Saturday, August 15, 2009

இறைவன் தந்த ஒளி விளக்கு




பரந்ததோர் ஏரி

சுற்றிலும் மரங்கள்

பகலிலே பசுமை

இரவிலே கருமை



பார்த்தான் இறைவன்

வேண்டுமம் மரங்களுக்கே என்றே எண்ணி

ஆயிர மாயிரம் விளக்குகள் படைத்தான்

மின் மினி யென்னும் பூச்சிகள் வடிவிலே



போத்தின மரங்கள் வைரங்கள் பதித்த

போர்வை தனையே மின்னின

அவை விட்டு விட்டு



வியந்த விஞ்ஞானிகள்

விரைந்தனர் காரணம் கண்டிட

கண்டனர் பதிலும் அவர்கள்

மின் மினி அடி வயிற்றில் விளக்கு

அது எரிவதோ ஒரு ரசாயனக் கலப்பு



மின் மினி மின்னுவது ஆணை அழைக்க என்றனர் பலர்

இல்லை அவை பளிச்சிடுவது இரைதனை ஈர்க்க என்றனர் சிலர்



இறைவன் சித்து இத்தனை எளிதோ

மின் மினி ஆயிர மாயிரம் இருந்தாலும்

எல்லாமே ஒரே கணம் மின்னுவதேன்

அடுத்த கணம் அணைவதேன்



விஞ்ஞானிகள் கண்டிலர் இன்று வரை பதில்

அங் ஞானிகள் தான் காண வேண்டும் விடை அதற்கே

No comments: