Friday, October 10, 2008

ஊராட்சி போனது : உலக வங்கி ஆட்சி வந்தது

ஊராட்சி போனது : உலக வங்கி ஆட்சி வந்தது

Written by புதிய ஜனநாயகம் Saturday, 06 September 2008 20:15 புதிய ஜனநாயகம் 2008

திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர் நகராட்சிகள் அடுத்தடுத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பெரும் பொருட்செலவில் இவற்றின் தொடக்க விழாக்கள் கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளன. நவீன பாதாளச் சாக்கடைத் திட்டங்கள், சாலைகளை அகலப்படுத்துவது, திடக்கழிவு மேலாண்மை எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தி.மு.க. அரசு, நகர்ப்புற மக்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்து மேம்படுத்துவதாக மக்களும் கருதுகின்றனர்.


மாநகராட்சிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதன் பின்னணியைப் புரிந்து கொள்ள முதலில் நாம் "மூன்றாவது தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்' (த.நா.ந.வ.தி.) பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.


47 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழும் தமிழ்நாட்டில்தான் நகரமயமாக்க வேகம் இந்தியாவிலேயே அதிகம் என்பதால், இம்மக்களுக்கு தரமான சேவை செய்திடவும் உள்கட்டுமானங்களை வலுவாக்கிடவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தினை உருவாக்கி அதற்கு 8.5 சதவீத வட்டியுடன் 20 ஆண்டுகளில் திருப்பச் செலுத்தும் வகையில் ரூ. 1200 கோடி கடன் தந்திருக்கிறது, மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு வங்கி.


2005இல் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, மாநில, மைய அரசுகளின் பிடியில் இருந்து நகர்மன்றங்களை விடுவித்து, அவற்றை வலிமையான நிறுவனங்களாக்குதல்; இரண்டு, எவ்விதக் கட்டுப்பாடுமின்றி தனியார் மூலதனங்கள் வாயிலாக நகர உள்ளாட்சியின் தேவைகளை விரைவில் பூர்த்தி செய்தல்; மூன்று, உள்ளாட்சியும் தனியாரும் இணைந்து நலத் திட்டங்களை நிறைவேற்றுதல்.


பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்திய நகர வளர்ச்சிக்காகத் தேவைப்பட்ட 28 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வழங்க வேண்டுமானால், உள்ளாட்சி அமைப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அவை மைய, மாநில அரசுகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டு, உலக நிதி மூலதனத்தை நேரடியாகக் கையாள வகை செய்யப்பட வேண்டும் என உலக வங்கி நிபந்தனை விதித்து, அதன்படி த.நா.ந.வ.தி. வடிவமைக்கப்பட்டது.


இத்திட்டத்தின்படி த.நா.நகர்ப்புற வளர்ச்சி நிதி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்புக்கு நேரடியாக உலக வங்கி கடன் தந்தது. வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகமெங்கும் உள்ள நகராட்சிகளில் பாதாளச் சாக்கடைகள், குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கு ரூ. 440 கோடி இந்நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது.


நகராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் மட்டுமல்லாமல், திட்டத்தை வடிவமைத்துத் தருவதிலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, தூத்துக்குடியின் புதிய பாதாள சாக்கடைத் திட்டத்தை வடிவமைத்தது ""வில்பர்ஸ்மித் அசோசியேட்ஸ்'' எனும் அமெரிக்க நிறுவனம். நாமக்கல்லுக்கான திட்டத்தை வடிவமைத்தது ""தலால்மாட் மெக்டொனால்டு'' எனும் பிரிட்டன் நிறுவனம்.


திண்டுக்கல், விருதுநகர், நீலகிரி, இராமநாதபுரம், கடலூர் ஆகிய நகராட்சிகளுக்கும் இவ்வாறான கழிவுநீர் வடிகால் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வளர்ச்சி நிதியில் இருந்து, வைகை அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டுவர ரூ.10 கோடியும், மதுரையில் திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.11.48 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.


புதிய மாநகராட்சிகளான ஈரோடு, வேலூருக்கு முறையே ரூ.10 கோடியும் ரூ.9 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளன. உள்ளாட்சிதனியார் கூட்டுத் திட்டங்களுக்காக த.நா.நகர வளர்ச்சி நிதியில் ஐ.எல்.எப்.எஸ். நிறுவனமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், ஹெச்.டி.எப்.சி.யும் பங்குதாரர்களாகச் சேர்க்கப்பட்டன. (ஹெச்.டி.எப்.சி. வங்கியில் உள்ள உலக வங்கியின் பங்கு ரூ. 400 கோடி). கரூரில் அமராவதி ஆற்றைக் கடக்க உதவும் பாலம் இக்கூட்டுத் திட்டத்தின் கீழ்க் கட்டப்பட்டு, அதனைப் பயன்படுத்துவோரிடமிருந்து சுங்கம் வசூலிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.


இதற்காக தமிழ்நாடு சுங்க வசூல் சட்டம் திருத்தப்பட்டு, உள்ளாட்சிகள் தனியாருடன் இணைந்து சாலைகள், பாலங்கள் கட்டிச் சுங்கம் வசூலிக்க வகை செய்யப்பட்டது. இதன்படி மதுரை புறவழிச்சாலை, சென்னைவளசரவாக்கம் மழை நீர் வடிகால் திட்டம் வடிவமைக்கப்பட்டன. திடக்கழிவு மேலாண்மையிலும் தனியார் கூட்டுத் திட்டம் ஆலந்தூரில் அறிமுகமாகியுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் மாதந்தோறும் ரூ.150 தரவேண்டுமென அதன் திட்ட அறிக்கை கூறுகிறது.


முதல் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் 1996இலேயே தொடங்கப்பட்டு விட்டது. அதற்கும் உலக வங்கிதான் மூளை. இத்திட்டத்தின் மைய நோக்கமே தாராளமயம் என்பதால், அதற்கு ஏற்றபடி உள்ளாட்சி ஊழியர்களுக்கும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும், புதிய முறைக்கு ஏற்றபடி கணினி மென்பொருள், புதிய தொழில்நுட்பம், நிதி வசூல் திட்ட மேம்பாடு போன்றவற்றில் பயிற்சிகள் தொடர்ச்சியாகத் தரப்பட்டு வருகின்றன. 2006–07இல் இதற்காக ரூ. 5.44 கோடி ஒதுக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் பயிற்சிக்காக வெளிநாடுகளுக்குக் கூட அனுப்பப்பட்டனர். 2004இல் பொன்னம்பட்டி ஊராட்சித் தலைவி சல்மா (எழுத்தாளர்) பாகிஸ்தானுக்குப் போய் வந்ததும் இத்தகைய திட்டத்தின்கீழ்தான்.


தற்போது தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் புவியியல் தகவல் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு திட்டமிடல், வருவாய் வகைகள் உயர்த்தப்படல், கட்டிடங்கள், நிலங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக மதுரை, கோவை, திருச்சி, இராசபாளையம், கோபிச்செட்டிபாளையம் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள், உலகவங்கி மீளாய்வு செய்வதற்கு வசதியாக இணையம் மூலம் இணைக்கப்பட உள்ளன.


கொடுத்த கடன்களை எல்லாம் எவ்வகைகளில் உலக வங்கி திரும்பப் பெறும்? அதற்கான வழிமுறைகளையும் அவ்வங்கியே திட்டத்தில் சொல்லியிருக்கிறது. ரூ.46.4 கோடி மதிப்பிலான தூத்துக்குடி திட்டத்தில் உலக வங்கியின் கடன் ரூ.26 கோடி. இதனை வசூலிக்கும் வகையில், இத்திட்டத்திற்கு ஒவ்வொரு குடும்பமும் ரூ.3 ஆயிரமும், பள்ளி, கடைகள் ரூ.7500மும், தொழிலகங்கள் ரூ. 10 ஆயிரமும் தர வேண்டும்; இத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ள மொத்த வீடுகள் 42,955. இவர்களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ. 26 லட்சம் வசூலிக்கப்பட வேண்டும்; இத்திட்டத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்த பின்னர் நகராட்சி பராமரிப்பையும் கழிவு நீர் சுத்திகரிப்பையும் தனியாரிடம் விட்டுவிடலாம் என்கிறது திட்ட அறிக்கை.


த.நா.ந.வ.தி. அறிக்கையில் ஏற்கெனவே பத்துக்கும் மேற்பட்ட நகராட்சிகள் சிறப்புப் பிரிவின்கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றிற்கு வழங்கப்பட்ட கடனும் பிற நகராட்சிகளை விட மிகவும் அதிகம். அப்பட்டியலில் இருக்கும் திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி, வேலூர் நகராட்சிகள்தான் தற்போது மாநகராட்சிகளாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தரம் உயர்த்துவதன் மூலம், சொத்து வரி போன்ற மாநகராட்சி வருவாய் பல மடங்கு உயரும். அதாவது, இனி இந்நகரங்களில் குடியிருக்கும் மக்கள் முன்பைவிட அதிகமாக வரி செலுத்த நேரிடும்.


ஆக, அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழக நகரங்களின் நிர்வாகங்களைப் பறித்தெடுத்து உலக நிதிமூலதனத்திடம் கொடுக்கும் வேலையைத்தான் மாநில உள்ளாட்சித் துறை செய்துவருகிறது. கடன் வலையில் உள்ளாட்சிகள் சிக்கி உலக வங்கியின் எடுபிடிகளாக அவை மாற்றப்படுவதுதான் நல்லாட்சியா? இந்த "நல்லாட்சியின்' உண்மையான நிர்வாகி யார்? மு.க.ஸ்டாலினா? உலகவங்கியா?
· அசுரன்

--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

Wednesday, October 8, 2008

IPC Sec 498A வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தின் தவறான பயன்பாட்டின் பயங்கரத்தை மக்களுக்கு அறிவுறுத்தும்

IPC Sec 498A வரதட்சணைக் கொடுமைச் சட்டத்தின் தவறான பயன்பாட்டின் பயங்கரத்தை மக்களுக்கு அறிவுறுத்தும் நோக்கில் சில தன்னார்வ நிறுவனங்கள் சேர்ந்து ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டணத்தில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். இதில் இந்திய குடும்பமுறை பாதுகாப்புக் குழுமம் (Save Indian Family Foundation), பாரதத்தைக் காப்போம் இயக்கம் (பாரத் பசாவோ சங்கடன்) போன்றவை பங்கெடுத்துக்கொண்டன.

அச்சமயம் நடந்த பத்திரிக்கையாளர் நேர்காணலில் தெரிவிக்கப்பட்ட உண்மைகள்:

1. இந்த 498A சட்ட செயலாக்கத்தை இந்திய உச்ச நீதிமன்றம் "சட்டபூர்வமான பயங்கரவாதம்" (Legal terrorism) என்று வர்ணித்துள்ளது.

2. இந்தச் சட்டத்தின்படி ஒரு பெண் வேறெந்தத் தகவலும் அளிக்காமல் தன்னை வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தினர் என்று மட்டும் கூறினால் போதும், அவளுடைய புகாரில் குறிப்பிடப்பட்ட அனைவரையும் (அது 100 வயது ஆன கிழவர்களாக இருந்தாலும் சரி, 3 மாதக் குழந்தையாக இருந்தாலும் சரி) அவர்களை உடனே எந்தவித முன்னறிவிப்போ, வாரண்டோ இல்லாமல், ஜாமீன் அளிக்காமல் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஏனென்றால் வேறெந்தச் சட்டதிலுமில்லாமல் இந்தச் சட்டத்தில் மட்டும் உள்ள பயங்கரம் இது. The IPC Sec 498A is cognizable, non-bailable and non-compoundable. இதைவிட கொடுங்கோன்மையான சட்டம் இந்தியாவில் கிடையாது.

3. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்ப்டும் புகார்களில் பெரும்பகுதி பொய்யானவை; தவறான நோக்கம் கொண்டவை என்பதை நிரூபிக்கும் வகையில் சில தரவுகள் கொடுக்கப்பட்டன. 2006-ம் ஆண்டில் மட்டும் 63,128 வழக்குகள் இந்த 498A சட்டத்தில் பதியப்பட்டன. ஆனால் அதில் 2% கேசுகளில் மட்டுமே குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டன. மற்ற 98% கேசுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

4. ஆனால் இதுபோன்ற பொய்யான புகார்களை எழுதி கேசு போடும் பெண்களைத் தண்டிக்க வழியேதும் இல்லை.

5. இன்னொரு கொடுமை என்னவென்றால் இதுபோன்ற புகார்களின் தொடக்க வரிகளே, தான் இவ்வளவு வரதட்சணை கொடுத்தேன் என்றுதான் இருக்கும். சட்டப்படி வரதட்சணை கொடுப்பதும் குற்றம்தான். ஆனால் அவர்களுக்கு எந்தவித தண்டனையும் இந்த சட்டத்தின்பேரில் கொடுக்கப்படுவதில்லை.

6. இந்த சட்ட துஷ்பிரயோகம் நகரங்களில் வாழும், நன்கு படித்து நல்ல வேலையிலிருக்கும் பெண்களால்தான் பெரும்பாலும் நிகழ்த்தப்படுகிறது (mostly software engineers and NRIs).

7. தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau) தரும் குறிப்புகளின்படி இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 55,000 மணமான ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் 28,000 மணமான பெண்கள்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆனால் மக்கள் மனத்தில் பெண்கள்தான் பெரும்பாலும் கொடுமைப் படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

8. இந்த 498A சட்டத்தின் தவறான பயன்பாட்டினால் எந்தவித விசாரணையுமின்றி இதுவரை 1,15,000 பெண்கள் கைது செய்யப்பட்டு சிரையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் சிறு குழந்தைகளிலிருந்து மிகவும் வயதானவர்களும் அடங்குவர்.

9. இந்த 498A சட்டத்தின்படி ஒருவர் அவருக்கு எதிராக ஒரு பெண் புகார் கொடுத்தவுடனேயே குற்றவாளியாக முடிவெடுக்கப்பட்டு கைது, சிறை போன்ற கொடுமைகளுக்கு ஆட்படுத்தப்படுகிறார். கேசு நடத்தி அதிலிருந்து விடுபடுவதற்குள் எல்லாவித சிறுமைகளுக்கும், பணச் செலவுக்கும் ஆளாகி முழுத் தண்டனையும் அனுபவித்துவிடுகிறார். இது எந்த ஒரு நாகரிகமான நாட்டிலும் நடக்கக்கூடாத கேவலமான நிலை.

10. இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்த அனைத்து தன்னார்வ குழுமங்களும், இந்தச் சட்டம் கணவனிடமிருந்து பணம் கறக்க நினைக்கும் கெடுமதியினருக்குத் துணை போகின்றதேயன்றி அடிப்படையில் பெண்களுக்கு எந்தவித நன்மையும் செய்யவில்லை என்று ஒருமனதாக முடிவெடுத்தார்கள்.

11. இந்தக் குழுக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பிரச்னைகளை மக்களுக்கும் ஆட்சியினருக்கும் தெரியப்படுத்தும் நோக்கத்தில் வரும் 19-11-2008 அன்று கோவாவில் ஒரு மாபெரும் தர்ணா மற்றும் ஊர்வலத்தை நிகழ்த்த இருக்கிறார்கள்.

12. முக்கிய கோரிக்கைகள்:

i) இந்த 498A சட்டப்பிரிவு Bailable, compoundable and Non-cognizable ஆக மாற்றப்படவேண்டும்

ii) இதுபோன்ற பெண்கள் தரப்புக்கு ஒருதலைச் சார்புள்ள அனைத்துச் சட்டங்களும் ஆண், பெண் இருபாலருக்கும் சமமாகப் பொருந்துமபடி மாற்றியமைக்கப்படவேண்டும் (They should be made gender-neutral)

--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum

Wednesday, October 1, 2008

Petrodollar Scam

Petrodollar Scam 

 

Back in 1971, the USA printed and spent far more paper money than it could cover by gold.

 

Few years later, French demanded redemption of its paper-dollar holdings in gold . But  the USA rejected as it actually didn't have enough gold  for the  dollars it had already printed and  spent all over the world, thus  committing an act of bankruptcy.

 

From that point, every nation that needed to buy oil had to firstly hold US dollars , which meant  that they exchanged their goods  and services for dollars, which the Americans just printed.

 

The Americans brought their oil literally for free  by printing those dollars. The ultimate free lunch  for the Americans at the expense of the rest of the world.

However, the scam began to unravel when Saddam Hussein started selling Iraq's oil directly for Euro , abrogating the cozy  arrangement the Americans had  with OPEC. Thus Saddam had to  be stopped.How?

USA concocted up a pretext to wage war (drama of twin tower blast) and invade Iraq and the first thing the Americans did was to revert sales of oil back to dollars. The currency crisis was averted for the moment.

But Hugo Chavez (Venezuela President) also started selling Venezuelan oil for currencies other than dollars, so there were a number of attempts on his life and "regime change", traceable right back to the CIA. The petrodollar cat was out of the bag.

Iran President (Ahmedinejad),  watching all of this, decided to kickThe Great Satan  in the  goolies and do the same thing - sell oil for every currency EXCEPT US dollars.

The shell game is coming to an end for the Americans. As the nations of the world find that they can buy oil for their own currencies instead of holding paper US dollars, more OPEC nations will abandon the dollar.

The worst thing for the Americans is that eventually, they will also have to buy their oil with Euro or Rubles instead of just printing paper money to get it.

 

That will be the end of the American Empire, the end of funding for the US military and the destruction of the US economy.

The great scam is coming to an end and there's not a lot that the USA can do about it, except start another world war!!!

 

Wait and Watch… Only few years/months ahead.

--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum