Tuesday, May 24, 2011

பொருளாதாரச் சீர்திருத்தக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. உலகத் தரத்திலான பொருள்கள் அனைத்தும் இந்தியாவில் கிடைக்கிறது என்கிற திருப்தியும், சர்வதேச அளவில் நமது இந்திய நிறுவனங்கள் போட்டிபோடும் தகுதி பெற்றிருக்கின்றன என்கிற பெருமையும், நமது நகரங்கள் மேலைநாடுகளைப்போல நுகர்வோர் கலாசாரத்தை வரிந்து கொண்டிருக்கின்றன என்கிற யதார்த்தமும் இனிக்கிறது. குறிப்பாக, தகவல் தொலைத்தொடர்புத் துறை நமது இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய சொர்க்கவாசலையே திறந்துவிட்டிருக்கிறது என்பதும் உண்மை.
ஆனால், இவையெல்லாம் மேம்போக்கான முன்னேற்றங்கள்தானே தவிர, ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரமும் சமச்சீர் முன்னேற்றம் கண்டு, எல்லா தரப்பினருக்கும் உலகமயமாக்கல், பொருளாதாரச் சீர்திருத்தம் போன்ற கொள்கைகளின் பயன்கள் சென்றடைந்திருக்கின்றனவா என்று பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்கிற பெயரில் ஏற்பட்டிருக்கும் கலாசாரச் சீரழிவுகளைப் பற்றி நாம் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. எந்தவொரு சமுதாயத்தையும் நாம் அந்தச் சமுதாயம் விரும்பும் மாற்றங்களிலிருந்து தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதுதான் காரணம்.
சமீபத்தில் 2009-10-க்கான தொழிலாளர் ஆணையத்தின் வேலைவாய்ப்பு மற்றும் வேலையில்லாமைக்கான கணக்கெடுப்பின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பு, வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார், லட்சத்தீவுகள் தவிர, இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் எல்லாம் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புள்ளிவிவரங்களும், அறிக்கையும், இந்தியாவை எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக இப்போதும் தொடர்வது வேலைவாய்ப்புதான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
காஷ்மீரையும் கன்னியாகுமரியையும் இணைக்கும் தங்க நாற்கரச் சாலையால் சரக்குப் போக்குவரத்து சுலபமாகி, கணிசமாக நமது ஏற்றுமதி அதிகரிக்கும் என்கிற கருத்தையும் பொய்யாக்கி இருக்கிறது இந்த அறிக்கை. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நமது இறக்குமதி அதிகரித்து வருவதுடன், உற்பத்தி பல துறைகளில் குறைந்திருப்பதும், அதனால் வேலை இழப்பு ஏற்பட்டிருப்பதும் இந்த அறிக்கையிலிருந்து தெரிய வந்திருக்கிறது. போதாக்குறைக்கு, கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கு இதுபோன்ற திட்டங்கள் எந்தவிதப் பயனும் அளிக்கவில்லை என்கிறது அந்த அறிக்கை.
தொழில் துறை வளர்ச்சி பற்றி நாம் என்னதான் பேசினாலும், இப்போதும் இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்புக் களமாகத் தொடர்வது என்னவோ நமது கிராமப்புறங்கள்தான். கடந்த இருபதாண்டு பொருளாதாரச் சீர்திருத்தத்தால் இந்த நிலைமையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பது உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கும் புள்ளிவிவரமாக இருக்கிறது.
இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 23.80 கோடிக் குடும்பங்களில் 72.26% குடும்பங்கள் இப்போதும் கிராமப்புறங்களில்தான் வசிக்கின்றன. இவர்களில் 10.1% பேர் வேலையில்லாமல் திண்டாடுபவர்கள் என்று தெரிவிக்கிறது அந்தப் புள்ளிவிவரம். அதனால்தான் அரசுகள் அறிவிக்கும் இலவசத் திட்டங்கள் கிராமப்புற ஏழை மக்களை இந்த அளவுக்குக் கவர்கின்றன என்று கருத இடமிருக்கிறது. கிராமப்புற வேலைவாய்ப்பின்மைக்கான முக்கிய காரணி, விவசாயத்தில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவுதான்.
கிராமப்புறங்களில், விவசாயம்தான் 57% வேலைவாய்ப்பு வழங்குகிறது. கட்டுமானத் தொழில் 7.2%, சிறு தொழில் உற்பத்தி 6.7%, ஏனைய சில்லறை வியாபாரங்கள், கைவினைப் பொருள்கள், சேவைத்துறை போன்றவை 6.3% வேலைவாய்ப்பை வழங்குகின்றன. விவசாயம் செழிப்பாகவும், லாபகரமாகவும் நடைபெறாமல் போனால் ஒட்டுமொத்த கிராமப்புற வேலைவாய்ப்புகளும் சுருங்கி விடுகின்றன. விவசாயத்தில் ஏற்படும் பின்னடைவை ஈடுகட்ட கிராமப்புற மக்களுக்கு மாற்று வேலைவாய்ப்புக்கான பயிற்சியும் தரப்படுவதில்லை.
கிராமப்புறத் தொழிலாளிகளுக்கு மாற்றுத் தொழிற்பயிற்சி வழங்குவதன் மூலமும், விவசாயம் பொய்த்தாலும் அவர்களது பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க வழிகோலுவதன் மூலமும்தான் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கிராமப்புறங்களில் மிகப்பெரிய அளவில், விவசாயத் தேக்கத்தை ஈடுகட்டி வந்த கால்நடை வளர்ப்பு இப்போது இல்லாமல் போனதுகூட, கிராமப்புற வேலைவாய்ப்பின்மைக்குக் காரணம் என்கிறது அந்த அறிக்கை.
நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் என்பது கிராமப்புறப் பொருளாதாரத்தை ஆரோக்கியமான வகையில் வளர்க்க உதவாமல், ஊழலுக்கும், ஆக்கபூர்வமான விவசாய மற்றும் கிராமப்புறத் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவும் அமைந்திருக்கிறது என்கிற உண்மையும் இந்தப் புள்ளிவிவரங்களின் மூலம் தெளிவாகிறது. விவசாயம் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதுடன், கிராமப்புறத் தொழிலாளர்களிடம் சேவைத் துறைக்கான திறமைகள் வளர்க்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்தும், பொருளாதாரச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளாகியும் இன்றும் இந்தியாவில் அரசு வேலைவாய்ப்புக்கான முக்கியத்துவம் குறையவில்லை என்பதிலிருந்தே, திறமைகள் வளர்க்கப்பட்டு, தன்னம்பிக்கையுடன் போட்டிபோடத் தயாரான தலைமுறை உருவாக்கப்படவில்லை என்பதுதான் தெளிவாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், விவசாயமும் ஆதரிக்கப்படாமல், கிராமப்புற வளர்ச்சியும் போதிய கவனத்தைப் பெறாமல், தொழில் வளர்ச்சி என்பதும் நகர்ப்புற வளர்ச்சியாக இருப்பது, வேலையில்லாத் திண்டாட்டம் பெரிய அளவில் பூதாகரமாக வெடித்து, சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகக்கூடும் என்பதைத்தான் உணர்த்துகிறது.
சமூகப் பாதுகாப்பு என்பது தனியார்வசம் ஒப்படைக்கப்படுவதால் இந்தப் பிரச்னை மேலும் கடுமையாகி மிகப்பெரிய எதிர்விளைவை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏற்றுமதி, இறக்குமதி, பொருளாதார வளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருக்கட்டும். நமது ஆட்சியாளர்களின் முழுமுதல் கவனமும் கிராமப்புற வேலைவாய்ப்பைப் பெருக்குவதில் முனைப்புடன் செலுத்தப்படாவிட்டால், ஓர் எரிமலை வெடிக்கத் தயாராகிறது...!

Monday, May 23, 2011

"Shailesh Shah"
Presents:

Changing Thoughts of Girls
(Ladkiyo Ke Andaj Badle Gaye)

1980 - Love Me, But Don’t Touch Me
(Mujhe Pyar Karo, Lekin Mujhe Chuo Nehi)

1990 – Touch Me, But Don’t Kiss Me
(Mujhe Chuo, Lekin Mujhe Chumo Nehi)

2000 – Kiss Me, But Don't Do Anything Else
(Mujhe Chumo, Lekin Aur Kuch Mat Karna)

2005 – Do Everything with me, But Don't Tell Anybody
(Mujhse Sab Kuch Kar Lo, Par Kisi Ko Batana Nahi)

2011 – Do Everything with me, Otherwise I Would Tell Everybody That You Are A Novice
(Sub Kuch Karo, Warna Sub Ko Bata Dun Gi Ke Tum Ko Kuch Nahi Aata)

Sunday, May 22, 2011

பெங்களூர்: இன்று மாலை 6 மணியுடன் உலகம் அழிந்து விடும் என்று சொன்னவர்கள் கணிப்பில் டன் கணக்கில் மண் விழுந்தது.

உலகின் எந்தப் பகுதியிலும் மாலை 6 மணிக்கும் அதற்குப் பிறகும் கூட ஒன்றும் நடக்கவில்லை.

டூம்ஸ்டே எனும் பெயரில் இன்று 6 மணியோடு உலகம் அழிந்துவிடும் என்று சொன்னவர் அமெரிக்காவின் ஹரால்ட் கேம்பிங் என்ற கிறிஸ்தவ மதத் தலைவர். இவர் ரேடியோ நிலையத்தில் தொகுப்பாளராக வேலை பார்த்து வருபவர்.

இவரது பேச்சு உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

89 வயதாகும் கேம்பிங், ஏற்கனவே இதுபோன்ற கணிப்புகளைக் கூறியவர்தான். 1994ம் ஆண்டில் உலகம் அழியும் என்று இவர் கூறியிருந்தார். ஆனால் அது புஸ்வாணமாகிப் போனது. ஆனால் தற்போது மே 21ம் தேதியான இன்று மாலை 6 மணிக்கு உலகம் அழிவது உறுதி என்று அவர் கூறினார்.

தான் பணியாற்றும் ரேடியோ நிலையத்தில் நேற்று பணி முடிந்து கிளம்பியபோது அங்கு பணியாற்றி வரும் ஊழியர்களுக்குக் கை குலுக்கிய கேம்பிங், இதுதான் நாம் சந்திக்கும் கடைசி சந்திப்பு என்று கூறிய அவர், நாளை மாலையுடன் உலகம் அழியப் போவதால் நாம் மீண்டும் சந்திக்க மாட்டோம். நானும் இருக்க மாட்டேன் என்று கூறி விட்டுக் கிளம்பினார்.

எப்படி உலகம் அழியும் என்று உறுதியாகச் சொல்கிறீர்கள் என்று கேம்பிங்கிடம் கேட்டபோது, நியூசிலாந்தில் மிகப் பயங்கரமான பூகம்பங்கள் 21ம் தேதி மாலை 6 மணிக்கு ஏற்படும். இதனால் மிகப் பெரிய பேரழிவுகள் ஏற்படும். இந்த பூகம்பங்கள் நியூசிலாந்தோடு நின்று விடாது. அப்படியே ஒவ்வொரு பிராந்தியமாக நகரும். கடைசியில், உலகத்தின் பெரும்பாலான மக்கள் அழிந்து போய் விடுவார்கள். 2 அல்லது 3 சதவீத மக்கள்தான் உயிர் பிழைப்பார்கள். அவர்களையும் கூட கடவுள் தன்னுடன் அழைத்துக் கொண்டு விடுவார்.

எனது கணிப்பு மிகச் சரியானது, துல்லியமானது. நோவாவுக்கு கடவுள் 7 நாள் அவகாசம் கொடுத்தார். மாபெரும் வெள்ள அபாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ள இந்த கால அவகாசத்தை அவர் கொடுத்தார். ஆனால் நமக்கு கடவுள் 7000 ஆண்டு காலத்தை அவகாசமாக கொடுத்தார். அந்த காலம் யூத காலண்டர்படி மே 21ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது என்பார் கேம்பிங்.

ஒன்றும் ஆகவில்லை...

ஆனால் மாலை 6 மணியைத் தாண்டிய பிறகும் உலகம் அழியவில்லை. நியூஸிலாந்து மட்டுமல்ல, வேறு எந்தப் பகுதியிலும் சிறு பூகம்பம் கூட நேரவில்லை. 1994-ம் ஆண்டு மட்டுமல்ல, இந்த ஆண்டும் பொய்யாய்ப் போனது கேம்பிங் கணிப்பு.

இனி 2012-ம் ஆண்டு டிசம்பர் 21-ம் தேதிக்கு காத்திருக்கிறார்கள் இதுபோன்ற அழிவுச் செய்திகளில் ஆர்வம் கொண்டோர். அது என்ன 21, டிசம்பர் 2012?

அன்றுதான் உலகின் கடைசி தினமாம். அன்றோடு உலகம் அழிந்துவிடுமாம்! இது மாயா இன மக்களின் பழைய கல்வெட்டுப்படி சொல்லப்படும் கணிப்பாம்.

உலகின் ஆயுளை அவ்வப்போது கேள்விக்குறியாக்குபவர்கள்தான் கடைசியில் காணாமல் போயிருக்கிறார்கள். நம்பிக்கையோடு வாழ்க்கையைத் தொடருவோருக்கே இந்த உலகம் இடம் தருகிறது!!


Thanks : http://ping.fm/lFDqm
ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள்- ஓர் பயணக் கட்டுரை!

ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள்- ஓர் பயணக் கட்டுரை!

டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, PhD., IPS (R)



ஆஸ்திரேலியா நாட்டில் கிட்டத்தட்ட 70 நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் தங்களுடைய நாடுகளின் கலாச்சாரங்களுடன், மொழிகளுடனும் வேறு பட்டு இருந்தாலும் இஸ்லாம் என்ற மார்க்க கயிறால் இணைக்கப் பட்டு ஒரே சமூகமாக உள்ளனர் என்பதினை 2011 வருடம் பிப்ரவரி மாதத்திலிருந்து மே முதல் வாரம் வரை மேற்கொண்ட பயணத்தில் தெரிய வந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன.



30 சதவீத முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள். மற்றவர்கள் ஐரோப்பியாவில் இஸ்லாத்தினை தழுவியவர்கள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, ஆப்பிரிக்கா, சீனா, மற்றும் தென் கிழக்கு ஆசியாவிருந்தும் குடி பெயர்ந்தவர்கள் ஆவர். பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் ஆங்கில மொழியினையும், மற்றவர் துருக்கி மற்றும் அரேபிய மொழிகளையும் பேசுகின்றனர்.



ஆஸ்திரேலிய மொத்த ஜனத் தொகை 2.2 கோடியில் இஸ்லாமியர் இரண்டு சதவீதத்தில் உள்ளனர். அதாவது கிட்டத் தட்ட 2,50,000 மக்கள் ஆவர். அதில் பெரும்பாலோர் சிட்னியிலுள்ள அபர்ன், கீரீனேக், பேங்க்ஸ்டன், லக்கம்பி, பஞ்சபவள், மெல்போனிலுள்ள மீடோ ஹெட்ஸ், ரிசர்வான், டல்லாஸ், நோபள் பார்க்இகோபர்க், டாஸ்மானியா, அடிலேடு, கியூன்ஸ்லேண்டு ஆகிய பகுதியில் வசிக்கின்றனர்.



பெரும்பாலோனோர்; பல்வேறு வேலைகளில் உள்ளனர். 27 சதவீதம் மேனேஜர்களாகவும், நிர்வாகிகளாகவும், தொழில் நட்ப வல்லுநர்களாகவும் உள்ளனர். அதில் ஆங்கிலம் தெரியாத முஸ்லிம்கள் தான் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர்.



இந்திய நாடு, பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்கள் தொழிழ் நட்பவாதிகளாக இருப்பதால் மற்ற தேசிய முஸ்லிம்களை விட வேiலை வாய்ப்பில் சிறந்து விளங்குகின்றனர். பெரும்பாலான முஸ்லிம்கள் சுன்னி மதகினைச் சார்ந்தவர்களாகவும் மிக குறைந்த அளவே ஷியா இனத்தவர் உள்ளனர்.



காலூன்றிய வரலாறு:



இந்தோனேசியாவினைச் சார்ந்த மெக்காசான்ஸ் என்ற மீனவர்கள் வட ஆஸ்திரேலியா கடற்பகுதிகளில் கிடைக்கும் டிரப்பாங்க் என்ற வகை மீன்களைப் பிடிக்க 1750 ஆம் வருடங்களில் காலடி வைத்தனர். அவர்கள் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினருடன் சுகுமமான உறவூ கொண்டனர். ஆனால் மேற்கத்திய நாடுகளின் வருகையால் இந்தோனேஷியா மீனவர்களின் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.



ஆப்கானிஸ்தானிய முஸ்லிம்கள் தான் முதன் முதலில் குடி பெயர்ந்து அவர்களைத் தொடர்ந்து லெபனான், துருக்கி, போஸ்னியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்தனர். விக்டோரியா மாநிலத்திலுள்ள பாலை வனத்தில் வேகமாக செல்வதிற்காக 1860 ஆம் ஆண்டில் மூன்று பாலை வனக்கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகங்களை ஆப்கானிஸ்தானின் ஓட்டுனர்களுடன் கொண்டு வரப்பட்டனர்.



அதனைத் தொடர்ந்து 1865 ஆம் ஆண்டு தென் ஆஸ்திரேலியாவினைச் சார்ந்த தாமஸ் எல்டர் என்பவர் 124 ஒட்டகங்களை 31 ஆப்கானிஸ்தான் ஓட்டுனர்களுடன் கொண்டு வந்தார்.1901 வரை ஒட்டக வர்த்தகத்தினை ஆப்கானிஸ்தானியர் கையாண்டு 600 ஒட்டகங்கள் அங்கு இருந்தன. ஆனால் 1920 வருடம் இயந்திரத்தில் ஓடும் வாகனங்களை அங்குள்ள அரசு கையாண்டதால் ஒட்டக வர்த்தகம் தடைப்பட்டது.



அப்படி வந்த ஆப்கானிஸ்தானிய முஸ்லிம்கள் எண்ணிக்கை 13000 த்தை 2008ஆம் ஆண்டு தாண்டியது. அவர்கள் சிட்னி, மெல்போர்ன் போன்ற நகரங்களில் தங்கெளுக்கென்ற சமூக அமைப்பினையூம், தொழுகை இடங்களையூம் அமைத்துக் கொண்டனர். அதே போன்று 20ஆம் நூற்றாண்டில் இடம் பெயர்ந்த லெபனான் நாடடு முஸ்லிம்கள் 21ஆம் நூற்றாண்டில் 40000த் தாண்டினர். அவர்கள் வழிபாட்டுத் தளங்கள் அமைப்புகளில் மற்ற முஸ்லிம்களை புறக்கணித்தனர்.



லெபனான் நாட்டு முஸலிம்கள் தங்களுக்கென்ற ஒரு சமுதாய அமைப்பினை ஏற்படுத்தி லக்கம்பீயில் ஒரு இமாம் அலி பள்ளிவாசலினை 1976ஆம் ஆண்டு ஏற்படுத்தினர். அந்தப் பள்ளியில் 9.3.2011 அன்று ‘ஓப்பன் டே” என்ற நிகழ்ச்சியினைக் காணச் சென்றேன். அங்குள்ள சேக இஸ்லாமியர் அல்லாத ஆஸ்திரேலியர் இஸ்லாத்தினைப் பற்றி எழுப்பப்ட்ட சந்தேகங்களுக்கு பதிலளித்தது மிகவும் விழிப்புணர்த்தினை ஏற்படுத்துவதாக இருந்தது. லெபனான் நாட்டு ஷியா இனத்தவர் தனியாக ஒரு பள்ளியினை அர்னாலிப் என்ற இடத்தில் 1983ல் ஏற்படுத்தினர்.



துருக்கியர் வருகை முதல் உலக யுத்தத்திற்க பின்பு கட்டுப்படுத்தப்பட்டது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவும், நியூஜிலாந்து துருக்கிக்கு எதிராக போரிட்டது குறிப்பிடத் தக்கது. அதன் பின்பு 1967ஆம் ஆண்டு அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப் பட்டதால் இன்று அவர்கள் எண்ணிக்கை 30000த் தாண்டும். அவர்களுக்கென்ற ஒரு பிரமாண்டமான பள்ளிவாசலினை அபர்ன் பகுதியில் அமைத்துள்ளனர். அதனை 10.3.2011 அன்று காண வாய்ப்புக் கிடைத்தது.



இரண்டு பெரிய மினாராக்கள், வேலைப்பாடு அமைந்த பளிங்குகளால் மிகவும் நேர்த்தியாக டிசைனில் அந்தப் பள்ளி அமைந்திருந்தது. விக்டோரியா மாநிலம் மெல்போர்னில் விக்டோரிய என்ற இடத்தில் பெரிய பள்ளி வாசலுக்கு 22.4.2011 ஜூம்மா தொழுகைக்குச் சென்றேன். மிகவும் அதிக கூட்டமாக நெரிசலுடன் தொழுதது அல்லாஹ் சுபஹானத்தாலாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.



ஓன்று பட்ட யூகோஸ்லேவியாவில் 1990ஆம் ஏற்பட்ட சிவில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட போஸ்னிய முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்து இன்று 15000த்தை தாண்டியூளளனர். பெரும்பாலான மக்களுக்கு ஆங்கில மொழி தெரியாததால் தொழிற்காலைகளில் கூலி வேலை செய்கின்றனர்.



1947ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்திலிருந்து பாகிஸ்தான் பிரிந்த பின்பு படித்த இஸ்லாமிய இளைஞர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்களுடைய எண்ணிக்கை 20000த்தை எட்டியுள்ளது. இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்தளவே7000த்தினை எட்டியுள்ளது. ஈரானியர் எண்ணிக்கை 10000 பங்களாதேஷ் நாட்டினர் 10000.



சமூக வாழ்க்கை முஸ்லிம்கள் மைனாரிட்டியாக வாழ்வதால் லோக்கல் கவுன்ஸில் கட்டுப்பாடு இருப்பதினால் பள்ளிவாசல்களில் தொழுகைக்கான பாங்குகளை ஒலி பெருக்கி மூலம் தெரிவிப்பதில்லை. வேலை பார்க்கும் இடங்களிலும், பார்க்கில் தனியான இடத்திலும், வாடகைக் கட்டியங்களிலும் ஜூம்மா தொழுகை நடத்தப்படுகிறது.



1980ஆம் ஆண்டுக்குப் பின்னால் ஆஸ்திரேலியர்கள் இஸ்லாத்திற்கு வருவது அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சூபியிஸத்தின் பால் இழுக்கப்பட்பவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக ஜூம்மா பிரசங்கம் அரேபிய மொழியில் சொல்லப்பட்டு ஆங்கிலம் பயின்றவர்களால் ஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது. தொழுகை பள்ளிகளை மூன்று விதமாக பிரிக்கலாம்:



1) தொழுகைப்பள்ளி, மதரஸா மற்றும் லைப்ரரி அடங்கியது.

2) தொழுகைப்பள்ளி தொழுகை நடத்துவதிற்கு மட்டும்

3) கிறித்துவ ஆலயங்களின் மற்றும் லோக்கல் கம்யூனிட்டி செண்டரில் ஒரு பகுதியினை வாடகைக்கு எடுத்து தொழுகை நடத்துவது.



சிட்னி மற்றும் மெல்போர்ன் பகுதிகளில் 100 மேற்கொண்ட பள்ளிகள் உள்ளன.



தமிழ் இஸ்லாமிய அமைப்புகள் சிட்னி, மெல்போர்ன் போன்ற இடங்களில் சிறப்பாக செயல் படுகின்றன.. பெற்றோர்கள் பார்த்து ஒரு தேச முஸ்லிம்களுடன் திருமணம் செய்து கொள்வது மிகவும் குறைவே. குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை என்றாலும் பெரும்பாலும் சிறிய குடும்பத்தினையே அங்குள்ள முஸ்லிம்கள் கொண்டுள்ளனர். லெபனான் மற்றும துருக்கி நாட்டு சில முஸ்லிம் இளைஞர்கள் கேம்ப்பீல்டு மற்றும் லக்கம்பீ பகுதியில் குற்றச் செயல்கள் ஈடுபடுவதால் ஆஸ்திரேலியரின் வெறுப்புகளை சந்திக்க நேரிடுகிறது.



வயதானவர்களை பாதுகாக்க விக்டோரியா மாநிலத்தில் லஸ்டர்பீல்டு என்ற இடத்தில் ஒரு காப்பகத்தினை ‘இஸ்லாமிக் சொசைட்டி ஆப் மெல்போர்ன் ஈஸ்ட்டர்ன ரீஜன்’ என்ற அமைப்பு நடத்துகிறது. அது போன்று ஒரு காப்பகத்தினை துருக்கியர் பிராடுமீடோஸ் என்ற இடத்திலும், கியூன்லோண்டில் ‘இஸ்லாமிக் பெண்கள் அசோஸியேஸன் ஒரு காப்பகத்தினையும் நடத்துகின்றனர்.



சில முஸ்லிம் தொழிளார்கள் வட்டி வாங்குவதினை விரும்பாததால் வங்கிக்கு தங்கள் சேமிப்பிற்கு வட்டி வேண்டாம் என சொல்லி விடுகின்றனர். லக்கம்வி பெரிய பள்ளியின் அருகில் உள்ள கட்டிடத்தில் ‘கவூஸ் ஆப் ஜக்காத்’ என்ற பலகையினை கண்டேன். ஜக்காத் கொடுப்பவர்கள் அந்த அலுவலகத்திற்கச் சென்று டாலரைக் கொடுத்து விடுகின்றனர். அதனை பயனுள்ள ஏழைகளுக்கு வழங்கப் படுகிறது.



வட்டியினை எதிர்க்கும் இளைஞர்கள் ‘தி முஸ்லிம் கம்யூனிட்டி கார்ப்பரேசன் ஆப் ஆஸ்திரேலியா’ என்று ஆரம்பித்து யாருக்கும் நஷ்டம் யாருக்கும் லாபமில்லாத பைனான்ஷியல் முறை தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐ.டிபி என்ற வட்டியில்லா வங்கியும் இயங்கி வருகிறது.



கல்வி நிலையங்கள்: 1957ஆம் ஆண்டில் தனது 23 ஆவது வயதில் 1957ஆம் ஆண்டு லெபனானைச் சார்ந்த சேக் பகீம் என்ற இளைஞர் ‘இஸ்லாமிக் சொசைட்டி ஆப் விக்டோரியா’ என்ற அமைப்பினை ஏற்படுத்தி வார விடுமுறை நாட்களில் 15 மாணவர்கள் பயிலும் பள்ளியினை ஆரம்பித்தார் அவர் பிற்காலத்தில் வளர்ந்து ஆஸ்திரேலியாவில் உலக மத அமைதி மாநாட்டினை நடத்தும் ஒரு இயக்கினராக சிறப்பாக செயல் பட்டதால் அவருக்கு, ‘ஆஸ்திரேலியாவின் உயர்ந்த விருது’ பாரத் ரத்னா போன்ற விருது வழங்கப்பட்டது



அதன் பின்பு இஸ்லாமிய அமைப்புகளை ஒரே குடையில் கொண்டு வரும் விதத்தில் ‘ஆஸ்திரேலியன் பெடரேசன் ஆப் இஸ்லாமிக் சொரைட்டி” என்ற அமைப்பு 1964 ஆம் ஆண்டு உருவானது. அரேபிய நாட்டு பண உதவியுடன் 198ஆம் ஆண்டு, ‘கிங்க் காலித் இஸ்லாமிக் ஸ்கூல்’ மெல்போர்னில் ஆரம்பிக்ப்பட்டது. அதன் பின்பு ஒவ்வொரு இடத்திலும் கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.



சிட்னியில் உள்ள, ‘மலக் பகாத் இஸ்லாமிக் பள்ளி” ஆயிரம் மாணவர்களைக் கொண்டது. ‘கிங் காலித் கல்லுரி” ஆண்களும் பெண்களும் பயிலும் கல்லுhரியாக இருக்கிறது. ‘இஸ்லாமிக் காலேஜ்” மெல்போர்னிலும் பிரிஸ்பேனிலும், அடிலேடிலும், கேன்பராவிலும், மற்றும் லாங்க்போர்டு இஸ்லாமிக் ஸ்கூல் பெர்த்திலும் செயல்பட்டு மார்க்க மற்றும் பொது கல்வியினை முஸ்லிம் மாணவர்களுக்குத் தருகின்றனர்.



ஆஸ்திரேலிய முஸ்லிம் பெண்களுக்கு வாஃபா தாபா என்ற பெண்மணி முன்னோடியாக உள்ளார். அவர் கப்பற் படையில் ‘லெப்டிணன்ட் கமாண்டராக’ உள்ளார். அவர் ஐந்து வேலை தொழுகையினைக் கடைப்பிடித்தும், தன் தலையில் நேவல் தொப்பிக்குக் கீழெ ஹிஜாப் அணிந்துள்ளார். சி7 மற்றும் 9எம்.எம். என்ற தானியங்கி துப்பாக்கி சுடுவதில் வல்லவர். அவர் எகிப்தில் பிறந்த பாலஸ்தீன பெண்மணி ஆவார்.



அவர் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது தான் கப்பல் படையில் பணியாற்றுவதாலும், படித்திருப்பதாலும் பலர் நினைப்பார்கள் குடிப்பழக்கம், மற்றும் பன்றி உணவு சாப்பிடுவேனென்று. ஆனால் நான் அந்தப் பக்கமே தலையெடுத்து பார்த்ததில்லை எனக் கூறுவது பெருமையாக இருக்கிறது. நமது ஊரில் படித்த பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தலையில் முக்காடு போடாமல் ஜீன்ஸ் மற்றும் டி சர்ட் போட்டுக் கொண்டு ஆண்களைப் போல அலையும் காலத்தில் எம்.பி.ஏ படித்து ஆஸ்திரேலியாவின் ராணுவத்தில் உயர்ந்த பதவியினை வகிக்கும் வஃபா தாபா ஒரு இஸ்லாத்தின் நம்பிக்கை நச்சத்திரப் பெண்ணென்றால் மிகையாகாது. அவருடைய படத்தினை முஸ்லிம் அமைப்பகள் வெளியிடுவது தவறில்லை என எண்ணி இத்துடன் இணைத்திருக்கின்றேன.





நியூசவூத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஹான்ஸ்பீ என்ற இடத்திலுள்ள ‘வெஸ்ட்

Saturday, May 21, 2011

Muslim MLAs in 5 assemblies: They are now 130

By TCN Staff Writer,
Patna: 50 days ago, TwoCircles.net, in an election “ story ”, had asked if the number of Muslim MLAs will go up in the five assemblies that were going to poll. We had predicted that the number could go up as there is a race among both ruling and opposition parties to capture the Muslim vote to come to power. The results announced yesterday proved us true.

Writer's building in Kolkata [TCN Photo]
There were 105 Muslim MLAs in the five assemblies (West Bengal, Kerala, Assam, Tamil Nadu and Puducherry) together. Now the number has reached 130 – the big share has come from West Bengal where there was a mad rush for Muslim votes that were shifting from Left.
The major share of 130 Muslim MLAs has come from West Bengal where in all 59 Muslim candidates were elected to the new assembly, that is 13 more from the 2006 assembly poll. West Bengal has been followed by Kerala which will see 36 Muslim MLAs entering the Assembly. There were 25 Muslim MLAs in the outgoing Kerala assembly. Another state which has increased Muslim representation in assembly is Assam. The state had 25 Muslim MLAs in 2006. In the 2011 poll, 28 Muslims have been elected – majority of them are from All India United Democratic Front of Badruddin Ajmal. AIUDF has increased its tally of 10 members in assembly to 18.
However, Tamil Nadu and Puducherry have lost one Muslim MLA each. The former had 7 Muslim MLAs. The new assembly will have 6. Similarly, Puducherry had 2 Muslim MLAs. In this election, only one could win.
State --------------Seats------Muslim MLAs in 2006-----Muslim MLAs in 2011
West Bengal------294-------------46-------------------------------59
Kerala-------------140-------------25-------------------------------36
Assam-------------126-------------25-------------------------------28
Tamil Nadu------234--------------07-------------------------------06
Puducherry---- ----30--------------02------------------------------01
Full list of Muslim MLAs in new assemblies
West Bengal: 59 Muslim MLAs
Sl. No…Constituency-----Muslim MLA----------Party
1.Amdanga-------------------Rafiqur Rahaman------All India Trinamool Congress
2.Baduria---------------------Abdul Gaffar Quazi----Indian National Congress
3.Baishnab Nagar-----------Isha Khan Choudhury---Indian National Congress
4.Basirhat Uttar--------------Mostafa Bin Quasem----Communist Party Of India (Marxist)
5.Beldanga--------------------Safiujjaman Seikh--------Indian National Congress
6.Bhagabangola--------------Chand Mohammad-----Samajwadi Party
(Marxist)
7.Bharatpur-------------------Id Mohammad-------Revolutionary Socialist Party
8.Canning Purba-------------Abdur Razzak Molla-------Communist Party Of India (Marxist)
9.Chakulia--------------------Ali Imran Ramz------All India Forward Bloc
10.Champdani----------------Muzaffar Khan-------All India Trinamool Congress
11.Chanchal-------------------Asif Mehbub----------Indian National Congress
12.Chapra---------------------Rukbanur Rahman----All India Trinamool Congress
13.Chopra---------------------Hamidul Rahaman-----Independent
14.Deganga--------------------Dr. M. Nuruzzaman----All India Trinamool Congress
15.Domkal--------------------Anisur Rahaman----------Communist Party Of India (Marxist)
16.Farakka--------------------Mainul Haque-------------Indian National Congress
17.Goalpokhar---------------Md. Ghulam Rabbani------Indian National Congress
18.Hariharpara---------------Insar Ali Biswas------------Communist Party Of India (Marxist)
19.Harischandrapur---------Tajmul Hossain--------------All India Forward Bloc
20.Haroa----------------------Julfikar Molla---------------All India Trinamool Congress
21.Islampur-------------------Abdul Karim Chowdhary----All India Trinamool Congress
22.Jagatballavpur------------Abul Kasem Molla------All India Trinamool Congress
23.Jalangi---------------------Abdur Razzak-----------Communist Party Of India (Marxist)
24.Jamuria--------------------Jahanara Khan------Communist Party Of India (Marxist)
25.Jangipur-------------------Md. Sohrab--------Indian National Congress
26.Kaliganj-------------------Nasiruddin Ahamed(Lal)-----All India Trinamool Congress
27.Kasba----------------------Ahmed Javed Khan-----------All India Trinamool Congress
28.Ketugram-----------------Sekh Sahonawez---------------All India Trinamool Congress
29.Khanakul-----------------Iqbal Ahmed-------------------All India Trinamool Congress
30.Kharagpur----------------Haque Nazmul--------------Communist Party Of India (Marxist)
31.Kolkata Port--------------Firhad Hakim-------All India Trinamool Congress
32.Kumarganj----------------Begam Mahamuda--------All India Trinamool Congress
33.Labhpur-------------------Islam Monirul--------------All India Trinamool Congress
34.Lalgola--------------------Abu Hena-------------------Indian National Congress
35.Magrahat Paschim--------Giasuddin Molla----------All India Trinamool Congress
36.Malatipur-------------------Abdur Rahim Boxi-------Revolutionary Socialist Party
37.Memari---------------------Abul Hasem Mondal-------All India Trinamool Congress
38.Metiaburuz-----------------Mamtaj Begam-------------All India Trinamool Congress
39.Monteswar----------Chowdhury Md Hedayatullah------Communist Party Of India (Marxist)
40.Mothabari-------------------Sabina Yeasmin-------Indian National Congress
41.Murarai----------------------Nure Alam Chowdhury--------All India Trinamool Congress
42.Nandigram------------------Phiroja Bibi------------All India Trinamool Congress
43.Naoda------------------------Abu Taher Khan------Indian National Congress
44.Pandua-----------------------Amjad Hossain Sk.------Communist Party Of India (Marxist)
45.Panskura Paschim----------Omar Ali---------All India Trinamool Congress
46.Pursurah---------------------Parvez Rahman----------All India Trinamool Congress
47.Raghunathganj-------------Akhruzzaman------------Indian National Congress
48.Raniganj--------------------Ali Sohrab-----------All India Trinamool Congress
49.Raninagar-------------------Firoza Begam---------Indian National Congress
50.Rejinagar--------------------Humayun Kabir------------Indian National Congress
51.Samserganj-----------------Touab Ali--------------Communist Party Of India (Marxist)
52.Sonarpur Uttar-------------Firdousi Begum----All India Trinamool Congress
53.Sujapur----------------------Abu Nasar Khan Choudhury---- Indian National Congress
54.Uluberia Purba-------------Haider Aziz Safwi----All India Trinamool Congress
55.Suti--------------------------Emani Biswas--------Indian National Congress
56.Palashipara------------------S.M. Sadi-------------Communist Party Of India (Marxist)
57.Panchla----------------------Gulsan Mullick-------All India Trinamool Congress
58.Mangalkot-------------------Sahajahan Choudhury----------Communist Party Of India (Marxist)
59.Bhangore--------------------Badal Jamadar----Communist Party Of India (Marxist)
Kerala: 36 Muslim MLAs
Sl. No…Constituency----------Muslim MLA--------------------Party
1 Manjeshwar---------------- PB Abdurazaq---------- ---------- Muslim League
2 Kasargod------------------- NA Nellikkunnu---------- ---------- Muslim League
3 Azhikode------------------- KM Shaji---------- ---------- Muslim League
4 Kannur--------------------- AP Abdullakkutty---- ---------- Indian National Congress
5 Perambra------------------- K Kunhammed Master-- ---------- CPI (M)
6 Kozhikode----------------- South Dr MK Muneer---------- ---- Muslim League
7 Beypore-------------------- Elamaram Kareem--- ---------- CPI (M)
8 Kunnamangalam---------- PTA Raheem---------- --- CPI (M) independent
9 Koduvally----------------- VM Ummer Master--- --- Muslim League
10 Thiruvambadi----------- C Moin Kutty---- ---- Muslim League
11 Kondotty----------------- K Muhammedunni Haji- ---------- Muslim League
12 Ernad--------------------- PK Basheer---------- ---------- Muslim League
13 Nilambur---------------- Aryadan Muhammed--- ---------- Indian National Congress
14 Manjeri------------------ Adv M Ummer---------- ---------- Muslim League
15 Perinthalmanna--------- Manjalamkuzhi Ali--- ---------- Muslim League
16 Mankada---------------- TA Ahmed Kabeer--- ---------- Muslim League
17 Malappuram------------ P Ubaidulla---------- ---------- Muslim League
18 Vengara----------------- PK Kunjalikkutty---- ---------- Muslim League
19 Vallikkunnu-------------Adv KNA Qader---- ---------- Muslim League
20 Tirurangadi------------ PK Abdurabb---------- ---------- Muslim League
21 Tanur------------------- Abdurahman Randathani ---------- Muslim League
22 Tirur-------------------- C Mammootty---------- ---------- Muslim League
23 Kottakkal-------------- Abdussamad Samadani ---------- Muslim League
24 Thavanur-------------- KT Jaleel---------- ---------- CPI (M) independent
25 Pattambi--------------- CP Mohammed---------- --------- Indian National Congress
26 Shornur---------------- KS Saleekha---------- --------- CPI (M)
27 Ottappalam------------ M Hamza---------- ---------- CPI (M)
28 Mannarkkad----------- Adv N Shamsudheen-- ---------- Muslim League
29 Palakkad--------------- Shafi Parambil---------- --------- Indian National Congress
30 Guruvayur------------- KV Abdul Khader--- ---------- CPI (M)
31 Aluva------------------- Anvar Sadath---------- ---------- Indian National Congress
32 Kalamasseri-------------VK Ibrahim Kunju-- ---------- Muslim League
33 Aroor---------------------Adv AM Ariff---------- --------- CPI (M)
34 Eravipuram------------ AA Azeez---------- ---------- RSP
35 Varkala---------------- Varkala Kahar---------- --------- Indian National Congress
36 Kazhakkoottam------- MA Vaheed---------- ---------- Indian National Congress
Assam: 28 Muslim MLAs
Sl. No…Constituency----------Muslim MLA--------------------Party
1. Algapur------------------------Sahidul Alam Choudhury------- Asom Gana Parishad
2. Badarpur-----------------------Jamal Uddin Ahmed------------- Indian National Congress
3. Baghbor------------------------Sherman Ali Ahmed------------All India United Democratic Front
4. Barpeta-------------------------Abdur Rahim Khan-------------All India United Democratic Front
5. Bhabanipur--------------------Abul Kalam Azad---------------All India United Democratic Front
6. Bilasipara East----------------Gul Akhtara Begum------------- All India United Democratic Front
7. Bilasipara West---------------Hafiz Bashir Ahmed------------ All India United Democratic Front
8. Chaygaon----------------------Rekibuddin Ahmed-------------- Indian National Congress
9. Chenga-------------------------Sukur Ali Ahmed----------------- Indian National Congress
10.Dalgaon-----------------------Ilias Ali----------------------------- Indian National Congress
11.Dhing--------------------------Aminul Islam--------------------All India United Democratic Front
12.Dhubri-------------------------Jahan Uddin----------------------All India United Democratic Front
13.Goalpara East-----------------Monowar Hussain--------------All India United Democratic Front
14.Goalpara West----------------Sheikh Shah Alam-------------All India United Democratic Front
15.Golakganj---------------------Abu Taher Bepari----------------- Indian National Congress 16.Hailakandi--------------------Abdul Muhib Mazumder--------- Indian National Congress
17.Jaleswar-----------------------Moin Uddin Ahmed------------All India United Democratic Front
18.Jamunamukh-----------------Mohd Sirajuddin Ajmal--------All India United Democratic Front
19.Jania---------------------------Rafiqul Islam--------------------All India United Democratic Front
20.Karimganj South------------Siddeque Ahmed------------------- Indian National Congress
21.Salmara South---------------Abdur Rahman Ajmal----------All India United Democratic Front
22.Katigorah--------------------Ataur Rahman Mazarbhuiya---All India United Democratic Front
23.Laharighat-------------------Dr. Nazrul Islam--------------------- Indian National Congress
24.Mankachar--------------------Zabed Islam----------------------Independent
25.Rupahihat---------------------Mazibur Rahman---------------All India United Democratic Front
26.Samaguri----------------------Rockybul Hussain-------------Indian National Congress
27.Sarukhetri---------------------Ali Hossain---------------------All India United Democratic Front
28.Sonai--------------------------Anamul Haque------------------ Indian National Congress
Tamil Nadu: 6 Muslim MLAs
Sl. No…Constituency-----Muslim MLA---------------------------Party
1. Palayamkottai ----------------T.P.M. Mohideen Khan------------DMK
2. Ramanathapuram----------- Jawahirullah--------------------------Manithaneya Makkal Katchi
3. Avadi -------------------------Abdul Raheem-----------------------AIADMK
4. Ambur ------------------------Aslam Basha A.----------------------Manithaneya Makkal Katchi
5. Ranipet -----------------------A.Mohammed John-----------------AIADMK
6. Tiruchirappalli (West)------Mariam Pitchai----------------------AIADMK
Puducherry: 1 Muslim MLA
Sl. No…Constituency-----Muslim MLA---------------------------Party
1. Karaikal South------------- A.M.H. NAZEEM-------------------------DMK


------
Regards

Y MUNEER AHMED
Contact Mob No:
+9199403-55593
இன்றைய இளைய சமுதாயமே தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள் - முனீர் அஹ்மத்
முடியாட்சி காலத்திலேயே ஜனநாயகத்தின் மீதான பார்வை தமிழகத்திற்கு இருந்துள்ளது. சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட குடவோலை முறை என்பது இன்றைய தேர்தல் முறைகளுக்கு ஒரு முன் னோடியாக இருந்திருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.

ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற அரசவை நிறுவனங்கள் முடியாட்சிக்குள் முளைவிட்ட ஜனநாயகக் குருத்துகள் எனலாம்.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் தேர்தலை சந்தித்தது. இதில் வாக்களிக்கும் உரிமை கொண்ட குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந்தனர். வெள்ளையர்கள் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் காரணமாக 1919-ஆம் ஆண்டில் இரட்டையாட்சி முறை கொண்டு வரப்பட்டது.

அரசியல் சட்டமாக நடை முறைக்கு வந்தது. இதன்படி ஆளுநருக்கு மட் டுமே பதிலளிக்கக்கூடிய உயரதிகாரிகள் ஒரு பக்கம் ஆட்சி செய்வார்கள். அதே நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்திற்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள் கொண்ட அவை இன்னொரு பக்கம் ஆட்சி செய்யும் .

அப்போது நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் கிடையாது. தமிழர்கள் வாழும் பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளும் இணைந்து சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. 1920-ஆம் ஆண்டு முதல் மாகாணத் தேர்தல் நடந்தது.


இரட்டையாட்சி முறையை ஏற்கவில்லை என காந்தியடிகள் அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. இத்தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்திற்கான முதல் அமைச்சரவையில் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக (அப்போது அதற்கு பிரிமியர் எனப் பெயர்) பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் சில நாட்களில் சுப்பராயலு மரண மடைந்ததால், பனகல் அரசர் என அழைக்கப் பட்ட இராமராய நிங்கார் முதலமைச்சரானார். 1923-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் இவரே முதல்வரானார்.

மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) ஒரு மாணவன் படிக்க வேண்டுமென்றால் சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. இதனை உடைத்தெறிந்த வர் பனகல் அரசர். இதன் மூலமாக பிற்படுத்தப் பட்ட-தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந் தவர்களும் பெண்களும் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு உருவானது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப் பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம், அற நிலையப் பாதுகாப்புச் சட்டம். சரியான பராமரிப்பின்றி தனிப்பட்டவர்களால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்த கோவில் சொத்து களை இச்சட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.



சென்னை மாகாணத்திற்கான மூன்றாவது தேர்தல் 1927-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். அக்கட்சியின் ஆதர வுடன் சுயேட்சைகளின் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சர் சுப்பராயனுடன் எஸ்.முத்தையா முதலியாரும் எஸ்.ஆர். சேதுரத்தினமய்யரும் அமைச்சரானார்கள். முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ வேலைவாய்ப்பு முறையை சட்டமாகக் கொண்டு வந்தார். 1929-ல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒவ் வொரு சமுதாயத்தின்மக்கள்தொகையின் அடிப்படையில் வேலையினை பங்கீட்டு அளிக்கும் சட்டமாக இது அமைந்தது. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி நீடித்தது.

1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்று வெற்றி பெற்றது. ஜூலை 17-ஆம் நாள் சென்னை மாகாணத்தின் முதல மைச்சராகப் பொறுப்பேற்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ராஜாஜி என அழைக்கப்படுவருமான ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான ஆலயப் பிரவேசச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. உழவர் கடன் நிவாரணச் சட்டம், கைத்தொழில் பாதுகாப்புச்சட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களாகும்.


தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர் களுக்கும் இந்தியைக் கட்டாயப் பாட மாக்கினார் ராஜாஜி. இந்த மொழியாதிக் கத்தை எதிர்த்து பெரியார்-அண்ணா தலை மையில் தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பலர் சிறை சென்றனர். இரண்டாம் உலகப்போரில் இந்தியாவை பிரிட்டிஷ் அரசு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தது.

1946-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. டி.பிரகாசம் 1946 ஏப்ரல் 30-ஆம் நாள் முதலமைச்சரானார். இவரையடுத்து, ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யார் முதல்வரானார். இந்தியா சுதந்திரமடைந்த போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூரார்தான். அவர் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். 1949-ல் சென்னை மாகாண கவுன்சிலுக் கான தேர்தல் நடந்தது. இதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. குமாரசாமி ராஜா முதல்வரானார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறவரை இவரே முதல்வர் பொறுப்பினை வகித்தார்.


இந்திய நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், பல கட்சி களின் ஆதரவுடன் 1952-ஆம்ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார்.

தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் நிலவி வந்த உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ராஜாஜி அக்கறை செலுத்தினார். பண்ணையாள் பாது காப்பு சட்டத்தின் மூலமாக விவசாயத் தொழிலாளர்களுக்கு நலன் விளைவித்தார் ராஜாஜி.

அவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையையும் போராட்டத்தையும் உண்டாக்கியது. இதனால் 1954-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதல்வர் பதவியிலிருந்தும் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் ராஜாஜி விலகினார்.

அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் வராகப் பொறுப்பேற்ற காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பணி யாற்றினார் 1957, 1962 தேர்தல்களில் இவ ரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே வெற்றி பெற்றது. இலவச கல்வி, மதிய உணவுத் திட்டம், தமிழ் ஆட்சிமொழி சட்டம்,. வைகை நீர்த்தேக்கம், அமராவதி- சாத்தனூர் -கிருஷ்ண கிரி -மணிமுத்தாறு-ஆரணியாறு நீர்த்தேக்கங் கள் உருவாக்கம், குந்தா நீர் மின்திட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் உருவானவை யாகும். மத்திய அரசுடன் வாதாடி,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற் சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் எனப்படுகிறது.

மூத்தவர்கள் பதவி விலகி, புதியவர்களுக்கு வழிவிடுவது என்ற அவரது திட்டத்தின்படி முதல்வர் பதவியிலிருந்து காமராஜர் விலகியதால் 1963-ல் பக்தவத்சலம் முதல்வரானார். இவரது ஆட்சிக்காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. மாணவர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவரே காங்கிரசின் கடைசி முதல்வர்.

1967-ஆம் ஆண்டு நடந்த நான்காவது பொதுத்தேர்லில் தி.மு.க வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராக அண்ணா பொறுப் பேற்றுக் கொண்டார். இரண்டாண்டுகளுக் கும் குறைவாகவே ஆட்சி செய்த அண்ணா, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். சீர்திருத்த திருமணச் சட்டம், இரு மொழித் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, போக்குவரத்து நாட்டுடைமை, இரண் டாம் உலகத்தமிழ் மாநாடு ஆகியவை இவரது ஆட்சியின் சாதனைகளாகும். 1969 பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா காலமானார்.

அண்ணாவின் மறைவையடுத்து 1969-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி, 1969-1971, 1971-76, 1989-91, 1996-2001, 2006 முதல் தற்போது வரை என 5 முறை தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றுள்ளார். இதில் இரண்டு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பெண்களுக்கு சொத்துரிமை, சமத்துவபுரங்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு, மிகபிற் படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, பெண்கள் திருமண உதவித்திட்டம், குடிசை மாற்று வாரியம், கைரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் இவரது ஆட்சிக்காலத்து சாதனைகளாகும்.


தொழில்வாய்ப்புகள் பலவற்றை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக மதுவிலக்கைத் தளர்த்தியது இவரது ஆட்சியே. மாநிலத்தில் உள்ள பல பாலங்கள், கட்டிடங்கள் இவரது ஆட்சியில் கட்டப் பட்டவை. வள்ளுவர்கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், குமரிமுனையில் வள்ளுவர் சிலை ஆகியவை இவர் படைத்த பண்பாட்டுச் சின்னங்களாகும்.

தி.மு.கவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். தனது தலைமையில் அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். 1977-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். 1977-1980, 1980-1984, 1984-1987 எனத் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று 11 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்து இயற்கையெய்தும் வரை அதே பொறுப்பில் இருந்தவர். சத்துணவுத் திட்டம், ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், புகளூர் காகித தொழிற் சாலை ஆகியவை இவரது ஆட்சியின் சாதனை களாகும். சுயநிதி தொழிற்கல்லூரிகள் இவரது ஆட்சிக்காலத்தில்தான் தோன்றின. ஏழை- எளிய மக்களின் நலனை மனதிற்கொண்டு இவர் ஆட்சி செய்தார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவரது துணைவியார் வி.என்.ஜானகி முதல்வரானார். இவரால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. ஆட்சி கலைக்கப் பட்டது. மீண்டும் 1989 ல் நடைபெற்ற இடைதேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததது, ஆனால் 1991 ராஜீவ் காந்தி கொலையை காரணம் காட்டி ஆட்சி கவிழ்க்கப்பட்டு 1991-ல் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற, செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார். 1991-96, 2001-2006 என இருமுறை முதல்வராகி 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளார். இடையில், சட்டச்சிக்கல் காரணமாக இவரது பதவி பறிபோனதால் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. அனைத்து மகளிர் காவல்நிலையம், கோவில் களில் அன்னதானம், மழை நீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, சென்னைக்கு வீராணம் குடிநீர் ஆகியவை இவரது ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட திட்டங் களாகும். சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை, காஞ்சி சங்கராச் சாரியார் கைது ஆகியவை ஜெயலலிதா ஆட்சியின் அதிரடி நடவடிக்கைகளாகும்.
1.பொடா சட்டத்தைப் பயன்படுத்தி நக்கீரன்ஆசிரியர் கோபால்,
2. அரசியல் தலைவர்கள் வைகோ, நெடுமாறன் ஆகியோரை கைது செய்தது,
3. அரசு ஊழியர்கள் மீதான டெஸ்மா, எஸ்மா போன்ற அதிரடி நடவடிக்கைகள்,
4. டான்சி வழக்கில் எதிரானதால் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு,
5. ஆளுநர் மீது தாக்குதல்,
6.மகாமக குளத்தில் ஏற் பட்ட பலிகள்,
7. விவசாயிகளின் பட்டினிச் சாவு,
8. நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்த அவலம்,
9. வளர்ப்பு மகன் ஆடம்பரத் திருமணம்,
10. முன்னால் தேர்தல் ஆணையர் கார் மீது தாக்குதல்,
11. தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு,
12. டான்சி வழக்கில் சுப்ரமணியசாமி மீது முட்டை வீச்சு, ஆபாச அர்ச்சனை
13. மறைந்த முன்னால் ஆளுநர் சென்னா ரெட்டி மீது அவதூறு,
14. தன்னை விமர்சித்த நீதிபதி மகன் மீது கஞ்சா வழக்கு,
15. மதமாற்று தடைச்சட்டம்,
16. சென்னை சீரணி அரங்கம் இடிக்கப்பட்டது,
17. நிருபர்கள் தாக்கப்பட்டு கண்ணகி ச�
கருணாநிதிக்கு ஒரு பகிரங்கக் கடிதம்
பழ. நெடுமாறன்



மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.
"எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.
"பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.
ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.
1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.
எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.
ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.
காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.
ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.
இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!
கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.
நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள். 1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.
1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.
பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.
1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.
தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.
அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல்
ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?
நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?
தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?
இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?
முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!
உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.
திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.
ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.
உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்கள

Sunday, May 15, 2011

அமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!
சீனர் லியூ ஜியாபோ ஏன் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்? மனிதஉரிமைக்காக அவர் என்னசெய்தார்? இக் கேள்விகளுக்கான விடைகள் நமக்கு அதிர்ச்சியை தருகின்றன.












கடந்தவருடம் அமைதிக்கான நோபல் பரிசை ஓபாமா பெற்றார். இது நமக்கு மட்டுமல்ல, அவருக்கேக் கூட அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். இந்த வருடம் அந்த ’அதிர்ச்சிக்குரிய’ பரிசைப் பெற்றிருப்பவர் சீனத்தைச் சேர்ந்த லியு ஜியாபோ. இவ்விருதைப் பெறுவதற்குமுன் சீனாவிலேயே அவரைப் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. இவ்விருதுக்குப் பின்னரே அவரைப் பெருமளவு மக்கள் தெரிந்துக்கொண்டார்கள். அதன்பின் நிறைய கட்டுரைகளும் செய்திகளும் அவரைப்பற்றி வெளிவந்தன. மனிதஉரிமை போராளி என்று பத்திரிக்கைகள் புகழாரம் சூட்டின. தற்போது அவர் அரசாங்கக் கைதியாக சீனநாட்டின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நோபல் பரிசு பெற்ற விவரம் கூட அவருக்குத் தெரியாது என்றும் அவரை அவரது துணைவி கூடசந்திக்க அனுமதி மறுப்பு என்றும் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.

லியுவிற்கு நோபல்பரிசு கிடைத்தது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. நார்வேயிலிருக்கும் பாராளுமன்ற கமிட்டியினால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் மட்டும் லியு நோபல் பரிசை வென்றிடவில்லை. மாறாக, சீனாவுக்கெதிரான அமெரிக்க மேலாதிக்கத்தின் அங்கமாகவே திட்டமிடப்பட்டு லியுவிற்கு கொடுக்கப்பட்டது. சீன நாட்டோடு வலிமையான பொருளாதார பந்தத்தால் அமெரிக்கா பிணைக்கப்பட்டுள்ளது என்றாலும், அரசியல் ரீதியில் அந்நாட்டை அடக்கி வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. வளர்ந்து வரும் சீன பொருளாதரமும் அமெரிக்காவிற்கு இசைவாக இல்லை. எனவே மனித உரிமை என்ற முகாந்திரத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சீனாவை குட்டுவதற்கு அமெரிக்கா தயங்கியதில்லை. இப்போது நோபல் பரிசால் குட்டுகிறது.

இந்த அமைதிக்கானநோபல் பரிசை சீனாவை சேர்ந்தவருக்கு அதிலும் லியூ ஜியாபோவுக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? மனிதஉரிமைக்காக அவர் என்ன செய்தார்? இந்த கேள்விகளுக்கானவிடைகள் நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகின்றன.

அமெரிக்காவின் அத்தனை மேலாதிக்க போர்களுக்கும் அவர் துணைபோயிருக்கிறார் என்ற உண்மைதான் அது. சீனாவில் இருந்து கொண்டே தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். கொரியா மற்றும் வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த ஆக்கிரமிப்பு போர்களையும், ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு போர்களையும் வெளிப்படையாக ஆதரித்திருக்கிறார் இந்த லியு. 2004-ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஈராக் போருக்கு ஆதரவாகப் பேசி ஜார்ஜ் புஷ்ஷை புகழ்ந்திருக்கிறார்.

இந்தப் போர்களும் எல்லாம் பச்சையான மேலாதிக்க வெறிக்காக கொடூரமாக நடத்தப்பட்டவை. அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டிக்கொள்ள நிகழ்த்தப்பட்டவை. அவற்றை ஆதரிப்பதே அப்பட்டமான மிகப்பெரும் மனித உரிமை மீறல். அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலை நிலைப்பாட்டை ஆதரித்து, பாலஸ்தீனியர்களை குற்றம் சாட்டுகிறார் இந்த ’மனித உரிமை போராளி’ லியு.

அப்படிபட்டவரை மனிதஉரிமைப் போராளி என்று மேலைநாட்டு ஊடகங்கள் அழைப்பது சீனவை மட்டுமல்ல உலக மக்களையே அவமதிப்பதாகும். சீன அரசாங்கத்துக்குள் தங்கள் ஏஜெண்டுகளை நுழைக்க முடியாது என்று கண்டுகொண்ட அமெரிக்க முதலான மேற்கத்திய நாடுகள், இதுபோன்ற நூதன வழிகளைத் தேர்ந்தெடுக்கின்றன. சீனஅரசுக்கெதிராகப் பேசியவர் என்பதோடு அமெரிக்காவின் அத்தனை செயல்களுக்கும் கூஜாவாக இருந்தவர் என்பதே இந்த லியூவின் முக்கியமான தகுதிகள். அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் இந்த அயோக்கியருக்கு நோபல் பரிசு கொடுத்திருப்பதன் மூலம் சீனாவை மனித உரிமை மீறிய நாடு என்று பிரச்சாரம் செய்வதற்கு தோதாக இருக்கும் என்பதே இந்த அழுகுணியாட்டத்தின் நோக்கம்.

சீனா மனித உரிமையை மீறியதா, பின்பற்றுகிறதா என்பதெல்லாம் அமெரிக்காவின் கவலை அல்ல. அப்படி இருந்திருந்தால் அமெரிக்கா மலிவாக நுகர்வதற்காக சீனத்து தொழிலாளிகள் கசக்கி பிழியப்படுவது குறித்தும், நிலக்கரி சுரங்க விபத்தில் ஆண்டுதோறும் பல நூறு தொழிலாளிகள் இறந்து போவது குறித்தும் அமெரிக்கா பேசியிருக்க வேண்டும். ஆனால் என்றுமே அப்படி பேசியதில்லை.

இந்த நோபல் பரிசின் கண்ணைப் பறிக்கும் விளம்பர ஒளியில் லியு செய்த குற்றம் காணாமல் போய் ஊடகங்கள் சொல்வதே உண்மையென்று மக்கள் நம்பிவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது.

பென் சென்டர் என்ற எழுத்தாளர்கள் அமைப்பின் தலைவராக 2007 வரை லியு இருந்திருக்கிறார். பென் சென்டர், மனிதஉரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான, ஆங்கிலோ- அமெரிக்க தன்னார்வ மற்றும் தனியார் குழுக்களின் முக்கிய அமைப்பு. இந்த அமைப்பிற்கு படியளக்கும் ஸ்பான்சர்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குத்தான் இந்த பென்சென்டரை வைத்திருக்கிறார்கள். லியு தற்போது அவ்வமைப்பின் போர்டு உறுப்பினர்களில் ஒருவர்.

இவ்வமைப்புக்கும், அமெரிக்கா அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு வாஷிங்கடனை அடிப்படையாக கொண்டு இயங்கும் மற்றொரு பேச்சுரிமை அமைப்பான ஃப்ரீடம் ஹவுஸ் என்ற அமைப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1941-இல் இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க உளவுத்துறையால் கம்யூனிஸ்டுகளுக்கெதிரான பிரச்சாரத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்ட அமைப்பு இந்தஃப்ரீடம் ஹவுஸ்.

திபெத், மியான்மர், உக்ரைன், ஜியார்ஜியா, செர்பியா மற்றும் கிர்கிஸ்தான் போன்றநாடுகளில் முக்கியமான தன்னார்வக் குழுக்களின் மூலமாக அமெரிக்காவின் அதிகாரவர்க்க நபர்களுக்கான கொள்கைகளை திருப்திகரமாக நிறைவேற்றுவது இந்த அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளாகும். அவ்வமைப்பைச் சார்ந்து சீனாவில் இயங்கும் அமைப்புதான் பென் சென்டர்.
இதிலிருந்தே லியுவின் நிலைப்பாடும், அவருக்கு நோபல் பரிசு வழங்கியதன் நோக்கத்தையும் புரிந்துக்கொள்ளலாம்.

சீனாவில் தாராளமயமாக்கல் முழுமையாக வரவேண்டும்; சந்தை எல்லோருக்கும் திறந்துவிடப்படவேண்டும் ; வெளிநாட்டு வங்கிகளை வரவேற்கவேண்டும்; அந்நிய முதலீடுகளுக்கு வழிவகை செய்ய வேண்டும்; மொத்தத்தில் கார்ப்பரேட்டுகளுக்கும், முதலாளிகளுக்கும், வங்கிகளுக்கும் நாட்டை தாரை வார்த்துக்கொடுக்க வேண்டும் என்று அப்பட்டமாக முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்தான் லியு ஜியாபோ. சீனா இன்னும் அதிகமாக முதலாளித்துவப் பாதையில் பயணிக்கவேண்டும், முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வளரவேண்டும் என்பதுதான் லியு மற்றும் அவரது ஆதரவாளர்களின் நிலைப்பாடு.

இந்த நோக்கில் சீனா ஏற்கனவே சென்று விட்டது என்பதுதான் உண்மை. அதாவது பொருளாதரத்தில் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட சீனா அரசு அமைப்பில் மட்டும் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை வைத்திருக்கிறது. அதையும் திறந்து விடவேண்டும் என்பதுதான் லியு மற்றும் அமெரிக்காவின் நோக்கம்.

இதனை அவர் 2008-இல் எழுதியசார்ட்டர் 8-இல் மேற்குலகஅரசியல்பாணியை சீனா கடைப்பிடிக்க வேண்டுமென்றும்,அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்க வேண்டுமென்றும் நிலங்களை தனியார் கையகப்படுத்தப்படவேண்டுமென்றும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். முதலாளித்துவத்தில்தான் வளர்ச்சி அடங்கி இருக்கிறது என்று அவர் கருதுகிறார். மறுகாலனியாக்கத்தை ஆதரிக்கிறார். மேலும், அவர் தலைமை தாங்கிய நிறுவனங்களெல்லாம் அமெரிக்காவின் நிதி உதவியைப் பெற்றிருக்கின்றன.
இந்தநிலையில் அவர் நோபல் பரிசு பெற்றிருப்பதை பொருத்தி பார்க்கலாம்.

அதோடு, லியு ஜியாபோவை நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்த நபரையும் கருத்தில் கொள்ளவேண்டும்.லியுவை அமைதிக்கான பரிசுக்கு பரிந்துரைத்தவர் வேறு யாருமல்ல, அமெரிக்க அரசாங்கத்திடமிருந்தும், சிஐஏவிடமிருந்தும் நீண்ட காலமாக நிதியுதவி பெற்று வரும் தலாய் லாமாதான் அவர். அவரோடு, லியுவை பரிந்துரைத்தவர்கள் பட்டியலில் பல நேட்டோ அதிகாரிகளும் அடங்குவர்.இதிலிருந்தே அந்தபரிசின் அரசியலை விளங்கிக்கொள்ளலாம்.

நோபல் பரிசானது அமைதிக்கானதாகக் கொள்ளாமல் எதற்கானதாக இருக்கிறது ? அமெரிக்காவின் வழிகாட்டுதலின் பேரால், தன்னார்வக் குழுக்களின் வழியாக அமெரிக்காவின் கூஜாக்களுக்கு விளம்பரம் செய்து வழங்கப்படுகிறது. இதற்கு லியு ஜியாபோ ஒரு கருவி. உலகில் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ பேர் அரசாங்கக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் நிறவெறிக்கு சான்றாக, முமியா அபு ஜமால் எனும் கறுப்பின பத்திரிக்கையாளர் செய்யாத குற்றத்துக்காக தூக்குதண்டனை கைதியாக நாட்களை பென்சில்வேனியா சிறையில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். லியு ஜியாபோவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் ஒபாமா முமியா அபு ஜமாலை விடுவிப்பாரா என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்கிறார். அதேபோல லியுவின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் அமெரிக்கா இங்கு இந்திய அரசால் சிறையில் வதைக்கப்படும் பினாயக் சென் என்ற உண்மையான மனித உரிமைப் போராளிக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

முதலாளித்துவ நாடுகளில் மக்களின் பொது சொத்துகள் முதல் உழைப்பு வரை எப்படி சுரண்டப்படுகின்றது என்பதற்கும் ஏற்றதாழ்வுகள் எப்படி அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதையும் இந்தியாவிலேயே கண்கூடாகக் காணலாம். இதற்கு ஐரோப்பிய நாடுகளும் விதிவிலக்கல்ல. 200 ஆண்டுகளுக்கு மேலாக முதலாளித்துவத்திலிருந்து காலாவதியாகிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலேயே பெரும்பாலான மக்கள் முதலாளித்துவத்தை தூக்கியெறிய வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இந்தஅமைப்பை மாற்றவேண்டும் என்று போராடுகிறார்கள்.தனியார்மயம், உண்மையில் வளர்ச்சியை பாதிக்கிறது என்பதை பல லத்தீன் அமெரிக்கநாடுகளில், இந்தியாவில் கண்கூடாகக் காணலாம்.

அமைதிக்கான நோபல் பரிசு என்பது அமெரிக்க மேலாதிக்க அரசியலுக்கான ஒரு கருவிதானே தவிர மனிதஉரிமைகளைப் பற்றியோ அல்லது ஜனநாயகத்தைப் பற்றியோ, அப்பாவி மக்கள் மீதான போர்கள் குறித்தோ அதற்கு எந்தக் கவலைகளுமில்லை என்பதையும் இந்தவருடத்தின் பரிசு பெற்றலியு ஜியாபோ அமெரிக்காவின் போர்களை உற்சாகப்படுத்துபவராகஇருந்திருக்கிறார் என்பதையும் ஊடகங்கள் அம்பலப்படுத்தாது. நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
____________________________________________________________

நன்றி :- சந்தனமுல்லை, புதிய கலாச்சாரம் – ௨0௧௧,vinavu
மறைந்த அறிஞர் Dr. நுபார் ஃபாரூக் அவர்களின் வீடியோ/ஆடியோ பதிவுகள்
Posted: 24 Apr 2011 01:17 PM PDT
கல்வி (இல்ம்) சில தகவல்கள் பிரிந்து விடாதீர்கள்! முஹம்மத் (ஸல்) அவர்களின் பெற்றோர்கள் மற்றும் வம்சாவழி முஸ்லிமாக வாழ்வதின் சிறப்புகள் முக்கியமான செய்தி.. இறையச்சம் இஸ்லாம் முழுமையானது அழைப்புப் பணியின் அடிப்படை -Audio/Video திருக்குர்ஆன் ஒளியில் மனிதன் இஸ்லாமிய குடும்பம் குர்ஆன் போற்றும் கூட்டம் ஸலஃப் ஸாலிஹீன்கள் யார்? ஸலஃபுகளும் அதைச் சூழ உள்ள குழப்பங்களும் இஸ்லாமிய மறுமலர்ச்சியும் ஊடுறுவலும்...

பதிவை முழுமையாகப் பார்க்க தலைப்பின் சுட்டியை சொடுக்கவும். அல்லது www.islamkalvi.com தளத்திற்கு செல்லவும்.
என் நண்பர் அவருக்கு வந்த மெயிலை எனக்கு அனுப்பியள்ளார் இதில் பல பயனுள்ள தகவல்கள் உள்ளன. அதை உங்ககளிடம் நான் பகிர்ந்து அளிக்கிறேன்.
நாம் படித்து பயனடைவது மட்டும் அல்லாமல் நம்மால் முடிந்த அளவு இச்செய்தியினை மற்றவர்களோடும் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களும் பயன்பெற ஏதுவாயி இருக்குமென நம்புகின்றேன்.




1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.








2) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://ping.fm/Ieso2

என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.






3) மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.








4) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோஇலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.




5) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில் இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.




6) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!


அதனால் நம்மால் முடிந்த வரை



**மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம்

**நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்

**ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.



7) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!



8) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ping.fm/iEmwr





9) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471







10) இரத்தப் புற்று நோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது.

மேலும் விபரங்களுக்கு
வகை : புற்றுநோய்


முகவரி:
East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241
நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது?


சன்சீவ் பட் - படம் தெஹெல்கா

இந்துக்கள் தங்கள் கோபத்தை முசுலீம்கள் மீது காட்டுவதை கண்டு கொள்ள வேண்டாம், அவர்கள் முசுலீம்களுக்கு பாடம் புகட்டட்டும்” என்று நரேந்திர மோடி கூறியதை குறிப்பிட்டிருக்கிறார்.

“நான் குல்பர்கா சமூகக் கூடம் எரிந்து தீர்ந்த அடுத்த தினம் அங்கே சென்றிருந்தேன். அதன் தரையெங்கும் மனிதச் சதை தீயில் பொசுங்கி கூழாகப் படிந்திருந்தது. அது எனது காலணியின் கீழ் பகுதியில் சவ்வு போல் ஒட்டிக் கொண்டு நின்றது. அந்தத் தரையின் ஒரு மூலையில் பாதி எரிந்தும் எரியாமலும் இருந்த ஒரு புத்தகத்தை நான் கண்டெடுத்தேன். அது ஒரு பிரிட்டானிக்கா என்சைக்ளோ பீடியா. அதன் மேல் படிந்திருந்த சாம்பலின் மிச்சங்களைத் தட்டிவிட்டு முதல் பக்கத்தைப் புரட்டினேன் – அஸன் ஜாஃப்ரி என்கிற பெயர் அழகான முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அன்றைக்கு நாண் அணிந்திருந்த காலணிகளை அதற்குப் பின் நான் பயன்படுத்தவும் இல்லை – அதன் அடிப்பகுதியை சுத்தம் செய்யவும் இல்லை”

நரவேட்டை நரேந்திர மோடியை தூக்கில் போடுவது எப்போது

குஜராத் கலவரங்களை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் முன் 2002-ம் ஆண்டு குஜராத் காவல்துறையின் உளவுப் பிரிவு கமிஷனராய் இருந்த சஞ்சீவ் ராஜேந்திர பட்டின் வாக்குமூலத்திலிருந்து வெளியே கசிந்துள்ள பகுதிகளில் மேலே உள்ள பகுதிகள் காணப்படுகிறது. இந்த அறிக்கையின் விவரங்களை தெகெல்கா பத்திரிகை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது.

பிப்ரவர் 27-ம் தேதி 2002-ம் ஆண்டு கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முதலமைச்சர் கூட்டிய காவல் துறை உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டுள்ளார். அந்தக் கூட்டத்தில் வைத்து முசுலீம்களைப் பழிவாங்கும் நேரம் இதுவென்றும், இந்துக்கள் தமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளப்போகிறார்கள் என்றும், அதைக் காவல் துறை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் மோடி பகிரங்கமாக உத்திரவிட்டார்.

அடுத்த நாள். இந்துக்களின் பழிவாங்கும் உணர்ச்சி, அரசு இயந்திரத்தின் மௌனமான அங்கீகாரத்துடன் அரங்கேறுகிறது. முசுலீம்களைக் கண்ட இடத்திலெல்லாம் கொன்று குவித்தனர் இந்து பயங்கரவாதிகள். கருவிலிருந்த முசுலீம் குழந்தைகள் கூட அன்றைக்குத் தப்பவில்லை. தொடர்ந்து நடந்த வன்முறை வெறியாட்டத்தில் நூற்றுக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். காந்தி பிறந்த மண் என்று போற்றப்படும் மாநிலம் முசுலீம்களின் இரத்தத்தால் சிவந்தது.

கலவரத்தால் அச்சமடைந்த நூற்றுக்கணக்கான முசுலீம்கள் மெகானி நகரில் இருக்கும் குல்பர்கா சமூகக் கூடத்தில் தஞ்சமடைந்துள்ளனர். அது பிப்ரவரி 28-ம் தேதி. அன்று அங்கே தஞ்சமடைந்திருந்தவர்களில் ஒருவர்தான் காங்கிரஸின் முன்னாள் எம்.பி ஹஸன் ஜாஃப்ரி. அன்று அந்தக் கூடத்துக்கு வெளியே முசுலீம்களைக் கொன்று போட வேண்டுமென்று கூச்சலிட்டுக் கொண்டு ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, வி.எச்.பி போன்ற இந்து பயங்கரவாத இயக்கங்களின் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்திருக்கிறார்கள். அந்தப் பகுதியின் கள நிலவரத்தை பார்வாட் எனும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் பட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

சஞ்சீவ் பட் தனது மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நிகழவிருக்கும் இனப் படுகொலையை எப்படியாவது தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார். ஒருவரும் கண்டு கொள்ளாமல் போகவே முதலமைச்சர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு ஓ.பி. சிங் என்கிற அதிகாரியிடம் பேசுகிறார். ஆனால் அங்கே குல்பர்கா சமூகக் கூடம் அமைந்திருக்கும் மெகானி நகர் பகுதியிலோ கொஞ்சம் கொஞ்சமாகப் பிற பகுதிகளில் இருந்து திரட்டி வரப்பட்ட இந்து வெறியர்களின் கும்பல் பெரிதாகிக் கொண்டேயிருந்திருக்கிறது.

முந்தைய தினம் மோடியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளின் உண்மையான பொருளை சஞ்சீவ் உணர்ந்து கொண்ட போது அங்கே குல்பர்கா சமூகக் கூட முற்றிலுமாக எரிந்து போயிருந்தது. 69 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அஸன் ஜாஃப்ரியை வெளியே இழுத்து வந்த இந்து வெறியர்கள், அவரது கழுத்தில் நாய் பிடிக்கும் இரும்புச் சுருள் கண்ணியை மாட்டி இறுக்கி, தரதர வென்று இழுத்துள்ளனர். பின் இறந்த அவரின் உடலைத் துண்டுத் துண்டாகப் பிளந்து நெருப்பில் அடையாளம் தெரியாத அளவுக்கு எரித்துள்ளனர்.

இவையெல்லாம் ஏதோ ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலைகள் அல்ல. சட்டென்று ஒரு கண நேர கோபத்தில் நிகழ்ந்த வன்முறைகள் அல்ல. அன்றைக்கு நிகழ்ந்த கொலைகளை எப்படியெப்படியெல்லாம் அனுபவித்துச் செய்தார்கள் என்பதையும், கற்பழிப்புகளை எப்படியெல்லாம் திட்டமிட்டு ஒரு கலையைப் போல் நிறைவேற்றினார்கள் என்பதையும், முசுலீம் குழந்தைகளைக் கொன்று களிப்புற்ற தங்கள் அனுபவத்தையும் பின்னர் அவர்களே தெகல்காவின் கேமரா முன் நிதானமாக அசை போட்டுச் சொன்னதைக் கேட்டு நாடே திகைத்து நின்றது. மனசாட்சி கொண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

தீயிட்டுக் கொளுத்தப்பட்ட குல்பர்கா சமூகக் கூடதை ஆய்வு செய்யச் சென்ற போது எரிந்து போன நிலையில் கண்டெடுத்த அஸன் ஜாஃப்ரியின் என்சைக்ளோ பீடியாவைக் கையில் ஏந்தி நின்ற அந்த கணத்தின் மனப்பதிவுகளை சஞ்சீப் பட் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

“எனது கையில் பாதி எரிந்த போன நிலையிலிருந்த அந்தப் புத்தகத்தில் இருந்த ஹஸன் ஜாஃப்ரி எனும் அந்த அழகான கையெழுத்தை கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றேன். அந்த நேரத்தில் எனது பள்ளி நாட்களின் நினைவுகள் நிழலாடியது. அப்போதெல்லாம் இணையம் போன்ற வசதிகள் கிடையாது. என்சைக்ளோ பீடியாவைப் படிக்க வேண்டுமென்றால் சில கிலோ மீட்டர்கள் சைக்கிளை மிதித்து நூலகத்துக்குத் தான் செல்ல வேண்டும். எனது மாணவப் பருவத்தின் லட்சியமே ஒரு நல்ல என்சைக்ளோ பீடியாவை சொந்தமாக வாங்குவது தான். இதோ, எனது கையில் இப்போது ஒரு என்சைக்ளோ பீடியா இருக்கிறது – பாதி எரிந்து போன நிலையில் – தீயில் பொசுங்கிய மனித சதைக் கூழ் படிந்து போன நிலையில். நான் ஜாஃப்ரியை எனது வாழ்நாளில் சந்தித்ததேயில்லை. ஆனால், அந்த அழகான கையெழுத்து நிச்சயம் அந்த மனிதரின் பக்குவப்பட்ட கலாச்சாரத்தை எனக்கு உணர்த்தியது”

2002ம் ஆண்டு குஜராத்தில் இந்து வெறியர்கள் நிகழ்த்திக் காட்டிய அந்த படுகொலைச் சம்பவங்களில் கொல்லப்பட்ட முசுலீம்களில் எத்தனையோ அஸன் ஜாஃப்ரிக்களின் நெஞ்சை உலுக்கும் கதைகள் உள்ளது. படுகொலைச் சம்பவங்களின் பின்னுள்ள சதியை அம்பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய தனது சொந்தக் கட்சிக்காரரான ஹிரேன் பான்ட்யாவைக் கூட பின்னர் கொன்று போட்டனர் இந்து பயங்கரவாதிகள். சென்ற வருடத்தின் ஜனவரி மாதம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரின் முன் கொடுக்கப்பட்ட இந்த வாக்குமூலங்களைக் கொண்டு நடப்பிலிருக்கும் சட்டங்களைக் கொண்டே மோடியைத் தண்டிக்க முடியும். தூக்கில் கூட போட்டிருக்க முடியும்.

ஆனால் இதுவரை அதைத் தன் சொந்த அரசியல் நலன்களுக்காகக் கூட முன்னெடுத்துச் செல்ல காங்கிரசு முயலவில்லை. கார்ப்பரேட் உலகத்தால் மோடிக்கு நல்லவர் வல்லவர் என்கிற ஞானஸ்நானம் வழங்கப்பட்டு அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும் நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும் என்று முதலாளித்துவ ஊடகங்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. மோடியின் பொருளாதார ‘சாதனைகளின்’ ஒளியில் தான் கருகிப் போன சில ஆயிரம் முசுலீம்களின் கனவுகளும் உள்ளன என்பதை இவர்கள் மிக வசதியாக மறந்து விடத் துடிக்கிறார்கள்.

குஜராத்தின் சாதனைகள் பற்றிய மயக்கத்தில் இருப்பவர்கள் இன்றும் தொழில்கள் பறிக்கப்பட்டு, வாழ்விடம் பறிக்கப்பட்டு, வாழ்க்கையே பறிக்கப்பட்டு, சொந்தங்களை இழந்து குஜராத்தில் அகதிகளாய் அலையும் அந்த அப்பாவி முசுலீம்களிடம் சென்று அதைப் பற்றி பேசட்டும். ஆனால், ஜனநாயகத்திலும், சக மனிதனின் வாழும் உரிமையின் பேரிலும் உண்மையான அக்கறை கொண்டவர்கள் சிந்தித்துப் பார்க்க எம்மிடம் ஒரு கேள்வி உண்டு – “இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த அமைதி?”

(தற்போது இந்த நேர்மையான தைரியமான காவல் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்திருக்கிறார். அதில் மோடி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டதையும், மோடி அங்கே கலவரத்திற்கு ஆதரவாக தெரிவித்த்தையும் கூறியிருப்பதோடு, இது குறித்து சிறப்பு புலனாய்வு குழு தீவிரமாக விசாரிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் சஞ்செய் பட்டின் இந்த நேரடி வாக்குமூலத்தை மறுத்து மோடியின் பக்தர்களான சில போலீசு அதிகாரிகள் பேசிவருகின்றனர். கோத்ரா எரிப்பு நடந்த இரவில் கூடிய அந்த கூட்டத்தில் இந்த சஞ்செய் பட் இல்லவே இல்லை என்று சக்ரவர்த்தி எனும் அன்றைய டி.ஜி.பி கூறியிருக்கிறார்.

வேறு இரு போலீசு அதிகாரிகள் மோடி கூட்டிய அந்த கூட்டத்தில் யாரெல்லாம் இருந்தார்கள் என்று நினைவில்லை என்று சமாளித்திருக்கிறார்கள். ஆனால் இந்த பச்சைப் பொய்யை சஞ்செய் பட்டின் ஓட்டுநராக இருந்த தாரா சந்த் யாதவ் மறுத்திருக்கிறார். அன்றைய கூட்டத்திற்கு சஞ்செய் கலந்து கொண்டதையும், அவருக்காக வாகனத்துடன் வெளியில் காத்துக் கொண்டிருந்ததையும் அந்த ஓட்டுநர் துணிச்சலுடன் தெரிவித்திருக்கிறார். இதற்காக மோடி கும்பல் இவரை என்கவுண்டர் செய்தாலும் செய்யலாம்.

ஏனெனில் எந்த கொலைக்கும், பயங்கரவாத செயல்களுக்கும் இவர்கள் துணிந்தவர்கள்தான் என்பதை பிரக்யா சிங், அசீமானந்தா, மோடி மூலம் அறியலாம்.

நூற்றுக்கணக்கான முசுலீம் மக்களை கொன்று குவித்த அந்த கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதும், அதற்கு தலைமையேற்றவர்தான் நரேந்திர மோடி என்பதற்கும் இதை விட என்ன ஆதாரம் வேண்டும்?

கசாப்பை தூக்கில் போடவேண்டும் என்று தும்மினாலும், சிந்தினாலும் கூப்பாடு போடுபவர்களின் கோரிக்கையை நாம் மறுக்கவில்லை. ஆனால் கசாப் கொன்றதை விட அதிக எண்ணிக்கையில் கொன்றவரும், கசாபின் காலத்திற்கும் முந்தையவருமான நரவேட்டை நாயகன் மோடியைத் தூக்கில் போடவேண்டும் அல்லவா? எப்போது போடுவீர்கள்?
___________________________________________________________________________

தெகெல்காவின் கட்டுரைகளுக்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. வாசகர்கள் அனைவரும் அவசியம் அவற்றை வாசித்துப் பார்க்க வேண்டும்.

http://ping.fm/ur8dS
http://ping.fm/ibYzL

http://ping.fm/lulsJ
http://ping.fm/6DF4A
____________________________________________________________________________
thanks : vinavu.
புகை பிடித்தலும், இருதயமும் – சில உண்மைகள்





மாரடைப்பு ஏற்பட காரணமானவற்றில், புகைபிடித்தல் என்பது நாம் கட்டுப்படுத்தக் கூடியது. 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு வரும் மாரடைப்புகளில், 80 சதவீதம் புகைபிடிப்பவருக்கே வருகிறது. புகை பிடிக்காதோரை ஒப்பிடுகையில், புகை பிடிப்போருக்கு மாரடைப்பு வரும்
வாய்ப்பு இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரிக்கிறது.


புகைபிடிப்போரிடம், மாரடைப்பு வருவதற்கான மருத்துவ காரணங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்து போன்ற ஏதாவது ஒரு காரணம் உடன் இருந்தாலும், அவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியக்கூறுகள் எட்டு மடங்கு அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் நேரும் இருதய நோய்களில், 20 சதவீதம் புகைபிடிப்பதாலேயே ஏற்படுகின்றன. புகை பிடிப்பதால் இருதயம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது? சிகரெட்டில் இருந்து வரும் புகையில், 4,000 நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன பொருட்கள் கலந்துள்ளன.

இவற்றில் முக்கியமான இரண்டு பொருட்கள், இருதயத்தையும், உடலின் அனைத்து உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாய்களையும் வெகுவாக பாதிக்கிறது.

1) நிக்கோட்டின் 2) கார்பன் மோனாக்சைடு

நிக்கோடினும், இருதய ரத்தக்குழாயும்:

சிகரெட் புகையிலுள்ள நிக்கோடின், இருதய தசைக்கு செல்லும் ரத்தகுழாயிலும், உடலின் மற்ற முக்கிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்தக் குழாயிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அவ்வுறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைபடுகிறது. ஒரு சிகரெட் புகைத்தாலே, அதிலுள்ள நிக்கோடின், 45 நிமிடங்களுக்கு ரத்தக்குழாய்களில் இறுக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.

நிக்கோடினும், ரத்தநாளங்களில் அடைப்பும்:

சிகரெட்டில் உள்ள நிக்கோடின் ரத்தக்குழாய்களில், கொழுப்புச் சத்து படிவதை விரைவுபடுத்துகிறது. கொழுப்பு படிவங்கள் எளிதில் வெடிப்பு பிளவுகள் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது. இதுவே புகை பிடிப்போருக்கு, இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணம்.

கொழுப்பு சத்தும், நிக்கோடினும்:

நன்மை பயக்கும் கொழுப்பான எச்.டி.எல்., ரத்தக்குழாயில் படியவிருக்கும் அல்லது படிந்திருக்கும் கொழுப்பு சத்தை, அதிலிருந்து அகற்றி, கல்லீரலுக்கு எடுத்து சென்று, இறுதியில் குடல் வழியாக வெளியேற்றுகிறது. தீய கொழுப்பான எல்.டி.எல்., கல்லீரலில் உருவாகும் கொழுப்பையும், உண்ணும் உணவில் இருந்து குடல் வழியாக ரத்தத்தில் கலக்கும் கொழுப்பையும், எடுத்து செல்லும் இவை, நேராக ரத்தக்குழாயில் படிய வைக்கின்றன. டிரைகிளசைடும் நமக்கு நல்லதல்ல. இந்த மூன்று கொழுப்புகளில், எல்.டி.எல்., கொழுப்பை அதிகமாகப் படிய வைக்கும் வேலையை நிக்கோட்டின் செய்கிறது.

கார்பன் மோனாக்சைடும், அதன் விளைவுகளும்:

கார்பன் மோனாக்சைடு, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஆக்சிஜனை விலக்கிவிட்டு, அந்த இடத்தில் தான் போய் அமர்ந்து கொள்கிறது. இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்க பெறாததால், இருதயமும், மற்ற உறுப்புகளும் எளிதில் சோர்வடைகின்றன. இருதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்து, அதனால் ரத்த ஓட்டமும் குறையும்பட்சத்தில், ஆக்சிஜனும் குறைவாக இருந்தால் அதன் பக்கவிளைவுகள் பன்மடங்காகி, மாரடைப்பு வரலாம் அல்லது நாளடைவில் இருதய தசை மிகவும் பலவீனமாகலாம்.


Mohammad Sultan
ஸஹீஹுல் புஹாரி தமிழில் அனைத்துப் பாகங்களும் ஒரே மின் நூலாக!
மின் நூல் தொகுப்பு :Er.Sulthan
To download, click the below link....
http://ping.fm/zoD9t

இது வரை ஸஹீஹுல் புஹாரி 7 பாகங்களும் குழுமத்தில் வெளியிட்டுள்ளேன். அனைத்தையும் Download செய்த நண்பர்கள் அவைகளை உங்களின் நன்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தயவு செய்து தவறாமல் forward செய்யவும். யாராவது எந்த பாகத்தையும் Download செய்ய Miss பண்ணியிருந்தால் எனக்கு mail அனுப்பினால் நான் அனுப்பித் தருகிறேன். அல்லது எனது website www.tamilislam.webs.com ல் இருந்து download செய்து கொள்ளலாம். தற்போது உடல் நிலை சரியில்லாத நிலையில் இருக்கிறேன். உங்களிடம் வேண்டுவதெல்லாம், உங்களது பிரார்த்தனையில் தவறாமல் எனக்காகவும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளவும். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எனது பணி தொடரும்.
உங்களின் சகோதரன்,


Mohammad Sultan
உடம்பெல்லாம் எரியுதா? சீதாப்பழம் சாப்பிடுங்க.

அவசர காலத்தில் எதையெல்லாமோ மறந்து போனோம். அதில் அந்தந்த சீசனுக்கு கிடைக்கும் பழங்களையும் தான். இயற்கையே மனிதனுக்கு சூட்சுமாக காட்டுவதை பற்றி நாம் அக்கறை கொள்வதில்லை. 'இப்போ நான் பழமா பழுத்துருக்கேன்.சாப்பிட்டு போனீங்கன்னா உங்க உடம்புக்கு நல்லது' ன்கு எந்த பழமும் வாய் திறந்து சொல்ல முடியாது. வெயில் காலத்தில் நெல்லிக்காய் சந்தைக்கு வரும். அதை வாங்கி வாயில் பாட்டு சுவைத்தால் உடம்புக்கு குளிர்ச்சி. எவ்வளவு தூரம் நடந்தாலும் களைக்காது. நெல்லிக்காய் வற்றலை வாயில் போட்டு புட்பால் விளையாடினால் ரொனால்டோவை கூட மிஞ்சி விடலாம். அது தான் ஒவ்வை கொடுத்த நெல்லிக்கனிக்கு சிறப்பு.சரி அதை பிறகு பார்க்கலாம்.

இப்போது சீத்தாப்பழ சீசன். சின்னப்பிள்ளைகள் கையில கெடச்சா அப்படியே ஒவ்வொரு விதையிலயும் ஒட்டியிருக்கிற வெண்மை நிற கரகரப்பான இனிப்போட இருக்கிற சதையை சீதாப்பழத்துல இருந்து எடுத்து சாப்பிடற விதமே அழகு. இந்த பழத்தின் மகிமையை தெரிந்து கொள்ளுங்கள்.முடிந்தால் உங்கள் வீட்டில் ஒரு சீதாப்பழ மரத்தை நடுங்கள்.

சீதாப்பழத்திற்கு ஆங்கிலத்தில் 'கஸ்டர்ட் ஆப்பிள்' என்று பெயர். இதன் மரப்பெயர் 'அனோனா ஸ்குவோமோசா'. தென்அமெரிக்காவிலிருந்து வந்து இந்தியாவில் பயிரானது. அதாவது இதன் தாய்வீடு அமெரிக்கா பகுதிகள் தான். இந்தியாவிலேயே தென்இந்திய பகுதிகளில் தான் ரொம்பவே செழிப்பா வளருது.
இந்த சப்போட்டா மரம் விதை,நெருக்கு ஒட்டு முறைகளால் கன்றுகளாக வளர்க்கப்பட்டு சிறிய மரமாக வளர வகை செய்யப்படுகிறது. எவ்வளவு தான் வெயிலிடிச்சாலும், மழை பெய்தாலும் அதையெல்லாம் எதிர்த்து சளைக்கமால் வளரும் இந்த சீதாப்பழம்.

விதையை வெச்சு சாகுபடி செஞ்சா சீதாசெடி மரமா வளர்ந்து வர்றதுக்கு 4 ஆண்டு ஆகும். நெருக்கு ஒட்டு மூலம பதியமா போட்டு வளர்த்தா,இரண்டாண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஒரு மரத்தில இருந்து ஆண்டுக்கு 25 முதல் 30 கிலோ பழங்கள் கிடைக்கும்( நீங்க சாப்பிட்டது போக பக்கத்துக்கு வீட்டுக்கு காரங்களுக்கு விக்கலாம்)

சப்போட்டா மரத்துல இருந்து அது காயா இருக்கும் போதே பறிச்சு பழுக்க வெக்கணும். பழத்திலிருந்து சாறு எடுத்தும் சாப்பிடலாம்.
இதில இருக்கிற சத்துக்கள பார்ப்போம்.

புரதம் 1.6, கொழுப்பு 0.4,நார்ப்பொருள் 3.1,மாவுப்பொருள் 23.5,கால்சியம் 17 மிகி.இரும்பு 1.5 மிகி,தயமின் 0.07,ரைபோபிளவின் 0,17மிகி,நியாசின் 1,3 மிகி,வைட்டமின் சி 37 மிகி,மெக்னீசியம் 48 மிகி,பொட்டாசியம் 340 மிகி,தாமிரம் 0,52 மிகி,குளோரின் 37 மிகி,ஆக்சாலிக் அமிலம் 30 மிகி,சக்தி 104 கலோரிகள்.

மருத்துவ குணஙகள் இதில் அதிகமாக இருக்கிறது. சீதாப்பழ மரத்தின் இலை,பட்டை,காய்,பழம்,விதை அனைத்துமே மருந்து தான். காய்துவர்ப்பாக இருப்பதால் கழிச்சல்,சீதக்கழிச்சல் இருக்கும் போது சாப்பிடலாம். சற்று நேரத்தில் இந்த கழிச்சல் நோய் சரியாக போகும். பழம் இனிப்பாகவும், சுவையாகவும் இருப்பதால் ரத்தம் அதிகம் ஊற வழிசெய்யும்.

உடல் வெயிட் போட நினைப்பவர்கள் நிறைய சீதாப்பழம் சாப்பிட்டால் போதும். சில மாதங்களில் நன்றாக குண்டாகி விடலாம். பழம் உடலுக்கு குளிர்ச்சி தருவதாக இருப்பதால் உடல் எரிச்சல் இருப்பவர்கள் இதை வாங்கி சாப்பிட்டு உடலின் எரிச்சலை தணிக்கலாம்.

வாந்தி அதிகம் இருக்கும் போது சீதாப்பழம் சாப்பிட்டால் வாந்தி நின்று போகும். டி,பி என்ற காசநோய் இருக்கும் நோயாளிகள் சீதாப்பழத்தை கண்டிப்பாக சாப்பிடணும். ரொம்ப நல்லது. காசநோயின் தீவிரத்தை குறைக்கும்.

சீதாப்பழத்தின் விதைகளை பொடியாக ஆக்கி ஆறாத புண்களின் மேல் போட்டால் அந்த புண்கள் நாளடைவில் காய்ந்து ஆறிவிடும். அதே போல் இலைகளை தண்ணீர் விடாமல் அரைத்து புண்களின் மேல் பற்று போல் போட்டாலும் புண்கள் ஆறிவிடும்.

பிரேசில் நாட்டில் இலைகளை அரைத்து பற்று போட்டு புண்களை குணப்படுத்துகிற பழக்கம் இப்போதும் உண்டு.தலையில் பேன்கள் அதிகம் இருந்தால் விதையின் பொடியை தலைக்கு தேய்த்து குளித்தால் பேன்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

நன்றி - தமிழ்நாடுவேளாண் பல்கலைக்கழகம்.
Mohammad Sultan
வேலைவாய்ப்பை உருவாக்கும் வேளாண்படிப்புகள் (Agriculture studies)

உயர்ந்துவரும் விலைவாசிக்கு மிக முக்கியகாரணங்களில் ஒன்று வேளாண் உற்பத்தி குறைந்தது, வேளாண் உற்பத்தியை அதிகபடுத்துவதன் மூலமே எதிகால தேவையை பூர்த்தி செய்யமுடியும், அரசும் , தனியார் துறைகளும் வேளாண் உற்பத்தியில் கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் . உற்பத்தியை அதிக படுத்தாதவரை விலைவாசியை குறைக்க முடியாது. எனவே வரும் காலங்களில் வேளாண்மை சார்ந்த படிப்புகளுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். பெரும்பாலும் மாணவர்கள் +2 முடித்துவிட்டு, பொறியியல் , மருத்துவம் சார்ந்த படிப்புகளை அதிகம் தேர்ந்தெடுத்து படிப்பதால் வேளாண்மை துறை சார்ந்த படிப்புகளில் அதிக கவனம் செலுத்துவது இல்லை. மருத்துவம்(MBBS, BDS) , பொறியியல் (B.EB.Tech)அல்லாத படிப்புகள் படிக்க விரும்புபவர்களுக்கு இந்த படிப்புகள் சிறந்தது. வேளாண் துறை சார்ந்த படிப்புகள் படிப்பதால், எங்கும் வேலைக்கு போய் அலைய தேவை இல்லை, வெளி நாடுகளுக்கு போய் கஷ்ட்டபட தேவை இல்லை, அரசின் மானியத்துடன் , வேளாண் உற்பத்தியை சுயமாகவே துவங்கலாம், பலருக்கு வேலை கொடுக்கலாம்.

தமிழக அரசு தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம் மூலம் வேளான் படிப்புகளை மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகின்றது. தமிழகத்தில் கோவை, மதுரை, தூத்துகுடி, திருச்சி, பெரியகுளம், மேட்டுபாளையம் ஆகிய 6 இடங்களில் 11 வேளாண் கல்லூரிகள் உள்ளன. இதில் வேளாண் துறைசார்ந்த கீழ் காணும் படிப்புகள் பயிற்றுவிக்கபப்டுகின்றன.

4 ஆண்டு அறிவியல் படிப்புகள் : B.Sc.(Agriculture, Horticulture, Forestry, Home Science, Agricultural Engineering)

4 ஆண்டு பொறியியல் படிப்புகள் : B.Tech.(Biotechnology) , B.Tech.(Horticulture) , B.Tech.(Food Process Engineering) ,B.Tech.(Energy and Environmental Engineering) , B.Tech.(Bioinformatics) , B.S.(Agribusiness management ) ,B.Tech.(Agricultural information technology) .

மேற்கண்ட படிப்புகளில் சேறுவதற்கான விண்ணப்பம் 11 வேளாண்பல்கலை கழகங்களிலும் மே முதல் வாரத்தில் விண்ணப்பிக்க படுகின்றன இன்ஷா அல்லாஹ். விண்ணப்பத்தின் விலை ரூ.600. மே மாதம் கடைசி வாரத்திற்க்குள் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் :

Agricultural College and Research Institute, Coimbatore - 641 003
Agricultural College and Research Institute, Madurai - 625 104.
Agrl. College and Res. Inst., Killikulam, Tuticorin District- 628 252
Anbil Dharmalingam Agricultural College and Research Institute, Navalur Kuttappattu, Trichy - 620 009.
Agricultural Engineering College and Research Institute, Kumulur, Pallapuram (P.O.), Poovalur (Via),Trichy - 621 712
Horticultural College and Research Inst., Periyakulam - 625 604
Forest College and Research Institute, Mettupalayam - 641 301

தகுதிகள் : +2 தேர்வில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல், அல்லது கணிதம், இயற்பியல் வேதியியல் படித்து இருக்க வேண்டும், குறைந்தது 55% மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும் (முஸ்லீம்களுக்கு 50 % ). 21 வயதிற்க்கு மிகாமல் இருக்க வேண்டும்

மாணவர்களை தேர்ந்தெடுக்கும் முறை : மேலே குறிபிட்டுள்ள 4 பாடங்களின் மதிப்பெண் அடிப்படையில் தகுதி பட்டியல் (Rank list ) தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர்கள் கல்லூரியில் அனுமதிக்கப்படுவார்கள், இதில் முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது.

அனைத்து விபரங்களும் www.tnau.ac.in இந்த உள்ளது. மேலும் வேளாண்படிப்புகள் பற்றி அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

S.சித்தீக்.M.Tech
ஊட்டச்சத்து நிறைந்த திராட்சை





பழங்காலத்தில் இருந்து உலகம் முழுவதும் பயிரிடப்படும் திராட்சைப்பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

ஊட்டச்சத்து நிறைந்த பழங்களுள் ஒன்றான திராட்சையில் வைட்டமின்கள் பி1, பி2, பி6, பி12 மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ்,இரும்புச்சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.
மூளை இதயம் வலுவடையும்:

இப்பழத்தை சாப்பிட்டால் பித்தம் தணியும், உடல் வறட்சியை நீக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நரம்புகளுக்கு வலுவூட்டுகிறது. அதனால் மூளையும், இதயமும் வலிமை பெறும்.

கல்லீரலின் பலவீனத்தால் உணவு செரிமானமாகாத தொல்லையை நீக்கும். உஷ்ணத்தினால் உடலில் ஏற்படும் நமைச்சல், சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு திராட்சை:

சிறுகுழந்தைகளுக்கு பல்முளைக்கும் காலங்களில் மலச்சிக்கல் உண்டாகும். ஒரு சிலகுழந்தைகளுக்கு வலிப்பு நோயும், உண்டாகும். இதற்கு திராட்சைச் சாறு அருமருந்தாகிறது.

ஜலதோஷத்தினால் ஏற்படும் நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திரட்சை பலச்சாறு குணப்படுத்துகிறது. மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.

ரத்த சோகைக்கும் காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்தாகிறது. குடல் மற்றும் உடல்புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றிர்க்கு திராட்சை சிறந்த மருந்து.

பெண்களுக்கு சிறந்த மருந்து:

சீரற்ற மாதவிடாய் சீராடைகிறது. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்குகிறது. இதயபலவீனமானவர்களுக்கு திராட்சை சிறந்த மருந்து. தலைவலி, காய்க்காய் வலிப்பு போன்றவற்றை குணப்படுத்தகிறது. பாலுணர்வை தூண்டுகிறது.

புற்றுநோய் கட்டுப்படும்:

சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு.திராட்சைப்பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் resveratrol என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது.

யார் சாப்பிடக்கூடாது:

அதிகம் சளிப்பிடித்திருக்கும் போதும், ஆஸ்துமா நோயுள்ளவர்களும், வாதஉடம்புக்குள்ளானவர்களும், அதிக அளவில் திராட்சைப்பழத்தை சாப்பிடக்கூடாது என்பது மருத்துவர்களின் அறிவுரை.
நன்றி:முகம்மது பந்தர்.blog

Mohammad Sultan
பாகற்காய் ஒரு சிறந்த நோய் நிவாரணி.




சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

அதிகாலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்கு குணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம். இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம்.

பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது. பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும். இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்

நன்றி : சிந்திக்கவும்.



Mohammad Sultan
தூங்கிக்கொண்டே இருக்கணுமா?

by மகி on Sat Jul 10, 2010 4:53 am

பொழுபோக்குகள் பல பல. அதில் ஒன்று தூங்குவது. நிறைய பேர் கேப் கிடைச்சா தூங்கி விடுவர். பள்ளி நேரத்தில் தூக்கம் தூக்கம், தூங்கி கொண்டே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று பல பேர் ஆசைப்படுவர்.

தூக்கம் வரவில்லையே என புலம்புகிறவர்கள் ஒருபுறம் இருக்க, ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நீண்ட நேரம் தூங்குவதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் வருவதுடன் நம் வாழ்நாளில் 17 சதவீதம் குறையும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்கினாலே போதும்.

குழந்தைகளுக்கு இது பொருந்தாது. பிறந்த குழந்தைகள் வளர வளர தூங்கும் நேரம் குறைந்து கொண்டே போகும். பிறந்த குழந்தைகளுக்கு அதிக நேர தூக்கம் தேவை. அவைகள் தூங்கி கொண்டே இருக்கும். ஆனால், குழந்தைகளை போல தூங்கும் பழக்கம், பள்ளி செல்லும் மாணவர்களிடமும், சில பொரியவர்களிடமும் உள்ளது. மனிதர்களின் தூக்கம் குறித்து ஆய்வு செய்த வல்லுநர்கள், 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதால் மனிதனின் சராசரி வாழ்நாள் 17 சதவீதம் குறையும் என்று தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரம் தூங்குவதால் சீரான உடல் இயக்கங்கள் தடைபடும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள் மற்றும் இதய நோய் உள்ளிட்ட தீராத கோளாறுகள் வர அதிக வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில், நரம்பு மண்டல பாதிப்பு (தைராய்டு பிரச்னை) ஏற்படலாம் என மும்பை மருத்துவர் பிரகாஷ் ஒல்லா கூறுகிறார்.

கட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும். மேலும் உடல் சோர்வு ஏற்படுவதுடன் கோபம் உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும். அதிக நேரம் தூங்குபவர்களில் 15 சதவிதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என மனநல மருத்துவர் சுனிதா துபே தெரிவித்துள்ளார்.

குறைவான நேரம் தூங்கினாலும் ஆழ்ந்த தூக்கம் மிக அவசியம். தினமும் உடற்பயிற்சி, யோகா அல்லது நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் இது சாத்தியமாகும். அதிக தூக்கத்தால் உணவு முறைகள் மாறி அதனால், பல்வேறு விளைவுகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

நன்றாக தூக்கம் வர தூங்க செல்வதற்கு 3 மணி நேரம் முன்பு, இரவு உணவு சாப்பிடுங்கள். டின்னருக்கு முன் பழம் அல்லது பால் குடிக்கலாம். தினமும் உடற்பயிற்சி அவசியம். இதனால் நன்றாக தூக்கம் வருவதுடன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்து, சில நிமிடங்களுக்கு பின் குளிப்பதன் மூலம் நன்றாக தூக்கம் வரும்.

படுக்கைக்கு செல்லும் முன் மேலோட்டமாக புத்தகம் படித்தால், மெல்லிசை பாடல்கேட்பதன் மூலம் ஆழ்ந்து தூங்க முடியும். காலையில் 6 மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

நன்றி: தினமலர்.
தமிழனுக்கு இந்தி தேவையில்லையா? - கருணாநிதியின் துரோகம்!

ஆண்டாண்டு காலமாக திராவிட முன்னேற்ற கழகம் இந்தியை எதிர்த்து தமிழர்களின் அடிப்படை உரிமையை வேட்டையாடுவது பலரும் அறிந்த செய்தி. இந்தி எதிர்ப்புக்குக் கருணாநிதி விளக்கம் கூறும்போது, "நாங்கள் இந்தியை எதிர்க்கவில்லை; இந்தி ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம்" என்கிறார். இது, "நெருப்பு சுடும்; அதனால் தமிழகம் முழுவதும் தீப்பெட்டியைத் தடை செய்யவேண்டும்" என்பது போல் இருக்கிறது.


கருணாநிதி இந்தியை ஏன் எதிர்க்கிறார், பிறகு ஏன் குழப்புகிறார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் கபில்சிபல் "அனைத்து மாநிலங்களிலும் இந்தி மொழி பாடமாக்க வேண்டும்" என்று யோசனை தெரிவித்தார். உடனே தமிழக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, "தமிழகத்தில் இந்தியை அனுமதிக்க முடியாது" என்று பதில் அறிக்கை விட்டார். இந்த அறிக்கையின் உள் நோக்கம் கருணாநிதியை மகிழ்விக்கவேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன இருக்கமுடியும்?.



தமிழர்கள் ஒரு தேசிய மொழியைக் கற்பதில் தவறு என்ன? ஒரு படித்த கல்வி அமைச்சரே தனது தலைவர் திருப்திக்காக இந்தியை எதிர்ப்பது வேலியே பயிரை மேய்வது போல இருக்கிறது. ஒரு அமைச்சர் ஒரு அறிக்கை விடுவதற்கு முன்பு அதன் சாதக பாதகங்களை யோசிக்கவேண்டும். இன்று பிற மாநிலங்களில் இந்திமொழி உள்ளது; அவர்கள் எதில் குறைந்துவிட்டார்கள்? இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்கு நாம் சென்று அங்குள்ள ரிக்ஸா ஓட்டியிடம் ஆங்கிலம் பேசினால் அவனுக்கு என்ன புரியும்? நமக்கு தமிழையும், ஆங்கிலத்தையும் விட்டால் வேறு என்ன தெரியும்?.



நமது பக்கத்து மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர்கள், செல்வம் கொழிக்கும் வளைகுடா பகுதிகளில் உயர்மட்ட வேலைகளிலிருந்து கீழ்மட்டம் வரை கோலோச்சும்போது, தமிழர்கள் பெரும்பான்மையோரும் அப்பாவிகளாக, கீழ்மட்டத்திலேயே தலையெடுக்க முடியாமல் நசிந்து போவதற்குக்மொழி மேலாண்மையும் ஒரு காரணம் என்பது வளைகுடாக்களில் பயணிக்கும் தமிழக அரசியல்வாதிகளில் எவருக்குமே இதுவரை புரியவில்லையா?



வெளிநாடுகளில் மட்டுமின்றி தமிழகத்திலும்கூட சில வேளைகளில் இப்பரிதாப தமிழன் மொழி புரியாமல் தன்னைத் தானே கேவலப்படுத்திக் கொள்கிறான். சான்றுக்குச் சில:



ஒரு வருட காலத்துக்கு முன்பு டிவி யில் ஒரு தமிழ் திரைபட நகைச்சுவை காட்சியைப் பார்த்து அதிர்ந்து போனேன். அந்தக் காட்சியில் ஒரு இந்தி வாசகம் பயன்படுத்தப்பட்டு இருந்தது. அந்த வாசகத்தைத் தமிழில் மொழி பெயர்த்தால் மிக பயங்கரமான அச்சில் பதிக்கமுடியாத ஆபாச வார்த்தையாக இருந்தது. அப்போ இந்தத் தவறு எப்படி நடந்தது? தமிழ் சினிமாக்களின் தணிக்கை அதிகாரிகளுக்குக் கூட இந்தி தெரியவில்லை என்பதுதானே? அவர்களுக்கு இந்தி தெரிந்து இருந்தால் அந்த வாசகம் என்ன, காட்சியையே நீக்கி இருப்பார்கள்.

இந்தக் கொடுமை பாடல்களையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்திய தமிழ் பாடல் ஒன்றில் "படுவா" என்ற இந்தி சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது இதற்கு ஆங்கிலத்தில் PIMP (பிம்ப்) என்றும் தமிழில் "கூட்டிக் கொடுப்பவன்" என்றும் சொல்லலாம்! எவ்வளவு அசிங்கம். திரைப்படத்தின் மொழி தமிழ், பயன்படுத்தப்பட்ட சொற்கள், இந்தி மொழியிலுள்ள தரம்கெட்ட ஆபாச சொற்கள். ரசிப்பதும் சிரிப்பதும் தமிழர்கள்! ஆனால் அர்த்தம் மட்டும் தெரியாது! இத்தகைய படங்களின் பெயர்கள் தமிழில் இருந்தால் அரசு மானியம் வேறு! என்ன பரிதாபம்!!

மக்கள் விழிப்புணர்வு பெறவில்லை, அரசும் திருந்தவில்லை! நான் மட்டும் என்னசெய்வேன்?. மகா கவி அல்லாமா இக்பால் அவர்களின் அற்புத வரிகளில் ஒன்று உள்ளது, "நீங்கள் எந்த ஒன்றுக்கும் ஆசை படுவதற்கு முன்னால் அதற்கு உங்களை நீங்களே தயார்படுத்திகொள்ளுங்கள்". எவ்வளவு அருமையான சிந்தனை!



அரசியல்வாதிகள் பதவிக்கு ஆசைபடுகிறார்களே தவிர அதற்கு அவர்கள் தகுதியானவர்களாக இல்லை என்பதே உண்மை! உதாரணம் மத்திய அமைச்சர் அழகிரி! ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது! நாடாளுமன்றத்தில் பேசவும் பயப்படுகிறார். டெல்லி செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுக்கவும் பயப்படுகிறார். பதவியும் அதிகாரமும் இருந்து என்ன செய்ய? இதற்கு ஒரே தீர்வு, இந்தி மொழியைப் பள்ளியில் கட்டாயப் பாடமாக கொண்டு வரவேண்டும் என்பதுதான். அது அரசியல் கட்சிகளால்தான் முடியும்.



அரசியல் கட்சிகள் மக்களின் நலனுக்காகவே தவிர, மக்களின் சுயமரியாதையையும், அடிப்படை உரிமையையும் பிடுங்குவதாக இருக்கக்கூடாது என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும். இந்தத் தலைமுறை தொடங்கி, இந்தி கற்க ஆரம்பித்தால் எதிர்காலத்தில் தமிழர்கள் தமிழகம் தாண்டி பிழைப்பார்கள்! நமது வாழ்வாதாரமும் சிறக்கும் என்பதில் ஐயம் இல்லை என்பது என்னுடைய தொலை நோக்கு சிந்தனை. சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா!



- கலீல், வீரசோழன்.

--
Visit: www.mohamedbunder.tk
அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்




بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

*.நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.


*.தூங்கும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314

*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395

*.கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322

பொருள் :இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

*.கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

غُفْرَانَكَ

ஃகுப்(எ)ரான(க்)க

பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7

*.வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

ஆதாரம்: நஸயீ 5391, 5444

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

*.பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க

பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1165

*.தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّه

பி(இ)ஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.

*.உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345

*.பாங்கு சப்தம் கேட்டால் ஓதும் துஆ:

பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611

*.பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:

பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ



அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு

பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

ஆதாரம்: புகாரி 614, 4719

*.பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க

பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165

*.உண்ணும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி வ அலா ப‌ர‌(க்)க‌த்தில்லாஹி.

அல்லாஹ்வின் பெய‌ரைக் கொண்டும்,அவ‌ன‌து அபிவிருத்திக‌ள் த‌ரும் அருளைக் கொண்டும் உண்ண‌த் தொட‌ங்குகிறேன்.

*.சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ

பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781

*.சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915


*.உணவளித்தவருக்காக ஓதும் துஆ:


اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.

பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 3805

*.பயணத்தின் போது ஓதும் துஆ:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்


سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.

பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 2392

*.பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து


آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.

பொருள் :எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392

*.தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்


الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் :எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்


يَرْحَمُكَ اللَّهُ

யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்


يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்

எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!

ஆதாரம்: புகாரி 6224

*.பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.


اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த

இதன் பொருள் :இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306

*.புத்தாடை அணியும் போது தூஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.

இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!

*.தூங்கி எழுந்த‌வுட‌ன் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அஹ்யானா பஅத‌ மா அமாத‌னா வ‌ இலைஹின் நுஷூர்.

நாம் (சிறிய‌ மௌத்தாகிய‌ தூக்க‌த்தில்) இற‌ந்த‌ பின்ன‌ர் ந‌ம்மை உயிர் பெற‌ச் செய்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!



*.க‌ளா (இய‌ற்கைத் தேவைக்காக‌ப்) போகும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ இன்னீ அஊது பிக‌ மின‌ல் ஃகுபுஃதி வ‌ல் ஃக‌பாஇஃதி.

அல்லாஹ் ! நான் தீய‌ ஆண்,பெண் ஷைத்தான்க‌லிட‌மிருந்து உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.



*.இய‌ற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வ‌ரும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்!நான் உன்னிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்ப‌ம் த‌ர‌க்கூடிய‌தை நீக்கி, என‌க்குச் சுக‌ம் த‌ந்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!

*கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!

*.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி த‌வ‌க்க‌ல்து அல‌ல்லாஹி லா ஹ‌வ்ல‌ வ‌லா குவ்வ‌த்த‌ இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அல்லாஹ்வின் திருநாம‌த்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே ந‌ம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவ‌தும், ந‌ன்மையைச் செய்யும் ச‌க்தியும் மேலான‌, ம‌க‌த்தான‌ அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை.

*.பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் யும்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பபு வ‌த‌ர்ளா.

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும், பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வ�