Wednesday, September 30, 2009

adlof hilter

அடால்ஃப் ஹிட்லர் (1889-1945)

இந்த நூலில் வேண்டா வெறுப்புடன்தான் அடால்ஃப் ஹிட்லரைச் சேர்த்தேன் என்பதை நான் ஒப்புக் கொண்டாக வேண்டும். அவருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு விளைவிப்பதாகவே இருந்தது. சுமார் 3.5 கோடி மக்களுக்கு மரணத்தை விளைவித்தவர் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ள ஹிட்லரைப் பெருமைப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. எனினும், மிகப் பெருமளவு எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஹிட்லர் ஏற்படுத்தினார் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது.

ஆஸ்திரியாவிலுள்ள பிரானாவ் என்ற நகரில் 1889 ஆம் ஆண்டில் அடால்ஃப் ஹிட்லர் பிறந்தார். இளமையில் ஓர் ஓவியராக முயன்று தோல்வி கண்டார். இந்த இளமைப் பருவத்தில் தான் எப்போதோ இவர் ஒரு தீவிர ஜெர்மன் தேசியவாதியாக மாறினார். முதல் உலகப் போரின்போது இவர் ஜெர்மன் இராணுவத்தில் பணியாற்றி காயமடைந்து, இருமுறை வீரச் செயலுக்கான விருதுகளைப் பெற்றார்.

முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றது கண்டு ஹிட்லர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். 1819 ஆம் ஆண்டில், தமது 30 ஆம் வயதில், முனீக்கில் ஒரு குட்டி வலதுசாரிக் கட்சியில் சேர்ந்தார். இக்கட்சி தனது பெயரை விரைவிலேயே "தேசியச் சமதரும் ஜெர்மன் தொழிலாளர் கட்சி" (National Socialist German Worker's Party) என்று மாற்றிக் கொண்டது. இக்கட்சியைச் சுருக்கமாக "நாஜிக் கட்சி" என்று அழைத்தனர். இரண்டு ஆண்டுகளில் ஹிட்லர் இக்கட்சியின் எதிர்ப்பில்லாத தலைவர் (Fuehrer) ஆனார்.

ஹிட்லரின் தலைமையில் நாஜிக் கட்சி மிக விரைவாக வலுவடைந்தது. 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இக்கட்சி அரசைக் கவிழ்க்க முயன்றது. இந்த முயற்சியை "முநீனக் பீர் மண்டபப் புரட்சி" (Munich Beer Hall Putsch) என்று அழைப்பர். ஆனால், இப்புரட்சி தோல்வியடைந்தது. ஹிட்லர் கைது செய்யப்பட்டு, அரசுத் துரோகக் குற்றத்திற்காக விசாரணை செய்யப்பட்டு, தண்டிக்கப் பட்டார். எனினும், ஓராண்டுச் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு ஹிட்லர் விடுதலையானார்.

1928 ஆம் ஆண்டில் நாஜிக் கட்சி இன்னும் ஒரு சிறிய கட்சியாகவே இருந்தது. அப்போது ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தம் (Great Depression) ஜெர்மனியிலிருந்து அரசியல் கட்சிகளிடம் மக்கள் வெறுப்புக் கொள்ளச் செய்தது. அதே சமயம் நாஜிக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்குப் படிப்படியாக வளர்ந்தது. 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஹிட்லர் தமது 44 வது வயதில் ஜெர்மனியில் தலைமை அமைச்சர் (Chancellor) ஆனார்.

ஹிட்லர் தலைமை அமைச்சரான பிறகு, அரசு எந்திரத்தை பயன்படுத்தி எதிர்காட்சிகள் அனைத்தையும் ஒழித்துகூ கட்டிவிட்டு, விரைவிலேயே ஒரு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினார். குடியியல் உரிமைகளுக்கு, தற்காப்பு உரிமைகளும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு இந்த சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டதாகக் கருதிவிடலாகாது. குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவது மிகத் துரிதமாக நடைபெற்றது. விசாரணைகள் நடத்துவது குறித்து நாஜிகள் கவலைப் படவே இல்லை. பெரும்பாலான அரசியல் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். அல்லது படுகொலை செய்யப்பட்டனர். அப்படியிருந்தும் இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்குக் குறைத்தார். பொருளாதார மீட்சிக்கும் ஓரளவு வழி வகுத்தார். இதனால், பெரும்பாலான ஜெர்மானியர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர்.

ஹிட்லர் இதன் பின்பு இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக இருந்த படையெடுப்புகளில் இறங்கினார். சில நிலப்பகுதிகள் போரிடாமலே அவருக்குக் கிடைத்தன. இங்கிலாந்தும், ஃபிரான்சும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. அவை யாருடனும் போரிடும் மனப்போக்கில் இல்லை. வர்சேல்ஸ் உடன்படிக்கையை மீறி ஹிட்லர் ஜெர்மன் இராணுவத்தைப் பெருக்கியபோதும், அவருடைய படைகள் ரைன்லாந்தைக் கைப்பற்றி (1936 மார்ச்) அதை வலுப்படுத்தியபோதுமூ, ஆஸ்திரியாவை அவர் வல்லந்தமாகத் தன் வசப்படுத்திக் கொண்டபோதும் (1938 மார்ச்) இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் அதைக் கண்டு கொள்ளாமலிந்தன. அரண்காப்பு செய்யப்பட்ட செக்கோஸ்லாவாக்கியாவின் எல்லைப் பகுதியாகிய சூடட்டன்லாந்தை ஹிட்லர் இணைத்துக் கொண்ட போது கூட (1938 செப்டம்பர்) இந்த நாடுகள் அந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஹிட்லருடன் சமரசம் செய்து கொள்வதற்காக பிரிட்டனும், ஃபிரான்சும் "முனீக் ஒப்பந்தம்" என்ற பன்னாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கையின்படி, சூடட்டன்லாந்தை ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டதை இவ்விருநாடுகள் ஏற்றுக் கொண்டன. செக்கோல்லா வாக்கிய செயலற்று நின்றது. இந்த உடன்படிக்கை கையெழுத்தான சில மாதங்களுக்குப் பிறகு செக்கோஸ்லாவாக்கியாவின் மற்ற பகுதி முழுவதையும் ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டார். ஒவ்வொரு கட்டத்திலும் ஹிட்லர் மிகத் தந்திரமான வாதங்களைக் கூறினார். தம்முடைய நடவடிக்கைகளுக்குத் தடங்கல் விளைவிப்பவர்களுடன் போரிடப் போவதாக மிரட்டினார். ஒவ்வொரு கட்டத்திலுமூ அவருடைய மிரட்டல்களுக்கு மேலைநாட்டு மக்களாட்சிகள் கோழைத்தனமாக அடிபணிந்தன.

எனினும் போலந்து நாடு ஹிட்லரின் அடுத்தத் தாக்குதலுக்கு இலக்கானபோது, இங்கிலாந்தும், ஃபிரான்சும் போலந்தைப் பாதுகாக்க உறுதி பூண்டன. ஹிட்லர் முதலில் ரஷியச் சர்வாதிகாரி ஸ்டாலினுடன் ஓர் "ஆக்கிரமிப்பு தவிர்ப்பு" ஒப்பந்தம் செய்து கொண்டார். (உண்மையில் இது ஓர் ஆக்கிரமிப்புக் கூட்டணி ஒப்பந்தமேயாகும். இந்த ஒப்பந்தப்படி, போலந்து நாட்டைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ள இரு சசர்வாதிகாரிகளும் இரகசிய உடன்பாடு செய்து கொண்டனர்) இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹிட்லர் முதலில் தமக்கு தற்காப்புத் தேடிக் கொண்டார். இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு போலந்தை ஹிட்லர் தாக்கினார்.

அதற்கு 16 நாட்களுக்குப் பின்பு சோவியத் ரஷியாவும் போலந்து மீது படையெடுத்தது- ஜெர்மனி மீது இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் போர்ப் பிரகடனம் செய்த போதிலும், போலந்து விரைவிலேயே தோற்கடிக்கப்பட்டது.

ஹிட்லருக்குப் பெருதூத வெற்றிகள் கிடைத்து 1940 ஆம் ஆண்டில் ஆகும். அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹிட்லரின் இராணுவம் டென்மார்க்கையும், நார்வேயையும் விழுங்கியது. மே மாதத்தில், ஹாலந்து, பெல்ஜியம், வக்சம்பர்க் ஆகிய நாடுகள் அதன் வசமாயின. ஜூன் மாதத்தில் ஃபிரான்ஸ் சமரசம் செய்து கொண்டு சரணடைந்தது- அதே ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டன் மீது ஜெர்மனி தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களைத் தொகுத்தது. "பிரிட்டன் சண்டை" (Battle of Britain) எனப் பெயர் பெற்ற இந்தப் போரைப் பிரிட்டன் அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்துபூ சமாளித்தது. அதன் பின் இங்கிலாந்து மீது ஒரு பெரும் படையெடுப்பைத் தொடுக்க ஹிட்லர் இயலாமலே போயிற்று.

1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கிரீசையும் யூகோஸ்லாவியாவையும் ஹிட்லரின் படைகள் வெற்றி கொண்டன. ரஷியாவுடன் செய்து கொண்ட "ஆக்கிரமிப்பு தவிர்ப்பு " ஒப்பந்தத்தை ஹிட்லர் கிழித்தெறிந்து விட்டு ரஷியாவையும் தாக்கினார். சோவியத் ரஷியாவின் பெருமளவுப் பகுதியை ஹிட்லரின் இராணுவம் கைப்பற்றியது. ஆனால், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னர் ரஷியப் படைகளை முற்றிலுமாகத் தோற்கடிக்க ஹிட்லரின் இராணுவத்தால் முடியவில்லை. ஹிட்லர் இப்போது இங்கிலாந்து, ரஷியா ஆகிய இரு நாடுகளுடன் ஒரே சமயத்தில் போர் புரிந்து கொண்டே 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான "முத்துத் துறைமுகம்" (Peart Harbour) என்னும் கடற்படைத் தளத்தை ஜப்பானியர் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க மீது போர்ப் பிரகடனம் செய்தார்.

1942 ஆம் ஆண்டு மத்தியில், உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமயத்திலும் ஆதிக்கம் செலுத்தியிராத மிகப் பெருமளவு ஐரோப்பியப் பகுதி ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இது தவிர வட ஆஃப்ரிக்கா முழுவதிலுமூ அது ஆட்சி செலுத்தியது. 1942 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், எகிப்தில் நடந்த எல் அலமைன் போரிலும், ரஷியாவில் ஸ்டாலின் கிராடுப் போரிலும் ஜெர்மனி தோல்வியடைந்தது. —4ர்மனிக்கு ஏற்பட்ட தோல்விகள், உலகப் போரில் ஒரு திருப்பு முனையாக அமைந்தன. இத்தோல்விகளுக்குப் பிறகு ஜெர்மன் இராணுவத்தின் வெற்றி வாய்ப்புக்கள் படிப்படியாகச் சரியலாயின. ஜெர்மனியின் இறுதித் தோல்வி உறுதியாயிற்று. எனினும், ஹிட்லர் சரணடையத் தயாராக இல்லை. ஸ்டாலின்கிராடுத் தோல்விக்குப் பறிகு ஜெர்மன் படைகளுக்குப் பயங்கரமான சேதங்கள் ஏற்பட்ட போதிலும், மேலும் ஈராண்டுகள் ஜெர்மனி தொடர்நத் சண்டையை நீடித்தது. 1945 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கசப்பான முடிவு ஏற்பட்டது. ஏப்ரல் 30 ஆம் தேதியன்று பெர்லினின் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஏழு நாட்களுக்குப் பிறகு, ஜெர்மனி சரணடைந்தது.

ஹிட்லர் அதிகாரத்திலிருந்த ஆண்டுகளில் வரலாறு கண்டிராத கொடிய இனப்படுகொலைக் கொள்கையைக் கையாண்டார். அவர் கொடூரமான இனவெறியராக இருந்தார். முகூகியமாக, யூதர்களிடம் தீவிரமான பகையுணர்வுடன் நடந்து கொண்டார். உலகிலுள்ள யூதர் ஒவ்வொருவரையும் கொல்வதே தமது குறிக்கோள் என்று பகிரங்கமாக அறிவித்தார். அவரது ஆட்சியின்போது, பெரிய நச்சுவாயு அறைகளைக் கொண்ட ஏராளமான படுகொலை முகாம்களை நாஜிகள் ஏற்படுத்தினர். ஹிட்லர் கைப்பற்றிய நாடுகளிலிருந்து கூட ஏராளமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து, இந்த நச்சுவாயு அறைகளில் அடைத்துக் கொள்வதற்காக மாட்டு உந்துகளில் அனுப்பி வைத்தனர். சில ஆண்டுகளிலேயே இந்த முறையில் 60,00,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஹிட்லர் பலி வாங்கியது யூதர்களை மட்டுமன்று, அவரது ஆட்சிக் காலத்தின்போது கண்க்கற்ற ரஷியர்களும், நாடோடிகளும்கூடப் படுகொலை செய்யப் பட்டனர். இவர்கள் தவிர தாழ்ந்த இனத்தவர் என்றோ, அரசுக்கு எதிரிகள் என்றோ கருதப்பட்ட ஏராளமானோரும் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகள் வெறும் ஆத்திர உணர்ச்சியாலோ, போரில் ஏற்பட்ட மனக் குமுறலினாலோ செய்யப்பட்டவை என எண்ணிவிடலாகாது. ஹிட்லரின் மரணமுகாம்கள் பெரிய வாணிக நிறுவனங்களைப் போன்று, கவனமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. கொலை செய்யப்படுபவர்களின் விவரங்கள் பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டன. ஒவ்வொரு முகாம்களிலும் இத்தனை பேர் கொல்லப்பட வேண்டும் என்று இலக்குகள் நிருணயிக்கப்பட்டன. கொலையுண்டவர்களின் உடல்கள் சோதனையிடப்பட்டு அவற்றின் தங்கப்பற்களும், திருமண மோதிரங்களும் கொள்ளையிடப்பட்டன. பலியானவர்களில் பலருடைய உடல்கள் சோப்பு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தப் படுகொலைத் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஹிட்லர் எத்துணை தீவிரம் காட்டினார் என்பதற்கு ஒரு சான்று கூறலாம். போரின் இறுதி நாட்களில் ஜெர்மனியில் உள்நாட்டுப் பயன்பாட்டுக்கும், இராணுவத்தின் பயன் பாட்டுக்கும் எரிபொருள் பற்றாக்குறையாக இருந்தபோதிலும், மரண முகாம்களுக்கு ஆட்களை மாட்டு உந்துகளில் கொண்டு செல்வது தடங்கலின்றி நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஹிட்லர் ஆணையிட்டிருந்தார்.

பல காரணங்களுக்காக, ஹிட்லரின் புகழ் நீடிக்கும் எனத் தோன்றுகிறது. முதலாவதாக, உலக வரலாற்றிலே மிகக் கொடிய மனிதராக ஹிட்லர் கருதப்படுகிறார். ஹிட்லரின் கொடுஞ்செயல்களுடன் ஒப்பிடும்போது, ரோமப் பேரரசன் நீரோ, ரலிகுலா போன்ற கொடியவர்களின் கொடுமை மிக அற்பமானதேயாகும். எனினும், அவர்கள் கொடுமையல் சின்னங்களாக 20 நூற்றாண்டுகளாக நினைவு கூறப்படுகிறார்கள். அப்படியானால், உலக வரலாற்றில் மகாக் கொடியவனாக ஒருமனதாக் கருதப்படும் ஹிட்லர் மேலும் பலப்பல நூற்றாண்டுகள்

Monday, September 28, 2009

super singers juniors - the truth behind

சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸும், விஜய் தொலைக்காட்சியின் அபத்த அவஸ்தையும் !


அந்தக் குழந்தைக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். தொகுப்பாளினி அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக் கொண்டு கொஞ்சநேரம் தானும் இன்னுமொரு குழந்தையாக அங்குமிங்கும் அலைந்தார். இறுதியில் அந்தக் குழந்தையை அருகே அமர்த்திப் பாடச் சொன்னார். 'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே' எனத் தன் மழலைக் குரலில் பாடத் தொடங்கியது அது.

மேடையில் வைத்து இன்னுமொரு குழந்தையிடம் தொகுப்பாளினி கேட்கிறார்.
' நீங்க கண்டிப்பா செலக்ட் ஆகிடுவீங்களா?'
'ஆமாம். ஆவேன். கண்டிப்பாக'
'அப்படி ஒரு வேளை ஆகலைன்னா நடுவர்களை என்ன செய்வீங்க?'
'ஆவேன்' எனக் கோபமாகவும் உறுதியாகவும் சொல்கிறது அந்தக் குழந்தை. அதைத் தொடர்ந்த தொகுப்பாளினியின் சமாதானப் பேச்சில் சிரிக்கிறது குழந்தை. அதுதான் குழந்தை. குழந்தைகள்.

இன்னுமொரு பெண்குழந்தை, தனக்குத் தரப்பட்ட வாய்ப்பில் சரியாகப் பாடவில்லை. அவர் அடுத்த சுற்றுக்குத் தெரிவு செய்யப்படவில்லையென நடுவர் சொன்னதும் உதடுகள் பிதுக்கிக் கண்ணீர் வழிய அழத் தொடங்குகிறது. நடுவருக்குத் தாங்க முடியவில்லை. 'இன்னுமொரு வாய்ப்புத் தருகிறேன். அழாமல் பாடிக் காட்டுகிறாயா?' எனக் கேட்டு, அந்தக் குழந்தையைச் சிரிக்கச் செய்து திரும்ப பாடவைக்கிறார். அதுவும் பாதிப் பாட்டில் மீளவும் அழத் தொடங்குகிறது. நடுவர் அவரை அழைத்து, 'அழாதே' என அன்பாகச் சொல்லச் சொல்லக் கண்ணீர் வழிகிறது குழந்தைக்கு. 'அழக் கூடாது. வெளியேயும் போய் அழக் கூடாது. அம்மாப்பாக்கிட்டப் போய் அழக் கூடாது' என்ற நடுவரின் குரலுக்குச் சரியெனச் சொல்லிவிட்டு வந்த குழந்தை திரும்ப வாசலில் வந்து அழுகிறது. நடுவரும், இன்னுமொரு பெண்ணும் வந்து சமாதானப்படுத்துகிறார்கள்.

இன்னும் இரட்டைக்குழந்தைகள் இருவர் ஒன்றன் பின் ஒன்றாகப் பாட வருகின்றனர். முதல் குழந்தை தேர்ந்தெடுக்கப்படவில்லை. இரண்டாவது தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒரே மாதிரி இருக்கும் இருவரும் இரட்டையர்கள் என்பது நடுவருக்கு பின்னர்தான் புரிகிறது. இருவரில் ஒருவர் மட்டும் தேர்வு செய்யப்படக் கூடாது என இறுதியில் இருவரையுமே தேர்வு செய்துவிடுகிறார் நடுவர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என் நேரத்தைத் திருடுவது குறைவு. நேரம் கிடைக்கும்போது குழந்தைகளின், சிறுவர்களின் நிகழ்ச்சிகளை மட்டும் விரும்பிப் பார்ப்பேன். அப்படித்தான் நேற்று விஜய் டீவியின் 'சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ்' போட்டிக்கான தேர்வு நிகழ்ச்சியைப் பார்க்க நேரிட்டது. அதிலிருந்த சில அபத்தக் காட்சிகள் சில தான் நான் மேற்சொன்னவை.

தேர்வு நடக்கும் முன்பு தொகுப்பாளினி ஒரு வண்டியில், குழந்தைகள் வசிக்கும் வீடுகளுக்கே போய் அவர்களை அழைத்துக் கொண்டு எல்லோருடனும் வெகு உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் தேர்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துவருகிறார். அது விஜய் தொலைக்காட்சியின் விளம்பர யுக்தியாக இருக்கும். எனினும் போட்டிக்காக உற்சாகத்துடன் கூக்குரலிட்டபடியும், பாடியபடியும் தொகுப்பாளினியுடன் வரும் குழந்தைகள் அப் போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் எப்படி வாடிப்போவார்களென நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் உணரவேயில்லையா? வீட்டுக்கு வந்து எல்லாக் குழந்தைகளோடும் சேர்த்து அழைத்துப் போகும்போது இருக்கும் மகிழ்ச்சி, தேர்வில் தோற்றுத் தனது பெற்றோருடன் திரும்பத் தனியே வரும்போது கண்ணீராக மாறியிருக்கும்.

போட்டித்தேர்வில் தோற்று அழுத அந்தப் பெண்குழந்தைக்கு அருகில் போய் முகத்தை சமீபமாக பதிவு செய்து உலகம் முழுக்கக் காட்டியாயிற்று. இந்தச் சாதாரண தோல்வியையே தாங்கிக் கொள்ளமுடியாத குழந்தை , நாளை அதன் வகுப்பறையில் 'டீவியில் அழுதவள்' எனக் கேலி, கிண்டலுக்காளாக்கப்படும்போது எந்தளவுக்கு மனம் உடைந்து போகும்? இன்னும் அந்தத் தாங்கமுடியாத வடு அதன் மனதில் முழு வாழ்நாளுக்கும் நீடித்திருக்கும். தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்ற குற்ற உணர்வு மனதுக்குள் ஒளிந்திருக்கும். இன்னும் ஏதேனும் போட்டிகளில் கலந்துகொள்ள முனையும்போது ஒரு பெரும் சுவர் போல இந்த வடு கண்முன்னே வந்து நிற்கும். எதற்காக அந்தக் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன? அவசியமென்ன?

'இத் தேர்வில் இவர் தோற்றுவிட்டார். தோற்று விம்மி விம்மி அழுதார்' என உலகுக்கே பிரசித்தப்படுத்தத் தேவையில்லையே. நீங்கள் நடத்திய போட்டியில் கலந்துகொள்ள அந்தக் குழந்தை வந்தது. கலந்துகொண்டது. தேர்ந்தெடுக்கப்படவில்லை. தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பக்குமவமறியாக் குழந்தை அழுதது. அது குழந்தை. அழத்தான் செய்யும். அந் நிகழ்ச்சியின் ஒளிப்பதிவாளர்களே, இயக்குனர்களே.. நீங்கள் குழந்தைகள் அல்லவே? அந்த அழுகையின் நிகழ்வைக் காட்சிப்படுத்தி எல்லோருக்கும் ஒளிபரப்பிக் காட்டவேண்டியதன் அவசியம் என்ன? அதனால் நீங்கள் எதிர்பார்த்தது என்ன? ஏதோ குற்றவாளியைக் காட்டுவது போல அதன் முகத்துக்கு அருகாமையில் கேமராவை வைத்தும், அதன் அழுகையையும் ஒவ்வொரு அசைவையும் மெதுவான இயக்கத்தில் (ஸ்லோமோஷன்) படம்பிடித்தும், பிண்ணனிக் குரலொன்று அது பற்றி விபரித்தும் காட்டச் செய்ததால் உங்களுக்குக் கிடைத்தது என்ன? ஏன் இந்த மனவிகாரம் உங்களுக்கு ?

போட்டிகள் நடத்தலாம். சிறுவர்களை ஊக்குவிக்க அவை அவசியம்தான். ஆனால் அதன் வயதெல்லையை பத்திலிருந்து பதினான்கு என்பது போல அதிகரித்திருக்கலாம். தற்பொழுது பத்தாம் வகுப்புத் தேர்வையே மாணவர்களுக்குச் சுமையெனக் கருதி, அது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்பொழுது இது போன்ற போட்டிகள் சின்னஞ்சிறு பிஞ்சுகளுக்கு அவசியமா? இந்தப் போட்டிக்கான வயதெல்லை ஆறு முதல் பதினான்கு என்கிறார்கள். பத்துவயதுக்குக் குறைந்த பல குழந்தைகளுக்கு 'போட்டி ஏன்? எதற்காக நடத்தப்படுகிறது? இதில் வென்றால் என்ன பரிசு கிடைக்கும்?' போன்ற கேள்விகளுக்கு ஒழுங்கான பதில் சொல்லக் கூடத் தெரிந்திருக்காது. பெற்றோரின் தூண்டுதலால் ஒரு விளையாட்டுக்குச் செல்வதைப் போல பாடவந்திருக்கக் கூடும். முதல் தோல்வி முற்றும் தோல்வியல்ல எனப் பக்குவமாக உணரும் பருவம், சின்னஞ் சிறு குழந்தைகளுக்கானதல்ல. பிரபலமான முதல் தோல்வி அவர்களைப் பெரிதும் பாதிப்படையச் செய்யும்.

குழந்தைகள் எப்பொழுதும் தேடல்மிக்கவர்கள். தங்களது ஒவ்வொரு கணப்பொழுதிலும் வாழ்வு பற்றிய தேடலைக் கொண்டவர்கள் அவர்கள். அக் கணங்களில் மனதில் பதிபவற்றைக் கொண்டே அவர்களது வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படுகிறது. குழந்தைகளை வேலைக்கமர்த்திப் பணம் சம்பாதிப்பது எப்படிக் குற்றமோ, அது போலவே தானே அவர்களை வைத்து நீங்கள் பணம் சம்பாதிப்பதுவும்? குழந்தைகள் வெகு இயல்பாக 'வாடா மாப்பிளே.. வாழப்பழத் தோப்புல..வாலிபால் ஆடலாமா' எனப் பாடுவதுவும், உங்கள் விளம்பர யுத்திகளும், குழந்தைகளுக்கான அபத்தப் போட்டிகளும் உங்கள் பணப்பெட்டியை நிரப்பக் கூடும். எனினும் குழந்தைகளின் வாழ்வின் வேரில் விஷத்தினைப் பாய்ச்சுவதைத்தான் நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - உயிர்மை

self respect is

இடிச்சத்தம் ஏதுமில்லாமல் பெற்றோர்களுக்கு பேரதிர்ச்சியை தரக்கூடியது தங்கள் பிள்ளைகளின் காதல். வகைவகையான காதல் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை வீணடிக்கிறது. பருவ வயதில் தோன்றும் மின்சாரக் காதல், நரம்பு நுனிகளில் வெடித்து மலரும் உணர்ச்சிக் காதல், விழித்துக் கொண்டே கனவு காண்கிற கற்பனைக் காதல், தனக் குள்ளேயே பேசிக்கொள்கிற பைத்தியக் காதல், இணையதளத்தில் சிக்கிய இமெயில் காதல், பேசிப் பேசியே கழிக்கிற செல்போன் காதல்’ என்று காதலில் பல ரகம்.

எது காதல் என்று தெரியாமலேயே அதன் மாய வலைக்குள் இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர். ஒரு சில திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இளைஞர்களை திசை மாறிப் போகச் செய்கின்றன. சினிமா நாயகனாக தன்னைப் பாவித்து இளைஞன் காதல் கடிதம் எழுதுகிறான். காதல் குறுஞ்செய்தி அனுப்புகிறான். துரத்தித் துரத்தி காதலிக்கிறான். படிப்பை மறந்து ஊர் சுற்றுகிறான்.

கல்லூரி மாணவன் ஒருவனைச் சந்தித்தேன். முழங்கைக்குக் கீழ் புள்ளிபுள்ளியாய் தீப்புண்கள். விசாரித்ததில் தெரிந்த உண்மை மிகுந்த வேதனை அளித்தது. அது அவன் காதலியின் பெயராம். அவள் பெயரை தன் கையில் சிகரெட் நெருப்பு கொண்டு பச்சை குத்துவது போல் பதித்து இருக்கிறான்.

பாறையில் எழுதுவது, மரத்தில் எழுதுவது, இரத்தம் கொண்டு எழுதுவது, பச்சை குத்திக் கொள்வது போன்ற எல்லாம் போய் நெருப்பைக் கொண்டு எழுதியிருக்கிறானே என்பதை அறிந்த போது ‘நெஞ்சு பொறுக்கு தில்லையே, இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்து விட்டால்’ என்ற பாரதியின் வரிகள் தான் நினைவுக்கு வந்தது.

சில இளைஞர்கள் திடீரென்று தாடி வளர்த்துக் கொண்டு, சிகரெட் புகைத்துக் கொண்டு சரியாக சாப்பிடாமல், சரியாக உடை உடுத்தாமல், வேதாந்தம் பேசத் தொடங்குவர். கேட்டால் ‘காதல் தோல்வி’ என்று கூறுவர். தான் கொண்டுள்ளது காதல்தானா என்று கூட சரியாகத் தெரியாத நிலையில் ஒரு பெண் எப்போதோ ஏதோ இரண்டு வார்த்தைகள் பேசியதை வைத்துக் கொண்டு அவள் தன்னைத்தான் விரும்புகிறாள் என்றும், இவன் இருக்கும் திசை பக்கம் பார்த்தாலே தன்னைத் தான் பார்க்கிறாள் என்றும் தவறாக எண்ணிக் கொண்டு காதல் மயக்கத்தில் கிடப்பர்.

மேலும், நண்பர்களிடம் இதைப் பற்றி இட்டுக்கட்டி பேசுவது, தனிமையில் அமர்ந்து அந்தப் பெண்ணையும், அவள் பேசிய வார்த்தைகளையும் மனதிற்குள் மீண்டும் மீண்டும் ‘ரீ பிளே’ செய்து பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதுண்டு. தப்பித் தவறி அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி விட்டால் இவரது காதல் கோட்டை இடிந்து தரைமட்டமாகி, ஒரு சாம்ராஜ்யமே அழிந்து விட்டதாக நினைத்துக் கொண்டு, கண்ட கண்ட மருந்து மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிவதும் உண்டு.

தேசத்துக்காக உயிரைத் துறப்பது, உயர்ந்த நோக்கத்துக்காக உடலை வருத்திக் கொள்வது இவை யாவும் அறிவுடைமை. ஆனால் அற்ப காரணங்களுக்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அறிவீனம். இப்படிப் பட்டவர்களால் அவர்களுக்கும் பயனில்லை. மற்றவர்களுக்கும் பலனில்லை. காட்டில் எரியும் தீயால் யாருக்கு என்ன பயன்? அது வீட்டு அடுப்பில் எரிந்தாலாவது சமையலுக்குப் பயன்படும்.

தங்கள் பிள்ளை உலகைச் சுமக்கும் கவலையோடு இருந்தால், நேரம் தவறி வீட்டிற்கு வந்தால், தேவைக்கு அதிகமாகப் பணம் கேட்டால், ரகசியமாக செல்போன் வைத்திருந் தால், போனில் நீண்ட நேரம் தனிமையில் பேசிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு காதல் வைரஸ் பிடித்திருக்கலாம். காதல் என்னும் மாயக்குரங்கை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

காதல் என்கிற பெயரில் வளர்த்து ஆளாக்கிய பெற்றோரின் நம்பிக்கையில் மண் அள்ளிப் போடுகிறார்கள் பிள்ளைகள். பெற்றோரின் கனவுகளைச் சிதைத்து கூடவே தங்கள் லட்சியத்தையும் வருங்காலத்தையும் தொலைத்து விடுகிறார்கள்.

கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று மனம் போன போக்கெல்லாம் போகக் கூடாது என்பதற்கு ஒரு கதை சொல்வார்கள். விடுதலை என்ற பெயரில் தறுதலைகளாக ஒரு மண்ணாங்கட்டியும் ஒரு இலையும் காதலர் களாயின. ஒருவரை ஒருவர் கடைசிவரை இணைபிரியாது காப்பாற்றுவது என உறுதி எடுத்துக் கொண்டன.

காற்றடித்தது ஒரு நாள். இலையை அடித்துச் செல்லாமல் அதன் மீது உட்கார்ந்து கொண்டு இலையைக் காப்பாற்றியது மண்ணாங் கட்டி. மழைபெய்தது மறுநாள். மண்ணாங்கட்டி மீது இலை அமர்ந்து கொண்டு அதனைக் கரையாமல் காத்தது. ஒரு நாள் காற்றும் மழையும் சேர்ந்து அடித்தன. மழையில் கரைந்து காணாமல் போனது மண்ணாங்கட்டி. காற்றில் சிக்குண்டு சிதறிப் போனது இலை. மதியாதவர்களுக்கும், மதியைக் கொள்ளாதவர்களுக்கும் தொடக்கம் இனித்தாலும் முடிவு இதுதான்.

‘காதலுக்கு கண் இல்லை’ என்பதை தங்களுக்கு சாதகமாக புரிந்து கொண்டு இளம் உள்ளங்கள் காதலில் திளைப்பதாக எண்ணி மகிழ்கிறார்கள். கனவு உலகத்திற்குள் உலா வரும் வரை இவர்களுக்கு உள்ள காதலுக்குக் கண் இல்லைதான். ஆனால், கனவு உலகைக் கடந்து நடைமுறை வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்து கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கும் போது காதலுக்குக் கண் வந்துவிடும்.

காதல் அரும்பும்போது சாதி, மதம், அந்தஸ்து, படிப்பு எல்லாம் தடையாக இருப்பதில்லை. ஆனால் அது கல்யாணத்தில் நிறைவேறத் துடிக்கும்போதுதான் காதலுக்கு சாதி மதம் உள்ளிட்ட அனைத்தும் தடையாக நிற்பது தெரிய வரும். குடும்பத்திற்குள் தீர்க்க முடியாத குழப்பங்கள், சச்சரவுகள் ஏற்படும். காதலிக்கும்போது இருந்த பூரிப்பு, மகிழ்ச்சி, வியப்பு எல்லாம் கல்யாணத்திற்குப் பிறகு காணாமல் போய்விடும். கல்யாணத்திற்கு பிறகு காதலே நின்று விடும்.

அறியாப் பருவத்தில் இனித்த காதல், வாழ்க்கை ஓட்டத்தில் வேம்பாய்க் கசக்கத் தொடங்குகிறது. வழிகாட்ட பெற்றோரோ, உற்றாரோ இல்லாத நிலையில் தவறான முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்கள்.

‘காதலுக்காக உயிரைக் கொடுக்கவும் தயார்’ என்று வீர வசனம் பேசலாம். ‘சாதி, மதம், பணம், அந்தஸ்து அனைத்தையும் தூக்கி எறியத் தயார்’ என்று உறுதி மொழி கொடுக்கலாம். ‘பணமும், சொத்தும் எங்களுக்குத் தேவை யில்லை. நாங்களும் எங்களின் காதலும்தான் விலை மதிக்க முடியாத சொத்து’ என்று உள்ளத்தை உருகும் பொன் மொழிகளைக் கூறலாம்.

ஆனால் வாழ்க்கை என்பது வெறும் கற்பனையில் குடும்பம் நடத்துவது அன்று, நடைமுறையில் வாழ்ந்து காட்டுவது என்பதை உணர வேண்டும். காதல் வயப்பட்ட இருவர் காதலன்-காதலியாக இருக்கும்வரை காதல் சந்தனக் கட்டையாக மணம் வீசும். கணவன்-மனைவி என்று ஆகிவிட்டால் எரிந்து போன விறகுக்கட்டையாக புகை வீசும்.

காதல் என்பது அகராதியிலிருந்து நீக்கப்பட வேண்டிய கெட்ட வார்த்தையோ, உச்சரிக்கக்கூடாத பாவச் சொல்லோ அல்ல லட்சியங்களைப் பொசுக்கி விட்டுத் துளிர்க்கும் இளம் பருவக் காதல் தேவையா? என்பதே கேள்வி. பெரும்பாலும் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் ஏற்படுவது வெறும் இனக்கவர்ச்சியே அன்றி, வேறெதுவும் இல்லை.

‘இளமையில் காதலிக்காமல் முதுமையிலா காதலிப்பார்கள்’ என்பதை ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும் காதலிப்பதற்கு மட்டும்தானா இளமை என்றகேள்வியும் எழுகிறது. உள்ளத்தில் பொங்கி வரும் உற்சாகமும், முறுக்கேறிய வலிமையும், இளமைக்கே உரிய புதிய சிந்தனைகளும் இளம் பருவக் காதல் என்றமாய வலைக்குள் சிக்கி மறைந்து போவது சரியா? என்பதை யோசிக்க வேண்டும்.

இளமை என்பது சாதனைகளுக்கான களம். இளமையில் தொலைத்து விட்ட லட்சியங்களைப் பிற்காலத்தில் மீட்டெடுக்க நினைத்தாலும் அது முடியாது. சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் குறிக் கோளும், புதுமை படைக்க விரும்பும் ஒருமுகச் சிந்தனையுமே இன்றைய இளைஞனின் இலக்காக இருக்க வேண்டும்.

யாரும் பார்த்து விடக்கூடாது, யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்றெல்லாம் பயந்து பயந்து மனசுக்குள் பொத்திப் பொத்திக் காதலை மலர வைத்தது நேற்றைய காதல். கண்டதும் காதல், பார்த்ததும் உருகல், தொட்டதும் ஊர்விட்டு ஓடல் என்பதே இன்றைய காதல். ஊடகங்கள் காதலுக்கு பின் நேரக்கூடிய வலி, வேதனை, ரணம் என அனைத்தையும் படைப்பு நேர்மையுடன் வெளியிட்டால் இளைய மனங்கள் தெளிவடையும்.

வாழ்க்கை மொட்டவிழும் பருவம் இளமைப் பருவம். இந்தப் பருவம் லட்சியங்களைத் தேடிப் பிடிப்பதற்கான பருவம். காதலுக்கு ஒருவரை தேடிப் பிடிக்கும் பருவம் அல்ல. இப்பருவத்தில் கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தாலும், கண்ணாடி கைநழுவி கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கி விடுவது போல் வாழ்க்கையும் நொறுங்கி விடும்.

இளமைப் பருவம் ஒற்றைக் கண் சிமிட்டலில் முடிந்து போய் விடும். அதற்குள் நம் சுய அடையாளத்தை அமைத்துக் கொள்வது மிகமிக முக்கியம். காதல் நங்கூரம் சரியான இடத்தில், சரியான பருவத்தில் பாய்ச்சப்பட வேண்டும். காதலில் புறப்பாதுகாப்பை விட மனக்கட்டுப்பாடாகிய அகப்பாதுகாப்பு தான் உன்னதமானது.
லட்சியங்களுக்காக காதலைக் கொஞ்ச காலம் காக்க வைக்கலாம். தவறில்லை. காத்திருக்கும் காதலுக்கே வலிமையும், மதிப்பும் அதிகம். காதல் வெறும் பொழுதுபோக்கல்ல, வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். கண்ணியமும் கட்டுப் பாடும் காதலுக்கும் உரியது.

(எதையோ தேடியபோது இது கிடைத்தது. அன்பர்களுக்கும் சுவாரசியமளிக்கும் என்று நம்புகிறேன்.)

தண்டபாணி

right and left

இடதுசாரிகளும், வலதுசாரிகளும்

இடதுசாரிகள், வலதுசாரிகள் என்ற சொற்கள் ஒரு பொது பிம்பத்தை
கட்டமைக்கும் அளவிற்க்கு மிகவும் பரவலாக உபயோகிக்கபடுகின்றன.
இடதுசாரி என்றால் அவர் ஒரு ஏழை பங்காளன், ஏற்ற தாழ்வுகளை
அகற்றப் பாடுபடுபவர், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பவர், மதவாதத்தை
எதிர்ப்பவர் ; வலதுசாரி என்றால் அவர் பணக்கார்களின் ஆதாரவாளர்,
ஏழைகளின் எதிரி, தொழிலாளர்களை "சுரண்டுபவர்", ஏகாதிபத்திய
ஆதரவாளர், ஃபாசிசவாதி, மதவாதி, கொடூர நெஞ்சம் படைத்தவர்,
இப்படி சில முன்முடிவுகளை இந்த "லேபில்கள்" மூலம், ஒருவரை
பற்றி முத்திரை குத்த பயன்படுத்தப்படுகிறது.

இவை எல்லாம் வெறும் முத்திரைகள். அர்த்தமற்றவை. ஆழமற்ற
லேபில்கள். வாதங்களை எளிமைபடுத்த உபயோகப்படும் சொல்லாடல்கள்.
அவ்வளவுதான்.

வலதுசாரி என்றால் அவன் ஒரு ஃபாசிஸ்ட் அல்ல. இடதுசாரி என்றால்
அவன் ஒரு ஃபாசிச எதிர்ப்பளரும் அல்ல. ஃபாசிசத்தை முன் மொழிந்த
சர்வாதிகாரியான முசோலனியும் வலதுசாரிதான். லிபரல் ஜனனாயகத்தை,
மக்களாட்சியை முன்மொழிந்த எர்கார்ட் (ஜெர்மன் அதிபர்) போன்றவர்களும்
அதே வலதுசாரி என்ற லேபில் / முத்திரையின் கீழ் சேர்க்கப்படுகிறார்கள்.

சே குவாராவும் இடதுசாரிதான், நேருவும் இடதுசாரிதான். முன்னவர்
பாரளுமன்ற ஜனனாயகத்தில் நம்பிக்கை இல்லாத போராளி, பின்னவர்
ஜனனாயகவாதி. எனவே, இந்த வலது / இடது லேபில்கள், முன்முடிவுகளை
அளித்து, ஒருவரை பற்றிய சரியான எடைபோடுதலை செய்யவிடாமல்
குழப்பும்.

வலதுசாரிகள் என்றால் அவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்ல. எந்த
வகை அடிப்படைவாதமும் ஃபாசிமே ஆகும். எனவே சரியான
சொல்லாடல்கள் : ஃபாசிசவாதி / ஜனனாயகவாதி. அடிப்படை மனித
உரிமைகளை மதிப்பவர் ஜனனாயகவாதி. மறுப்பவர் ஃபாசிசவாதி.

அடிப்படை ஜனனாயக உரிமைகளில் சொத்துரிமையும் அடக்கம். அதை
ஜனனாயக வழியில் முன்மொழிதலே வலதுசாரி சிந்தனைகள் எனலாம்.
(அப்படித்தான் எம்மை கருதுகிறேன்). ஆனால் ஃபாசிச முறையில் எதை
முன்மொழிந்தாலும் அது ஏற்க்கமுடியாது. ஃபாசிஸ்டுகள் இடது / வலது
இரு தளங்களிலும் உள்ளனர். எனவே மேலும் குழப்பம்.

உதாரணமாக இடி அமின், சதாம் ஹுசைன் போன்றவர்கள் ஃபாசிஸ்டுகள்
என்பதை சுலபமாக உணரலாம். ஆனால் மாவோ, ஜோஸஃப் ஸ்டாலின்
போன்றவர்களை ஒரு ஃபாஸிஸ்ட் என்று உணர்வது கடினம். அவர்கள்
சித்தாந்தரீதியாக "இடதுசாரிகள்" ; பொது உடைமைவாதிகள், பாட்டாளி
வர்கத்தின் ரட்சகர்கள் என்று இன்றும் சில தீவிர மார்க்சியவாதிகளால்
கொண்டாடப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் செய்த
செயல்கள் பற்றிய முழுவிபரமும் தெரியாமல், அல்லது தெரிந்தும்,
அதை "வரலாற்று கட்டாயங்கள்" என்று நியாயபடுத்திக்கொண்டு
கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள்.

வலதுசாரிகள் என்றால் ஏழைகளின் எதிரிகள் என்று ஒரு பிம்பம்.
ஆனால் அது முற்றிலும் தவறான கட்டமைப்பு. சுதந்திர சந்தை
பொருளாதார கொள்கைகள் மூலம், வளர்ந்த நாடுகள் அனைத்தும்
(முக்கியமாக இரண்டாம் உலகபோரில் அழிந்த ஜெர்மனி, ஜப்பான்,
தென் கொரியா, மலேயா போன்ற நாடுகள்) ஏழ்மையை பெருவாரியாக
குறைத்த வரலாறு பெரிதாக அறியப்படவில்லை. ஆனால் அந்நாடுகள்
பின்பற்றும் கொள்கைகள் "வலதுசாரி" கொள்கைகள். நேர் எதிராக
"இடதுசாரி" கொள்கைகளை (பல பாணிகளில்) பின் பற்றிய சுதந்திர
இந்தியா போன்ற நாடுகளும், சோவியத் ரஸ்ஸிய, வட கொரியா
போன்றவை வறுமையை பரவலாக்கி, ஊழல் மிகுந்து, ஏறக்குறைய
ஃபாசித்தை உருவாக்கி சீரழந்தன. இதிலிருந்தே வலதுசாரிகள் என்றால்
ஏழைகளின் எதிர்கள், ஏழைகளை ஏழைகளாகவே இருக்க செய்யும்
பிற்போக்காளர்கள் என்ற பிம்பம் உடைகிறது.

30 வருடங்களுக்கு முன்பு வரை இந்திய அரசியலில் சரளமாக
சில‌ சொற்கள் பிரயோகிக்கப்பட்டன : 'சோசியலிஸ்டுகள், ஏழை
பங்காளர்கள், முற்போக்காளர் / பிற்போக்காளர்', இன்னபிற. முக்கியமாக
இந்த முற்போக்காளர் / பிற்போக்காளர் என்ற முத்திரைகள் விளைவித்த
நாசம் மிக அதிகம். வலதுசாரிகள் எல்லாம் பிற்போக்காளர்கள்,
இடதுசாரிகள் எல்லாம் முற்போக்காளர்களாம். அதனால வலதுசாரி
என்று முத்திரை குத்தப்பட்ட அனைவரும் ஓரங்கட்டப்பட்டனர்.
அம்முத்திரையை கண்டு அனைவரும் பயந்தனர். முற்போக்காளர்
என்ற முத்திரையை விரும்பினர். இது அறிவுஜீவிகள் மத்தியில்
மட்டுமல்ல, பல அரசியல் கட்சிகள் வட்டத்திலும் நிலவியது.
முக்கியமாக அன்றைய ஆளும் கட்சியாக, பலமாக, பல காலம்
ஆண்ட காங்கிரஸ் தலைவர்களிடம் மிகுதியாக இருந்தது. இந்திரா
காந்தியின் சர்வாதிகார போக்கை எதிர்க்க துணிந்தவர்களுக்கு
இந்த வலதுசாரி பட்டம் கிடைக்கும் என்பதாலேயே பலரும்
"இடதுசாரி முற்போக்குவாதி" என்ற முத்திரை பெற துடித்து,
இந்திரா காந்தியின் ஃபாசிதற்க்கு துணை போயினர்.
நல்லவேளையாக இது போன்ற லேபில்கள் இன்று அரசியல்
சூழலில் இல்லாமல் ஆனாது. ஊழல் மட்டும்தான் இன்று பரவலாக உள்ளது

Athiyaman Karur R

alexander flemming

அலெக்சாண்டர் ஃபிளமிங் (1881-1955)

சில நோய் நுண்மங்களின் வளர்ச்சியைத் தடை செய்யப் பயன்படும் "பென்சிலின்" என்ற மருந்தைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் ஃபிளமிங் ஆவார். இவர் ஸ்காட்லாந்திலுள்ள லாக்ஃபீல்டு என்னும் ஊரில் 1881 ஆம் ஆண்டு பிறந்தார். லண்டனிலுள்ள புனித மேரி மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்ற பின்பு, இவர் தொற்று நோய்த் தடைக்காப்பு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பின்னர், முதல் உலகப் போரில், காயத்தினால் உண்டாகும் தொற்று நோய்கள் பற்றி பல, நோய் நுண்மங்களுக்கு (Microbes) தீங்கு செய்வதைவிட மிகுதியாக உடலின் உயிரணுக்களுக்கு (Body Cells) தீங்கு விளைவிக்கின்றன என்பதை இவர் கண்டறிந்தார். நோய் நுண்மங்களுக்குத் தீங்கு செய்கிற, ஆனால் மனித உயிரணுக்களுக்குத் தீங்கு செய்யாத பொருள் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டியதன் அவசியத்தை இவர் உணர்ந்தார்.

முதல் உலகப் போர் முடிவுற்ற பின்பு ஃபிளமிங் மீண்டும் புனித மேரி மருத்துவமனையின் பணிக்குத் திரும்பினார். அங்கு இவர் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது 1922 ஆம் ஆண்டில் "லைசோசைம்" (Lysozyme) என்னும் பொருளை இவர் கண்டுபிடித்தார். இந்தப் பொருளை மனித உடல் உற்பத்தி செய்கிறது. அது சளியும், (Mucus) கண் ரும் அடங்கிய ஒரு பொருளாகும். இப்பொருள், மனித உயிரணுக்களுக்குத் தீங்கு செய்வதில்லை. இது சில நோய் நுண்மங்களை அழிக்கிறது. ஆனால், முக்கியமாக மனிதனக்குத் தீங்கு செய்யக்கூடிய நோய் நுண்மங்களை இது ஒன்றும் செய்வதில்லை. எனவே இந்தக் கண்டுபிடிப்பு தனிச் சிறப்புடையதாக இருந்த போதிலும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவில்லை.

ஃபிளமிங் தமது மிகப் பெரிய கண்டுபிடிப்பை 1928 ஆம் ஆண்டில் செய்தார். இவருடைய ஆய்வுக் கூடத்தில் வளர்க்கப்பட்ட நோய் நுண்ணுயிர்கள் (Staphylococcus Bacteria) மீது காற்றுப்பட்டு, ஒருவகைப் பூஞ்சக் காளானால் மாசுபட்டன. பூஞ்சக் காளானைச் சுற்றியிருந்த வளர்ச்சிப் பகுதியில் நோய் நுண்ணுயிர்கள் கரைந்து போயிருப்பதை ஃபிளமிங் கண்டார். நோய் நுண்ணுயிர்களுக்கு நஞ்சாக இருக்கக்கூடிய ஏதோ ஒரு பொருளை பூஞ்சக் காளான் உற்பத்திச் செய்கிறது என்பதை ஃபிளமிங் மிகவும் சரியாக ஊகித்தார். அதே பொருள், தீங்கு செய்யக் கூடியவேறு பலவகை நோய் நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தடை செய்வதையும் இவர் விரைவிலேயே மெய்பித்துக் காட்டினார். அந்தப் பொருளுக்குப் பூஞ்சக் காளானின் (Pencillium notatum) பெயரைக் கொண்டே "பென்சிலின்" (Penicillin) எனப் பெயரிட்டார். இந்தப் பொருள், மனிதர்களுக்கோ, விலங்குகளுக்கோ நஞ்சாக இருக்கவில்லை என்பதையும் இவர் கண்டறிந்தார்.

ஃபிளமிங்கின் ஆராய்ச்சி முடிவுகள் 1929 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டன. ஆனால், முதலில் இவை மிகுதியாகக் கவனத்தைக் கவரவில்லை. பென்சிலினை முக்கிய மருந்துப் பொருளாகப் பயன்படுத்தலாம் என ஃபிளமிங் கருதினார். ஆனால், பென்சிலினைத் தூய்மைப் படுத்தும் ஒரு முறையை உருவாக்க அவரால் கூட இயலவில்லை. அதனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அற்புத மருந்துப் பொருள் பயன்படுத்தப்படாமலே இருந்தது.

இறுதியில் 1930 களில் ஹோவர்டு வால்ட்டர் ஃபுளோரி, எர்னஸ்ட் போரிஸ் செயின் என்ற இரு பிரிட்டிஷ் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஃபிளமிங் எழுதிய கட்டுரையைப் படித்தார்கள். ஃபிளமிங் செய்த அதே ஆராய்ச்சியை அவர்களும் செய்து பார்த்தார்கள். அவருடைய முடிவுகளைச் சரி பார்த்தார்கள். பின்னர், அவர்கள் பென்சிலினைத் தூய்மைப்படுத்தினார்கள். அவ்வாறு தூய்மைப்படுத்தப்பட்ட பொருளை ஆய்வுக்கூட விலங்குகளிடம் சோதனை செய்தார்கள். 1841 ஆம் ஆண்டில், பென்சிலினை நோயுற்ற மனிதர்களிடம் பரிசோதனை செய்தார்கள். புதிய மருந்துப் பொருள் வியக்கத்தக்க வகையில் நோய்த் தடுப்பாற்றல் வாய்ந்ததாக இருப்பதை அவர்கள் தெளிவாகக் காட்டினார்கள்.

பிரிட்டிஷ் அரசும், அமெரிக்க அரசும் அளித்த ஊக்கம் காரணமாக, மருந்து நிறுவனங்கள் இத்துறையில் இறங்கி, பேரளவில் பென்சிலினை உற்பத்தி செய்யும் முறைகளை விரைவிலேயே கண்டுபிடித்தன. முதலில் போரில் காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காகவே பென்சிலின் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 1944 ஆம் ஆண்டுவாக்கில், பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் குடிமக்களின் நோய்களை குணப்படுத்துவதற்கும் பென்சிலின் கிடைகக்லாயிற்று. இரண்டாம் உலகப் போர் 1945 ஆம் ஆண்டில் முடிவடைந்த பிறகு, பெனிசிலினைப் பயன் படுத்துவது உலகெங்கும் பரவியது.

பெனிசிலின் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, மற்ற வகை நோய் நுண்மத் தடை மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தீவிரமாயின. அந்த ஆராய்ச்சிகளின் பலனாக வேறுபல "அதிசய மருந்துப் பொருட்களும்" கண்டுபிடிக்கப் பட்டன. எனினும், பெனிசிலின், மிகப் பெருமளவில் பயன் படுத்தப்படும் நோய் நுண்மத் தடை மருந்தாக இன்றும் இருந்து வருகிறது.

மிகப் பலவகை தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களுக்கு (Microorganisms) எதிராகப் பென்சிலின் செயல் விளைவுடையதாக இருப்பதே, இது தொடர்ந்து தலையாய நோய் நுண்மத்தடை மருந்தாகப் பயன்பட்டு வருவதற்குக் காரணமாகும்.

மேக நோய் (Syphilis), மேக வெட்டை நோய் (Gonorrhea), செம்புள்ளி நச்சுக்காய்ச்சல் (Scarlet Fever), தொண்டை அழற்சி நோய் (Diphtheria), சில வகை மூட்டு வீக்கம் (Arthritis), மார்புச் சளி நோய் (Bronchitis), தண்டு மூளைக் கவிகைச் சவ்வு அழற்சி (Mennigitis), இரத்தம் நஞ்சாதல், கொப்புளங்கள்,எலும்பு நோய்கள், சீதசன்னி (Pneumonia), தசையழுகல் நோய் (Gangrene) ஆகிய நோய்களுக்கும் வேறு பல நோய்களுக்கும் சிகிச்சையளிப்பதற்குப் பென்சிலின் மருந்து பயன்படுகிறது.

பென்சிலினைப் பயன்படுத்துவதால் பெருமளவு பாதுகாப்பு ஏற்படுவது மற்றொரு முக்கியமான நன்மையாகும். சில தொற்று நோய்களுக்கு எதிராகப் பெனிசிலின் மருந்தின் 50,000 அலகுகள் செயல் விளைவுடையதாக இருக்கின்றன. எனினும், ஓர் நாளில் 10 கோடி அலகு பெனிசிலின் கூட எவ்விதத் தீய விளைவுகளுமின்றி ஊசி மருந்தாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறைந்த விழுக்காட்டு மக்களுக்குப் பென்சிலின் ஒவ்வாதிருந்த (Allergic) போதிலும் பெரும்பாலான மக்களுக்கு நோய்த் தடுப்பாற்றலும், பாதுகாப்பும் வாய்ந்த உன்னத மருந்தாகப் பென்சிலின் விளங்குகிறது.

பெனிசிலின் இதுகாறும் கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. எதிர்காலத்தில் அது இன்னும் பல கோடி மக்களைக் காப்பாற்றும் என்பது உறுதி. எனவே ஃபிளமிங்கின் கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை யாரும் மறுக்க முடியாது. ஆயினும், ஃபிளோரி, செயின் ஆகிய இருவரின் பணிக்கு எத்துணை மதிப்பு அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்துத்தான் இந்தப் பட்டியலில் ஃபிளமிங்குக்கு அளிக்கப்படும் இடம் அமையும். இன்றியமையாத கண்டுபிடிப்பினைச் செய்தவர் ஃபிளமிங் தான் என்பதால், அவருக்கே இந்தப் பெருமையின் பெரும் பகுதி சேர வேண்டும் என நான் கருதுகிறேன். அவர் மட்டும் இல்லாதிருந்தால் பென்சிலினைக் கண்டு பிடிக்க இன்னும் பல ஆண்டுகள் பிடித்திருக்கும். அவர் தமது முடிவுகளை வெளியிட்ட பிறகுதான் பென்சிலின் உற்பத்தி செய்வதற்கும், தூய்மைப்படுத்துவதற்கும் சீர்திருந்திய முறைகளைக் கண்டுபிடிக்க முடிந்தது.

ஃபிளமிங் மகிழ்ச்சிகரமாக இல்லற வாழ்க்கை நடத்தினார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. இவரது கண்டுபிடிப்புக்காக இவருக்கும், ஃபுளோரி, செயின் ஆகியோருக்கும் சேர்த்து 1945 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப் பட்டது. ஃபிளமிங் 1955 ஆம் ஆண்டில் காலமானார்.



நன்றி : http://ping.fm/O1hKX

the great alexander bc.356-323

மகா அலெக்சாந்தர் (கி.மு.356-323)

பண்டைய உலகில் பெருமளவு நிலப்பகுதியை வென்று மாபெரும் வெற்றி வீரராகத் திகழ்ந்தவர் மகா அலெக்சாந்தர் ஆவார். இவர் மாசிடோனியாவின் தலைநகராகிய பெல்லாவில் கி.மு. 356 ஆம் ஆண்டில் பிறந்தார். மாசிடோனிய அரசராகிய இரண்டாம் ஃபிலிப் இவருடைய தந்தை. ஃபிலிப் உண்மையிலேயே பேராற்றலும், முன்னறி திறனும் வாய்ந்தவராக விளங்கினார். அவர் தமது இராணுவத்தைத் திருத்தியமைத்து விரிவுபடுத்தினார். அதனைப் பெரும் வல்லமை பொருந்திய போர்ப்படையாக உருவாக்கினார். பின்னர், அவர் கிரீசுக்கு வடக்கிலிருந்த சுற்றுப்புறப் பகுதிகளை வெல்வதற்கு இந்தப் படையைப் பயன்படுத்தினார். பிறகு, தென்திசையில் திரும்பி கிரீசின் பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர பெரும்பகுதியை அடிமைப்படுத்தினார். அடுத்து, கிரேக்க நகர அரசுகளின் ஒரு கூட்டாட்சியை (Federation) ஏற்படுத்தினார். அந்தக் கூட்டாட்சிக்குத் தாமே தலைவரானார். கிரீசுக்குத் தெற்கிலிருந்த பெரிய பாரசீகப் பேரரசின் மீது படையெடுப்பதற்கு அவர் திட்டமிட்டுக் கொண்டிருந்தார். கி.மு. 336 ஆம் ஆண்டில் அந்தப் படையெடுப்புத் தொடங்கியிருந்த நேரத்தில் 46 வயதே ஆகியிருந்த ஃபிலிப் கொலையுண்டு மாண்டார். தந்தை இறந்த போது அலெக்சாந்தருக்கு 20 வயதே ஆகியிருந்தது. எனினும், அவர் மிக எளிதாக அரியணை ஏறினார். இளம் வயதிலிருந்தே அலெக்சாந்தருக்குத் தமக்குப்பின் அரச பீடம் ஏறுவதற்கேற்ற பயிற்சியை ஃபிலிப் மன்னர் மிகக் கவனத்துடன் அளித்திருந்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இளம் அலெக்சாந்தர் கணிசமான அளவுக்குப் போர் அனுபவம் பெற்றிருந்தார். இவருக்கு அறிவுக் கல்வி அளிப்பதிலும், ஃபிலிப் கவனக் குறைவாக இருக்கவில்லை. மேலைநாட்டின் நாகரிகத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் அடிகோலிய கிரேக்கப் பேரறிஞராகிய அரிஸ்டாட்டில், ஃபிலிபின் வேண்டுகோளுக்கிணங்கி, அலெக்சாந்தருக்கு ஆசிரியராக இருந்து கல்வி கற்பித்தார்.

கிரீசிலும், வடபகுதிகளிலுமிருந்த மக்கள், ஃபிலிப் மன்னரின் மரணம், மாசிடோனியாவின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு ஒரு சிறப்பு வாய்ப்பு எனக் கருதினார். ஆயினும் அலெக்சாந்தர், தாம் பதவியேற்ற ஈராண்டுகளுக்குள்ளேயே, இவ்விரு மண்டலங்களையும் முற்றிலும் தன் வயப்படுத்தினார். பிறகு இவர் பாரசீகத்தின் மீது கவனம் செலுத்தலானார்.

மத்திய தடைக்கடலிலிருந்து இந்தியா வரையிலும் பரவியிருந்த ஒரு விரிந்த பேரரசை 200 ஆண்டுகளாகப் பாரசீகர்கள் ஆண்டு வந்தனர். பாரசீகம் வல்லமையின் உச்சத்தில் இல்லாதிருந்த போதிலும் அது அப்போதிருந்த உலகிலேயே மிகப் பெரிய, வலிமை வாய்ந்த, செல்வச் செழிப்புமிக்க வல்லரசாக விளங்கியது.

அலெக்சாந்தர் பாரசீகத்தின் மீது கி.மு. 334 ஆம் ஆண்டில் படையெடுப்பைத் தொடங்கினார். ஐரோப்பாவில் தாம் வெற்றி கொண்ட நாடுகளில் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்காக அலெக்சாந்தர் தமது படையின் ஒரு பகுதியைத் தாயகத்திலேயே விட்டுவிட்டுச் செல்ல வேண்டியிருந்தது. எனவே, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவர் பாரசீகத்தின் படையெடுப்பைத் தொடங்கியபோது, அவருடன் 35,000 வீரர்கள் மட்டுமே சென்றனர். இது, பாரசீகப் படையினரின் எண்ணிக்கையைவிட மிகக் குறைவாக இருந்தது. அலெக்சாந்தரின் படை, பாரசீகப் படையைவிடச் சிறியதாக இருந்தபோதிலும், அவரது படை பல வெற்றிகளைப் பெற்றது. அவரது இந்த வெற்றிக்கு மூன்று முக்கியப் காரணங்கள் கூறலாம். முதலாவதாக, ஃபிலிப் மன்னர் விட்டுச் சென்ற இராணுவம், பாரசீகப் படைகளைவிட நன்கு பயிற்சி பெற்றதாகவும், சீராக அமைக்கப்பட்டதாகவும் இருந்தது. இரண்டாவதாக, அலெக்சாந்தர் மகத்தான இராணுவத் திறன் வாய்ந்த ஒரு தளபதியாக விளங்கினார். அவர் வரலாற்றிலேயே தலைசிறந்த தளபதியாகத் திகழ்ந்தார் என்றுகூடக் கூறலாம். மூன்றாவதாக, அலெக்சாந்தர் தனிப்பட்ட முறையில் அஞ்சாநெஞ்சம் வாய்ந்தவராக இருந்தார். ஒவ்வொரு போரின் தொடக்கக் கட்டங்களிலும் படையணிகள் பின்னாலிருந்து ஆணையிடுவது அலெக்சாந்தரின் வழக்கமாக இருந்த போதிலும், முக்கியமான குதிரைப்படைக்குத் தாமே நேரடியாகத் தலைமைத் தாங்கிப் போரிடுவதைத் தமது கொள்கையாகக் கொண்டிருந்தார். இது மிக அபாயகரமான நடவடிக்கையாக இருந்தது. இதனால், அவர் பலமுறை காயமடைந்தார். ஆனால், அவரது படையினர், தங்களுடைய அபாயத்தில் தங்கள் மன்னரும் பங்கு பெறுவதாகக் கருதினர். தாம் மேற் கொள்ளத் தயங்கும் அபாயத்தை ஏற்கும் படி தங்களை அரசர் கேட்க மாட்டார் என்று அவர்கள் நம்பினார்கள். இதனால் அவர்களின் மன ஊக்கம் மிக உச்ச நிலையில் இருந்தது.

அலெக்சாந்தர் தமது படைகளை முதலில் சிறிய ஆசியா (Asia Minor) வழியாகச் செலுத்தினார். அங்கு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுசிறு பாரசீகப் படைகளைத் தோற்கடித்தார். பிறகு, வடக்குச் சிரியாவுக்குள் நுழைந்து, இஸ்ஸஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய பாரசீகப் படையைப் படுதோல்வியடையச் செய்தார். அதன் பின்பு, அலெக்சாந்தர் மேலும் தெற்கே சென்று, இன்று லெபனான் என வழங்கப் படும் அன்றையப் பொனீசியாவின் தீவு நகரமாகிய டயர் நகரத்தை மிகக் கடினமான ஏழுமாத முற்றுகைக்குப் பிறகு கைப்பற்றினார். டயர் நகரத்தை அலெக்சாந்தர் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபோதே, அலெக்சாந்தருடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்டு, தமது பேரரசில் பாதியை அவருக்குக் கொடுத்துவிடத் தாம் தயாராக இருப்பதாகப் பாரசீக மன்னர் அலெக்சாந்தருக்கு தூது அனுப்பினார். இந்தச் சமரசத்தை ஏற்றுக் கொள்ளலாம் என அலெக்சாந்தரின் தளபதிகளில் ஒருவராகிய பார்மீனியோ கருதினார். நான் அலெக்சாந்தராக இருந்தால், இந்த சமரசத்தை ஏற்றுக் கொள்வேன், என்று பார்மீனியோ கூறினார். அதற்கு அலெக்சாந்தர் பார்மீனியோவாக இருந்தால் நானுங்கூட அதை ஏற்றுக் கொள்வேன் என்று விடையளித்தார்.

டயர் நகரம் வீழ்ச்சியடைந்த பின்பு, அலெக்சாந்தர் தொடர்ந்து தெற்கு நோக்கிச் சென்றார். இருமாத கால முற்றுக்கைக்குப் பிறகு காசா நகர் வீழ்ந்தது. எகிப்து போரிடாமலே அவரிடம் சரணடைந்தது. பின்னர், அலெக்சாந்தர் தம் படைகளுக்கு ஓய்வு கொடுப்பதற்காக எகிப்தில் சிறிது காலம் தங்கினார். அப்போது, 24 வயதே ஆகியிருந்த அலெக்சாந்தர் எகிப்து அரசராக (Pharoah) முடிசூட்டிக் கொண்டார். அவர் ஒரு கடவுளாகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர், அவர் தம் படைகளை மீண்டும் ஆசியாவுக்குள் செலுத்தினார். கி.மு. 331 ஆம் ஆண்டில் ஆர்பெலா என்னுமிடத்தில் நடந்த இறுதிப் போரில் ஒரு பெரிய பாரசீகப் படையை அவர் முற்றிலுமாகத் தோற்கடித்தார்.

ஆர்பெலா வெற்றிக்குப் பிறகு அலெக்சாந்தர் பாபிலோன் மீது படையெடுத்தார். சூசா, பெரிசிப்போலிஸ் போன்ற பாரசீகத் தலைநகர்களையும் தாக்கினார். மூன்றாம் டரையஸ் என்ற பாரசீக மன்னர், அலெக்சாந்ரிடம் சரணடைந்து விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தார். அவ்வாறு அவர் சரணடைவதைத் தடுப்பதற்காக அவரை அவருடைய அதிகாரிகள் கி.மு. 330 ஆம் ஆண்டில் கொலை செய்தனர். எனினும், அலெக்சாந்தர் டரையசுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசரைத் தோற்கடித்து அவரைக் கொன்றார். மூன்றாண்டுகள் போரிட்டு கிழக்கு ஈரான் முழுவதையும் அடிமைப் படுத்தினார். பின்பு, மத்திய ஆசியாவுக்குள் புகுந்தார்.

இப்போது பாரசீகப் பேரரசு முழுவதும் அலெக்சாந்தருக்கு அடிமைப்பட்டு விட்டது. அத்துடன் அவர் தாயகம் திரும்பி, புதிய ஆட்சிப் பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால், நாடுகளைப் பிடிக்கும் அவரது வேட்கை இன்னும் தணியாமலே இருந்தது. அவர் தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் மீது படையெடுத்துச் சென்றார். அங்கிருந்து, அவர் தமது இராணுவத்தை இந்துகுஷ் மலைகளைத் தாண்டி இந்தியாவுக்குள் செலுத்தினார். மேற்கு இந்தியாவில் பல வெற்றிகளைப் பெற்றார். கிழக்கு இந்தியா மீது படையெடுக்க விழைந்தார். ஆனால், பல ஆண்டுகள் இடைவிடாமல் போரிட்டுக் களைப்பும் சலிப்பும் அடைந்த அவரது படை வீரர்கள், மேற்கொண்டு படையெடுத்து செல்ல மறுத்தனர். அதனால், அலெக்சாந்தர் அரை மனதுடன் பாரசீகம் திரும்பினார்.

பாரசீகம் திரும்பிய பின்னர், அடுத்த ஓராண்டுக் காலத்தை தமது பேரரசையும் இராணுவத்தையும் மறுசீரமைப்புச் செய்வதில் செலவிட்டார். இது மிகப் பெரிய சீரமைப்புப் பணியாக விளங்கியது. கிரேக்கப் பண்பாடுகள் உண்மையான நாகரிகம் என்று அலெக்சாந்தர் நம்பினார். கிரேக்கர்கள் அல்லாத பிற மக்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் என அவர் கருதினார். கிரேக்க உலகம் முழுவதிலுமே இந்தக் கருத்துதான் நிலவியது. அரிஸ்டாட்டில் கூட இக்கருத்தையே கொண்டிருந்தார். ஆனால், பாரசீகப் படைகளை தாம் முற்றிலுமாகத் தோற்கடித்த பின்னர், பாரசீகர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர் என்பதை அலெக்சாந்தர் உணரலானார். தனிப்பட்ட பாரசீகர்கள், தனிப்பட்ட கிரேக்கர்களைப் போன்று அறிவாளிகளாகவும், திறமைசாலிகளாகவும், மதிப்புக்குரியவர்களாகவும் இருக்க முடியும் என்பதை அவர் அறிந்து கொண்டார். அதனால், அவர் தமது பேரரசின் இரு பகுதிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கிரேக்கர்-பாரசிகக் கூட்டுப் பண்பாட்டையும் முடியரசையும் ஏற்படுத்தி அதன் அரசராகத் தாமே ஆட்சி செலுத்த வேண்டும் என்று திட்டமிட்டார். இந்தக் கூட்டரசில் பாரசீகர்கள், கிரேக்கர்கள், மாசிடோனியர்கள் ஆகிய மூன்று பிரிவினரும் சரிநிகரான மனதார விரும்பியதாகத் தோன்றுகிறது. தமது இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக, ஏராளமான பாரசீகர்களை அவர் தமது படையில் சேர்த்துக் கொண்டார். கிழக்கு-மேற்குத் திருமணம் என்ற பெயரில் ஒரு மாபெரும் விருந்தையும் நடத்தினார். இந்த விருந்தின்போது பல்லாயிரம் மாநிடோனியப் படை வீரர்களுக்கும் ஆசியப் பெண்களுக்கும் மணம் முடிக்கப் பெற்றது. அலெக்சாந்தர் கூட, தாம் ஏற்கெனவே ஓர் ஆசிய இளவரசியை மணம் புரிந்திருந்தபோதிலும் டேரியஸ் மன்னனின் மகளைத் திருமணம் செய்து கொண்டார்.

மறுசீரமைப்பு செய்யப்பட்ட தமது படைகளைக் கொண்டு மேலும் படையெடுப்புகளை நடத்த அலெக்சாந்தர் விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் அராபியர் மீது படையெடுக்கத் திட்டமிட்டிருந்தார். பாரசீகப் பேரரசுக்கு வடக்கிலிருந்த மண்டலங்களையும் கைப்பற்றவும் அவர் ஆசைப்பட்டார். இந்தியா மீது மறுபடியும் படையெடுக்கவும், ரோம், கார்தேஜ், மேற்கு மத்திய தரைக்கடல் பகுதி ஆகியவற்றை வெற்றி கொள்ளவும் அவர் திட்டமிட்டிருக்க வேண்டும். அவருடைய திட்டங்கள் என்னவாக இருந்திருப்பினும், மேற்கொண்டு படையெடுப்புகள் நடைபெறாமலே போயிற்று. கி.மு. 323 ஆம் ஆண்டு ஜூன் மாதத் தொடக்கத்தில் பாபிலோனில் இருந்த போது அலெக்சாந்தர் திடீரெனக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு நோயுற்றார். பத்து நாட்களுக்குப் பிறகு அவர் இறந்தார். அப்போது அவருக்கு 33 வயது கூட நிறைவடைந்திருக்கவில்லை.

அலெக்சாந்தர் தமது வாரிசை நியமித்துவிட்டுச் செல்லவில்லை. அவர் இறந்ததும், அரச பீடத்தைப் பிடிப்பதற்குக் கடும் போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் அலெக்சாந்தரின் தாய், மனைவிமார்கள், குழந்தைகள் அனைவரும் கொல்லப்பட்டனர். இறுதியில் அவரது பேரரசை அவருடைய தளபதிகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.

அலெக்சாந்தர் தோல்வி காணாமல், இளமையிலேயே மரணமடைந்தமையால், அவர் உணிரோடிருந்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்று பலவிதமான ஊகங்கள் நிலவின. அவர் மேற்கு மத்தியத் தரைக் கடல் பகுதி நாடுகள் மீது படையெடுத்திருந்தால், அவர் பெரும்பாலும் வெற்றியடைந்திருப்பார். அத்தகைய நேர்வில், மேற்கு ஐரீ

why i throw show, on Bush?

நான் ஏன் புஷ் ஷின் மீது செருப்பை வீசினேன் ?

குறிப்பு: ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், கடந்த வாரம் விடுதலையாகியுள்ள முன்தாஜர் அல் ஜெய்தி எழுதிய கீழ்க்காணும் கட்டுரை, கார்டியன் செய்தித்தாளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

முன்தாஜர் அல் ஜெய்தி
நான் விடுதலையடைந்து விட்டேன். ஆனால், எனது நாடு இன்னமும் போர்க் கைதியாக சிறை வைக்கப்பட்டிருக்கிறது. செயல் குறித்தும், செயல்பட்டவர் குறித்தும், நாயகனைக் குறித்தும், நாயகத்தன்மை வாய்ந்த செயல் குறித்தும், குறியீடு குறித்தும், குறியீடான செயல் குறித்தும் நிறையப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், எனது எளிமையான பதில் இதுதான். என் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும், எனது தாயகத்தை ஆக்கிரமிப்பானது எவ்வாறு தனது பூட்சுக் கால்களால் நசுக்கி இழிவுபடுத்த விரும்பியதென்பதும்தான், என்னை செயல்படக் கட்டாயப்படுத்தியது.
கடந்த சில ஆண்டுகளில், ஆக்கிரமிப்பின் துப்பாக்கி ரவைகளுக்கு இரையாகி பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தியாகிகள் தமது இன்னுயிரை இழந்தார்கள். கணவனை இழந்த ஐம்பது இலட்சம் பெண்களும், உடல் உறுப்புகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்களும் நிறைந்து கிடக்கும் தேசம்தான் இன்றைய இராக். நாட்டுக்குள்ளும், வெளியிலும் இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாய் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

துருக்கியர், அசிரியர், சபியர், யாசித் என அனைவரோடும் தனது அன்றாட உணவை அரபு இனத்தவன் பகிர்ந்துண்ட ஒரு தேசமாக நாங்கள் வாழ்ந்திருந்தோம். சன்னியுடன் ஷியா ஒரே வரிசையில் நின்று வழிபட்ட காலமது. கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்தவரோடு இசுலாமியர் இணைந்து கொண்டாடிய நாட்கள் அவை. இவையனைத்தும் பத்தாண்டுகளுக்கும் மேலான பொருளாதாரத் தடைகளுக்கிடையே, பசியை பகிர்ந்து கொள்ள நேர்ந்த போதிலும் கூட நீடித்திருந்தன..
எமது பொறுமையும், ஒற்றுமையும் ஏவப்பட்ட ஒடுக்குமுறையை மறக்கவிடாமல் தடுத்தன. ஆனால், ஆக்கிரமிப்போ சகோதரர்களையும், நெருக்கமானவர்களையும் பிரித்துத் துண்டாடியது. எங்கள் வீடுகளை சுடுகாடுகளாக்கியது.

நான் நாயகனல்ல. ஆனால் எனக்கு ஒரு கண்ணோட்டம் உண்டு. ஒரு நிலைப்பாடு உண்டு. எனது நாடு இழிவுபடுத்தப்படுவதைக் கண்ட பொழுது, எனது பாக்தாத் நகரம் தீயில் கருகிய பொழுது, எனது மக்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது, நான் இழிவுபடுத்தப்பட்டவனாக உணர்ந்தேன். ஆயிரக்கணக்கான துயரம் தோய்ந்த காட்சிகள் எனது மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன. என்னை போரிடத் தூண்டின. இழிவுபடுத்தப்பட்ட அபுகிரைப்…பலூஜா, நஜாஃப், ஹடிதா, சதர் நகரம், பஸ்ரா, தியாலா, மொசூல், தல் அஃபர் என ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற படுகொலைகள்… ஒரு அங்குலம் குறையாமல் காயமுற்ற எனது நாடு… எரியும் தேசத்தினூடாகப் பயணம் செய்து, நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் வலியைக் கண்ணால் கண்டேன். துயருற்றவர்களின் ஓலத்தை, அனாதைகளாக்கப்பட்டவர்களின் அலறலை காதுகளில் கேட்டேன். ஒரு அவமானம் என்னை அழுத்தி வாட்டியது. நான் பலவீனனாக உணர்ந்தேன்.

அன்றாடம் நிகழ்ந்த துயரங்களை தெரிவிக்கும் ஒரு தொலைக்காட்சி நிருபராக, எனது தொழில்சார்ந்த கடமைகளை முடித்த பின்னால், தரைமட்டமாக்கப்பட்ட இராக்கிய வீடுகளின் இடிபாடுகளின் தூசியையோ அல்லது ஆடைகளில் படிந்த இரத்தக் கறைகளையோ, நான் தண்ணீரால் கழுவிய பொழுதுகளில், பற்கள் நெறுநெறுக்க, பாதிக்கப்பட்ட எனது நாட்டு மக்களின் பேரால் பழிக்குப் பழி வாங்குவேனென நான் உறுதிமொழி எடுத்துக் கொள்வேன்.

வாய்ப்பு வழிதேடி வந்தது. நான் அதனைக் கைப்பற்றிக் கொண்டேன்.
ஆக்கிரமிப்பினூடாகவும், ஆக்கிரமிப்பின் விளைவாகவும் சிந்தப்பட்ட அப்பாவிகளின் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும், வேதனையில் கதறிய ஒவ்வொரு தாயின் ஒலத்திற்கும், துயரத்தில் முனகிய ஒவ்வொரு அனாதையின் கண்ணீருக்கும், பாலியல் வன்புணர்ச்சியால் சிதைக்கப்பட்ட பெண்களின் அலறலுக்கும், நான் செய்ய வேண்டிய கடமையாகக் கருதியதனால்தான் அச்செயலை செய்தேன்.
என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது: “நான் வீசியெறிந்த காலணி, உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.”
குற்றவாளியான ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த பொழுது, எனது நாட்டின் மீதான ஆக்கிரமிப்பை, எனது மக்களைப் படுகொலை செய்ததை, எனது நாட்டின் வளத்தை கொள்ளையடித்ததை, அதன் கட்டுமானங்களை தரைமட்டமாக்கியதை, அதன் குழந்தைகளை அகதிகளாக்கியதை, நான் ஏற்க மறுக்கிறேன் என்பதையே தெரிவிக்க விரும்பினேன்.
ஒரு தொலைக்காட்சி நிருபராக, நிர்வாகத்திற்கு தொழில்ரீதியாக ஏற்பட்ட சங்கடத்திற்கும், ஒருவேளை நான் பத்திரிக்கை தருமத்திற்கும் ஊறு விளைவித்திருப்பதாகக் கருதினால், அத்தகைய நோக்கம் எனக்கு இல்லாத போதும், எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்தத்தில், ஒவ்வொரு நாளும் தனது தாயகம் இழிவுபடுத்தப்படுவதைக் காணச் சகியாத ஒரு குடிமகனின் அணையாத மனசாட்சியை வெளிப்படுத்தவே நான் விரும்பினேன். ஆக்கிரமிப்பின் அரவணைப்பிற்குள்ளிருந்து தொழில் தர்மம குறித்து முனகுவோரின் குரல் நாட்டுப்பற்றின் குரலை விடவும் ஓங்கி ஒலிக்கக் கூடாது. நாட்டுப்பற்று பேச விரும்பும் பொழுது, அதனோடு தொழில் தர்மம இணைந்து கொள்ள வேண்டும்.

எனது பெயர் வரலாற்றில் இடம் பெறுமென்றோ, காசு, பணம் கிடைக்குமென்றோ, நான் இதனைச் செய்யவில்லை. நான் எனது நாட்டைக் காக்க மட்டுமே விரும்பினேன்

நன்றி . .போராட்டம் வலைப்பதிவு

New Year's tradition and customs around the world

New Year's tradition and customs around the world





With New Year's upon us, here's a look at some of the good luck rituals from around the world. They are believed to bring good fortune and prosperity in the coming year.



BABYLONIA



The people of Mesopotamia celebrate the New Year festival known as Akitu in the springtime. At this time they celebrate the arrival of the spring rains and the renewal of nature, as well as the renewal of the community.



At the festival the story of the creation is read out to remind people of the order of the universe and how it had risen out of the struggle between Marduck the god of heaven and Tiamut goddess of the powers of chaos.



BELGIUM



In Belgium New Year's Eve is called Sint Sylvester Vooranvond or Saint Sylvester Eve. The réveillon or New Year's Eve family parties are thrown. At midnight everyone kisses, exchanges good luck greetings, and drinks toasts to absent relatives and friends.



The cities and restaurants are crowded with people who bid farewell to the Old Year. New Year's Day is called Nieuwjaarsdag at this time of the year the children save money to buy decorated paper for writing holiday greetings to parents and god parents.



BENGALI



In Bengali they celebrate New Year on the 13th or 14th of April, which is the first day of the month that they call Baisakh. They clean and decorate their houses in preparation for the New Year.



They use flour to paint patterns on the ground out the front of their houses, in the middle of the design they place an earthenware pot, decorated with a red and white swastika which is a religious symbol, and filled with holy water and vermilion.



Also inside the pot they place a mango tree branch, which must consist of five twigs and a number of leaves. The pot symbolizes good fortune for the family.



BRAZIL



In Brazil the lentil is believed to signify wealth, so on the first day of the New Year they serve lentil soup or lentils and rice. In Brazil on New Year's Eve priestesses of the local macumba voodoo cult dress in blue skirts and white blouses for a ceremony dedicated to the goddess of water, Yemanja.



A sacrificial boat laden with flowers, candles and jewelry is pushed out to sea from Brazil's famous Ipenama beach in Rio de Janeiro.



BURMA



The Burmese New Year, which is based on the Fixed Zodiac system, falls on or around April 16. In Burma there is a three day New Year festival called Maha Thingyan, which is celebrated with prayers, fasting and fun.



During the festivities, buildings and temples are washed, and people throw water over each other. This is partly to welcome the heavy rains of the coming monsoon season. The Burmese New Year festival is held to celebrate the New Year, by performing meritorious deeds and spraying one another with Thingyan water.



CAMBODIA



The people of Cambodia use the Indian Calendar to calculate the start of the New Year festival. The festival starts on the 12, 13 or 14 April according to the Gregorian calendar and lasts for three days.



Cambodian New Year's Eve is the day before whichever date it is and it lasts three days. It is called Chaul Chnam Thmey, which means entering the New Year.



DENMARK



In Denmark it is a good sign to find your door heaped with a pile of broken dishes at New Years. Old dishes are saved year around to throw them at the homes where their friends live on New Years Eve. Many broken dishes were a symbol that you have many friends.



New Year's Eve is framed by two important items broadcast on television and radio, respectively the monarch's New Year Speech at 6pm and the striking of midnight by the Town Hall Clock in Copenhagen, which marks the start of the new year.



CHINA



The Chinese New Year ""Yuan Tan"" takes place between January 21 and February 20. The exact date is fixed by the lunar calendar, in which a new moon marks the beginning of each new month.



For the Chinese New Year, every front door is adorned with a fresh coat of red paint, red being a symbol of good luck and happiness. Although the whole family prepares a feast for the New Year, all knives are put away for 24 hours to keep anyone from cutting themselves, which is thought to cut the family's good luck for the next year.



ENGLAND



The British place their fortunes for the coming year in the hands of their first guest. They believe the first visitor of each year should be male and bearing gifts. Traditional gifts are coal for the fire, a loaf for the table and a drink for the master.



For good luck, the guest should enter through the front door and leave through the back. Guests who are empty-handed or unwanted are not allowed to enter first.



GERMAN



In Germany people would drop molten lead into cold water and try to tell the future from the shape it made. A heart or ring shape meant a wedding, a ship a journey, and a pig plenty of food in the year ahead.



People also would leave a bit of every food eaten on New Year's Eve on their plate until after Midnight as a way of ensuring a well-stocked larder. Carp was included as it was thought to bring wealth.



VIETNAM



The more popular name for the Vietnamese New Year is Tet, where as the formal name is Nguyen-dan. Tet is a very important festival because it provides one of the few breaks in the agricultural year, as it falls between the harvesting of the crops and the sowing of the new crops.



The Vietnamese prepare well in advance for the New Year by cleaning their houses, polishing their copper and silverware and paying off all their debts.



WALES



At the first toll of midnight, the back door is opened and then shut to release the old year and lock out all of its bad luck. Then at the twelfth stroke of the clock, the front door is opened and the New Year is welcomed with all of its luck.



HAITI



In Haiti, New Year's Day is a sign of the year to come. Haitians wear new clothing and exchange gifts in the hope that it will bode well for the new year.



SICILY



An old Sicilian tradition says good luck will come to those who eat lasagna on New Year's Day, but woe if you dine on macaroni, for any other noodle will bring bad luck.



SPAIN



In Spain, when the clock strikes midnight, the Spanish eat 12 grapes, one with every toll, to bring good luck for the 12 months ahead.



PERU



The Peruvian New Year's custom is a spin on the Spanish tradition of eating 12 grapes at the turn of the year. But in Peru, a 13th grape must be eaten to assure good luck.



ISLAM The Muslims have their own calendar which is based on the cycles of the moon. The calendar consists of twelve months but, only has 354 days unlike other calendars such as the Gregorian or Jewish calendar etc.



For this reason the Islamic New Year moves eleven days backwards through the seasons each year. Muharram is the first month of the Muslim year its first day is celebrated as New Year's Day. The Islamic New Year throughout the world is held quietly, without the festive atmosphere of other New Year celebrations.



KOREA



The first day of the lunar New Year is called Sol-nal. This is for families to renew ties and prepare for the new year. New Year's Eve: People place straw scoopers, rakes or sieves on their doors and walls to protect their families from evil spirit sin the new year.



Everyone dresses in new clothes, the following morning, symbolizing a fresh beginning, and gathers at the home of the eldest male family member. Ancestral memorial rites are held, then the younger generation bows to elders in the family. They wish them good health and prosperity in the coming year.



JAPAN



The Japanese New Year Oshogatsu is an important time for family celebrations, when all the shops, factories and offices are closed. The Japanese decorate their homes in tribute to lucky gods.



One tradition, kadomatsu, consists of a pine branch symbolizing longevity, a bamboo stalk symbolizing prosperity, and a plum blossom showing nobility.



POLAND



In Poland New Year's Eve is known as St Sylvester's Eve. This name according to legends arose from Pope Sylvester I who was supposed to have imprisoned a dragon called Leviathan who was supposedly able to escape on the first day of the year 1000, devour the land and the people, and was suppose to have set fire to the heavens.



On New Year's Day, when the world did not come to an end, there was great rejoicing and from then on this day was called St Sylvester's Eve.



PORTUGAL



The Portuguese pick and eat twelve grapes from a bunch as the clock strikes twelve on New Year's Eve. This is done to ensure twelve happy months in the coming year. In Northern Portugal children go caroling from home to home and are given treats and coins. They sing old songs or Janeiro's which is said to bring good luck.



ROME



Romans prepare for the New Year festival which is known as January Kalends by decorating their houses with lights and greenery. The festival lasts for three days, during this time they hold feasts and exchange gifts which were carefully chosen for their luck-bringing properties these include such things as sweets or honey to ensure sweetness and peace as well as Gold, Silver or money for prosperity. Lamps for a year filled with light.



SOUTH AFRICA



In South Africa they ring in the New Year with church bells ringing and gunshots being fired. For those in the Cape Province New Year's Day and Second New Year's Day are full of a carnival atmosphere as there are carnivals where people dress in colorful costumes and dance in streets to the sound of drums.



SPAIN



When the clock strikes midnight they eat 12 grapes one with every toll to bring good luck for the next 12 months of the New Year. Sometimes the grapes are washed down with wine. Theater productions and movies are interrupted to carry out this custom.



SWAZILAND



In Swaziland the harvest festival is called Newala or ""first fruits"" ceremony and takes place at the end of the year.



It is a celebration of kingship, traditional has it that the king of Swaziland, the Ngwenyama or ""Lion"", has powers that are mystical and is believed to embody the Swaziland prosperity and fertility, and therefore it is said that he must have many wives and father many children.



THAILAND



The Thai New Year festival is called Songkran and lasts for three days from 13 to 15 April according the Gregorian calendar.



The customs are many such as people throw water over one another, under the guise of that it will bring good rains in the coming year and all the Buddha statues or images are washed. They visit the monastery to pray and offer gifts of rice, fruit, sweets and other foods for the monks.



UNITED STATES



The kiss shared at the stroke of midnight in the United States is derived from masked balls that have been common throughout history. As tradition has it, the masks symbolize evil spirits from the old year and the kiss is the purification into the new year.



PAKISTAN



New Year in Pakistan is known as Nowrooz or New Day. This day begins in March and traditionally represents the rebirth of nature after the long winter. The New Year begins the instant the sun is no longer in the astrological sign of Pisces and enters Aries.



It is celebrated as a time of renewal. One of the customs of Nawrooz is the practice of burning piles of wood. The bonfires are a symbol to destroy any remaining evil from the previous year.



NORWAY



Norwegians make rice pudding at New Year's and hide one whole almond within. Guaranteed wealth goes to the person whose serving holds the lucky almond.

Thursday, September 24, 2009

arcimidies

ஆர்க்கிமிடீஸ் (கி.மு. 287 - கி.மு. 212)

பண்டைய உலகின் தலைசிறந்த கணித மேதையாகவும் விஞ்ஞானியாகவும் போற்றப்படுபவர். ஆர்க்கிமிடீஸ் ஆவார். நெம்புகோலின் தத்துவத்தையும் வீத எடைமான (specific Gravity) கோட்பாட்டையும் கண்டுபிடித்தவர் ஆர்க்கிமிடீஸ் தான் என்பர். எனினும், உண்மையில் ஆர்க்கிமிடீசுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நெம்புகோல் அறியப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்தது. நெம்புகோலின் செயல் விளைவை விவரிக்கும் சூத்திரத்தை முதன் முதலில் வகுத்துரைத்தவர் ஆர்க்கமிடீஸ் தான் என்று தெரிகிறது. ஆனால், ஆர்க்கிமிடீசுக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே, எகிப்தியப் பொறியியல் வல்லுநர்கள் நெம்புகோல்களைப் பயன்படுத்துவதில் தேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.

அதே போன்று, ஒரு பொருளின் மொத்த எடைக்கு மாறான அப்பொருளின் அடர்த்தி (கன அளவுடன் எடை மானத்துக்குள்ள விகிதம்) பற்றிய கோட்பாடு ஆர்க்கிமிடீசுக்கு முன்பே அறியப்பட்டிருந்தது. ஆர்க்கிமிடீசும், மணி முடியும் பற்றி வழங்கும் புகழ்பெற்ற கதை (''கண்டுபிடித்து விட்டேன்'' என்று கூவிக்கொண்டே ஆர்க்கிமிடிஸ் குளிக்கும் தொட்டியிலிருந்து குதித்துத் தெருக்களில் ஆடையின்றி ஓடியதாக இக்கதை முடிகிறது). ஆர்க்கிமிடீஸ் கண்டுபிடித்ததாகக் கூறப்படும் கோட்பாடும், ஒரு புதிய கோட்பாடு அன்று. ஏற்கெனவே நிலவிய ஒரு கொள்கையை, அவர் குறிப்பிட்ட சிக்கலுக்குத் தீர்வு காண வெற்றிகரமாகக் கையாண்டார்.

கணித வல்லுநர் என்ற முறையில் ஆர்க்கிமிடீஸ் தலை சிறந்தவராக விளங்கினார் என்பதில் ஐயமில்லை. முழுமைத் தொகையீட்டுக் கலன கணிதத்தை (Integral Calculus) ஐசக் நியூட்டன் கண்டுபிடிப்பதற்கு 8 நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆர்க்கிமிடிஸ் அக்கணிதத்திற்கு மிக அருகில் நெருங்கி விட்டார் எனலாம். ஆனால், தீவினைப் பயனாக அவருடைய காலத்தில் வசதியான கணிதக் குறிமான முறை (Mathematical Notation) இல்லாதிருந்தது. அதுபோலவே, அவருக்கு அடுத்து வந்த கணித அறிஞர்களில் எவரும் அவரைப் போன்று முதல்தரக் கணித மேதையாக விளங்கவில்லை. அதன் விளைவாக ஆர்க்கிமிடீசின் அற்புதமான கணித நுண்ணறிவுத் திறனுக்கு அதற்குரிய நற்பலன் கிடைக்காமற் போயிற்று. எனவே. ஆர்க்கிமிடீசின் திறமை தன்னேரிலாததாக இருந்தபோதிலும், உள்ளபடிக்கு அவருடைய செல்வாக்கு, இந்நூறு பேரில் அவரைச் சேர்க்கும் அளவுக்கு அதிகமாக இருக்கவில்லை.



நன்றி : http://ping.fm/LfUe5
leaving office after a hectic day will be back at tomorrow

Should I Migrate to Windows 7?

Should I Migrate to Windows 7?
Written by Jameson Parker

Windows 7 OS is scheduled to be available to the public market in just over a month. There are many doubts and apprehensions about the capability of this OS as its earlier version Vista is a failure. It seems Microsoft has given enough weight this time to what the Windows users really wanted - a simpler and friendly OS. Windows 7 has some novel features while improving the older ones. Moreover, some flop features in Vista are removed from Windows 7 to improve the performance.

There are some advantages along with disadvantages of opting to Windows 7. The following information may help you in deciding whether you really need to upgrade to Windows 7-

Reasons to switch to Windows 7
1. Application compatibility can be achieved by "Windows XP mode" by running virtual windows XP machine.
2. Windows live essentials: It is a free software that make possible to do more things like instant messaging, e-mail, photo editing, and blogging.
3. Improved search operation performance, as results will come instantly as categorized in groups. Moreover, key words are highlighted enabling easy file identification.
4. Supports 64-bit PC that can handle huge amounts of information than a 32-bit system.
5. Power management can be efficiently done by new features such as, running less number of background activities, automatic screen dimming, unused ports are not run and life indicator to battery.
6. Multi touch technology allows to use more than one finger while operating the touch screen either at application level or system level.
7. Protect files with features such as "Use Bit Locker" and "Bit Locker To Go"
8. Continuous access to corporate resources with a broadband connection. No need to get a VPN (Virtual Private Network) connection.
9. The feature "Domain Join" allows to connect multiple PCs, with or without a server.
10. Supports 35 languages. So, you can easily switch among them by logging off, again logging on. Moreover, it supports handwriting recognition.
11. System startup, shutdown and resumes are faster.
12. Appearance of the desktop has improved by including fresh wallpapers, retooled task bar and improved gadgets
13. Easy data sharing between two or more PCs by using "Share with" option.
14. Windows 7 can read larger than 131 GB hard drive (unfragmented).
15. Upgrading Vista to Windows7 will get 223% better performance while running IE8.
16. In Action Center you can find information you need regarding system maintenance, trouble shooting, security issues etc.

Reasons to avoid Windows7
1. Older PCs doesn't have hardware compatibility to achieve ‘Windows XP mode'.
2. Windows7 provides less battery life to the notebooks than Windows XP.
3. Need to do clean install if you want to upgrade from XP to Windows7.
4. If you're an XP user you need to learn a new user interface.
5. Runs the browser 11.5% slower than Windows XP.
6. Requires high configuration like Vista.
7. Very expensive to buy.
The above mentioned details will help you in learning ins and outs of Windows 7. Windows 7 has fixes to the drawbacks in Vista and it is desirable to move to the new OS. For the XP users, you may need to think twice before moving to Windows 7. Ultimately it is you to decide based on your computer usage and requirements.

Wednesday, September 23, 2009

antony van leevenhook (1632-1723)

ஆன்டனி வான் லீயூவென்ஹூக் (1632-1723)

நோய் நுண்மங்களை (Microbes) கண்டுபிடித்த ஆன்டனி வான் லீயூவென்ஹூக் நெதர்லாந்திலுள்ள டெல்ஃப்ட் என்ற நகரில் 1632 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தமது வயதுப் பருவத்தின் பெரும் பகுதியை உள்ளூர் நகராட்சியில் ஒரு சிறிய பதவியில் கழித்தார்.

லீயுவென்ஹூக் நுண்ணோக்காடியை (Microscope) பயன்படுத்துவதைத் தமது பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். அப்போது தான் இவர் தமது புகழ் பெற்ற கண்டுபிடிப்பைச் செய்தார். அந்தக் காலத்தில் நுண்ணோக்காடிகளைக் கடையில் வாங்க முடியாதிருந்தது. இவர் தாமே நுண்ணோக்காடிகளைச் செய்து கொண்டார். இவர் தொழில் முறையில் நுண்ணோக்காடித் தயாரிப்பாளராக இருக்கவில்லை. இத்துறையில் முறையான பயிற்சியும் இவர் பெற்றிருக்கவில்லை. எனினும் இத்துறையில் இவர் பெற்றிருந்த திறமை வியக்கத்தக்கதாக இருந்தது. இவர் காலத்திலிருந்து தொழில்துறை நுண்ணோக்காடித் தயாரப்பாளர்கள் எவரையும் விட இவர் மிகப் பெருமளவு தேர்ச்சியுடையவராக விளங்கினார்.

இவர் பிறப்பதற்கு ஒரு தலைமுறைக்கு முன்னரே கூட்டு நுண்ணோக்காடி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்ற போதிலும், அதை இவர் பயன்படுத்தவில்லை. மாறாக, மிகக் குறைந்த குவிமையத் தூரம் (Focal Length) உடைய சிறிய கண்ணாடி வில்லைகளை (Lenses) மிகக் கவனமாகவும், துல்லியமாகவும் அராவித் தீட்டி, முன்பிருந்த கூட்டு நுண்ணோக்காடிகளில் எதனையும்விட மிக அதிக அளவு உருப்பெருக்கத்திறன் (Resolving Power) உடையதாகச் செய்தார். இவர் தயாரித்த நுண்ணோக்காடிகளில் ஒன்று இன்னும் உள்ளது. இது 270 மடங்கு உருப்பெருக்குத் திறன் கொண்டது. இதைவிடவும் மிகுந்த ஆற்றல் வாய்ந்த நுண்ணோக்காடிகளையும் இவர் தயாரித்ததாகத் தெரிகிறது.

லீயுவென்ஹூக் மிகுந்த பொறுமைசாலியாக விளங்கினார். ஆழ்ந்து கவனிக்கும் கூர்நோக்காளராகவும் திகழ்ந்தார். அவருக்குக் கூர்மையான பார்வைத் திறன் அமைந்திருந்தது. அனைத்திற்கும் மேலாக எல்லையற்ற ஆர்வங்கொண்டவராகவும் இருந்தார். அவர் தமது நுட்பமான நுண்ணோக்காடிகளின் உதவியால் ஏராளமான பொருள்களை நுணுகி ஆராய்ந்தார். மனிதனின் தலைமுடி முதல் நாயின் விந்து வரையிலும், மழைநீர் முதல் நுண் பூச்சிகள் வரையிலும், தசை இழைகள் முதல் தோல் திசுக்கள் வரையிலும் பலப்பல பொருள்களை அவர் ஆராய்ந்தார். அவற்றைப் பற்றிக் கவனமாகக் குறிப்புகள் எடுத்துக் கொண்டார். தாம் கூர்ந்து நோக்கிய பொருள்களின் துல்லியமான படங்களையும் வரைந்து கொண்டார்.

இவருடைய காலத்தில் தலையாய அறிவியல் கழகமாக விளங்கிய இங்கிலாந்து ராயல் கழகத்துடன் 1673 ஆம் ஆண்டு முதற்கொண்டு லீயுவென்ஹூக் கடிதத் தொடர்பு கொண்டார். இவர் உயர்கல்வி கற்றதில்லை. (இவர் தொடக்கப் பள்ளியில் மட்டுமே பயின்றார். டச்சு மொழி தவிர இவருக்கு வேறு மொழிகள் எதுவும் தெரியாது). அப்படியிருந்தும் இவர் 1680 ஆம் ஆண்டில் இங்கிலாந்து ராயல் கழகத்தின் ஓர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். பாரிசிலிருந்து அறிவியல் கழகத்தின் கடிதத் தொடர்பு உறுப்பினராகவும் (Corresponding Member) ஆனார்.


லீயுவென்ஹூக் இருமுறை திருமணம் புரிந்து கொண்டார். இவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். ஆனால் பேரப்பிள்ளைகள் யாரும் இல்லை. இவர் சிறந்த உடல் நலத்துடன் வாழ்ந்தார். இவர் தமது முதுமைக் காலத்தில் கூட தொடர்ந்து கடுமையாக உழைத்தார். பல அரசியல் தலைவர்களும், அறிஞர்களும், சான்றோர்களும் இவரைப் பார்க்க வந்தனர். ரஷ’யாவில் ஜார் மன்னர் மகா பீட்டர், இங்கிலாந்து அரசி ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் 1723 ஆம் ஆண்டில் தமது 90 ஆவது வயதில் டெல்ஃப்ட் நகரில் காலமானார்.

லீயுவென்ஹூக் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை செய்தார். விந்துணுவை (Spermatozoa) முதன் முதலில் (1677) விவரித்துக் கூறியவர் இவர்தான். இரத்தச் சிவப்பணுக்கள் (Red blood Corpuscles) பற்றி முதலில் விவரித்துக் கூறியவர்களில் இவரும் ஒருவர். இழிவான சிறிய உயிரினங்களின் "தன்னியல் உயிர்த் தோற்றம்" (Spontaneous Generation) கோட்பாட்டினை இவர் எதிர்த்தார். எடுத்துக்காட்டாக, சிறகுப் பூச்சிகளின் வழக்கமான பாணியிலேயே உண்ணிகள் இனப்பெருக்கமுறுவதாக இவர் மெய்ப்பித்தார்.

இவருடைய தலைசிறந்த கண்டுபிடிப்பு 1674 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. அப்போது தான் இவர் நோய் நுண்மங்கள் குறித்து முதன்முதலாக தாம் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டார். இது, மனித வரலாற்றில் உயிர்நாடியான ஒரு கண்டுபிடிப்பாக அமைந்தது. ஒரு சிறிய நீர்த்துளியில் லீயுவென்ஹூக் ஒரு புதிய உலகத்தையே முழுமையாகக் கண்டார். அந்த உலகம் அதுகாறும் யாரும் எண்ணிப்பார்த்திராத ஒரு புதிய உலகமாக இருந்தது. அந்தப் புதிய உலகில் ஏராளமான உயிர்கள் மலிந்திருக்கக் கண்டார். இந்தப் புதிய உலகம், மனித இனத்திற்கு மிகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஆனால், அந்த முக்கியத்துவத்தை லீயுவென்ஹூக் தாம் கண்டு பிடித்த காலத்தில் அறிந்திருக்கவில்லை. எனினும், இவர் கண்டுபிடித்த அந்த "சிற்றுயிரினங்கள் தாம்" மனிதர்களின் வாழ்வையும் சாவையும் நிருணயித்தன. நீர்த்துளியில் இவர் இந்த நுண்ணுயிரினங்களைக் கண்டறிந்த பிறகு வேறு பல இடங்களிலும் அவற்றைக் கண்டார். கிணறுகளில், குட்டைகளிலும், மழை நீரிலும், மனிதர்களின் வாயிலும், குளங்களிலும் கூட இவை இருக்கக் கண்டார். இவற்றை ஆராய்ந்து பல்வேறு நுண்ணுயிர்களையும் (Bacteria) ஓரணு உயிர்களையும் (Protozoa) அவர் விவரித்தார். அவற்றின் வடிவளவுகளையும் கணக்கிட்டார்.

லீயுவென்ஹூக்கின் இந்தச் சிறந்த கண்டுபிடிப்பு 200 ஆண்டுகளுக்குப் பின் பாஸ்டர் தோன்றும் வரையில் பயன்படுத்தப்படாமலேயே இருந்தது. உண்மையைக் கூறின், 19 ஆம் நூற்றாண்டில், சீர்திருத்திய நுண்ணோக்காடிகள் கண்டுபிடிக்கப்படும் வரையிலும் நுண்ணுயிரியல் (Microbiology) முழுவதுமே பெரும்பாலும் செயலற்றிருந்தது. இதனால், லீயுவென்ஹூக் தோன்றாமலிருந்த அவரது கண்டுபிடிப்புகளும் 19 ஆம் நூற்றாண்டு வரையிலும் கண்டுபிடிக்கப்படாதிருந்திருந்தால், அறிவியல் முன்னேற்றத்தில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டிருக்காது என்று வாதிடக் கூடும். எனினும் நோய் நுண்மங்களை லீயுவென்ஹூக் கண்டுபிடித்தார் என்பதையும் அந்த நுண்மங்கள் இருப்பதை இவர் மூலமாகவே அறிவியல் உலகம் அறிந்து கொண்டது என்பதையும் மறுப்பதற்கில்லை.

லீயுவென்ஹூக் தற்செயலான குருட்டு வாய்ப்பின் காரணமாக முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்பில் தடுக்கி விழுந்தார் எனச் சிலர் கூறுவர். இது சிறிதும் உண்மையன்று. வரலாறு கண்டிராத தரம் வாய்ந்த நுண்ணோக்காடிகளை மிகக் கவனமாகத் தயாரித்து, பொறுமையோடும், துல்லியமாகவும், லீயுவென்ஹூக் நடத்திய தீவிர ஆராய்ச்சிகளின் விளைவாகவே நுண்ணுயிரிகளை (Microorganisms) அவர் கண்டுபிடிக்க முடிந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. சுருங்கக்கூறின், அவரது கண்டுபிடிப்பு வெறும் குருட்டு வாய்ப்பின் காரணமாகத் தற்செயலாகக் கண்டு பிடிக்கப்பட்டதன்று, திறமையும் கடும் உழைப்பும் ஒருங்கிணைந்ததன் விளைவாகக் கிடைத்த பலன் அதுவாகும்.

ஒரு தனிமனிதரின் உழைப்பு மூலமாகக் கண்டு பிடிக்கப்பட்ட முக்கிய கண்டுபிடிப்புகளின் ஒன்று நோய் நுண்மங்களின் கண்டுபிடிப்பு எனலாம். இதற்காக லீயுவென்ஹூக் தன்னந்தனியாகப் பாடுபட்டார். ஓரணு உயிரையும், நுண்ணுயிர்களையும் கண்டுபிடித்தது யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. உயிரியலின் மற்ற முன்னேற்றங்களைப் போலன்றி, முந்திய அறிவியல் அறிவிலிருந்து இந்தக் கண்டுபிடிப்பு இயற்கையாகத் தோன்றிவிடவில்லை. அந்தக் காரணத்தையும், இறுதியில் இவரது கண்டுபிடிப்பின் பயன்பாடுகளுக்கு ஏற்பட்ட பெரும் முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொண்டுதான், இந்தப் பட்டியலில் இவருக்கு உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.



நன்றி : http://ping.fm/OVFUv

Mosquito Traps Come to the Rescue

Mosquito Traps Come to the Rescue
Written by smith belluchi



Mosquitoes have been a major problem for over several centuries now. It has been proven that mosquitoes just love to hunt human preys. They have compound eyes that are quite competent in detecting even the slightest human movements. In addition, their receptors are extremely sensitive in spotting the smell of our exhaled breath. Based on these observations, mosquito traps of several types have been designed by reputed companies across several parts of the world.

These traps function by imitating the sight and smell of human prey. This leads mosquitoes into falsely believing that a human body is proximal to them. However, upon getting closer, strong fans catch them forcing them into specially enclosed containers. Once they are trapped in, it becomes for them to come out of the mosquito trap. As a result, the mosquitoes soon die.

A well equipped and designed them, has the capacity to draw and kill over a thousand mosquitoes within a few hours, while the user is busy doing the daily chores. This clearly proves that within a few months, It can help get rid of the entire mosquito population.

One needs to just set up the machine at a desired corner and maintain it regularly to achieve best results. The rest will be taken care of by the mosquito trap.

It is indeed true that controlling mosquitoes is a daunting task, and there are no simple solutions. A mosquito trap however can prove to be highly beneficial in keeping the house protected from mosquitoes for a considerably long period of time.

How does a mosquito trap function?

Some of the most popular and effective mosquito traps rely chiefly on a unique lighting display and automated dispersion of artificial human scent. In such devices, the mosquito trap sends out oscillating frequencies of both visible and Ultra Violet rays that are known to draw mosquitoes. Simultaneously, the mosquito trap disperses curls of octenol that attract the mosquitoes' smell senses.

Inside these mosquito traps, there are infrared heat resources that provide warmth which is conspicuously akin to the human body. This further draws the mosquitoes to the trap. Upon reaching closer, a fan captures these mosquitoes and they are forced inside a container.

Some other variations of the mosquito trap make use of cannisters which disperse some amounts of CO2 mixed with octenol. Understandably, this increases the efficiency of the trap further and mosquitoes even 150 feet away from the trap can be captured and killed.

Owing to the growing popularity of the mosquito traps, some people raised their doubts on the efficacy of these equipments. These doubts prompted several research agencies to conduct independent studies to verify whether these devices were indeed useful. Significantly, a number of recent studies and research reports have now proven the effectiveness of the mosquito traps in getting rid of mosquitoes within short span of time. It is therefore absolutely safe to use the mosquito trap and draw benefits from it for a longer span of time

Tuesday, September 22, 2009

andhuvan loeran lavacier (1743 - 1794)

அந்துவான் லோரான் லாவாசியர் (1743 - 1794)

பெரும் ஃபிரெஞ்சு அறிவியலாளரான அந்துவான் லோரான் லாவாசியர் இரசாயனவியல் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தவராவார். 1743 இல் அவர் பாரிசில் பிறந்தபோது, இரசாயனவியலானது இயற்பியல், கணிதம், வானவியல் ஆகியவற்றை விட பின் தங்கிய நிலையிலிருந்தது. அப்போது இரசாயனவியலார் தனிப்பட்ட உண்மைகள் பலவற்றைக் கண்டுபிடித்திருந்தனர். ஆயினும் சிதறிய இச் செய்திகளை ஒருங்கிணைக்கக் கூடிய ஒரு கொள்கை அமைப்பு இல்லாதிருந்தது. அக்காலத்தில் காற்றும் நீரும் தனிமங்களே என்று தவறாகக் கருதி வந்தனர். அதைவிட மோசமான தீயின் தன்மை பற்றி முற்றிலும் தவறான கருத்து நிலவியது. எரியக் கூடிய பொருள்களிலெல்லாம் ஃப்ளோஜிஸ்டன் எனும் ஒரு பொருள் இருப்பதாக ஊகித்தனர். எரியக் கூடியப் பொருள்கள் எரியும் போது, ஃப்ளோஜிஸ்டனைக் காற்றில் வெளியேற்றியதாகவும் கருதினர்.

1754 முதல் 1774 வரை அறிவுத் திறமை மிகு இயைபியலாளர்களான ஜோசப் பிளாக், ஜோசப் ப்ரீஸ்ட்லி, ஹென்றி காவன்டிஷ் போன்றோர் ஆக்சிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு போன்று முக்கிய வாயுக்களைத் தனியாகப் பிரித்தனர். ஆயினும், ஃப்ளோஜிஸ்டன் கொள்கையை இவர் ஏற்றுக் கொண்டிருந்தமையால், தாம் கண்டுபிடித்த இரசாயனப் பொருள்களின் இயல்பை அல்லது சிறப்பை இவர்களால் கண்டறிய முடியவில்லை. எடுத்துக்காட்டாக, ஆக்சிஜன் என்பதை இவர்கள் ஃப்ளோஜிஸ்டன் அகற்றப்பட்ட காற்று என்றனர். (மரச்சிராய் சாதாரண காற்றில் எரிவதை விட ஆக்சிஜனில் நன்றாக எரியுமெனத் தெரிந்தது. ஒருவேளை ஃப்ளோஜிஸ்டன் வெளியேறிய காற்று எரியும் கட்டையிலுள்ள ஃப்ளோஜிஸ்டன் எளிதில் ஈர்க்க முடியுமெனக் கருதினர்). அடிப்படை சரியாக அறிந்து கொள்ளும் வரை இயைபியலில் உண்மையான முன்னேற்றம் ஏற்பட முடியாமலிந்தது. லாவாசியர் துண்டு துக்காணிகளான இச்செய்திகளைச் சரியாக ஒருங்கிணைத்து, இயைபியல் கொள்கைகளைச் சரியான வகையில் வகுத்தார். முதலாவது, அவர் ஃப்ளோஜிஸ்டன் கொள்கை முற்றிலும் தவறானதென்று கூறினார். ஃப்ளோஜிஸ்டன் என்று ஒரு பொருளில்லை என்றார். எரியும் பொருளும், ஆக்சிஜனும் சேர்ந்து ஏற்படும் இரசாயனக் கலப்புதான் எரிதலாகும். இரண்டாவது, நீர் ஒரு தனிமம் அன்று. ஆக்சிஜனும் நைட்ரஜனும் சேர்ந்த ஒரு இரசாயனக் கூட்டுப் பொருள். காற்றும் ஒரு தனிமம் அன்று. ஆக்சிஜன், நைட்ரஜன் எனும் இரு முக்கிய வாயுக்கள் கலந்த கலவையாகும். அவருடைய இக்கூற்றுகளெல்லாம் இன்று தெளிவாக விளங்குபவை. ஆயினும் இவை லாவாசியருக்கு முன் வாழ்ந்தவர்களுக்கோ, அவருடைய காலத்தவருக்கோ தெளிவாகத் தெரியவில்லை. லாவாசியர் இக்கொள்கைகளை வகுத்து அவற்றிற்குரிய சான்றுகளை எடுத்துக் காட்டிய போதிலும், பல பெரும் இயைபியலார் அவருடைய கருத்துகளை ஏற்க மறுத்தனர்

. லாவாசியரின் எலிமென்ட்ஸ் ஆஃப் கெமிஸ்ட்ரி (1789) எனும் சிறந்த நூல் அவருடைய கொள்கையையும் அதை எண்பிக்கும் சான்றுகளையும் தெளிவாகவும் உறுதியாகவும் விளக்கியது.இளம் தலை முறையினரான இரசாயனவியலார் அதை நம்பி ஏற்றனர். லாவாசியர் நீரும், காற்றும் இரசாயனத் தனிமங்கள் அல்லவென்று காட்டியபின், தாம் தனிமங்களல்லவென்று கருதிய பொருள்களின் பட்டியலைத் தமது நூலில் இணைத்தார். இப்பட்டியலில் சில தவறுகளிருப்பினும், இரசாயனத் தனிமங்களின் இன்றைய பட்டியலானது லாவாசியரின் பட்டியலின் விரிவான பட்டியலேயாகும்.

லாவாசியர் (பெர்த்தோல்த், ஃபூர்கருவா, கியூத்தோன் தெமோர்லோ ஆகியோருடன் சேர்ந்து) இரசாயனவியலின் கலைச்சொல் தொகுதியை உருவாக்கினார். அவருடைய தொகுப்பே இன்று பயன்படுத்தப் பெறும் சொற்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. அதன்படி ஓர் இரசாயனப் பொருளின் கலப்பு அதன் பெயரையே பெறுகின்றது. முதல் முறையாக ஓரே வகையான கலைச் சொற்களைப் பயன்படுத்தியதால் உலகம் முழுவதுமுள்ள இரசாயனவியலார் தாம் கண்டுபிடித்தவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
இரசாயன எதிரியக்கத்தில் பொருண்மை மாறுவதில்லை எனும் கொள்கையை முதன்முதலாகத் தெளிவாக விளக்கியவர் லாவாசியராவார். இரசாயன எதிரியக்கம் ஒரு பொருளிலுள்ள தனிமங்களை மாற்றியமைக்கலாம். ஆனால் அவற்றில் எதையும் அழிப்பதில்லை. பொருள்களின் எடை மூலக்கூறுகளின் எடையினின்று வேறுபடுவதில்லை. எதிரியக்கத்தில் ஈடுபடும் இரசாயனப் பொருள்களைக் கவனமாக எடை போடுவதன் முக்கியத்துவத்தை லாவாசியர் வலியுறுத்தியது இரசாயனவியலை ஒரு நுட்பதிட்பமான இயலாக மாற்றத் துணை புரிந்தது.

லாவாசியர் புவியமைப்பின் வளர்ச்சிக்கு ஓரளவும், உடலியல் வளர்ச்சிக்குப் பெருமளவும் தொண்டாற்றினார். கவனமாக (லாப்ளாஸ’ன் துணையுடன்) பரிசோதனைகளை நடத்தி, சுவாசிக்கும் செயலானது மெதுவாக எரியும் செயலுக்கு சமமென்று அவர் காட்டினார். அதாவது, மனிதரும் பிற விலங்குகளும் தாம் உட்கொள்ளும் ஆக்சிஜனைப் பயன்படுத்தி கரிமப் பொருளை மெதுவாக உள்ளே எரிப்பதன் மூலம் ஆற்றலைப் பெறுகின்றனர். இரத்தச் சுழற்சியைப் பற்றி ஹார்வி கண்டுபிடித்ததைப் போன்ற முக்கியமான இக்கண்டுபிடிப்பே லாவாசியருக்கு இப்பட்டியலில் உரிய இடத்தைத் தரக்கூடியது. ஆயினும் அவர் இரசாயனவியல் கொள்கையை வகுத்ததினால் இரசாயனவியலுக்கு ஒரு சரியான பாதையை வகுத்தார் தற்கால இரசாயனவியலை நிறுவியவர் என்கிறோம். அப்பெயர் அவருக்கு மிகவும் பொருந்தும். இப்பட்டியலில் இடம்பெறும் ஒரு சிலரைப் போல், லாவாசியரும் இளைஞராக இருந்தபோது சட்டம் பயின்றார். அவர் சட்டத்தில் பட்டம் பெற்று, ஃபிரெஞ்சு வழக்கறிஞர் குழத்தில் இடம் பெற்ற போதிலும், வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடவில்லை. ஆயினும் ஆட்சித் துறைப் பணியிலும், பொதுநலப் பணியிலும் ஈடுபட்டார். ஃபிரெஞ்சு அரச அறிவியல் கழகத்தில் செயலாற்றினார்.

அவர் ஃபெர்ம் ஜெனரால் எனும் நிறுவனத்தில் உறுப்பினராக அதன் விளைவாக, 1789 இல் ஃபிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட பிறகு புரட்சி அரசாங்கம் அவரைப் பற்றி ஐயப்படத் துவங்கியது. பிறகு,. ஃபெர்ம் ஜெனரால் உறுப்பினருள் 21 பேருடன் அவரையும் கைது செய்தது. புரட்சிக் கால நீதி நுட்பமாகத் தீர்ப்பிடவில்லையெனினும் விரைவாகத் தீர்ப்பளித்தது. ஒரே நாளில் (மே 8, 1794) 28 பேரும் விசாரிக்கப் பட்டு, குற்றத் தீர்ப்பிடப்பட்டுக் கொல்லப் பட்டனர். லாவாசியரை இழந்த அவருடைய மனைவி அவருடைய ஆராய்ச்சிகளில் உதவிய அறிவுடைய மங்கையராவார்.
குற்ற விசாரணையின் போது, லாவாசியரைக் காப்பாற்றுவதற்காக வேண்டுகோள் விடுக்கப் பெற்றது. அவர் நாட்டுக்கும் அறிவியலுக்கும் ஆற்றிய தொண்டுகள் எடுத்துக்காட்டப் பெற்றன. நீதிபதி அவற்றையெல்லாம் ஏற்க மறுத்து, குடியரசுக்கு அறிஞர்கள் தேவையில்லை என்று சுருக்கமாகக் கூறிவிட்டார். அத்தலையை வெட்டுவதற்கு ஒரு நொடி தான் ஆனது. ஆனால் அது போன்ற தலையைப் பெறுவதற்கு நூறாண்டுகளானாலும் இயலாது. என்று அவருடைய தோழரும் கணித மேதையுமான லாக்ரான்ஷ் கூறியதில் ஓரளவு உண்மை இருக்கின்றது.


நன்றி : http://ping.fm/clNBu

Powerful ways to promote your website

Powerful ways to promote your website
Written by Gary Klingsheim

Wednesday, 16 September 2009

Great! You've got your new Web site up and running, and whether you're selling collectibles or business consulting services, it is now that the big job begins—promoting yourself. Now, you've probably done all the Search Engine Optimization (SEO) work with keywords (if not, go back a step and return here later), set up a Twitter account and Facebook page, sent out as many non-spam e-mails as possible and done a few of those "Internet newswire" press releases. So you're set, right?

Well, perhaps, but it's not likely. It takes a lot more work to get people to your Web site than it does to build one. Maybe 15 years ago you could settle for the foregoing activities and actually get some traffic out of it, but no longer. The World Wide Web is fairly drowning in sites, and regardless of how unique you think yours is, there are doubtless about a dozen just like it, from Argentina to Zimbabwe. What on Earth can you possibly do if you've already covered the semi-mystical, near-magical high-technology bases in your business rollout plan?

Back to real basics

The answer to that is simple, and also allows for a good lesson in what "begging the question" really means. In recent years this once-potent and very particular phrase was not just an Ivy League synonym for "asking a tough question." It means that the question itself presents as fact the very thing that it is supposed to establish. In this case, the question suggests that the "semi-mystical, near-magical high-technology" measures that you took to register and promote your site are the most effective ones possible. As the song says, "It ain't necessarily so."

There are many low-tech, low- and no-cost ways for you to promote your Web site. Depending on your business model, you can restrict and define your efforts in any number of ways to get the most bang for the least bucks. You don't need a global communications plan if you are starting a drop-off center for eBay auctions, a local business by definition. Therefore, local and focused efforts are often more beneficial than technological overkill.

Simple, straightforward, sensible

Think back to pre-Internet days, if you're old enough, and recall the many bulletin boards that decorated community centers, libraries, laundromats, city parks, public squares, college quads, downtown parks and other locations. Most are still there. These are perfect places to advertise your enterprise with flyers, but simply because they are local venues doesn't mean you can scrawl a message on a 3x5 index card. People today expect competent layouts with legible headlines and decent images. Get help on your flyers if you need it.

Local newspaper delivery people will often make a deal to enclose your flyers with their delivered papers, too. Not only that, but you can simply go from store to store along all the main commercial routes in your city or region, asking to place your flyer in the windows or set your business card tray on the counter. You may get 10 "no's" for every "yes," but one well-placed flyer or business card can bring you a customer or client who will pay for the entire effort. While you are hitting the pavement, of course, don't miss any opportunity to talk up your business with passers-by, business owners or anyone else. You just never know who might need just what you offer.

Advertising means paying, but it can work

The old publicity hacks had a few disparaging sayings about advertising, the most gracious of which is something like, "Don't pay for advertising until you're done with the free stuff." After you have distributed a few thousand (yes, thousand) flyers and business cards, pasted your message on all the local bulletin boards and affixed your printed pitch to the inside of strip-mall donut shop windows everywhere, you can consider shelling out a (very) few bucks for some "advertising with legs."

Daily newspapers most certainly do not have legs, as they go from timely to dated in a day, ending up as kindling or birdcage carpet. The weekly community newspapers are a much better bargain, and have a little shelf life which will spread your cost out over a few days, a week or longer. Don't forget that pet stores, hair salons, day spas and all sorts of other local businesses have their own newsletters, too, both printed and Web-hosted. Sometimes you can barter for ad space, offer a discount to the business's customers or otherwise ingratiate yourself with the distributor to get a listing.

Use every available avenue

Last but not least, you can take a lesson from the seminar hotshots of the world, establish yourself as an expert in your field and the offer free seminars that are, in fact, marketing opportunities. If you ally yourself with the local library or a businessman's group, you can often get free mentions in print, on the radio and even in the "public service" announcements of local TV stations.

If you put your thinking hat on, you can probably think of any number of other ways to promote your new Web site in the tried-and-true, old-fashioned ways. Naturally, you will want to use all the free PR services, send e-mails and snail mail, "talk up" your site to everyone in sight, distribute your promo materials widely and generally "sing a one-note song" about what you are doing. Yes, it is quite challenging, but the only way to separate yourself from the growing pack is to work smarter and harder than your competition—and the time to start, of course, is yesterday.

alexander graham bell 1847-1922

அலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847-1922)

தொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு மட்டுமே முறையான பள்ளிக் கல்வி கற்றபோதிலும், இவருடைய குடும்பத்தினர் இவருக்குச் சிறந்த கல்வி கற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த கல்வி கற்றுக் கொண்டார். இவருடைய தந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஒரு வல்லுநராகத் திகழ்ந்தார். எனவே, குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்கிக் காட்டுவதில் இவருக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது.

அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் பாஸ்டன் நகரில் 1871 ஆம் ஆண்டில் பெல் குடியேறினார். அங்குதான் 1875 ஆம் ஆண்டில், தொலைபேசியைக் கண்டு பிடிப்பதற்கு வழி வகுத்த கண்டுபிடிப்புகளை இவர் செய்தார். இவர் தமது கண்டுபிடிப்புக்காக 1876 ஆம் ஆண்டு பிப்பரவரி7 மாதத்தில் புத்தாக்க உரிமைக்காக விண்ணப்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு இந்த உரிமை இவருக்கு வழங்கப்பட்டது. (பெல் தமது விண்ணப்பத்தை அளித்த அதே நாளன்று ஆனால் சில மணி நேரம் பிந்தி, எலிஷாகிரே என்பவர், அதே போன்ற சாதனத்திற்காகப் புத்தாக்க உரிமை கோரி ஒரு விண்ணப்பத்தை அளித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)

பெல்லுக்கு புத்தாக்க உரிமை வழங்கப்பட்ட பின்பு மிக விரைவிலேயே அவர் ஃபிலெடெல்ஃபியாவில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் கண்காட்சியில் தொலைபேசியைக் காட்சிக்கு வைத்தார். அவரது கண்டுபிடிப்பில் பொது மக்கள் பேரார்வம் கொண்டனர். இவரது கண்டுபிடிப்புக்கு ஒரு பரிசும் கிடைத்தது. எனினும், இந்தக் கண்டுபிடிப்புக்கான உரிமைகளை 1,00,000 டாலருக்கு "வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராஃப் கம்பெனி" என்ற நிறுவனத்திற்கு வழங்க பெல் முன் வந்தபோது, அதை வாங்கிக் கொள்ள அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால், பெல்லும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1877 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தங்களடைய சொந்த நிறுவனத்தை நிறுவினார்கள். இந்த நிறுவனம்தான் இன்றைய "அமெரிக்கன் டெலிபோன் மற்றும் டெலிகிராஃப் கம்பெனி" யின் மூதாதையாகும். இவருடைய தொலைபேசிக்கு உடனடியாகப் பெருமளவில் வாணிக முறையில் வெற்றி கிட்டியது. இவர் நிறுவிய நிறுவனம் இன்று உலகிலேயே மிகப் பெரிய தனியார் வாணிக நிறுவனமாகத் திகழ்கிறது.

பெல்லும், அவரது மனைவியும் 1876 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தத் தொலைபேசி நிறுவனத்தின் சுமார் 15 விழுக்காட்டு பங்குகளைச் சொந்தமாகக் கொட்ருந்தனர். ஆனால், தங்களது நிறுவனம் எத்தனை பேரளவுக்குத் ஆதாயம் ஈட்டியது என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சில மாதங்களிலேயே அவர்கள் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளைச் சராசரி ஒரு பங்கு 250 டாலர் என்ற விலையில் விற்று விட்டனர். நவம்பர் மாதத்திற்குள் இந் நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்குக்கு 1000 டாலர் என்ற விலைக்கு உயர்ந்தது. (இதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்று 65 டாலர் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தபோது, அந்தப் பங்கின் விலை அதற்குமேல் ஏறாது எனக் கருதிய பெல்லின் மனைவி, அந்தப் பங்குகளை உடனடியாக விற்றுவிடும்படி கணவரை வலியுறுத்தினார்). அவர்கள் 1881 ஆம் ஆண்டில், தங்களிடமிருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை விவேகமின்றி மீண்டும் விற்றுவிட்டனர். எனினும் 1883 ஆம் ஆண்டில் அவர்கள் சுமார் 10,00,000 டாலர் செல்வ மதிப்புடையவர்களாக இருந்தார்கள்.

தொலைபேசியைக் கண்டுபிடித்ததன் காரணமாக பெல் ஒரு பணக்காரராக ஆனபோதிலும் அவர் தமது ஆராய்ச்சிகளைக் கைவிட்டுவிடவில்லை. வேறுபல பயனுள்ள சாதனங்களையும் அவர் கண்டுபிடித்தார். அவர் பல துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆயினும், காது கேளாதவர்களுக்கு உதவி புரிவதில்தான் அவர் முக்கியமாக ஆர்வம் காட்டினார். இவருடைய மனைவிகூட ஒரு செவிட்டுப் பெண்தான். அவருக்குப் பெல்தான் கல்வி கற்பித்தார். அவர்களுக்கு இரு புதல்வர்களும், இரு புதல்விகளும் பிறந்தனர். ஆனால் இரு புதல்வர்களும் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். 1882 ஆம் ஆண்டில் பெல் அமெரிக்கக் குடிமகன் ஆனார். 1922 ஆம் ஆண்டில் அவர் காலமானார்.

தொலைபேசிக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்துத்தான் பெல்லின் செல்வாக்குப் பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் அமையும். என்னுடைய கருத்தில், தொலை பேசியைப் போன்று வேறெந்தக் கண்டுபிடிப்பும் மிகப் பரந்த அளவில் பயன்பட்டதில்லை. வேறு எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது அன்றாட வாழ்வில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. எனவே, பெல்லின் செல்வாக்கு மிகப் பெரிது எனக் கருதுகிறேன்.

தொலைபேசியைவிட வானொலி பல திறப் பயன் பாடுடையதாக விளங்குவதால், வானொலியைக் கண்டுபிடித்த மார்கோனிக்கு அடுத்தப்படியாக பெல்லுக்கு இடமளித்திருக்கிறேன். தொலைபேசி வாயிலாக நடத்தப்படும் ஓர் உரையாடலைக் கொள்கையளவில் வானொலி வாயிலாகவும் நடத்தலாம். ஆனால் வானில் பறக்கும் விமானத்துடன் தகவல் தொடர்பு கொள்ளுதல் போன்ற பல நேர்வுகளில் வானொலி பயன்படுகின்ற அளவுக்குத் தொலைபேசி பயன்படாது. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே மார்கோனியை விட மிகத் தாழ்வான இடத்தைப் பெல்லுக்கு அளிக்கலாம். ஆனால், வேறு இரு அம்சங்களையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக ஒரு தனித் தொலைபேசி உரையாடலை வானொலி வாயிலாக நடத்த முடியும். ஆனால் தொலைபேசி அமைப்பு முறை முழுவதற்கும் பதிலாக அதே போன்ற சரிநிகரான வானொலிச் செய்தித் தொடர்பு இணைவனம் ஒன்றை ஏற்படுத்துவது மிகக் கடினம். இரண்டாவதாக, தொலைபேசி ஒலிவாங்கிக் (Receiver) கருவிக்காக பெல் வகுத்தமைத்த அடிப்படை ஒலி உருவாக்க முறையைப் பின்னர் வானொலி ஒலிவாங்கி, இசைத் தட்டு இயக்கக் கருவி போன்ற பல்வேறு சாதனங்களை கண்டுபிடித்தவர்கள் பொருத்தமாக மாற்றியமைத்துப் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே, அலெக்சாண்டர் கிரகாம்பெல், மார்கோனியைவிட மிகக் குறைந்த அளவுதான் செல்வாக்கில் குறைந்தவர் என நான் கருதுகிறேன்.


நன்றி : http://ping.fm/WQZ6H
Hi there,


You have been invited to join My Opera, a free community site with:

* Photo sharing: Share photos with your friends and family
* Blogs: Start an online journal and share your thoughts and experiences
* Groups: Meet other people with similar interests
* Forums: Chat with people in the official Opera forums
* Customize: Decorate your blog and Opera browser to look the way you want

Sign up for a free account at http://ping.fm/rCY7n

Regards,

abdul karim chisthi
http://ping.fm/ImsFv

Monday, September 21, 2009

The Best Bicycle Races Worldwide

The Best Bicycle Races Worldwide
Written by Robert Gardentin



Are you aware that cycling is one of the only 5 sports that was featured in all the modern Olympics? Well it is. Do you know that the record for most wins in the Tour de France was made by an American Lance Armstrong, having won 7 times? Are you aware that the world's oldest professional cyclist Dutchman Fred Rompelberg is also the holder of the Absolute Speed World Record Cycling? These are just few facts relating to bicycle and professional cycling. Though you may consider these fun facts to be trivial, you may find the most prestigious bicycle races in the world to be an important fact especially if you are someone who intends to join it or an avid follower of these races.

Bicycle racing is something that exists since middle of the 19th century. It is only at the start of the 20th century though that it took the form that it has at present. Some of the first bicycle races ever established still exist and are in fact considered to be the most prestigious worldwide. Of the many bicycle races held yearly, few of the most famous are the Grand Tours, the Olympic races and the Union Cycliste Internationale (UCI). Fast gaining popularity are the cyclo-cross racing and the mountain bike racing.

The Grand Tours are made up of three world renowned races, the Tour de France, the Giro d'Italia (or simply Giro) and the Vuelta a Espana. Even non-cyclists have heard of the Tour de France, the most famous of the three. This race, founded in 1903, takes three weeks to finish, is made up of 20 stages and covers about 2,000 miles. The cyclist with the shortest time in each stage wins the race.

The cycling races held in the Olympics started as early as 1896. Some of the cycling events have already been forgotten but new ones are now held. Today's Olympic games have bike competitors vie for road cycling, mountain bike races, track cycling, off-road competitions and BMX. These races are fought according to gender and some are done in teams.

The UCI races are composed of several prestigious races that is popularly referred to as the UCI ProTour. It replaced the UCI World Tour in 2005 and now includes the Grand Tours and other sought after cycling races such as the Criterium de Dauphine Libere, Paris Nice and Tour de Suisse and other one day races like the Clasica de San Sebastian, Milan-Sanremo, Ronde van Vlaanderen and other famous races. Cycling is generally a summer sport and most of these races are held either in spring or in fall.

Sunday, September 20, 2009

3D Animation For Beginners - Using 3D Animation Software

3D Animation For Beginners - Using 3D Animation Software
Written by Red NanStudio



If you love to create animation, and want to expand your creative edge with using 3D images and creation, there is software that you can download and use on your computer to create the best in 3D animation. Even if you have never worked with any 3D animation software before, this software package is great and easy to learn for beginners and those who have worked in 3D images before.

When you want to take your animation to another step, go to www.3dmagix.com and download the software to your computer. This software is easy to use, and in a few minutes after you download the program to your computer, you are on your way to creating a whole new exciting world of animation using 3D graphics. Being able to use 3D graphics in your animation and designs puts you in a whole new world of exciting designs and graphics. You can quickly pick up the techniques and methods taught and used in this software, and before you know it you are able to create your own 3D animation.

If you have always wanted to learn how to create amazing 3D graphics, but have not had the tools or programs available to you to use, you can now explore the world of 3D from your own computer. Whether or not you are a professional designer or animator, or if you do it for fun and love to create your own cartoons and animation, anyone can benefit from this easy and fun animation program.

The software program is easy to use and to learn, and with a few clicks of your mouse, you are on your way to turning any of your animation alive in 3D images. The look and feel of 3D graphics turns any kind of animation into a realistic and live version of the flat counterpart on paper. Being able to create and use 3D images in your art and designs, enables you to create all kinds of concepts and images that you were not able to before with out the use of 3D graphics.

If you have been searching for an affordable and easy 3D animation program to use on your computer, but have not been able to find what you are looking for, you can check out www.3dmagix.com and download the easy and exciting new software program. You will be able to discover how fun and easy it can be to create all kinds of exciting 3D graphics and designs to use for your animation and cartoons. No matter what you like to design, this software can help you create a lot of great designs.

Saturday, September 19, 2009

Adam Smith (1723-1790)

ஆடம் ஸ்மித் (1723-1790)

பொருளாதாரக் கோட்பாட்டு வளர்ச்சியில் மிகுந்த செல்வாக்குப் புகழ் வாய்ந்தவராகத் திகழ்ந்தவர் ஆடம் ஸ்மித். இவர் ஸ்காத்லாந்திலுள்ள கிரிக்கால்டி நகரில் 1723ஆம் ஆண்டில் பிறந்தார். இளமையில் ஆக்ஸ்போர்டுப் பல்கலைக் கழகத்தில் 1751 முதல் 1764 வரையில் ஒரு தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோது, "அறநெறி உணர்வுகள் பற்றிய கோட்பாடு (Theory of Moral Sentiments) என்ற தமது முதலாவது நூலை வெளியிட்டார். இந்நூல் இவருக்கு அறிஞர்கள் வட்டாரத்தில் பெரும் புகழ் தேடித் தந்தது எனினும், இவருக்கு அழியாப் புகழ் ஈட்டித் தந்தது நாடுகளின் செல்வத்தின் தன்மை மற்றும் அவற்றுக்கான காரணங்கள் பற்றிய ஆய்வு (An Enquiry into the Nature and Causes of the Wealth of Nations) என்ற நூலேயாகும். இந்த நூல் 1776 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்நூல் வெளியான உடனேயே பெரும் புகழ் பெற்றது. இதனால் கிட்டிய புகழும் மரியாதையும் இவரது இறுதிக்காலம் வரையில் நீடித்தது. இவர் கிர்க்கால்டில் 1790ஆம் ஆண்டில் காலமானார். ஸ்மித் திருமணமே செய்து கொள்ளவில்லை. எனவே அவருக்குக் குழந்தைகளும் இல்லை.
பொருளாதாரக் கோட்பாட்டில் கவனம் செலுத்திய முதல் அறிஞர் ஆடம் ஸ்மித் என்று கூற முடியாது. அவரது புகழ் பெற்ற கொள்கையில் பல அவருடைய நற்சிந்தனையில் உருவானவை அல்ல. ஆனால், முறைப்படுத்தப்பட்ட விரிவான ஒரு பொருளாதாரக் கோட்பாட்டினை முதன் முதலில் அளித்தவர் இவர்தான் என்பதில் ஐயமில்லை. அவர் அளித்த இந்தக் கோட்பாடு, இத்துறையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு வலுவான அடித்தளமாக அமைந்தது. இந்தக் காரணத்தினாலேயே இவருடைய நாடுகளின் செல்வம் என்ற நூல் அரசியல், பொருளாதாரம் பற்றி நவீன ஆராய்ச்சிக்கு ஒரு முதற்படியாக அமைந்தது எனக் கூறுவது பொருந்தும்.

கடந்த காலத்தில் நிலவிய பல தவறான கொள்கைகளைத் தெளிவுபடுத்துவதற்கு இந்த நூல் உறுதுணை புரிந்தது. அதுவே இந்நூலின் பெருஞ்சாதனையாகும். பணந்தான் செல்வம்; ஓர் அரசு பெருமளவுத் தங்கத்தைத் தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என வற்புறுத்திய பழைய கோட்பாட்டினை ஸ்மித் இந்நூலில் வன்மையாகக் கண்டித்தார். அதே போன்று நிலந்தான் முதன்மையான பொருள்வள ஆதாரம் என்ற கொள்கையினையும் இந்நூல் மறுத்தது. மாறாக உழைப்புதான் (Labour) அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததென இது வலியுறுத்தியது. உழைப்புப் பகிர்வு (Division of Labour) வாயிலாக உற்பத்தியைப் பெருமளவுக்கு அதிகரிக்க முடியும் என ஸ்மித் உறுதியாகக் கூறினார். தொழில்துறை விரிவாக்கத்துக்கு முட்டுக்கட்டை போடுகிற காலங்கடந்தத் தாறுமாறான அரசுக் கட்டுப்பாடுகளை அவர் கடுமையாகத் தாக்கினார்.

நாடுகளின் செல்வம் என்ற நூலில் ஸ்மித் வலியுறுத்திய மையக் கருத்து இதுதான். தடையிலா அங்காடி (Free Market) மேற்போக்கில் ஒழுங்கற்றதாகத் தோன்றினாலும், உள்ளபடிக்கு அது தன்னையே முறைப்படுத்திக் கொள்ளும் ஒரு செயல்முறையைக் கொண்டிருக்கிறது. அதன்படி, அந்த அங்காடி, சமுதாயம் மிகுதியாக விரும்பக் கூடிய சமுதாயத்திற்கு மிகவும் தேவைப்படக்கூடிய பொருள்களை, சமுதாயம் விரும்புகிற வகையிலும், சமுதாயத்திற்கு தேவைப்படுகிற அளவுக்கும் தானாகவே உற்பத்தி செய்ய முனைகிறது. எடுத்துக்காட்டாக, மக்கள் விரும்பும் ஏதேனும் பொருள் பற்றாக்குறையாக இருக்கிறது எனக் கொள்வோம். அப்போது அதன் விலை ஏறுவது இயற்கை. விலை ஏற, ஏற அப்பொருளின் உற்பத்தியாளருக்கு அதிக ஆதாயம் கிடைக்கிறது. இவ்வாறு அதிக ஆதாயம் கிடைப்பதைப் பார்த்து மற்ற உற்பத்தியாளர்களும் அதே பொருளை உற்பத்தி செய்ய ஆவல் கொள்கிறார்கள். இதனால் உற்பத்தி பெருகி, முதலில் நிலவிய பற்றாக்குறை நீங்கிவிடும். மேலும், பொருளின் உற்பத்தி பெருகி, அதை உற்பத்தி செய்யும் பல்வேறு உற்பத்தியாளர்களிடையே ஏற்படும் போட்டி காரணமாக, அந்தப் பொருளின் விலை அதன் இயல்பான விலைக்கு (Natural Price). அதாவது, அதன் உற்பத்திச் செலவுக்கு (Production Cost) குறைந்து விடும். பற்றாக்குறையை நீக்கிச் சமுதாயத்திற்கு உதவி புரிய யாரும் வேண்டுமென்றே முயற்சி மேற்கொள்ளவில்லை. எனினும் அந்தப் பற்றாக்குறைச் சிக்கல் தானாகவே தீர்ந்து விட்டது. ஸ்மித்தின் கூற்றுப்படி, ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த ஆதாயத்தையே கருத்தில் கொள்கிறான். எனினும், ஒரு மறைமுகமான கரத்தின் தூண்டுதல் காரணமாக, அவன்தான் உட்கருத்துக் கொள்ளாமலேயே, ஒரு குறிக்கோள் எட்டுவதற்கு உதவுகிறான். அவன் தன் சொந்த நலனுக்குப் பாடுபடுவதன் மூலம், தானே உதவி புரிய எண்ணியிருந்தால் எந்த அளவுக்கு உதவி புரிந்திருக்க கூடுமோ அந்த அளவைவிட மிகக் கடுமையான அளவில் சமுதாயத்திற்கு அவன் உதவி செய்கிறான். (நாடுகளின் செல்வம் புத்தகம் IV, அத்தியாயம் II).

தடையிலாப் போட்டிக்கு (Free Competition) இடையூறுகள் ஏற்படுமானால், இந்த மறைமுகக் கரம் தனது பணியை ஒழுங்காகச் செய்ய முடியாது. எனவே தடையிலா வாணிகத்தில் ஸ்மித் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். மிகையான காப்பு வரிகளை (Tarriffs) அவர் தீவிரமாக எதிர்த்தார். வாணிகத்திலும், தடையிலா அங்காடியிலும் அரசு தலையிடுவதை எப்போதும் பொருளாதாரத்தின் செயல்திறனை வெகுவாகக் குறைத்துவிடும் என்றும், அதனால், இறுதியில் பொதுமக்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கருதினார். (தலையிடாமைக் (Laissez Faire) கொள்கையை ஸ்மித் கண்டுபிடிக்கவில்லை. ஆயினும், அந்தக் கொள்கையை ஊக்குவிப்பதற்கு வேறெந்த மனிதரையும் விட அவர் அரும்பணியாற்றியுள்ளார்.)

மக்கட்பெருக்கத்தைத் தடுப்பதற்கு ஒழுக்கக் கட்டுப்பாடு வேண்டும் என்ற கொள்கையை மால்தஸ் (Malthus) வலியுறுத்தினார். அவருடைய கொள்கையின் ஒரு பகுதியை நாடுகளின் செல்வம் எனும் நூலில் ஸ்மித் முன்னதாகவே கூறியிருக்கிறார். எனினும், மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஊதியங்கள் பிழைப்புக் கூலி நிலையிலிருந்து (Subsistence Level) உயர்வதற்கு தடங்கல் ஏற்படும் என ரிக்கார்டோவும், கார்ல் மார்க்சும் கருதியபோது, உற்பத்திப் பெருக்கம் ஏற்படும்போது ஊதியங்கள் உயர முடியும் என்ற கருத்தை ஸ்மித் வலியுறுத்தினார். ஸ்மித் கூறிய இந்தக் கருத்து சரியானது என்பதும், ரிக்கார்டோவும் மார்க்சும் தவறாகக் கருதினார் என்பதும் பிந்திய நிகழ்வுகளினால் மெய்ப்பிக்கப்பட்டன.

ஸ்மித்தின் கருத்துகளின் சரிநுட்பம் பற்றியும், பிற்காலக் கோட்பாட்டாளர்கள் மீது அவருடைய செல்வாக்குக் குறித்து நடைபெறும் விவாதங்கள் ஒருபுறமிருக்க, சட்டங்கள் இயற்றுவதிலும், அரசுக் கொள்கைகளிலும், அவருடைய செல்வாக்கு பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. நாடுகளின் செல்வம் என்ற நூல் தனித்தேர்ச்சித் திறனோடும், மிகுந்த தெளிவோடும் எழுதப்பட்ட நூலாகும். அது மிகப் பெருமளவில் படிக்கப்பட்டது. வாணிகத்திலும், வர்த்தக விவகாரங்களிலும் அரசு தலையிடுவதற்கு எதிராகவும், குறைந்த காப்பு வரி தடையிலா வாணிகம் ஆகியவற்றுக்கு ஆதரவாகவும் அவர் கூறிய வாதங்கள், 19 ஆம் நூற்றாண்டு முழுவதிலும் அரசுக் கொள்கைகளில் திட்டவட்டமான செல்வாக்கைச் செலுத்தின. இந்தக் கொள்கையின் மீது அவருடைய செல்வாக்கினை இன்றுங்கூட காண முடிகிறது.

ஸ்மித் காலத்திற்குப் பிறகு பொருளாதாரக் கோட்பாடு மிகப் பெருமளவுக்கு வளர்ந்துவிட்டது. அவருடைய கொள்கைகளில் சில இன்று ஒதுக்கப்பட்டு விட்டன. இந்தக் காரணங்களினால், ஆடம் ஸ்மித்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடத் தோன்றும். ஆனால், பொருளாதாரக் கோட்பாட்டினை ஆக்க முறையான, மனிதச் சிந்தனை வரலாற்றில் ஒரு தலைமை சான்ற சான்றோராக அவர் திகழ்கிறார்.


நன்றி : http://ping.fm/XJnUN