Monday, April 25, 2011

குஜராத் கலவரம்: "துணைநின்றார் மோடி"



குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடி, கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்துக்கு துணை நின்றதாக அந்த மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காவல் துறை அதிகாரி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சஞ்சீவ் பட் என்ற அந்த அதிகாரி, கோத்ரா கலவரம் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி. எனப்படும் சிறப்புப் புலனாய்வுக் குழு மீது நம்பிக்கையில்லாத காரணத்தால்தான் தான் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோத்ராவில் நடந்த கலவரம் தொடர்பாக முதலமைச்சர் மோடியின் வீட்டில் நடந்த கூட்டத்தில், உளவுத்துறை அதிகாரி என்ற முறையில் தானும் கலந்துகொண்டதாக சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.

குஜராத்தில் மதக்கலவரங்களைக் கையாள்வதைப் பொறுத்தவரை, குஜராத் போலீசார் நடுநிலையோடு செயல்பட்டு வருகிறார்கள். இந்த முறை முஸ்லிம்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காது என்று போலீஸ் அதிகாரிகளிடம் நரேந்திர மோடி அறிவுறுத்தியதாக சஞ்சீவ் பட் தனது மனுவில் புகார் கூறியுள்ளார்.

இந்துக்கள் அச்சமயம் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதால், அவர்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதை அனுமதிக்க வேண்டும் என்றும் மோடி கூறியதாக சஞ்சீவ் பட் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் உத்தரவை உயர் போலீஸ் அதிகாரிகள்
கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றியதாகவும் பட் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை ஆமதாபாத் கொண்டுவருவதும், விசுவ ஹிந்து பரிஷத் திட்டமிட்ட கடையடைப்புப் போராட்டத்துக்கு பாஜக ஆதரவளிப்பதும் ஆமதாபாத்திலும் மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கலவரத்துக்கு வழிவகுக்கும் என்றும் அதை சமாளிக்கும் அளவுக்கு போலீஸ் பலம் இல்லை என்றும் மோடிக்கு அறிவுரை கூறியபோதிலும், அவர் அதை நிராகரித்துவிட்டதாக பட் கூறியுள்ளார்.

மேலும் கோத்ராவில் கரசேவகர்களைக் கொல்வதைப் போன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மோடி கூறியதாக போலீஸ் அதிகாரி தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த விவரங்களை கடந்த 2009-ம் ஆண்டு நடந்த விசாரணையின்போது, சிறப்புப் புலனாய்வுக் குழுவுடன் தான் பகிர்ந்து கொண்டதாகவும், ஆனால் அந்தத் தகவல்களின் அடிப்படையில் மோடி மற்றும் அவரது அமைச்சர்களுக்கு கலவரத்தில் உள்ள தொடர்பு குறித்து ஆராயாமல், சிறப்புப் புலனாய்வுக்குழு தனது கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டதாக சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, உண்மையை மறைக்க முயன்றதே தவிர, கோத்ரா கலவரத்தின் பின்னணியில் உள்ள சதியை வெளிச்சத்துக்குக் ண்டுவரத் தயாராக இல்லை. அதனால், அந்தக் குழுவின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்று சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.
10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.

1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம்.

I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு :

1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...), சட்டம், ஆசிரியர் படிப்புகள், ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை, தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும். குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள்.

2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும். அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.

3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது). அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது

4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு : B.Com, CA (Charted accountant ), M.Com படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில் நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது.

5. வரலாறு, பொருளாதாரவியல் : எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன

6. Vocational குரூப் : தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.

II. பட்டய படிப்பு (டிப்ளோமா):
இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள் என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil etc... போன்ற துறைகள் சிறந்த துறைகள். மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன. டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம். பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள் டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ). 12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.

III. சான்றிதழ் படிப்பு (ITI):
இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது.


10 - ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு (கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)

1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.)
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc...
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.

மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு , ITI, டிப்ளோமா படிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள sithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

S.சித்தீக்.M.Tech
அஸ்ஸ‌லாமு அலைக்கும்,



இன்றைய‌ ம‌ருத்துவ‌ சூழ்நிலையில், இர‌ண்டாவ‌து க‌ருத்து என்ப‌து த‌விர்க்க‌முடியாத‌ ஒன்று என்ப‌தை தெளிவாக‌ உண‌ர்த்தும் ஒரு ச‌ம்ப‌வ‌ம், ராஜ‌ஸ்தானில் ந‌ட‌ந்திருக்கிற‌து.



குறிப்பாக‌, ந‌ம் ச‌முதாய‌ பெண்க‌ளுக்கு இப்ப‌டிப்ப‌ட்ட‌ கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்ப‌ட்டால், உட‌ன‌டியாக‌, இன்னொரு ம‌ருத்துவ‌ரை அணுகி உறுதிப் ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டிய‌து நாம் ஒவ்வொருவ‌ரும் செய்ய‌ வேண்டிய‌ க‌ட‌மை.



நம் சமுதாய மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டிய நேரமிது.



படு பாவிகள், கர்ப்பப்பையையே எடுத்து விட துணிந்தவர்கள், எது வேண்டுமானாலும் செய்வார்கள்.



Regards

J. Jahir Hussain



http://ping.fm/YCM2v



சாதாரண வயிற்று வலி சிகிச்சைக்காக சேர்ந்த

226 பெண்களின் கர்ப்பப்பையை அகற்றிய அதிர்ச்சி சம்பவம்

ஆஸ்பத்திரிகளின் அங்கீகாரத்தை ராஜஸ்தான் அரசு ரத்து செய்தது





ஜெய்ப்பூர், ஏப்.17-



சாதாரண வயிற்று வலிக்காக சிகிச்சைக்கு வந்த 226 பெண்களின் கர்ப்பப் பையை அகற்றி அறுவை சிகிச்சை செய்த 3 மருத்துவமனைகளின் அங்கீகாரத்தை ராஜஸ்தான் அரசு ரத்து செய்தது.



226 பெண்கள்



ராஜஸ்தான் மாநிலம் டவுசா பகுதியில் உள்ள சில மருத்துவமனைகள் மீது புகார் வந்தது. அங்குள்ள சில மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக செல்லும் பெண்களுக்கு தேவையே இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப் பையை அகற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக புகார் அளிக்கப்பட்டது.



அந்த புகாரில் பண்டிகுய் நகரில் உள்ள மருத்துவமனைகளில் அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு இந்த அவலம் நடைபெறுவதாக கூறப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான கால கட்டத்தில் சிகிச்சைக்கு சென்ற 385 பெண்களில் 226 பெண்களுக்கு கர்ப்பப் பை அகற்றப்பட்டு இருக்கிறது. இந்த தகவல்களை அரசின் கவனத்துக்கு தொண்டு நிறுவனத்தின் பொதுச் செயலாளர் துர்கா பிரசாத் கொண்டு சென்றார்.



விசாரணை கமிட்டி



எனவே, ராஜஸ்தான் மாநில அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்தது. புகாருக்கு உள்ளான 5 மருத்துவமனைகளில் சோதனை நடத்தி நோயாளிகள் பற்றிய ஆவணங்களை கைப்பற்றியது. அந்த ஆவணங்களின் அடிப்படையில் 3 மருத்துவமனைகளின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.



மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக டவுசா மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி ஓ.பி.மீனா தலைமையில் 3 நபர் விசாரணை கமிட்டியை அரசு நியமித்துள்ளது. ஆவணங்களில் உள்ள தகவல்களைக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட பெண்கள் மற்றும் டாக்டர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. அவர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படுகின்றன.



பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கூறுகையில், "எனக்கு பல நாளாக வயிற்று வலி இருந்தது. சிகிச்சைக்கு சென்றபோது, கர்ப்பப் பையை அகற்றினார்கள். ஆனாலும், வலி தொடர்ந்தது. இதையடுத்து, ஜெய்ப்பூர் சென்று சிகிச்சை மேற்கொண்டேன். அப்போது தான், வயிற்று வலிக்கு வேறு காரணம் என்றும் தவறுதலாக கர்ப்பப் பை அகற்றப்பட்டதையும் அறிந்தேன்'' என்றார்.



மருத்துவமனைகள் மறுப்பு



இதற்கிடையே, குற்றச்சாட்டுகளை மருத்துவமனை நிர்வாகங்கள் மறுத்துள்ளன. தேவையில்லாமல் கர்ப்பப் பையை அகற்றுவதில்லை என டாக்டர்களும் நிர்வாகங்களும் தெரிவித்தன.



புகாருக்கு ஆளான தனியார் மருத்துவமனை ஒன்றின் உரிமையாளர் டாக்டர் ராஜேஷ் தாகத் கூறுகையில், "சிகிச்சைக்கு வரும் பெண்களில் 90 முதல் 95 சதவீதம் பேருக்கு கர்ப்பப் பையை அகற்றியதாக எங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது. ஆனால், 20 முதல் 25 சதவீதம் பெண்களுக்கு மட்டுமே கர்ப்பப் பை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தது'' என கூறினார்.
Dear Muslim brothers / sisters, AssalamuAlaykum

This is an important info If u know anyone who is poor & their age
is between 60-70 and He / She is unable to do hajj due to Financial
conditions

MUHAMMAD NATION GROUP, JEDDAH will make arrangements of HAJJ for such people in free of cost

CONTACT NUMBER - 0096626919999

Please forward this to others Muslims to get reward of your good deeds on the Judgment day

Wassalam





--
اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
A Student at Stanford

This is a true story that had happened in 1892 at Stanford University. Its moral is still relevant today.
A young, 18-year-old student was struggling to pay his fees. He was an orphan, and not knowing where to turn for money, he came up with a bright idea. A friend and he decided to host a musical concert on campus to raise money for their education. They reached out to the great pianist Ignacy J. Paderewski. His manager demanded a guaranteed fee of $2000 for the piano recital. A deal was struck. And the boys began to work to make the concert a success. The big day arrived. Paderewski performed at Stanford. But unfortunately, they had not managed to sell enough tickets.The total collection was only $1600. Disappointed, they went to Paderewski and explained their plight. They gave him the entire $1600, plus a cheque for the balance $400. They promised to honor the cheque soonest possible. "No." said Paderewski. "This is not acceptable." He tore up the cheque, returned the $1600 and told the two boys "Here's the $1600. Please deduct whatever expenses you have incurred. Keep the money you need for your fees. And just give me whatever is left" The boys were surprised, and thanked him profusely. It was a small act of kindness. But it clearly marked out Paderewski as a great human being. Why should he help two people he did not even know?
We all come across situations like these in our lives. And most of us only think "If I help them, what would happen to me?" The truly great people think, "If I don't help them, what will happen to them?" They don't do it expecting something in return. They do it because they feel it's the right thing to do. Paderewski later went on to become the Prime Minister of Poland. He was a great leader, but unfortunately when the World War began, Poland was ravaged. There were over 1.5 million people starving in his country, and no money to feed them. Paderewski did not know where to turn for help. He reached out to the US Food and Relief Administration for help. The head there was a man called Herbert Hoover - who later went on to become the US President. Hoover agreed to help and quickly shipped tons of food grains to feed the starving Polish people. A calamity was averted. Paderewski was relieved. He decided to go across to meet Hoover and personally thank him. When Paderewski began to thank Hoover for his noble gesture, Hoover quickly interjected and said, "You shouldn't be thanking me Mr. Prime Minister. You may not remember this, but several years ago, you helped two young students go through college in the US. I was one of them."


The world is a wonderful place. What goes around usually comes around.

Its designed by the Creator with this Principle of

“As you sow you shall Reap”

Dare to Lend without an intention to borrow… You will surely be a blessing