Saturday, February 28, 2009

உயிர் காக்கும் CPR

உயிர் காக்கும் CPR

சுல்தான் அவர்களின் பதிவைப் பார்த்ததும் CPR குறித்து பதிவிட
வேண்டுமென்று நினைத்தேன்.

CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி
குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர்
ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth
Respiration மற்றும் Chest compressions அடங்கிய CPR-Cardio Pulmonary
Resuscitation எனப்படும் உதவி மிக அவசியம்.

ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம்

>இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது

>இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது

>உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது

>விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது

>தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது

>அதிர்ச்சியின் போது ( in a state of shock)

>வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது

>மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock)

>இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால் )

CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம்
உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும்
அவசியம்.

>ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல்உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்)

>இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்)

>நினைவிருக்கிறதா என உறுதி செய்தல்

>சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion), மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல்

>உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது.

சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக
முக்கியமானது.
இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை

>அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது; ( தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்)

>ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது.

இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும்.

CPR ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு.அதாவது
A=Airway B=Breathing C=Circulation

முதலில்-Airway

சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம்.

நினைவிழந்த நபரை சரிசமமான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது
முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். இதனால்
சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாவு முன்பக்கமாக விழுந்து
சுவாசப்பாதையை சீராக்கும்.
பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக
இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு
அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய்
நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.)

இரண்டாவதாக-Breathing

சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில்
பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின்
மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில்
இருமுறை வேகமாக காற்றை ஊத/உள்செலுத்த வேண்டும்.
மூன்றாவதாக-Circulation

ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ,
நிரந்தரமாகவோ செயலிழந்து அதினிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும்
நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக
இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம்.
நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions)
இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து
இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.

Chest Compressions எப்படி அளிப்பது

விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum)
இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும்
வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.
1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு
வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை)
அழுத்தினால் போதுமானது.
இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை
என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின்
மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக
மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது
மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.


மேலேயுள்ள படத்தை நகலெடுத்து உங்கள் அலுவலகங்களில் தகவல் தட்டிகளில்
வைத்தால் மற்றவர்களுக்கும் உபயோகமாகயிருக்கு
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

If anybody met with fire accident or people who born with problems in jointed ear, nose and mouth can do free plastic surgery doing by kodaikanal PASAM hospital…

Hi friends,

If anybody met with fire accident or people who born with problems
in jointed ear, nose and mouth can do free plastic surgery doing by
kodaikanal PASAM hospital…
The period is from 23rd march to 4th April by German doctors…

everything is free of cost.

Contact : 04542 - 240668,240668,245732
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

கோவை சிறைவாசிகளின் தற்போது நிலைகளை பற்றி ஒரு குறுந்தகடு வெளியீடு

அஸ்ஸலாமு அலைக்கும்,(வரஹ்)
கடந்த 11 ஆண்டுகளாக தமிழக சிறைகளில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்
இளைஞர்கள் சொல்லொண்ணா துன்ப துயரங்களுடன் இருந்து வருகிறார்கள் என்பதை
தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
சிறை சென்ற யாவரும் தங்களின் சுயநலன்களுக்காக சிறை சென்றிடவில்லை.
சமூகத்தின் நலன் கருதியும், சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட
அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியும் தங்களை தத்தம் செய்தார்கள்.
தங்களின் வாழ்வை துச்சமாக மதித்து சமூக நலனே பெரிதென கருதி சிறை
பட்டவர்களின் நிலை? . . . வார்த்தைகளால் சொல்லிட முடியாது.
பத்துக்குப் பத்து அறைகளில் முடங்கி, கடும் துன்ப துயரங்களை அனுபவித்து
வரும் நிலை ஒரு புறமும், குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய
ஆண்மக்களெல்லாம் சிறையில் அடைபட்டதால் - அக்குடும்பங்கள் அடைந்து வரும்
வேதனைகள், வறுமைகள் என மறுபுறமும், ஒரு சேர ஒன்றாக அழுத்த சிறைவாசிகள்
நிலையோ மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கின்றன.
2008 செப்டம்பர் 15ல் அண்ணா பிறந்த நாளில் தமிழக அரசு 1405 ஆயுள் தண்டனை
கைதிகளை விடுதலை செய்தது. இதில் ஒரு முஸ்லிமைச் கூட விடுவிக்கவில்லை.
இவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும்
முஸ்லிம் இயக்கங்கள் கோரிக்கைகளும், தீர்மானங்களும், தங்களின்
கூட்டங்களில் நிறைவேற்றி வந்தன.
இத்தீர்மானங்களும், கோரிக்கைகளும் நிறைவேற்றினால் மட்டும், அது
போதுமானதாக இல்லை என்பதை நாம் கடந்த காலங்களில் உணர்ந்தே உள்ளோம்.
ஏனெனில் இக்கோரிக்கைகளையும், தீர்மானங்களையும் அரசு செவியேற்று
முஸ்லிம்களை கடந்த அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்ய முன்வந்திருக்க
வேண்டும். அப்படி அரசு முன் வராததினால் முஸ்லிம் அமைப்புகளும்,
ஜமாஅத்துகளும், சிறைபட்டவர்களுக்கென ஒற்றை கோரிக்கை ஒன்றை ஏற்படுத்தி,
கூட்டுப் போராட்டத்தை அறிவித்து அரசுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தினால்
மட்டுமே சிறைவாசிகளின் விடுதலை, இன்ஷா அல்லாஹ் சாத்தியப்படும்.
விடுதலை முயற்சி மேலே கூறிய பிரகாரம் ஒரு வகையிலும், இன்னொரு வகையோ சட்ட
ரீதியாக இவர்களுடைய வழக்கை எதிர் கொள்வதே ஆகும். தற்போது கோவை குண்டு
வெடிப்பு வழக்கு உயர்நீதி மன்றத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில்
விசாரணைக்கு வரவிருக்கின்றது. இதை எதிர்கொள்வதற்கு சட்டத் துறையில்
நிபுணத்துவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞரை நியமிக்க வேண்டியிருப்பதால்
சுமார் ரூ. 75 லட்சம் வரை இவ்வறக்கட்டளைக்குத் தேவைப்படுகின்றது.
சமுதாயத்திலுள்ள நல் உள்ளங்கள் இதற்காக உதவி செய்திட வேண்டும். 1400
ஆண்டுகளுக்கு முன்பிருந்த இஸ்லாமிய விரோதிகள் பெருமானார் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்களையும் ஸஹாபா பெருமக்களையும் பெருமானார்
குடும்பத்தையும் 'சூரே அபுதாலிப்' பள்ளத்தாக்கில் சமூக பஹிஷ்காரம்
செய்தார்கள். மூன்றாண்டு காலம் உண்ண உணவின்றி இவர்கள் அனுபவித்த துன்ப
துயரங்கள் வார்த்தைகளில் வடித்திட முடியாது. அந்நிகழ்வு வரலாற்றில் வைர
வரிகளாக மின்னிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் அடைந்து வந்த சொல்லொண்ணா
துன்ப-துயரங்களை கண்டு எவர்கள் இவர்களை சமூக பஹிஷ்காரம் செய்தார்களோ
அவர்களிலிருந்து சில நல்ல உள்ளங்கள் இப்பாதிக்கப்பட்டவர்களுக்கு தடையை
மீறி உதவிட முன் வந்தார்கள்;. உதவிட முன் வந்ததின் காரணமாக சமூக
பஹிஷ்காரம் என்னும் பெருங்கொடுமை முற்றுப் பெற காரணமாக அமைந்தது.
ஆகவே, நாங்கள் இறைவனிடம் இறைஞ்சுகிறோம், யா அல்லாஹ்‚ 11 ஆண்டுகளாக
தங்களின் இளமை, தங்களின் பொருளை, தங்களின் குடும்பத்தை, தங்களின்
குழந்தைகளை, தங்களின் மனைவிமார்களை இழந்து, பிரிந்து தவிக்கும் இவர்களை
மீட்டிட முஸ்லிம் சமுதாயத்தினர் முன்வந்திட வேண்டும். சூரே அபுதாலிப்
பள்ளத்தாக்கில் சமூக பஹிஷ்காரம் உடைந்தது போல் இவர்களின் விடுதலையும்
நடந்திடவேண்டும்.
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காகவும், மறுமை நலனுக்காக வேண்டியும்,
சிறை பட்டவர்களின் விடுதலைக்காக முன்வந்திடுவீர்கள் என்கின்ற
நம்பிக்கையில் இம்மடலை தங்களுக்கு அனுப்பியுள்ளோம்.
சிறைப்பட்டோரின் விபரங்கள் அடங்கிய குறுந்தகடையும் வெளியிட்டுள்ளம்.- வஸ்ஸலாம் -
இவண்

சிறுபான்மை உதவி அறக்கட்டளை
கோவை
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

Friday, February 27, 2009

try your reflex

try your reflex

http://www.bbc.co.uk/science/humanbody/sleep/sheep/reaction_version5.swf
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

Thursday, February 26, 2009

எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான்!!

அல்லாஹ் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான், சில நாட்கள்
நல்லதென்றும் சில நாட்கள் கெட்டதென்றும் கருதுவது கூடாது. இது
இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மிக பெரும் குற்றமும் மூட நம்பிக்கையுமாகும்.
ஒவ்வொரு நாளும் அது சிலருக்கு சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும்
சிலருக்கு கவலையான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் இருக்கும். அல்லது
ஒருவருக்கு இரண்டு நிகழ்வுகளும் ஒரே நாளில் நடக்கவும் செய்யும். இதை
வைத்து அந்த நாளை நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ கூறிவிட முடியாது.
இவ்வுலகம் சோதனைக் கூடமாகும். மரணிக்கும் வரை ஒவ்வொரு மனிதனும் பல விதமான
சோதனைகளைக் கொண்டு சோதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பான். சோதனைகள்
வரும்போது அதை ஒரு முஸ்லிம் பொறுத்துக் கொள்ளவும் பொருந்திக் கொள்ளவும்
வேண்டும். அது அவனுடைய பாவங்களுக்கு பரிகாரமாக அமைகின்றது.

இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும். இப்படி ஈமான் கொள்வது ஈமானின்
அடிப்படைகளில் ஒன்றாகும்.
அல்லாஹ்வையும் வானவர்களையும் நபிமார்களையும் கியாமத் நாளையும் நல்லதும்
கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான்
கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: முஸ்லிம்
ஆகவே நமக்கு நடக்கக்கூடிய நல்ல கெட்ட காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்
நம்மீது விதித்த விதியின்படியே நடக்கின்றதென்று நம்ப வேண்டுமே தவிர,
இன்று கெட்ட நாள், இதனால்தான் எனக்கு இந்த ஆபத்து நடந்ததென்று கூறுவது
மூட நம்பிக்கையும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக்கூடிய ஒன்றாகும்.

சோதனையின்றி வாழ்வில்லை
அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள்,
உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால்
பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன்
2:155)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஃமினான ஆண்களும் பெண்களும் தூய்மையானவர்களாக (பாவமற்ற நிலையில்)
அல்லாஹ்வை சந்திக்க வேண்டுமென்பதற்காக அவர்கள் விஷயத்திலும் அவர்களின்
பிள்ளைகள் விஷயத்திலும் அவர்களின் பொருள் விஷயத்திலும் அவர்கள்
மரணிக்கும் வரை அவர்களுக்கு சோதனை வந்து கொண்டே இருக்கும். ஆதாரம்:
திர்மிதி

ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது
ஒவ்வொரு மனிதனும் தனக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை இது அல்லாஹ்வின்
ஏற்பாட்டினால் தான் (களா கத்ரினால்தான்) ஏற்பட்டதென்றும், நான்
பிறப்பதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இது எழுதப்பட்டு
முடிந்து விட்டதென்றும் இது நடக்காமல் இருப்பதற்கு வாய்ப்பே
இல்லையென்றும் நம்பாத வரை அவர்கள் உண்மையான முஃமினாக முடியாது.
இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், இப்னு உமரின் ஆத்மா யார்
கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! களாகத்ரை (விதியை) ஈமான்
கொள்ளாதவர், உஹது மலை அளவு தங்கத்தை அல்லாஹ்வின் வழியில் செலவு
செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்கமாட்டான் எனக்கூறி, இதற்கு ஆதாரமாக பின்வரும்
ஹதீஸை கூறினார்கள். அல்லாஹ்வையும் வானவர்களையும் ரஸுல்மார்களையும்
கியாமத் நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி
நடக்கின்றது என்று ஈமான் கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும் என நபி(ஸல்)
அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்

உபாதா பின் சாமித்(ரலி) அவர்கள் தன் மகனைப்பார்த்து, மகனே! உனக்கு
ஏற்படுகிற துன்பங்கள் அல்லாஹ்வின் விதியேயாகும். அது உனக்கு வராமல்
போய்விடாது என்ற உண்மையையும், உனக்கு ஏற்படாது சென்றுவிட்ட துன்பங்கள்
உனக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையும் நீ அறிந்து கொள்ளாதவரை நிச்சயமாக
நீ உண்மையான ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்ளமாட்டாய் எனக்கூறி,
பின்வரும் ஹதீஸையும் எடுத்துக் கூறினார்கள்.

அல்லாஹ் எழுது கோலை முதலில் படைத்து நீ எழுது எனக் கட்டளையிட, எதை எழுத
வேண்டும் என அது கேட்க, இறுதிநாள் வரைக்கும் எல்லாவற்றிற்கும் உண்டான
விதிகளை எழுது என அல்லாஹ் கட்டளையிட்டான், என நபி(ஸல்) அவர்கள் கூற நான்
கேட்டுள்ளேன் எனக் கூறி, மகனே! இவ்வாறு விதியை நம்பாது ஒருவர் மரணித்து
விடுவாராயின் அவர் என்னை சார்ந்தவரல்ல என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள் எனவும் எடுத்துரைத்தார்கள். ஆதாரம்: அஹ்மத்

இப்னு அபூதைலமீ அவர்கள் அறிவிக்கிறார்கள், நான் உபை பின் கஃபை அணுகி, என்
உள்ளத்தில் விதியைப்பற்றி சிறிது சந்தேகம் உள்ளது. அதை நீக்குவதற்கு
ஏதாவது சொல்லித்தாருங்கள். அல்லாஹ் அந்த சந்தேகத்தை போக்கிவிடுவான் என்று
கூறினேன். அதற்கு உபை பின் கஃபு(ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
(இப்னு அபூ தைலமியே!) நிச்சயமாக உமக்கு ஏற்படும் துன்பங்கள் அல்லாஹ்வின்
விதியேயாகும். அது உமக்கு வராமல் போகாது எண்ற உண்மையையும், உமக்கு
எற்படாது சென்றுவிட்ட துன்பங்கள் உமக்கு வரவேண்டியதல்ல என்ற உண்மையையம்
அறிந்து, களா கத்ரைக் கொண்டு நீர் ஈமான் கொள்ளாதவரை உஹது மலை அளவு
தங்கத்தை செலவு செய்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். இவ்வாறு
நீர் களாகத்ரைக் கொண்டு ஈமான் கொள்ளாது மரணித்துவிட்டால் நீர்
நரகவாசிகளில் ஒருவரே என்றார்கள். பின்பு நான் அப்துல்லாஹ் பின்
மஸ்ஊத்(ரலி) அவர்களிடமும் ஹுஸைஃபா பின் அல்யமான்(ரலி) அவர்களிடமும்
வந்தேன். இவர்கள் எல்லோரும் இது போலவே நபி(ஸல்) அவர்கள் கூறியதாக
கூறினார்கள். ஆதாரம்: அஹ்மத், அபூதாவூத்

சோதனை வருவது அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் நேசத்தையே வெளிக்காட்டுகின்றது.
அல்லாஹ் தன் அடியாருக்கு நலவை நாடினால் இவ்வுலகிலேயே தண்டனை (சோதனை)யை
வழங்குகின்றான். அல்லாஹ் தன் அடியாருக்கு கெடுதியை நாடினால் மறுமையில்
தண்டனையை முழுமையாக வழங்குவதற்காக இவ்வுலகில் எவ்வித தண்டனையும்
(சோதனையும்) வழங்குவதில்லை, அதிக சோதனையுடன்தான் அதிக கூலியும்
கிடைக்கும், அல்லாஹ் ஒரு கூட்டத்தை நேசித்தால் அவர்களை சோதிப்பான். அதை
யார் பொருந்திக் கொள்கின்றார்களோ அவருக்கு அல்லாஹ்வின் பொருத்தம்
கிடைக்கின்றது, யார் அதை கோபிக்கின்றாரோ அவருக்கு அல்லாஹ்வின் கோபம்
கிடைக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதி

ஸஃபர் மாதமும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதம்தான்
சோதனைகள் அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றது என நம்ப வேண்டிய
ஒரு முஸ்லிம், ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றும், அதில் நல்ல
காரியங்கள் செய்யக்கூடாது என்றும், பீடையயை களிப்பதற்காக ஸஃபர் மாதத்தின்
மூன்றாம் புதன் கிழமை ஆற்றில் குடும்பத்துடன் குளித்து இன்னும் இது போன்ற
பல சடங்குகளையும் செய்து அந்தப்பீடையை போக்கவேண்டும் என்று எண்ணி பல
சடங்கு சம்ரிரதாயங்களை ஸஃபர் மாதத்தில் நமது இஸ்லாமிய பல சகோதர சகோதரிகள்
செய்கின்றார்கள். இது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான செயலும் மூட
நம்பிக்கையுமாகும். இப்படிப்பட்ட இஸ்லாத்திற்கு மாற்றமான நம்பிக்கைகளை
விட்டுவிட்டு அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது என்று நம்ப
வேண்டும். ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றிருந்தால் அதை நபி(ஸல்)
அவர்கள் நமக்கு அறிவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட எந்த இறை வசனமோ நபி
மொழியோ கிடையாது. மாறாக ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்று நம்புவதை
தடுக்கும் நபிமொழியைத்தான் பார்க்க முடியும்.

இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை, துர்ச்சகுணம் பார்ப்பது கூடாது,
ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது, சஃபர் (மாத பீடையும்) கிடையாது,
நட்சத்திர சகுணம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசுமில்லை என
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:
முஸ்லிம்

ஸஃபர் மாதத்தை பீடையுள்ள மாதம் என்பதற்கு, இந்த மூட நம்பிக்கையுள்ளவர்கள்
கூறும் காரணம், நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத முற்பகுதியில் நோயுற்றிருந்து
அம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் புதன் கிழமை நோயிலிருந்து
குணமடைந்தார்கள். ஆகவே அம்மாதம் பீடையுள்ள மாதமாகும், மூன்றாம் வாரத்தில்
நபி(ஸல்) அவர்கள் நோயிலிருந்து குணமடைந்தது போல், நாமும் பீடையை மூன்றாம்
வாரத்தில் நீக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும்
தவறான வாதமாகும். நோயுறுவது பீடையா? முன்பு கூறியது போன்று இது
அல்லாஹ்வின் விதிப்படி நடந்ததென்று ஒரு முஸ்லிம் நம்ம வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், ஸஃபர் மாதத்தில் மட்டுமா நோயுற்றிருந்தார்கள், ரபீஉல்
அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள், இதை யாரும் மறுக்க
முடியாது. நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள்
நோயுற்றிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12ல்
மரணித்தார்கள், அந்த நாளை யாராவது பீடையுள்ள மாதம் என்று
கூறுகின்றார்களா? அதை கொண்டாடும் நாளாக அல்லவா? எடுக்கின்றார்கள்.
நமக்குள் நாமே முரண்படுகின்றோம்.

ஆகவே ஸஃபர் மாதத்தையும் மற்ற மாதங்களைப் போன்று நல்ல மாதமாக நினைத்து
நமது அன்றாட காரியங்களை செய்ய வேண்டும். ஸஃபர் மாதத்தில் ஏதும் சோதனைகள்
வந்தால்கூட அது ஸஃபர் மாத்தினால் ஏற்படவில்லை, அல்லாஹ்வின்
ஏற்பாட்டினால்தான் வந்தது என்று நம்ப வேண்டும். இப்படிபட்ட உறுதியான
ஈமானை அல்லாஹ் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!
நன்றி: அதிரை தமீம்
--
அன்புடன்,
தாருல்ஸஃபாவிலிருந்து சாதிக்.
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

வன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்

வன்னி முகாங்களில் துன்புறுத்தப்படும் தமிழ்ப் பெண்கள்
செம்மதி


இங்கு வன்னியில் நிலைமைகள் மிகவும் மோசமாக உள்ளன. மக்கள் தினமும்
செத்துக்கொண்டு இருக்கிறார்கள். இலங்கையின் வரலாற்றில் இப்போதுதான்
மிகப்பெரிய மனிதப் படுகொலை நடைபெற்று வருகின்றது. ஊடக அடக்குமுறை காரணமாக
இவை வெளிவருவதில்லை. பாதுகாப்பு வலயம் என்று முல்லைத்தீவில் இலங்கை அரச
இராணுவத்தினால் அறிவிக்கப்பட்ட யுத்தசூனியப் பகுதிக்குள் மக்களை உள்வர
வைத்து அதற்குள் பலத்த எறிகணைத் தாக்குதலை நடத்தி பாரிய இனப் படுகொலையை
இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. புதுக்குடியிருப்பு வைத்தியசாலை
மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளுள் எறிகணைத் தாக்குதலில் மக்கள்
கொல்லப்பட்டபோது, 'பாதுகாப்பு வலயப்பகுதி இருக்கும்போது ஏன் இந்தமக்கள்
புதுக்குடியிருப்பில் நின்றார்கள்' எனக் கேள்வி கேட்ட இலங்கைப்
பாதுகாப்புப் பேச்சாளர், பின்னர் உடையார்கட்டு பாதுகாப்பு வலயத்தினுள்
அமைந்திருந்த வைத்தியசாலை மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோது 'பிரதான அரச
வைத்தியசாலை புதுக்குடியிருப்பில் இருக்கும்போது ஏன் மக்கள்
உடையார்கட்டில் நின்றார்கள்' என்று கேள்வி கேட்கின்றார். இது B.B.C
செய்தியைக் கேட்டவர்களுக்கு நன்கு புரிந்திருக்கும். இது மற்றவர்களை
முட்டாள்களாக்கும் விடயமாகக் காணப்படுகின்றது.

இன்னுமோர் சந்தர்ப்பத்தில் பேட்டி அளித்த பாதுகாப்புப் பேச்சாளர்
'மக்களின் பாதுகாப்பு வலயம் மீது தாம் தாக்குதல் நடாத்தவில்லை' என்று
கூறிவிட்டு பின் ஒரு சந்தர்ப்பத்தில் 'அங்கு இறந்தவர்கள் அனைவரும்
புலிகள்' என்கிறார். மக்களுக்கான பாதுகாப்பு வலயத்தினுள் ஏவப்பட்ட
எறிகனைகள் புலிகளை மாத்திரம் தேடித் தாக்கியிருக்கின்றன என்பது
மற்றவர்களை முட்டாள்கள் ஆக்கும் பேச்சாக உள்ளது. உண்மை அங்கு இறந்த
700க்கும் மேற்பட்டவர்களும் காயமடைந்த அனைவரும் அப்பாவித்தமிழ் மக்கள்
என்பதேயாகும்.

குண்டு வீச்சிற்குத் தாக்குப் பிடிக்க முடியாது அரச கட்டுப்பாட்டுப்
பகுதிகளுக்குள் வரும் மக்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய்
உள்ளனர். குறிப்பாக இளம்வயதினர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 148 பேர்
எந்தவித மரணவிசாரணையும் இன்றி வவுனியா பூந்தோட்டம் மயானத்தில்
புதைக்கப்பட்டுள்ளனர். 27-01-2009 செவ்வாய்க் கிழமை 5 இளம் பெண்களின்
உடல்கள் படையினரால் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இவை பாலியல் வல்லுறவிற்கு
உட்படுத்தப்பட்டு வாய்க்குள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் காணப்பட்டன.
இவர்களின் உடல்களில் கடிகாயங்கள் பரவலாகக் காணப்பட்டதாக நேரில்
பார்த்தவர்கள் கூறினர். வன்னியில் இருந்து வந்தவர்களைத் தடுத்து
வைத்துள்ள நலன்புர் நிலையங்களில் இளம் வயதினர் காணாமல்
போய்க்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இராணுவத்தால் கடத்தப்பட்டுக் கொலை
செய்யப்படுகின்றார்கள். இராணுவம் இவர்கள் தப்பிச்சென்றுவிட்டார்கள் என்று
கூறித் தப்பிவிடுகின்றது.

பெற்றோரும் உறவினரும் பிள்ளைகளையும் உறவுகளையும் பறிகொடுத்துவிட்டுத்
தவிக்கின்றனர். முகாங்களில் இளையவர்கள் அடிமைகளாக இராணுவத்தால் வேலை
வாங்கப்படுகின்றனர். இவ்முகாங்களில் இருந்து வெளியில் சென்று வர
அனுமதிக்கப்படுவதில்லை. இது போன்ற பல்வேறுபட்ட துன்பங்களால் மக்கள்
கொல்லப்பட்டும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டும் இருக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் வவுனியா, மன்னார்ப்பகுதி மக்களுக்கும்
இலங்கையில் உள்ள நேர்மையான ஊடகத்துறையினருக்கும் தெரிந்த விடயமாகும்.
இருப்பினும் உயிர் அச்சுறுத்தல் காரணமாக எவரும் வாய்திறப்பதில்லை. தமிழ்
ஊடகங்களில் கூட இச்செய்திகள் வெளிவருவதில்லை

வவுனியா தடுப்பு முகாங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் பெண்களை இரவு
வேளைகளில் அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறுகூடுகளுக்குள் விசாரணை என்று கூறி
அழைத்துச் சென்று பலரை பாலியல் சேட்டைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். பலரை
பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியுள்ளனர். இங்குள்ளவர்கள் வெளியில்
சென்றுவரவோ வெளியில் உள்ளவர்கள் உட்செல்லவோ அனுமதி இல்லை. இவ்விடயம்
சம்மந்தமாக இங்கு சென்று வரும் வைத்தியசாலைப் பணியாளர்களுக்கு ஒரு
முறைப்பாடு கிடைத்துள்ளது. ஏனையவர்கள் வெளியில் செல்லப்
பயப்படுகின்றார்கள். இதைத் தடுப்பதற்கு ஏதாவது சட்டநடவடிக்கை
எடுக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும். இது போன்ற இன்னும் பல
பிரச்சனைகள் உள்ளன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை விதிக

அல்லாஹ்வின் பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி அவசியம் அறிந்து கொள்ள
வேண்டிய சில அடிப்படை விதிகள்:
முதல் அடிப்படை:
அல்லாஹ்வுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் பற்றி வந்துள்ள அல்குர்அன்
வசனங்களையும் நபிமொழிகளையும் அணுகும் முறை.

அல்குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் பொறுத்தவரை அவை தருகின்ற
வெளிப்படையான கருத்திலேயே அவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதில் எந்த
மாற்றமும் செய்யக் கூடாது. ஏனெனில் அல்குர்ஆன் அரபி மொழியிலேயே
அருளப்பட்டுள்ளது. அவ்வாறே நபி (ஸல்) அவர்களும் அரபு மொழியையே
பேசினார்கள்.

அல்குர்ஆனும் நபிமொழிகளும் தருகின்ற வெளிப்படையான கருத்துக்களை
விட்டுவிட்டு அவற்றுக்கு வேறு அர்த்தங்கள் கற்பிப்பது அல்லாஹ்வின் மீது
இட்டுக் கட்டுவதாக அமையும். இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

'வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும் இரகசியமானதையும் எது
பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு
இணையாகக் கருதுவதையும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக்
கூறுவதையுமே இறைவன் தடுத்துள்ளான் என (நபியே!) கூறுவீராக!' (அல்-அஃராப்
7:33) என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேற்கூறப்பட்ட அடிப்படையைப் பின்வரும் உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

بَلْ يَدَاهُ مَبْسُوطَتَانِ يُنفِقُ كَيْفَ يَشَاء

'மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு
வழங்குவான்' (அல்-மாயிதா 5:64)

இந்த வசனத்தில் ' யதானி ' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரபு
மொழியில் யதானி என்பதன் பொருள் ' இரு கைகள் ' என்பதாகும்.

எனவே இவ்வசனத்திலிருந்து அல்லாஹ்வுக்கு இருகைகள் இருப்பதாகவே
விளங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு மாற்றமாக ' கை ' என்பதற்கு ' சக்தி '
என்று விளக்கம் கொடுப்பது அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதாகவே அமையும்.

இரண்டாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பெயர்கள் தொடர்பானது.

1. அல்லாஹ்வுடைய திருநாமங்கள் அமைத்தும் அழகியவை, அழகின் சிகரத்தில்
உள்ளவை, அதில் எந்தக் குறையும் கிடையாது. அவை கூடவே பண்புகளையும்
கொண்டிருக்கின்றன.

'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன'. (அல்-அஃராப் 7:180)

உதாரணமாக ' அர்ரஹ்மான் ' (அளவற்ற அருளாளன்) என்ற திருநாமத்தைக்
குறிப்பிடலாம். இந்தப் பெயர் கூடவே ' அருள் ' என்ற பண்பையும்
கொண்டிருக்கிறது.

அதேவேளை 'காலத்தைத் திட்டாதீர்கள். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ்
காலமாவான்' (முஸ்லிம் - 2246) என்ற ஹதீஸை வைத்து ' அத்தஹ்ரு ' (காலம்)
என்பது அல்லாஹ்வுடைய திருநாமங்களில் ஒன்று என்று கூற முடியாது. ஏனெனில்
இந்தச் சொல் அழகின் உச்சத்தையுடைய ஒரு பொருளை தருவதாக இல்லை. எனவே இந்த
ஹதீஸின் கருத்து, 'காலத்தை இயக்குகிறவன் அல்லாஹ்' என்றே புரிந்து கொள்ள
வேண்டும்.

ஹதீஸில் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்..

'எனது கையிலேயே அதிகாரம் இருக்கிறது. நானே இரவையும் பகலையும்
மாறிமாறி வரச் செய்கிறேன்'. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்:
புகாரி (7491), முஸ்லிம் (2246)

2. அல்லாஹ்வின் திருநாமங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையைக் கொண்டவையல்ல.

'யா அல்லாஹ்! உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான்
உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய்,
அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய், அல்லது உனது படைப்புகளில்
எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய், அல்லது மறைவானவை பற்றிய
ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய்' என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி), நூல்கள்: அஹ்மத், இப்னு ஹிப்பான்,
ஹாக்கிம், - சில்ஸிலா ஸஹீஹாவில் ஷேய்க் அல்பானீ (ரஹ்) அவர்கள் இதனை ஸஹீஹ்
என்று குறிப்பிடுகிறார்கள். ஹதீஸ் எண் - 199)

அல்லாஹ் தனது மறைவானவை பற்றிய ஞானத்தில் வைத்திருக்கும் அவனது
பெயர்களின் எண்ணிக்கையை அவனைத் தவிர வேறு எவராலும் அறிந்து கொள்ள
முடியாது.

'நிச்சயமாக அல்லாஹ்விற்கு 99 திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றை யார்
சரிவர அறிந்து கொள்கின்றாரோ அவர் சுவனம் நுழைவார்' என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். (நூல்கள்: புகாரி (6410), முஸ்லிம் (2677))

இந்த ஹதீஸ் மேற்படி ஹதீஸுடன் எந்த வகையிலும் முரண்பட மாட்டாது.
ஏனெனில் இந்த ஹதீஸ் அல்லாஹ்வின் திருப்பெயர்கள் 99 தான் என்று வரையறை
செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

3. அல்லாஹ்வின் திருநாமங்கள் அறிவினடிப்படையில் அமைந்தவையல்ல. மாறாக
அவை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக் கொண்டு தான் அமையும். எனவே அவற்றில்
கூட்டல், குறைத்தல் கூடாது. அல்லாஹ் தனக்குத் தாமாக சூட்டிக்கொண்ட,
அல்லது நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு இருப்பதாகச் சொன்ன) பெயர்களே தவிர
புதிதாக அவனுக்குப் பெயர்களை உருவாக்குவதோ, அல்லது அவன் தனக்கு சூட்டிக்
கொண்ட பெயர்களை மறுப்பதோ பெரும் குற்றமாகும்.

4. அல்லாஹ்வுடைய திருநாமங்கள் ஒவ்வொன்றும் அல்லாஹ்வின் தாத்தைச்
சுட்டிக்காட்டுகின்றன. அத்துடன் அது கொண்டிருக்கும் பண்பையும்
அறிவிக்கிறது.

மூன்றாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பண்புகள் (ஸிபத்துக்கள்) பற்றியது.

1. அல்லாஹ்வுடைய பண்புகள் அனைத்தும் உயர்ந்தவை, பூரணமானவை,
புகழுக்குரியவை. அவை எந்தக் குறைபாடும் கிடையாது.

வாழ்வு, அறிவு, ஆற்றல், கேள்வி, பார்வை, ஞானம், அருள், உயர்வு போன்ற
பண்புகளை உதாரணமாகக் கூறலாம்.

'அல்லாஹ்வுக்கோ உயர்ந்த பண்பு உள்ளது' என்று அல்லாஹ் கூறுகின்றான்.
(அந்நஹ்ல்16:60)

அல்லாஹ் பூரணமானவன் எனவே அவனது பண்புகளும் பூரணமாக இருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு பண்பு (ஸிஃபத்) பூரணத்துவம் இல்லாமல் குறைபாடுடையதாக
இருந்தால் அது அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத ஸிஃபத்தாகும். மரணம்,
அறியாமை, இயலாமை, செவிடு, ஊமை போன்ற பண்புகளை இதற்கு உதாரணமாக கூறலாம்.

அல்லாஹ் தன்னைக் குறைபாடுடைய ஸிபத்துக்களால் வர்ணிப்பவர்களைக்
கண்டிக்கிறான். அத்துடன் குறைகளிலிருந்து தன்னைப்
பரிசுத்தப்படுத்துகிறான்.
'ரப்பு' என்ற நிலையில் இருக்கும் அல்லாஹ் குறைபாடுடையவனாக இருப்பது அவனது
ருபூபிய்யத்தைக் களங்கப்படுத்தி விடும்.

ஏதாவது ஒரு ஸிஃபத் ஒரு பக்கம் பூரணமானதாகவும் இன்னொரு பக்கம்
குறைபாடு உள்ளதாகவும் இருந்தால் அந்தப் பண்பு அல்லாஹ்வுக்கு இருக்கிறது
என்றோ அல்லது இருக்கக் கூடாது என்றோ ஒட்டு மொத்தமாகக் கூறக்கூடாது. மாறாக
அதனைத் தெளிவு படுத்த வேண்டும். அதாவது அந்தப் பண்பு பூரணமாக இருக்கும்
நிலையில் அது அல்லாஹ்வுக்குரிய பண்பு என்றும் குறைபாடுடையதாக இருக்கும்
போது அல்லாஹ்வுக்கு இருக்கக் கூடாத பண்பு என்றும் கூற வேண்டும்.

உதாரணமாக, (المكر) மக்ர் (சூழ்ச்சி செய்தல்) (الخدع) கதஃ
(ஏமாற்றுதல்) போன்ற பண்புகளைக் குறிப்பிடலாம்.

'யாராவது சூழ்ச்சி செய்தால் பதிலுக்கு சூழ்ச்சி செய்தல்' என்ற
நிலையில் வரும்போது அது பூரணத்துவத்தை அடைகிறது. ஏனெனில் சூழ்ச்சி
செய்தவனை எதிர் கொள்ள முடியாத அளவு பலவீனன் அல்ல என்ற கருத்திலேயே இதனைப்
புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறல்லாமல் சூழ்ச்சி செய்தல் என்பது
குறைபாடான ஒரு பண்பாகும்.

முதல் நிலையில் இப்படிப்பட்ட பண்புகள் அல்லாஹ்வுக்கு இருக்க வேண்டிய
பண்புகளாகவும் இரண்டாவது நிலையில் இருக்கக் கூடாத பண்புகளாகவும்
காணப்படுகின்றன.

இந்தக் கருத்திலே தான் பினவரும் வசனங்கள் அமைந்திருக்கின்றன.

'அவர்களும் சூழ்ச்சி செய்கின்றனர், அல்லாஹ்வும் சூழ்ச்சி
செய்கின்றான். சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் சிறந்தவன்' (அல்-அன்ஃபால்:30)

'அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி
செய்கிறேன்' (அத்தாரிக்86:16,17)

'நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை
ஏமாற்றக் கூடியவன்' (அந்நிஸா4:142)

அல்லாஹ் சதி செய்யக்கூடியவனா என்று நம்மிடம் வினவப்பட்டால், ஆம்
என்றோ அல்லது இல்லையென்றோ பொதுப்படையாகக் கூறக்கூடாது. மாறாக யார்
சதிசெய்யப்படத் தகுதியானவர்களோ அவர்களுக்கு சதி செய்யக் கூடியவன்' என்றே
கூற வேண்டும். அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

2. அல்லாஹ்வுடைய பண்புகள் இரண்டு வகைப்படும்.

அ) (الثبوتية) அத்துபூதிய்யா: அதாவது அல்லாஹ் தனக்கு இருப்பதாகக்
கூறிய பண்புகள் (உதாரணம்: வாழ்வு, அறிவு, சக்தி) அவை அல்லாஹ்வுக்கு
இருக்கின்ற பண்புகள் என்று நம்ப வேண்டும்.

ஆ) (السلبية) அஸ்ஸலபிய்யா: அல்லாஹ் தனக்கு என்று மறுத்த பண்புகள்
(உதாரணம்: அநீதி இழைத்தல்)
இப்படிப்பட்ட அவனுக்கு இருக்கக் கூடாத பண்புகளை மறுக்க வேண்டும். அதே
நேரம் அதற்கு எதிரான பண்பு பூரணமான முறையில் அவனுக்கு இருக்கிறது என்று
நம்ப வேண்டும்.

உதாரணமாக,

'உமது இரட்சகன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான்' (அல்கஹ்ஃபு18:49)
என்ற வசனத்தைக் குறிப்பிடலாம்.

இங்கு அநீதி இழைத்தல் என்ற ஸிஃபத்தை மறுக்கின்ற அதே நேரம் அவனுக்கு
பூரணமாக நீதி வழங்குதல் என்ற பண்பு இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

3. அல்லாஹ்வுக்கு இருக்கக்கூடிய பண்புகள் (الصفات التبوثية) இரண்டு வகைப்படும்.

அ) அவனுடன் எப்போதும் இருந்து கொண்டிருக்கக்கூடிய பண்புகள் (உதாரணம்:
கேள்வி, பார்வை) இதற்கு அரபியில் (الذاتية) தாதிய்யா என்று சொல்லப்படும்.

ஆ) அவன் நாடினால் செய்யவும், நாடினால் செய்யாமல் இருக்கவும்
முடியுமான அவனுடைய செயல்களோடு தொடர்பான பண்புகள் (உதாரணம்: அல்லாஹ்
வருவான், இறங்குகிறான்) இதற்கு அரபியில் (الفعلية) ஃபிஃலிய்யா என்று
சொல்லப்படும்.

சிலவேளைகளில் ஒரே ஸிஃபத் பிஃலிய்யாவாகவும் தாதிய்யாவாகவும்
இருக்கும். உதாரணம்: (கலாம்) பேசுதல்.

4. ஒவ்வொரு ஸிபத் பற்றியும் பின்வரும் மூன்று கேள்விகள் எழுகின்றன.

1. அல்லாஹ்வுடைய ஸிஃபத்து யதார்த்தமானதா? அது ஏன்?

2. அல்லாஹ்வுடைய ஸிஃபத்தை விவரிக்க முடியுமா? ஏன்?

3. அதற்கு படைப்பினங்களின் ஸிஃபத்துக்களைக் கொண்டு உதாரணம் கூற முடியுமா? ஏன்?

முதலாவது கேள்விக்கான பதில்:

ஆம்! அல்லாஹ்வின் ஸிஃபத்துக்கள் யதார்த்தமானவை. அரபு மொழியில் ஒரு
சொல் பயன்படுத்தப்பட்டால் அதனுடைய யதார்த்தமான கருத்தில் அதனைப்
பயன்படுத்த வேண்டும் என்பதே அடிப்படை விதி. அது அல்லாத வேறு அர்த்தத்தில்
பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு சரியான ஆதாரம் வேண்டும்.

இரண்டாவது கேள்விக்கான பதில்:

அல்லாஹ்வுடைய பண்புகளை விவரிக்க முடியாது. 'அவனை அவர்கள் முழுமையாக
அறிந்து கொள்ள மாட்டார்கள்' (தாஹா20:110) என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவனுடைய ஸிஃபத்துக்கள் பற்றி அறிவால் அறிந்து கொள்ள முடியாது.

மூன்றாவது கேள்விக்கான பதில்:

அவனது பண்புகள் படைப்பினங்களின் பண்புகளுக்கு ஒப்பாக மாட்டாது.

'அவனைப் போல் எதுவும் இல்லை' (அஷ்ஷுரா26:11) என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் மிக உயர்ந்த பண்புகளுக்கு சொந்தக்காரன் என்ற வகையில் அவனைப்
படைப்பினங்களுக்கு ஒப்பிட முடியாது.

உதாரணம், விவரனம் இரண்டுக்குமிடையில் உள்ள வித்தியாசம்:

அல்லாஹ்வுடைய கை மனிதனுடைய கையைப் போன்றது என்று கூறுவது உதாரணம் கூறுவதாகும்.
அல்லாஹ்வுடைய கை இப்படிப்பட்டது என்று குறிப்பிட்ட ஒரு அமைப்பை அதற்கு
உருவாக்குவது விவரிப்பதாகும்.
இவை இரண்டுமே கிடையாது.

நாலாவது அடிப்படை:

அல்லாஹ்வுடைய பண்புகளை மறுப்போருக்கு மறுப்புச் சொல்லுதல்:

அல்லாஹ்டைய பண்புகளில் அல்லது திருநாமங்களில் எதையாவது மறுப்போர்
அல்லது குர்ஆன் ஹதீஸில் வந்துள்ளவற்றைத் திரிவுபடுத்துவோர் (المعطلة)
முஅத்திலா என்றும் (المؤولة) முஅவ்விலா என்றும் அழைக்கப்படுவர்.

இவர்களுக்குப் பொதுவாக நாம் சொல்லும் மறுப்பு:

நீங்கள் சொல்லும் கருத்துக்கள் அல்குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமானதாகும்.
ஸலஃபுகள் சென்ற வழிக்கு முரணானதாகும். மேலும் உங்களுடைய கூற்றுக்கு எந்த
பலமான ஆதாரமும் இல்லை என்பதாகும்
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

தமிழர்களுக்கான பாதுகாப்பு முகாமுக்குள் நேற்றைய தினம் ...

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

விஸ்மடுவில் இலங்கை ராணுவம் அமைத்திருந்த நிராயுதபாணிகளாகிய அப்பாவி
தமிழர்களுக்கான பாதுகாப்பு முகாமுக்குள் நேற்றைய தினம் புலிகளின்
தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்த பெண் மனித வெடிகுண்டு மூலம் தற்கொலை
தாக்குதல் நடத்தி அதில் ஏராளமான அப்பாவி அகதிகள் சம்பவ இடத்திலேயே
உயரிழந்துள்ளனர் ஏராளமான மக்கள் தங்களுடைய உடல் உறுப்புக்களை இழந்து
தவிக்கின்றனர்.

கடந்த சில தினங்களாக அப்பாவி தழிழர்கள் தங்களை புலிகள் பகடைக்காயாகப்
பயன் படுத்துவதை அறிந்து அவர்களிடமிருந்து பல்லாயிரக் கணக்கில் வெளியேறி
ராணுவ முகாம்களுக்குள் அடைக்கலம் புகுந்து வந்தனர்.

இந்தச் செயலைப் பிடிக்காத பயங்கரவாதப் புலிகள் அவர்கள் மீது நடத்திய
மாபாதகச் செயல் தான் மேல்படி ரெத்தத்தை உறையச் செய்யும் பெண் மனித
வெடிகுண்டு சம்பவமாகும்.

தனி தமிழீழம் அமைப்பதாக கூறியதெல்லாம் பிரபாகரன் குறிப்பிட்ட ஒரு
சிலருடைய சுபபோக வாழ்க்கைக்காவே என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். காரணம்
புலிகளுடைய தனி தமிழீழக் கோரிக்கை வைப்பதற்கு முன் இலங்கை தமிழர்கள் எந்த
வகையிலும் இலங்கை அரசால் புறக்கணிக்கப் படவில்லை இரண்டாம் தர மக்களாக
நடத்தப்படவில்லை அரசு உத்தியோகம் முதல், அவர்கள் பேசும் மொழி வரை
முக்கித்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.

ஆனாலும் பிரபாகரனுடன் பதவி வெறிப்பிடித்த சிலர் தனி நாடு கோரிக்கையை
வைத்து பல்லாயிரக் கணக்கான அப்பாவிககளை பலி பீடத்தில் ஏற்றி காவு
கொடுத்தார்கள்.

ஒரு வேலை தமிழீழம் அமைந்தாலும் கூட இவர்களை எதிர்க்கும் அப்பாவிகளை
கூட்டம் கூட்டமாக கொல்வார்கள்.

கொலை வெறி மட்டுமே அவர்களது பிரதான குறிக்கோள் !

தங்களுக்கு எதிராக நடப்பதாக அறிந்தால் அது யாராக இருந்தாலும் விட்டு
வைக்கக் கூடாது என்ற முரட்டு சுபாவம் கொண்டவர்களே பயங்கரவாத புலிகள்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து இறுதியாக மனிதனைக் கடித்தக் கதையாக
பிரபல சிங்கள தலைவர்கள் முதல் இந்திய தலைவர்கள் வரை மனித வெடி
குண்டுகளால் சிதறச்செய்த கொலை வெறியர்கள் இறுதியாக ஒட்டிய வயிருடன்,
உடுத்திய ஒரு துண்டுடன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பாதுகாப்பு
முகாம்ககளுக்குள் ஓடி அடைக்கலம் புகுந்த அப்பாவிகள் மீது நடத்திய மனித
வெடிகுண்டுத் தாக்குதலை வண்மையாக கண்டிக்கிறோம்.

மனித இனம் வெட்கித் தலைகுணியும் நாசகாரச் செயலைச் செய்த பயங்கரவாத
புலிகளை கண்டித்து தமிழகத்தில் இதுவரை யாரும் அறிக்கைகள் விடாதது,
ஆர்ப்பாட்டங்கள் நடத்தாது, கடைகள் அடைக்கப்படாதது, தீக் குளிக்காதது,
படகில் ஏறிச்சென்று முல்லைத்தீவில் யுத்தம் செய்யப்போகிறோம் என்று
வழக்கறிஞர்கள் அறிவிக்காதது ஏன் ?

உண்மையிலேயே இதுவரை இவர்கள் நடத்திய போராட்டங்களும், பேரணிகளும்,
தீக்குளிப்புகளும் எதைக் காட்டுகிறது ?

கருனாநிதி, ராமதாஸ், திருமாவளவன் போன்ற அரசியல் வாதிகள் இதை வைத்து
தங்களது கட்சிகளை வலுப்படுத்துகின்றனர் என்பது புரிகிறது !

அவர்களுடைய வரிசையில் இப்பொழுது புதிதாக முஸ்லீம் சமுதாயத்திற்காக ''மனித
நேய மக்கள் கட்சி ''

இவர்களும் கட்சியை வளர்க்கத் தான் பாடுபடுவார்கள் மனித நேயத்திற்கு
பாடுபட மாட்டார்கள் என்பது புரிகிறது. இல்லை என்றால் இலங்கை அரசேப் போரை
நிருத்து என்றப் பிரகடனத்தை முழங்கி இருக்க மாட்டார்கள். மாறாக புலிகளே
ஆயுதத்தைக் கீழேப் போட்டு சரணடைந்து விடு ! என்றப் பிரகடனத்தை முழங்கி
இருப்பார்கள்.

காரணம் மற்ற அனைத்து கட்சிகளையும் விட இலங்கையில் அப்பாவிகள்
கொல்லப்படுவதற்கு மூலகாரணம் யார் என்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
நன்றாகத் தெரிந்திருந்தும் உண்மையைக் கூறாமல் உண்மைக்கு மாறான ஒன்றை
முதன் முதலில் கோரிக்கையாக வைக்கின்றார்கள் என்றால் ? காரணம் என்ன ?

தமிழகத்தின் இன்றைய சூழ்நிலையில் புலிகளை எதிர்த்து அறிக்கை விட்டால்
எடுத்த எடுப்பிலேயே கட்சி கவிழ்ந்து விடும் என்பதால் மற்ற அரசியல்
கட்சிகளைப் போன்றே இவர்களும் இலங்கை அரசேப் போரை நிருத்து என்ற
பல்லவியைப் பாடுகின்றார்கள் .

முதல் கோணல் முற்றும் கோணல், வளைந்துக கொடுக்க நினைப்பவர்களால்
ஒருக்காலும் நிமிர்ந்து நிற்க முடியாது.

தவறான வழியில் பொருளீட்டி கால் நூற்றாண்டுகளுக்கு மேல் அடர்ந்தக்
காடுகளில் கேளிக்கை வாழ்க்கையில் மூழ்கித் திளைத்த பயங்கரவாதப புலிகள்
மேல்படி கேளிக்கை வாழ்க்கையை தொடருவதற்காகவே இன்றளவும் தமிழீழம் என்ற
நடைமுறைக்கு ஒவ்வாத கோரிக்கையை கூறி வருகின்றனர்.

''கல்வி பறிக்கப்படும் வரை பூகம்பங்கள் அதிகமாகும் வரை - காலம்
சுருங்கும் வரை - ழுழப்பங்கள் தோன்றும் வரை - கொலை செய்தல் அதிகமாகும்
வரை- உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை - கியாம நாள் ஏற்படாது.'' என்று
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக நபித் தோழர் அபூ ஹுரைரா(ரலி)
அறிவித்தார்கள். புகாரி 1036.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ
بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ
الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம்
உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்.
3:104

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அதிரை ஏ.எம்.பாரூக்
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

'காதலர் தினம்' நாடு முழுதும் கொண்டாடப் பட்ட இலட்சணம் நாளிதழ்களில் வெளியாகும்.

வெள்ளி, 13 பிப்ரவரி 2009
ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 15ஆம் நாளிதழ்களில் அதற்கு முதல் நாள் (14
பிப்ரவரி) 'காதலர் தினம்' கொண்டாட(?)ப் பட்டதும் அதில் ஏற்பட்ட
ரசாபாசங்களும் அவமானங்களும் செய்திகளாக விரிந்திருக்கும்.. இன்று 'காதலர்
தினம்' நாடு முழுதும் கொண்டாடப் பட்ட இலட்சணம் நாளைய நாளிதழ்களில்
வெளியாகும்.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளம் தலைமுறை என்பது மிகப் பெரிய சொத்தாகும்..
எதிர்காலத் தலைமுறையினரின் வாழ்க்கை சிறந்ததாக அமைய அவர்களின் பண்பாடு,
பழக்கவழக்கங்கள் உயர்ந்ததாக அமைவதில் கவனம் செலுத்த வேண்டியது
பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் அரசுகளின் கடமையாகும். வளரும்
பருவத்தில் அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படும் பாதையே அவர்களின்
எதிர்கால வாழ்க்கையின் தரத்தினை நிர்ணயிக்கிறது.

ஆனால், நாகரீகத்தின் உச்சியில் உள்ளதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும்
இக்காலத்தில் பிள்ளைகளில் வாலிபப் பருவம் என்பது அவர்களின் பெற்றோரைத்
தீக்கணலில் நிற்க வைத்துள்ளது என்றால் அது மிகையாகாது. அறிவியலின்
முன்னேற்றத்தால் கண்டுபிடிக்கப்பட்டப் பல நவீன உபகரணங்கள், புதிய
தலைமுறையினரின் பொழுதுபோக்கு அம்சங்கள் என அனைத்திலும் இளம் தலைமுறையைச்
சீரழிக்கும் அனைத்து அம்சங்களும் கலந்து காணப்படுகின்றன.

இவற்றில், இந்தப் பிப்ரவரி 14 ஆம் நாளைக் கொண்டாடுவதற்குச் சூட்டப்பட்ட
நாமகரணமும் ஒன்று. ஆசிரியர்களைக் கவுரவிக்க 'ஆசிரியர் தினம்',
தாய்மார்களைக் கவுரவிக்க 'அன்னையர் தினம்', சுற்றுப்புறச் சூழலின்
முக்கியத்துவத்தை உணர்ந்த 'சுற்றுப்புறச் சூழல் தினம்' என ஓராண்டில்
கிட்டத்தட்டப் பாதி நாட்களுக்கு ஒவ்வொரு பெயரிட்டு நினைவு கூர்வதற்கு
இடையில், காதலர்களை மகிமைப் படுத்தக் 'காதலர் தின'மாம்!

பொதுமக்களுக்குத் தீமை விளைவிக்கக் கூடியது என்பது நன்றாகத்
தெரிந்திருந்தும் "புகை பிடிப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு!"
முத்திரையுடன் புகைப்பொருட்களை விற்கவும் தனி மனிதனுக்கும்
குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் சாபக்கேடானது என நன்றாகத்
தெரிந்திருந்தும் "பார் வசதியுடன் கூடிய மது விற்பனைச் சாலைகளை" அரசே
நடத்த ஏற்பாடு செய்தும் சமூக வாழ்வையே சீர்குலைக்கக்கூடிய மிகப்பெரிய
உயிர்க்கொல்லி வைரஸ் தொழிற்சாலை எனத் தெரிந்திருந்தும் ரெட் லைட் ஏரியா
என்ற பெயரில் லைசன்ஸ் கொடுத்து விபச்சாரம் செய்யவும் அனுமதி வழங்குகின்ற
"மக்களைப் பாதுகாக்கும்(?) அரசு"கள்.

"என் பிள்ளையின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்" என்ற
எதிர்பார்ப்புடன் தன் பிள்ளைகளின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப்
பார்த்து செய்யும் பெற்றோர்கள்தாம் இவ்விஷயத்தில் மிகுந்த கவனத்துடன்
இருக்க வேண்டும். இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு மட்டுமின்றி, பண்பாட்டைப்
பேணுகின்ற எந்தக் கலாச்சாரத்துக்கும் எவ்வகையிலும் ஒவ்வாத இந்த ஆபாச
தினச் சிந்தனையில் உள்ள தீமைகளைக் குறித்த போதிய அறிவு பெற்றோர்களுக்கு
இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பள்ளிப்பருவத்தையும் விட்டு
வைக்காத இந்தக் கேடுகெட்ட கலாச்சாரச் சீரழிவில் விழுந்து விடாமல் வளரும்
தலைமுறையைக் காக்க இயலும்.

பண்டைய ரோமர்கள் கொண்டாடிய ஒரு பண்டிகையின் மாற்று உருவே 'வாலண்டைன்"
என்ற ஒருவரின் பெயரால் இன்று கொண்டாடப்படும் இந்த ஆபாச தினம்.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுக்குக் கொண்டாடுவதற்கு இரு பண்டிகைகள்
மட்டுமே உண்டு. இவையன்றி வேறு எதற்காகவும் எந்த ஒரு நாளையும் கொண்டாடுவது
மார்க்கம் அனுமதிக்காத செயலே. மார்க்கம் அனுமதிக்காக ஒன்றைச் செய்பவன்
அழிவை நோக்கிச் செல்கின்றான் என்பது தூதரது எச்சரிக்கையாகும்.

"மாற்றுமத கலாச்சாரத்தைப் பின்பற்றுபவன் என்னைச் சார்ந்தவன் அல்லன்"
எனவும் "மாற்றுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள் அவர்களாகவே மாறி
விடுகின்றனர்" எனவும் அறிவுறுத்திய தூதரின் சொற்களை மனதில்
இருத்துபவர்கள், இத்தகைய மார்க்கம் காட்டாத மாற்றாரின்
கலாச்சாரத்திலிருந்து விலகியே இருப்பர்.

"அலீயே!, அன்னியப் பெண்ணைப் பார்க்கும் (இயல்பான) உமது முதல் பார்வை
உம்முடையதாகும்; (கூர்த்த) இரண்டாவது பார்வை ஷைத்தானுடையதாகும்" என
அந்நியப் பெண்களைப் பார்ப்பதைக்கூட தூதர் தடை செய்திருக்கும் பொழுது,
மனைவியர் அல்லாத மாற்றுப் பெண்களுடன் இத்தகைய ஆபாச தினக்
கொண்டாட்டங்களைப் பூங்கொத்துக் கொடுத்தும் வாழ்த்து அனுப்பியும்
கொண்டாடும் இளைய தலைமுறைகள், ஷைத்தானுடன் ஒப்பந்தம் செய்து நரகத்தை
நோக்கித் தமது பயணங்களை அமைத்துக் கொள்கின்றனர் என்பதில் எவ்வித
சந்தேகமும் இல்லை.

அந்நியப் பெண்களுக்கு முன்பாக, "முஃமினான ஆண்கள் தங்கள் பார்வைகளைத்
தாழ்த்திக் கொள்ளட்டும்" என்பது படைத்தவனின் கட்டளையாகும். இத்தகைய
உயர்ந்த, தூய்மையான வாழ்க்கை முறையைக் கற்பித்துத் தரும் இஸ்லாமிய
மார்க்கத்தை வாழ்க்கை நெறியாகப் பின்பற்றும் முஸ்லிம்கள், அந்நியப்
பெண்டிருடன் அனுமதியற்ற உறவுகளைக் கொள்ள வழிகோலும் இத்தகையக் கலாச்சாரச்
சீரழிவுக் கொண்டாட்டங்களின் பக்கம் செல்லாமல் இருப்பதோடு, சமூகத்தைச்
சீரழிக்கும் இத்தகைய அனுமதிகளுக்கு எதிராக போராடவும் முன்வரவேண்டும்.

"முஃமினான பெண்கள், அவர்களது தலை முந்தானைகளைக் கொண்டு மார்பை மறைத்துக்
கொள்ளட்டும்", என்றும் "அவர்கள் கண்ணியமானவர்களாக அறியும் பொருட்டு,
அவர்கள் (அவசியமின்றி) வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம்" எனறும் அல்லாஹ்
அறிவுரை பகர்கின்றான்.

"உலகில் செல்வங்களிலேயே மிக உயர்ந்த செல்வமாக நல்லொழுக்கப் பெண்ணை"
இஸ்லாம் காண்கின்றது.

இவ்வாறு ஆண்களையும் பெண்களையும் கண்ணியமான வாழ்க்கை வாழப் பணிக்கும்
தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாம், உலகின் அமைதியான வாழ்வுக்கும்
சுபிட்சமான சமூக கட்டமைப்பிற்கும் உத்தரவாதம் வழங்கும் ஒரே மார்க்கம்
எனலாம். இத்தகைய உயர்ந்த வாழ்க்கைத் தத்துவங்களை உள்ளடக்கிய இஸ்லாத்தை
வாழ்க்கை நெறியாகக் கொண்டவர்கள், தெரிந்துக் கொண்டே இந்த ஆபாசதினத்தை
அங்கீகரிக்கவும் கொண்டாடவும் அதில் இணையவும் முன்வரக் கூடாது;
முன்வரமாட்டார்கள்.

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1159&Itemid=278
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

WOMAN AND THE DISPLAY OF BODY

WOMAN AND THE DISPLAY OF BODY

Describing women who are morally decayed. The prophet Mohammed (PBUH)
said that they are "women dressed but naked, corrupt and corrupters,
their hairs are like the inclined hump of female camel, they do not
enter the Heaven nor smell its fragrance" [Refer to Abu Daud]

the prophet also said "the prayer of a mistreating woman is not
acceptable until she purifies her self" [Refer to Imam Ahmed, Abu Daud
& Ibn Maja].

The modern scientific researches confirmed that the nakedness of
women, their body displaying & their moving in an obscene shape id a
disaster on them. The current statistics showed that there is a clear
spread of the malignant cancer which affects the naked and displayed
part of the women bodies particularly those women who dress short
clothes.

It was published in the British Medical Magazine that "the melanoma
malignant cancer which was one of the most rare cancers is now
spreading among women. The cases of this type of cancer is increasing
among young women. It affects their legs. The medical publication went
on saying that the main cause behind the spread of short dress &
fashions which expose the body of women to the rays & light of the
sun. Moreover, the transparent dress and legs gloves do not help in
avoiding this type of cancer.

The Medical Magazine appealed to the environment doctors to
participate in collecting information about this type of cancer,
because it is becoming an epidemic phenomenon. This reminds us with
the Quranic sign which says in the tongue of the obstinate unbeliever

"O God, if this is indeed The Truth from Thee, Rain down on us a
shower of stones from the sky, or send us a grievous penalty" [8:32]

Now to torture has come down in the form of a malignant cancer. It is
caused by the exposition of women's body to the sunrays and
ultraviolet rays for a long time it affects the whole body but with
different proportion. Initially, it appears as a dark; small spot on
either the foot or the leg, and some times in the eye. Then it spreads
all over the body. It attacks the lymph knots at the upper part of the
thigh. It also attacks blood and invades the liver & destroys it. It
may settle in all the organs of the body such as bones, the belly &
perhaps the kidneys. If it attacks the kidneys then the patient will
experience black urine as a result of inner destruction of the
kidneys. It may get transferred to the child in the womb of his
mother.

However, this disease does not allows its patient to survive for a
long time & it does not respond to surgical treatment like other types
of cancers nor it responds to treatment by rays sessions like some
other types of cancers.

Therefore have we realized the wisdom behind Islamic legislation which
aimed to protect women not only from passers by but also from a skin
disease called cancer. The subject Islamic legislation called upon
women to corner their bodies properly & with loose and not narrow and
not transparent clothes.

Therefore, Islamic uniform for women protect them from physical
diseases, from teasing in the streets & from the torture of life on
the judgement day.

Source: "Scientific Miracles in Islam & Sunna Nabaweya" .

Ref: http://sisters.islamway.com/modules.php?name=News&file=article&sid=17


--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

Tuesday, February 24, 2009

இந்திய பார்வையற்றோர் சங்கம்

இந்திய பார்வையற்றோர் சங்கம்

மேல்நிலைப்பள்ளி மற்றும் மறுவாழ்வு மையம்

( மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டது மற்றும் மத்திய அரசின் நலத்துறையில்
உதவி பெற்றது )

( சிறந்த முன்மாதிரியான நிறுவனத்திற்கான தேசிய விருது _ 2001 சிறந்த
பணியாளர்க்கான மாநில விருது 1995, AICB மில்லேனியம் விருது சிறந்த
நிறுவனத்திற்கான தமிழக அரசின் விருது – 2006 கெவின்கேர் எபிலிட்டி
பவுண்டேஷன்

அகில இந்திய பார்வையற்றோர் நலன் மற்றும் ஆகிய விருதுகளைப் பெற்றது )

சுந்தராஜன் பட்டி,

அழகர் கோயில் மெயின் ரோடு ,

மதுரை-625104, தமிழ்நாடு.
தொலைபேசி : 0452 -3291576, 3292990,
செல் :93605 65754
மின்ன ஞ்சல் : iabmdu@sancharnet.in

இணையத்தளம் : www.theiab.org

இந்திய பார்வையற்றோர் சங்கத்தின் சேவைகள் 2007 – 2008

திட்டம்

பயன்பெறுபவர்கள்

இ.பா.ச.மேல்நிலைப்பள்ளி

122
ஒருங்கிணைந்த கல்வி ( முதல் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை
) 149
தொழிற்பள்ளி தொலைபேசி இயக்குநர் பயிற்சி ( வருடம் இருமுறை )
32
சுருக்கெழுத்துப்பயிற்சி 20
தையல் மற்றும் நாற்காலி பின்னும் பயிற்சி 25
கணிப்பொறி பயிற்சி 65
சுயவேலை வாய்ப்பு 50
மற்ற சேவைகள்
இ.பா.ச.கணிப்பொறி பிரெய்ல் அச்சகம் & அச்சகம் 332
உபகரணங்கள் வழங்கும் திட்டம் 516
இ.பா.ச. இசைக்குழு,அரசு பணி வாங்கித்தருதல்
மருத்துவம், தேசிய விளையாட்டுக்கள் மற்றும் சுற்றுலா
கஸ்தூரி ராமநாத் மாநில விருது ( 12ஆம் வகுப்பு )
கோபாலகிருஷ்ணன் மாநில விருது ( 10ஆம் வகுப்பு )
பார்வையற்ற பெற்றோர்களின் பார்வையுள்ள குழந்தைகள் 100
இலவச அரிசி வழங்கும் திட்டம் 200
விழாக்களுக்கு புத்தாடைகள் 550

கட்டிட திட்டம் சதுர அடி லட்சத்தில்
கட்டி முடிக்கப்பட்டவை 36,825 99,5

இ.பா.ச.வின் மொத்த நிலப்பரப்பு 67,500


இந்த சங்கம் சமூகத்திற்கு 22 ஆண்டுகளாக தனது பணியை வெற்றிகரமாக
செய்து வருகிறது கடந்த 21 ஆண்டுகளாக இச்சங்கத்தின் வளர்ச்சியை
அரசாங்கமும் மற்றும் பல்வேறு அமைப்புகளும் பாராட்டியும் அங்கீகரித்தும்
உள்ளன பார்வையற்ற குழந்தைகளிடமிருந்து தொடர்ந்து வரும் விண்ணப்பமும் பொது
மக்களிடமிருந்து இந்த சங்கத்திற்கு தொடர்ந்து வரும் உதவியின் மூலமாக
இச்சங்கத்தின் சேவை பிரதிபலிக்கிறது.
இச்சங்கம் பார்வையற்றோர்களுக்காக பார்வையற்றோரால் நடத்தப்படுகிறது
பொதுக்குழு செயற்குழு மற்றும் பணியாளர்களில் 60% பார்வையற்றவர்களாக
இருக்க வேண்டும் என்பது விதி .

நன்கொடைகளுக்கு 80ஜி வரி விலக்கு உண்டு


நன்றி சமர்ப்பணம்
இ.பா.ச. இவ்வளவு வளர்ச்சிக்கு கீழ்கண்டவர்களின் உள்ளம் கனிந்த ஆதரவு தான்
காரணம் என்று உணர்ந்து தனது நன்றியை சமர்ப்பிக்கிறது

- மத்திய அரசு நலத்துறை, டெல்லி

- ஊனமுற்றோர் மறுவாழ்வு இயக்கம், சென்னை

- சமூக நல சங்கங்கள்

- தனியார் கொடையாளிகள்

- அனைத்துப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நன்கொடைகள் ( கொடிநாள் மூலமாக )


வங்கிகள்
இந்தியன் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, நல்லாகுளம், மதுரை,ஸ்டேட் பாங்க்


ஆடிட்டர்

டி.சி.மணிகண்டன் & திருவேங்கடம் சார்டர்ட் அக்கவுண்டண்ட்

இந்திய பார்வையற்றோர் சங்கத்தின் தேவைகள்
2007 – 08 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்படி செலவீன ரூபாய் 67.73
லட்சங்கள் அரசு மற்றும் தனியார் ஸ்தாபன்ங்களிலிருந்து
எதிர்பார்க்கப்படும் தொகை ரூபாய் 51.49 லட்சங்கள் இவ்வாண்டு பற்றாக்குறை
ரூபாய் 16.24 லட்சங்கள்

ஆகவே இந்திய பார்வையற்றோர் சஙகம் அரசு மற்றும் பொது மக்களுடைய உதவியை
தொடர்ந்து எதிர்பார்க்கிறது.

தலைவர் : எஸ்.பி. கோகுலகிருஷ்ணன்

பொதுச்செயலாளர் : எஸ்.எம்.ஏ. ஜின்னா

பொருளாளர் : டாக்டர் ஆர். சுரேந்திரநாத்

மற்றும் நிர்வாக க் குழுவினர்
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

Monday, February 23, 2009

தமுமுக வின் மனித நேயம்??

தமுமுக வின் மனித நேயம்??

தமிழகம் எங்கும் குடும்ப பிரச்சினைகள், கணவன், மனைவிக்கு இடையிலான
பிரச்சினைகளில் தலையிட்டு அவற்றை காவல் நிலையம் வரை எடுத்துச் சென்று
கட்டப்பஞ்சாயத்து செய்து காசு பார்க்கும் வேலைகளில் புகழ்பெற்ற தமிழ்நாடு
முஸ்லிம் முன்னேற்ற கழகம் தற்போது மனித நேயத்தை வளர்ப்பதாக கூறி "மனித
நேய மக்கள் கட்சி" எனற பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியினை
நிறுவியுள்ளார்கள். இந்த அமைப்பு தமுமுக வின் கட்டப்பஞ்சாயத்துக்களுக்கு
அரசியல் சாயம் பூசி மூடி மறைக்க பயன்படுத்தப்படும் ஒரு அரசியல்
கட்சியாகவே ஆரம்பிக்கப்ட்டுள்ளது தற்சமயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மனித நேய மக்கள் கட்சியின் மனித நேயம்??

மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் பரினாம வளர்ச்சி அடைந்த சமுதாயக்
காவலர்கள் என தம்பட்டம் அடிக்கும் தமுமுக கட்டப்பஞ்சாயத்து குண்டர்கள்
சமுதாயத்தை மீண்டும் படுகுழியி்ல் தள்ளி முஸ்லிம்களுக்கு இடையே பகைமையை
உண்டாக்கி வயிரு வளர்க்கும் துரோகிகளே என்பதற்கு சமீபத்தில் அம்பத்தூரில்
நடந்த இந்நிகழ்வே சாட்சி.

மனித நேய மக்கள் கட்சி குண்டர்களால் காயம்பட்ட முகம்மது சித்திக்

சென்னை அம்பத்தூரில் வசித்து வரும் சாஃப்ட்வேர் இன்ஜினியரான முகம்மது
சித்திக் என்பவர் கடந்த ஆகஸ்ட் 21, 2008 அன்று மதுரை, மேலூரை சேர்ந்த
ரினோசா பரக்கத் என்ற பென்னை திருமனம் செய்தார். எவ்வித வரதட்சினையோ ,
கொடுக்கல் வாங்கல்களோ இல்லாமல் நட்நத இத்திருமனம் மேலூர் பெரிய பள்ளி
ஜமாத் நிர்வாகிகளால் நடத்தி வைக்கப்பட்டது.

தமுமுக குண்டர்களால் தாக்கப்பட்ட முஸ்லிம் முகம்மது ரபீக்

ஆனால் மனமகனுக்கும், மனமகளுக்கும் ஏற்ப்பட்ட சில மனக்கசப்புக்களால்
மனப்பென் சமீப காலமாக தனது தாயர் வீட்டிலேயே வசித்து வருகின்றார்.
இந்நிலையில் மனித நேயத்தை வளர்ப்பதாக கூறி "மனித நேய மக்கள் கட்சி" என்ற
பெயரில் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் நேற்று
(15-02-2009) இந்த மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள் சிலர் அதன்
பிரமுகரான மேடவாக்கம் சிராஜ் என்பவர் தலைமையில் TN 22 BX 6085 (டாடா சுமோ
, மெட்டாலிக் கிரே கலர்) மற்றும் TN 07 M 2979 (குவாலிஸ் - மெருன் கலர்)
கார்களில் மனித நேய மக்கள் கட்சியின் கொடியினை கார்களில் கட்டிக் கொண்டு
திடீரென இன்ஜினியர் முகம்மது சித்திக்கின் வீட்டிற்குள் புகுந்து
அங்கிருந்தவர்களை தாக்கத் தொடங்கினர்.

மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்களால் தாக்கப்பட்ட முஸ்லிம்கள்


முகம்மது சித்திக்கின் வயதான தாய் தந்தையரும் இத்தாக்குதலில் தப்பவில்லை,
முகம்மது சித்திக்கின் பெற்றோர் காதர் முகைதீன், மற்றும் சகர் பானு ஆகிய
இருவரையும் அடித்து உதைத்தனர் அதை தடுக்க வந்த முகம்மது சித்திக்கையும்
அவரது தம்பி முகம்மது ரபீக்கையும் மனித நேய மக்கள் கட்சியின் குண்டர்கள்
உருட்டுக் கட்டைகளால் கடுமையாக தாக்கினர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு
அப்பகுதி பொதுமக்கள் கூடவே உடனடியாக மேலே கூறப்பட்ட மனித நேய மக்கள்
கட்சி கொடி கட்டப்பட்ட வாகனங்களில் ஏறி இந்த குண்டர்கள் தப்பி விட்டனர்.

தற்சமயம் சிகிச்சை பெற்று திரும்பியிருக்கும் இவர்களிடம் தொலைபேசி
வாயிலாக தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மேடவாக்கம் சிராஜ்
என்பவனும் தமுமுக வின் ஒரு முக்கிய புள்ளியும் உன் மீதும் உன் அப்பன்,
ஆத்தா மீதும் நாங்கள் வரதட்சினை கொடுமை படுத்தி பென்னை சித்திரவதை
செய்ததாக புகார் கொடுக்க போகின்றோம். நாங்கள் அரசாங்க கூட்டனியில்
உள்ளோம், எங்கள் தலைவர் ஹைதர் அலிதான் வக்பு வாரியத் தலைவர், நாங்கள்
கூறினால் கலைஞர், முதல் ஸ்டாலின் வரை கால்களில் விழுவார்கள் உங்கள்
குடும்பத்தினை ஒன்றுமில்லாமல் செய்து விடுவோம் என்று மிரட்டி உள்ளார்கள்.

ஆரம்பித்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் தனது முதல் மனித நேயப் பனியினை
செய்த மனித நேய மக்கள் கட்சியின் குன்டர்கள் முஸ்லிம்கள் என்று கூட
பாராது மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரை வைத்துக் கொன்டு வண்முறையில்
இரங்கி தமுமுக வின் மனித நேயத்தை நிறுபித்துள்ளனர். தமிழகம் எங்கும்
இதுபோலவே குடும்ப பிரச்சினைகளில் தலையிட்டு கட்டப் பஞ்சாயத்து பன்னி
முஸ்லிம் குடும்பங்களையே பிரித்து சமுதாயத்தை கூறு போட்டுக்
கொண்டுள்ளனர். தற்சமயம் அரசியலை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு
இன்னுமு் வீரியமாக தங்களின் குண்டர் படையினை வைத்து இது போன்ற
முஸ்லிம்களை தாக்கும் மனித நேயப் பணியினை மகத்தாக செய்து வருகின்றார்கள்.

ஜனாப் மேலை நாசர் அவர்கள்

மனித நேய மக்கள் கட்சி குண்டர்களின் தொலைபேசி மிரட்டல்களால் பயந்து போன
இக்குடும்பத்தினர் உடனடியாக சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவையின்
அலுவலக்தில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களுக்கு ஆறுதல் கூறி அரவனைத்த
சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் மாநில பொதுச் செயலாளர் ஜனாப். மேலை நாசர்
அவர்கள் உடனடியாக காவல்துறை உயரதிகாரிகளையும் தி.மு.க காங்கிரஸ் உள்ளிட்ட
அரசியல் பிரமுகர்களையும் தொடர்பு கொண்டு மனித நேய மக்கள் கட்சி
குண்டர்களின் அராஜகப் போக்கினை எடுத்துக் கூறி இவர்கள் ஆரம்பி்த்து ஒரு
வாரம் கூட ஆகாத நிலையில் முதல்வர், ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களை தவறாக
பயன்படுத்தி அராஜகத்தில் ஈடுபட்டு வரும் போக்கினை விளக்கி கூறி உடனடி
நடவடிக்கை எடுக்காவிட்டால் சுன்னத் ஜமாத்தினர் சென்னையில் மாபெரும்
போராட்டத்தினை அரசிற்கு எதிராகவும் தமுமுக மற்றும் மனித நேய மக்கள்
கட்சியின் ரவுடிகளுக்கு எதிராகவும் மக்களை திரட்டி நடத்தும் என்றும்
எச்சரித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெறிவித்த சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் மாநில
பொதுச் செயலாளர் ஜனாப். மேலை நாசர் அவர்கள் கூறுகையில் ஏற்கனவே தமுமுக
என்றாலே கட்டப்பஞ்சாயத்து என்று தமிழகமெங்கும் காவல்துறையால் பதிவு
செய்யப்பட்டுள்ளது இந்தப் பெயரை மாற்றுவதற்காக மனித நேய மக்கள் கட்சி
என்ற பெயரில் அரசியலுக்கு வந்த தமுமகவினர் முஸ்லிம்களை காப்பற்றுவோம்
அதைச் செய்வோம் இதைச் செய்வோம் என்று கூச்சலுடன் வந்தனர் ஆனால் தமுமுக
பெயரில் மேம்போக்காக கட்டப்பஞ்சாயத்தக்களை செய்து வந்த இவர்கள் தற்சமயம்
மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் ஆராவரத்துடன் முஸ்லிம்களை
தாக்கி , சமுதாயத்தை கூறு போடம் பனியினை செய்து வருகின்றார்கள். இதற்கு
தங்கள் அரசியல் பலத்தினையும் முதல்வர், ஸ்டாலின் போன்றவர்களின்
பெயர்களையும் பயன்படுத்துகின்றார்கள்.

இன்னும் மேலதிகமாக போய் பொதுவாக இருக்க வேண்டிய வக்ஃபு வாரியத்
தலைவரையும் அவரது அதிகாரத்தையும் இவர்கள் பயன்படுத்தி தமிழகமெங்கும்
கட்டப் பஞ்சாயத்துக்களிலும் ரவுடித் தனங்கிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
இவர்கள் சமுதாய துரோகிகள் என்பதை இந்த சமுதாயம் அடையாளம் கண்டு கொள்ள
வேண்டும். தேர்தல் நெருங்கி வரும் இந்நிலையில் இவர்களை கூட வைத்து
கொண்ருக்கும் முதல்வர்கள் அவர்கள் சற்று சிந்திக்க வேண்டும். தமுமுக
மற்றும் மனித நேய மக்கள் கட்சியினரை உங்கள் கூட்டனியில் வைத்திருந்தால்
தமிழகத்தில் முஸ்லிம்களின் ஒரு ஓட்டை கூட பெற முடியாது என்று உங்களிடம்
கூறிக் கொள்கின்றோம்.

அட்டைக் கருப்பாக இருக்கும் ஒருவனுக்கு வெள்ளையன் என்று பெயர் இருக்கும்,
நோயளியாக இருக்கும் ஒருவனுக்கு ஆரோக்கியம் என்று பெயர் வைத்திருப்பார்கள்
அது போல மனித நேயமே அற்ற குண்டர்களை வைத்து நடத்தப்படும் ஒரு கட்சிக்கு
மனித நேய மக்கள் கட்சி என்று பெயர் வைத்துள்ளார்கள். இவர்கள் மனித நேயம்
அற்றவர்கள் என்பது இந்த சம்பவத்தில் நிறுபிக்கப்பட்டுள்ளது. மனித நேய
மக்கள் கட்சி கொடி கட்டிய கார்களில் வந்து வீடு புகுந்து முஸ்லிம்
குடும்பத்தினர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய மனித நேய மக்கள்
கட்சி மற்றும் தமுமக குண்டர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்ய
வேண்டும். தமிழகம் எங்கும் முதல்வரின் பெயரையும், ஸ்டாலின் அவர்களின்
பெயரையும், வக்பு வாரியத் தலைவர் பதவி அதிகாரதையும் தவறாக பயன்படுத்தி
கட்டப்பஞ்சாயத்துக்களை செய்து வரும் தமுமுக மனித நேய மக்கள் கட்சி
குண்டர்களை தமிழக முதல்வர் எச்சரித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கேட்டக் கொள்கின்றேன் என்றார்.
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

it is 26 years since Nellie massacre in Assam

It is 26 years since Nellie massacre in Assam where thousands of
Muslims were killed in a single night. The affects of the massacres
can still be felt on the psyche of the Muslim community. They still
await justice from India's judiciary.

Government does not give them hope. As they have been neglected after
successive governments, both at the state level and from central
governments. But judiciary specially India's highest court still gives
them hope.

They don't have resources to fight the cases, most of them being poor
labourers, but hope that India's Supreme Court opens the cases suo
moto.


Indian Muslims have a very short memory. It is barely twenty-one years when more than three thousand Muslims were slaughtered in Nellie, in Nagaon district of Assam in a single day but no one seems to remember the mass killings of the poor Assamese Muslims.

Young Muslim men don't seem to have heard of the case at all and Muslim leaders behave as if they too are unaware of Nellie. No voice is heard and no debate takes place on what happened to the enquiry commission report submitted to the government. The issue is not raised at all. So justice is a far cry.

In February 1983, 3,300 people were killed in a single day. As per official records, the six hour long attack on Nellie began at 10 am and left at least 1,800 persons dead. Records in the Jagiroad police station put the number of killed in the riots at Dungbari, Muladhari, Borpolah, Silbheti and Mati-parbat at 2,191. But the actual figures are said to be higher, 3,300 according to some estimates. Their only sin was that they voted for Indira Gandhi who had given them assurances, that they need not fear any retaliation. About 1,668 people were arrested in connection with the mass murder.

Tewari Commission, constituted to probe the riot submitted its 600-page report to the Assam government in May 1984, the then Congress government, headed by Hiteswar Saikia, decided against making it public. The Asom Gana Parishad (AGP) government that came to power in December 1985 too kept it under wraps.

But records at the Jagiroad police station say that while 688 cases had been filed in connection with the Nellie killings, the police submitted chargesheets only in 310. The remaining 378 cases were closed after a final report said there was no evidence. But these too were dropped later. B K Gohain, home commissioner, Assam said ''All the Nellie cases were dropped during Prafulla Kumar Mahanta's time. The chapter is closed.''

Shekhar Gupta, the editor in chief of Indian Express who reported the massacre later recounts his thought while comparing it with the Gujarat riots. "In Nellie, earlier, more people died in a single day (3,300) than in any riot after Partition. But the police were not helping along the murderers. It happened in a distant, hidden patch of dry Brahmaputra bed in a dark corner of Assam, and while the police and the state government were guilty of ignoring early warnings they were not participating in the killings and loot. I reached Nellie when killings and hackings were still on and the wounded were crying, crawling, carrying their dismembered limbs, trying to push back entrails hanging out of stab holes in their children's bellies. There was just half a platoon of the CRPF there, led by a very honourable head constable called H. B. N. Appa who was crying bitterly that he did not have enough people or firepower to stop the killings. He was by no means egging the killers on. He must have still saved a few thousand lives. He resurfaced in my reporting life a year later, in Amritsar during Operation Bluestar, at the head of a CRPF patrol, his lonely heroism at Nellie having earned him the reward of the single pip of a sub-inspector which he flaunted at me and asked: "So what did you get for reaching there ahead of the others?" And then he talked about how many lives he could have saved if only he had a full platoon.

One of my abiding memories of Nellie is the bitterly dejected, forlorn face of the then DIG of Nowgong district, under whose charge the village fell, the day after the massacre. "If only we were here a few hours earlier... if only we were here a few hours earlier," he kept on mumbling. That pain returns to his face even today when I sometimes cruelly pull his leg by reminding him I beat him and his police to the Nellie story. You can check with the gentleman if I am speaking the truth. He is P. C. Sharma, the current director of the CBI. Or you can check with his then boss, K. P. S. Gill, who had to answer so many difficult questions when Indira Gandhi flew in, ashen-faced, the following morning." Now nobody wants to talk of Nellie. When the victims of 1984 Sikh riots are being compensated, nobody talks of compensating the Nellie riot victims.

The Nellie survivors too were compensated. But be prepared for a cruel joke. Adding insult to injury, every family in the half-a-dozen affected villages received a mere two bundles of tin sheets and Rs 2,000 in cash as part of the rehabilitation package announced by the then Congress government.

Assam government still does not allow people to remember and condole to what happened in Nellie on that fateful day. For its own reasons, every party wants to forget Nellie.

Last November Japanese scholar Makiko Kimura was stopped by the Assam government from giving a talk called ''Memories of a massacre: Competing narratives of the Nellie incident' The lecture had to be called off 30 minutes before it was scheduled to start after the State Home Commissioner and Secretary B. M. Mazumdar faxed a letter to the OKD Institute of Social Change, the institute that hosts CENISEAS, asking it not to hold the lecture 'without consultation with the state government'. By that time the hall was already full. Makiko Kimura, a Japanese scholar who had recently completed her doctoral dissertation on the issue at the Centre for the Study of Social Systems, JNU, was supposed to speak on three aspects of the Nellie massacre: The views of the victims, the attackers and the AASU movement leaders

Read more:

http://en.wikipedia.org/wiki/Nellie_massacre

http://www.khabrein.info/index.php?option=com_content&task=view&id=20249&Itemid=66
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

Sunday, February 15, 2009

A Chat with Dr. Devi Shetty (Heart Specialist) - Very Useful

(Embedded image moved to file: pic19558.jpg)
A chat with Dr.Devi Shetty, Narayana Hrudayalaya
(Heart Specialist) Bangalore was arranged by WIPRO for its employees .
The transcript of the chat is given below. Useful for everyone.


Qn: What are the thumb rules for a layman to take care of his heart?

Ans:
1. Diet - Less of carbohydrate, more of protein, less oil
2. Exercise - Half an hour's walk, at least five days a week; avoid lifts
and avoid sitting for a longtime
3. Quit smoking
4. Control weight
5. Control blood pressure and sugar

Qn: Is eating non-veg food (fish) good for the heart?

Ans: No

Qn: It's still a grave shock to hear that some apparently healthy person

gets a cardiac arrest. How do we understand it in perspective?

Ans: This is called silent attack; that is why we recommend everyone past
the age of 30 to undergo routine health checkups.

Qn: Are heart diseases hereditary?

Ans: Yes

Qn: What are the ways in which the heart is stressed? What practices do
you suggest to de-stress?

Ans: Change your attitude towards life. Do not look for perfection in
everything in life.

Qn: Is walking better than jogging or is more intensive exercise required
to keep a healthy heart?

Ans: Walking is better than jogging since jogging leads to early fatigue
and injury to joints

Qn: You have done so much for the poor and needy. What has inspired you to
do so?

Ans: Mother Theresa , who was my patient

Qn: Can people with low blood pressure suffer heart diseases?

Ans: Extremely rare

Qn: Does cholesterol accumulates right from an early age
(I'm currently only 22) or do you have to worry about it only after you
are above 30 years of age?

Ans: Cholesterol accumulates from childhood.

Qn: How do irregular eating habits affect the heart ?

Ans: You tend to eat junk food when the habits are irregular and your
body's enzyme release for digestion gets confused.

Qn: How can I control cholesterol content without using medicines?

Ans: Control diet, walk and eat walnut.

Qn: Can yoga prevent heart ailments?

Ans: Yoga helps.

Qn: Which is the best and worst food for the heart?

Ans: Fruits and vegetables are the best and the worst is oil.

Qn: Which oil is better - groundnut, sunflower, olive?

Ans: All oils are bad .

Qn: What is the routine checkup one should go through? Is there any
specific test?

Ans: Routine blood test to ensure sugar, cholesterol is ok.. Check BP,
Treadmill test after an echo.

Qn: What are the first aid steps to be taken on a heart attack?

Ans: Help the person into a sleeping position , place an aspirin tablet
under the tongue with a sorbitrate tablet if available, and rush him to a
coronary care unit since the maximum casualty takes place within the first
hour.

Qn: How do you differentiate between pain caused by a heart attack and
that caused due to gastric trouble?

Ans: Extremely difficult without ECG.

Qn: What is the main cause of a steep increase in heart problems amongst
youngsters? I see people of about 30-40 yrs of age having heart attacks
and serious heart problems.

Ans: Increased awareness has increased incidents. Also, s edentary
lifestyles, smoking, junk food, lack of exercise in a country where people
are genetically three times more vulnerable for heart attacks than
Europeans and Americans.

Qn: Is it possible for a person to have BP outside the normal range of
120/80 and yet be perfectly healthy?

Ans: Yes.

Qn: Marriages within close relatives can lead to heart problems for the
child. Is it true?

Ans : Yes, co-sanguinity leads to congenital abnormalities and you may not
have a software engineer as a child

Qn: Many of us have an irregular daily routine and many a times we have to
stay late nights in office. Does this affect our heart ? What precautions
would you recommend?

Ans : When you are young, nature protects you against all these
irregularities. However, as you grow older, respect the biological clock.

Qn: Will taking anti-hypertensive drugs cause some other complications
(short / long term)?

Ans : Yes, most drugs have some side effects. However, modern
anti-hypertensive drugs are extremely safe.

Qn: Will consuming more coffee/tea lead to heart attacks?

Ans : No.

Qn: Are asthma patients more prone to heart disease?

Ans : No.

Qn: How would you define junk food?

Ans : Fried food like Kentucky , McDonalds , samosas,Haldirams, Gardens
and even masala dosas.

Qn: You mentioned that Indians are three times more vulnerable. What is
the reason for this, as Europeans and Americans also eat a lot of junk
food?

Ans: Every race is vulnerable to some disease and unfortunately, Indians
are vulnerable for the most expensive disease.

Qn: Does consuming bananas help reduce hypertension?

Ans : No.

Qn: Can a person help himself during a heart attack (Because we see a lot
of forwarded emails on this)?

Ans : Yes. Lie down comfortably and put an aspirin tablet of any
description under the tongue and ask someone to take you to the nearest
coronary care unit without any delay and do not wait for the ambulance
since most of the time, the ambulance does not turn up.

Qn: Do, in any way, low white blood cells and low hemoglobin count lead to
heart problems?

Ans : No. But it is ideal to have normal hemoglobin level to increase your
exercise capacity.

Qn: Sometimes, due to the hectic schedule we are not able to exercise. So,
does walking while doing daily chores at home or climbing the stairs in
the house, work as a substitute for exercise?

Ans : Certainly. Avoid sitting continuously for more than half an hour and
even the act of getting out of the chair and going to another chair and
sitting helps a lot.

Qn: Is there a relation between heart problems and blood sugar?

Ans: Yes. A strong relationship since diabetics are more vulnerable to
heart attacks than non-diabetics.

Qn: What are the things one needs to take care of after a heart operation?


Ans : Diet, exercise, drugs on time , Control cholesterol, BP, weight.

Qn: Are people working on night shifts more vulnerable to heart disease
when compared to day shift workers?

Ans : No.

Qn: What are the modern anti-hypertensive drugs?

Ans : There are hundreds of drugs and your doctor will chose the right
combination for your problem, but my suggestion is to avoid the drugs and
go for natural ways of controlling blood pressure by walk, diet to
reduce weight and changing attitudes towards lifestyles.

Qn: Does dispirin or similar headache pills increase the risk of heart
attacks?

Ans : No.

Qn: Why is the rate of heart attacks more in men than in women?

Ans : Nature protects women till the age of 45.

Qn: How can one keep the heart in a good condition?

Ans : Eat a healthy diet, avoid junk food, exercise everyday, do not smoke
and, go for health checkup s if you are past the age of 30 ( once in six
months recommended) ....


________________________________

Get your own website and domain for just Rs.1,999/year.* Click here!

________________________________

Add more friends to your messenger and enjoy! Invite them now.

Saturday, February 14, 2009

GPSed Track "Aja"


View my new track "Aja" started in India, State of Tamil Nadu, Madukkarai.

Jaj

Powered by GPSed.com - Free Mobile GPS Tracking Service



Wednesday, February 11, 2009

Monday, February 9, 2009

Abdul Karim has sent you a hi5 Friend Request

hi5 Invitation
 
To:
Blog

From:
Abdul Karim

Abdul Karim added you as a friend on hi5. We need to confirm that you know Abdul Karim in order for you to be friends on hi5. Click the button to confirm this request:

 
------------------------------------------------------
Copyright 2002-2008 hi5 Networks, Inc. All rights reserved.
55 Second Street, Suite 300, San Francisco, CA 94105
Privacy Policy | Unsubscribe | Terms of Service

Sunday, February 8, 2009

GPSed Track "S"


View my new track "S" started in India, State of Tamil Nadu, Coimbatore.

B

Powered by GPSed.com - Free Mobile GPS Tracking Service



Friday, February 6, 2009

if H+A+R+D+W+O+ R+K

If

A=1

B=2

C=3

D=4

E=5

F=6

G=7

H=8

I=9

J=10

K=11

L=12

M=13

N=14

O=15

P=16

Q=17

R=18

S=19

T=20

U=21

V=22

W=23

X=24

Y=25

Z=26


Then


H+A+R+D+W+O+ R+K
=
8+1+18+4+23+ 15+18+11 = 98%


K+N+O+W+L+E+ D+G+E
=
11+14+15+23+ 12+5+4+7+ 5 = 96%


L+O+V+E
=
12+15+22+5=54%


L+U+C+K
=
12+21+3+11 = 47%

(None of them makes 100%)....... ......... ......... ......


Then what makes 100%


Is it Money? ...... No!!!!!


Leadership? ....... NO!!!!


Every problem has a solution,


only if we perhaps change our


"ATTITUDE".

It is OUR ATTITUDE towards Life and Work
that makes OUR Life 100% Successful.. ..

A+T+T+I+T+U+ D+E
=
1+20+20+9+20+ 21+4+5=100%
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum