 volumes

2.உலக வரலாறு, உலகப் படைப்பிலிருந்து எப்படி இறைவனோடும் மார்க்கத்தோடும் தொடர்புடையதாக உள்ளது என்பதை அறிவியலோடும்,ஆதாரபூர்வமான வரலாற்றோடும்,இஸ்லாம் மார்க்கத்தோடும் முரண்படாத முறையில் புதிய கண்ணோட்டத்தோடு எழுதப்பட்டுள்ள அருமையான நூல் வரிசை:
Stories of the World 1 to 6 volumes

இவை இருக்க, நம் பெண் மக்களுக்கென்றே பிரத்யேகமாக எழுதப் பட்டுள்ள மற்றொரு நூல்:

Women and Islamic Law


உண்மையில் இந்த நூல்களெல்லாம் மெத்தப் படித்த மேதைகள் கூடப் படித்து இன்புறும் தரத்தில் உள்ளவை;உலகின் பல நாடுகளில் உள்ள இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் மாணவர்களுக்குப் பாட நூல்களாக பல ஆண்டுகளாக இருந்து வருபவை.
இளமையிலிருந்து வகுப்புக்கேற்ற முறையில் படிப்படியாக நம் பிள்ளைகள் தம் விருப்பத்தின் பேரில் படித்து வந்தால் கூட அவர்கள் தம்முடைய பதின் பருவம்(teen age) முடிவதற்குள் இளம் மார்க்க அறிஞர்களாகத் திகழ்வார்கள் என்பது உறுதி.
இந்த நூல்களையெல்லாம் ஒருமுறை கண்ணால் பார்த்துப் புரட்டினால்கூட இவ்வளவு அருமையான நூல்களை இத்தனை நாட்களாக நம் மக்களுக்கு வாங்கித் தராமல் இருந்துவிட்டோமே என்று ஏங்கச் செய்ய வல்லவை!


இந்த அரிய நூல்களைப் பார்க்கவோ,வாங்கிப் படிக்கவோ, நம் மாணவச் செல்வங்களுக்குக் கற்பிக்கவோ விரும்பும் மார்க்க ஆர்வலர்கள் அன்புகூர்ந்து தங்களுடைய முழுமையான தொடர்பு விவரங்களுடன் கீழ்க் கண்ட முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
வஸ்ஸலாம்.
-----ஏம்பல் தஜம்முல் முகம்மது



INDIA-CHENNAI:

BOOK ONESOURCE
L-Block, Raahat Gardens,
#158, Shakti Nagar, Zamin Pallavaram,
Tel: +91 44 22661735
+91 9841739373
E-mail: booksonesource05@gmail.com

INDIA-DELHI :

BOOK ONESOURCE
2/44-B, Ground Floor,
Tel: +9111 43656572/23253468
E-mail: booksonesoucedelhi@hotmail.com
booksonesouce@airtelmail.in

DUBAI-KARAMA:

Al MUTANABBI BOOKSHOP L.L.C
Opp. Burjuman Centre.
Tel: 04-396 5778/396 6518/396 7435
Fax: 04-396 6177
P.O. Box: 56320, 116601, Dubai-U.A.E.
E-mail: albatra@eim.ae

DUBAI ACADEMIC CITY:

AL MUTANABBI BOOKSHOP L.L.C.
Service Block
Dubai – U.A.E.
Tel: +971-50-5872064
Fax: +9714 3966177
E-mail: albatra@eim.ae

DUBAI-DEIRA :

AL MUTANABBI BOOKSHOP L.L.C.
Dubai Tower, Al Nasr Square.
Tel: 04-223 1833, Fax: 04-222 0619
P.O. Box: 56320, Dubai – U.A.E.
E-mail: albatra@eim.ae


DUBAI-HOR AL ANZ:

AL MUTANABBI BOOKSHOP L.L.C.
Behind Yasmin Building
Tel: 04-262 3898, Fax: 04-262 8398
P.O. Box: 56320, Dubai – U.A.E.
E-mail: albatra@eim.ae

SHARJAH :

AL MUTANABBI BOOKSHOP
Al Mina Street.
Tel: 06-568 3499, Fax: 06-568 8505
P.O. Box: 21235, Sharjan – U.A.E.
E-mail: albatra@eim.ae
SharjahBranch

ABU DHABI:

AL BATRA BOOKSHOP
Shop 72 - Ground Floor
Central Souk
P.O. Box: 113965, Abu Dhabi - U.A.E.
Tel: +971-2-6268720
Fax: +971-2-6268719
E-mail: albatra@eim.ae

ABU DHABI :

AL MUTANABBI BOOKSHOP L.L.C.
Madina Zayed, Airport Road.
Tel: 02-634 0319, Fax: 02-631 7706
P.O. Box: 71946, Abu Dhabi – U.A.E.
E-mail: albatra@eim.ae

AL-AIN
AL BATRA BOOKSHOP
Near Diwan R/A, City Season Hotel Bldg
Muweeji Dist., Al Ain – U.A.E.
Tel: 03-7556160
Fax: 03-7556165
E-mail: albatra@eim.ae
Al Ain branch

OMAN-MUSCAT:

AL BATRA BOOKSHOP
Al Wadi Commercial Centre, Al Qurum,
Tel: +968 245 63662, Fax: +968 245 63664
P.O.Box: 302, Oman.
E-mail: albatrab@omantel.net.om
albatrac@omantel.net.om
AlWadi

OMAN-MUSCAT :

Al BATRA BOOKSHOP
Al Khoud Commercial Street
Opp. Walleed Pharmacy – Al Khoud
Tel: +968 24541662, Fax: +968 24541608


SALALAH:

Al BATRA BOOKSHOP
Shop No. 3 Ground Floor
Lulu Hypermarket
Tel: +968 99855202


SALALAH:

AL BATRA BOOKSHOP
Shop No.11, First Floor
Lulu Supermarket, City Center
Tel: +968 94261926

BAHRAIN :

AL BATRA BOOKSHOP
Opp. To Gosi Shopping Complex
Z-58, Exibition Road
P.O. Box: 11578, Hoora, Manama
Tel: +973 17540027,
Fax: +973 17540031
E-mail: albatra@batelco.com.bh

QATAR-DOHA :

ABU KARBAL BOOKSHOP
Bin Mahmood Street,
P.O. Box: 10066, Doha, Qatar.
Tel: +974 44360274
Fax: +974 44360275
E-mail: albatra@qatar.net.qa
E-mail: albatra@batelco.com.bh
KUWAIT

AL BATRA BOOKSHOP
Near City Centre , Opp. Fire Service
Near Bait Al Zatak, Qatar St. Salmiya
Tel: +965 25753040, Mob: 965 97994049
E-mail: albatrakw@yahoo.com
albatrakw@hotmail.com

KUWAIT

Al BATRA BOOKSHOP:

Behind Al Muthanna Complex,
Malia, Kuwait city.
Tel: +96522428464, Fax: +96522428981
E-mail: albatrakw@yahoo.com

KSA-AL KHOBAR:

MOHD. AL RAHEEDI BOOKSHOP
KING Fahad Street, Cross 4
Tel: 00966 3 8651331
Fax: 00966 5 8651331
Mob: 00 966 5 05891846
E-mail: albatraksa@mutanabbi.com

General Enquiries: albatra@emirates.net.ae, Ibrahim@mutanabbi.com
Exhibition Related Queries: mariam@mutanabbi.com
Wholesale Enquiries: inquiry@mutanabbi.com

Branches Close to Metro Stations ( Dubai ):
Karama Branch ( Head Office ) - Khalid Bin Waleed Station ( Exit 2 )
Please Call 04-3965778 for more information

Hor Al Anz Branch - Abu Hail Station
Please Call 04-262 3898 for more information

Deira Branch - Baniyas Station
Please Call 04-223 1833 for more information