Tuesday, August 18, 2009

தத்தளிப்பு



வாருங்கள் வாருங்கள் என்றே

வாய் விட்டு அழைத்திட்டார்

சேருங்கள் சேருங்கள் தமிழ்த் தென்றலோடு

ஆடுங்கள் ஆடுங்கள் விளையாடுங்கள் என்றார் அவர்



ஆட்டத்தில் என்னையும் சேர்த்திட

ஆள் உண்டோ இவ்வுலகில்

என்று களித்தே குதித்திட்டேன்

குதித்தபின் கண்டேன் நீரை விட்டு வெளியே

குதித்த மீன் நானென்று



முழு நிலவோ

நிலவிலா வானின் விண் மீனோ

மண்ணோ மரமோ

ஆன்மீகமோ வான் மேகமோ

காதலோ சாதலோ

கொட்டுகின்றார் மழையெனவே

கட்டுரையும் கவிதைகளும்

தமிழ்த் தென்றலிலே

ஆன்றோரும் சான்றோரும்



காவியமோ காப்பியமோ

புராணமோ இதிகாசமோ

இன்று வரை படித்தி்லை நான்

கரை இருந்து நீரடையத் தத்தளிக்கும் இம் மீனுக்கு

இறைவா நீர் காட்டும் வழியதனை



நடராஜன் கல்பட்டு

No comments: