Saturday, August 15, 2009

ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence A.I.)

இது ஒரு கடலைப்போன்ற விஷயம், அள்ள அள்ள குறையாமல் விஷயங்கள் வந்து குவியும். நான் கணிணியியல் படிக்கத்தொடங்கியதும் என்னைக் கவர்ந்த ஒரு மிக அற்புதமான பிரிவு இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். இதைப் பற்றியும் கொஞ்சம் ஜல்லியடித்துவிட்டு போகலாமென்றுதான் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

இயந்திரங்களையும் சுயமாக அறிவுப் பூர்வமாக சிந்திக்க வைக்க நடக்கும் ஒரு அறிவியல் சார்ந்த முயற்சியே இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். மிக முக்கியமாக கணிணியை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்க முயற்சி என்றே கூறலாம். கணிணி கண்டுபிடித்த தொடக்கத்திலேயே இது சம்மந்தமான ஆராய்சிக்களும் தொடங்கிவிட்டது. மனிதனைப்போலவே, இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கவே இந்த முயற்சிகள் பெரிதும் செய்யப்பட்டன.

80 களில், இது சம்மந்தமான முயற்சிகளுக்கு அமேரிக்க அரசாங்கம் அதிக அளவில் பொருள் செலவழித்தது. அதைப்போலவே ஜப்பானும் ஐந்தாம் தலைமுறை கணிணி (Fifth Generation Computer) என்ற பெயரில் இது சம்மந்தமான முயற்சிகளை அதிக பொருள்செலவில் ஊக்குவித்தது. ஆனால் இவை அந்த அளவிற்கு வெற்றிகளை குவிக்காததால், இதற்கான ஃபண்ட்ஸ்(Funds) விரைவில் குறைத்துக்கொள்ளப்பட்டது.

கணிணிகள் தற்சமயம் வரை நாம் செய்யச் சொன்னது போலச் செய்யுமே ஒழிய தானாக சிந்திக்கவோ இல்லை முடிவுகளை எடுக்கவோ செய்யாது. வேண்டுமானால் ஒரு பிரச்சனை சார்ந்த விஷயத்திற்கு மனிதனைப்போல சிந்திக்க கணிணிகளை பழக்கப்படுத்த முடியும். இதற்கு தற்சமயத்தில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பயன்படும் சில துறைகளையும் அது எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பார்த்தால் புரிந்துவிடும்.
ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence A.I.)

இது ஒரு கடலைப்போன்ற விஷயம், அள்ள அள்ள குறையாமல் விஷயங்கள் வந்து குவியும். நான் கணிணியியல் படிக்கத்தொடங்கியதும் என்னைக் கவர்ந்த ஒரு மிக அற்புதமான பிரிவு இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். இதைப் பற்றியும் கொஞ்சம் ஜல்லியடித்துவிட்டு போகலாமென்றுதான் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.

இயந்திரங்களையும் சுயமாக அறிவுப் பூர்வமாக சிந்திக்க வைக்க நடக்கும் ஒரு அறிவியல் சார்ந்த முயற்சியே இந்த ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ். மிக முக்கியமாக கணிணியை அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைக்க முயற்சி என்றே கூறலாம். கணிணி கண்டுபிடித்த தொடக்கத்திலேயே இது சம்மந்தமான ஆராய்சிக்களும் தொடங்கிவிட்டது. மனிதனைப்போலவே, இயந்திரங்களையும் சிந்திக்க வைக்கவே இந்த முயற்சிகள் பெரிதும் செய்யப்பட்டன.

80 களில், இது சம்மந்தமான முயற்சிகளுக்கு அமேரிக்க அரசாங்கம் அதிக அளவில் பொருள் செலவழித்தது. அதைப்போலவே ஜப்பானும் ஐந்தாம் தலைமுறை கணிணி (Fifth Generation Computer) என்ற பெயரில் இது சம்மந்தமான முயற்சிகளை அதிக பொருள்செலவில் ஊக்குவித்தது. ஆனால் இவை அந்த அளவிற்கு வெற்றிகளை குவிக்காததால், இதற்கான ஃபண்ட்ஸ்(Funds) விரைவில் குறைத்துக்கொள்ளப்பட்டது.

கணிணிகள் தற்சமயம் வரை நாம் செய்யச் சொன்னது போலச் செய்யுமே ஒழிய தானாக சிந்திக்கவோ இல்லை முடிவுகளை எடுக்கவோ செய்யாது. வேண்டுமானால் ஒரு பிரச்சனை சார்ந்த விஷயத்திற்கு மனிதனைப்போல சிந்திக்க கணிணிகளை பழக்கப்படுத்த முடியும். இதற்கு தற்சமயத்தில் ஆர்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பயன்படும் சில துறைகளையும் அது எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் பார்த்தால் புரிந்துவிடும்.
http://ping.fm/z6Fh5

No comments: