Saturday, August 15, 2009

மலரும் நினைவுகளை அசை போடலாம் வாங்க
அக்கா கொடுத்த அழகான
மயிலிறகு குட்டியிடுமென
அட்டைக்குள் அடைகாத்தது

அம்மா பார்ப்பதற்குள்
அப்பாவை மதிப்பெண்
அட்டையில் ஒப்பமிடவைப்பது

அடுக்களையில் சென்று
அனைத்தையும் ஆராய்ந்து
அனைவரும் அறியும்முன்
கிடைத்தவற்றை விழுங்கியது

கிரிக்கெட் விளையாடி சிலபல
கண்ணாடிகளை களைந்து
கட்டுபாடற்ற காத்தோட்டமான
வீடுஅமைய பாடுபட்டது

சூடுகொட்டை தேய்த்து அருகில்
உள்ளவர்கள் தொடையில்
வைத்து அவர்களுக்கும் சூடு
சொரணை சொல்லிகொடுத்தது

மரக்கிளையில் கயிறுகட்டி
ஊஞ்சலாடி ஆணிவேரை
ஆட்டி மரத்தை மண்ணோடு
மண்ணாக மக்கச்செய்தது

ஆசிரியர் அறிவுறுத்தியும்
அடங்காமல் வகுப்பறையில்
அளவில்லா ஆனந்த்தத்துடன்
அலப்பறை பண்ணியது

கணக்கிலாமல் கணக்கில்
பூஜ்ஜியங்களை பூக்கச்செய்து
அம்மாவிடம் அர்ச்சனையுடன்
ஆயுதபூஜை ஏற்றுக்கொண்டது

No comments: