Thursday, April 26, 2012

அறிவோம் அரிச்சுவடி- ஐ,ஒ



ஐ தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. தமிழ் நெடுங்கணக்கில் இது ஒன்பதாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ஐகாரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஐயன்னா" என்பது வழக்கம்.
"ஐ" யின் வகைப்பாடு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ஐ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது நெட்டெழுத்து எனப்படுகின்றது. நெட்டெழுத்துக்கள் இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் இரண்டு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
இனவெழுத்து

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இந்த அடிப்படைகளில், ஐ என்பது இ க்கு இன எழுத்தாகும் என்கிறது நன்னூல்[2].
சொல்லில் ஐகாரம் வரும் இடங்கள்



'ஐ' எழுதும் முறை
தனி ஐ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் ஐ சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[3]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙை, சை, ஞை, டை, ணை, யை, ரை, லை, ழை, ளை றை, னை ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல் சகரத்துடனும் ஐகாரம் சொற்களுக்கு முதலில் வரும் என்கிறது. தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் டை, ரை, லை போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். டைனோசோர், ரைன், லைலா என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.
ஐகாரம் தனித்து நின்றும், மெய்களோடு சேர்ந்தும் சொல்லுக்கு இறுதியில் வரும். ஐகாரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்.
"ஐ" யும் மெய்யெழுத்துக்களும்

ஐ யுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஐகார உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன.[4]. இதனால், ஐகார உயிர் மெய்களை வரிவடிவில் குறிக்கும்போதும் அகரமேறிய உயிர்மெய் எழுத்துடனேயே ஐகாரத்தைக் குறிக்கும் சங்கிலிக் கொம்பு குறியீட்டையும் சேர்த்து எழுதுவது மரபாக உள்ளது.
18 மெய்யெழுத்துக்களோடும் ஐகாரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
மெய்யெழுத்துக்கள் சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர் வரிவடிவம் பெயர்
க் இக்கன்னா க் + ஐ கை கையன்னா
ங் இங்ஙன்னா ங் + ஐ ஙை ஙையன்னா
ச் இச்சன்னா ச் + ஐ சை சையன்னா
ஞ் இஞ்ஞன்னா ஞ் + ஐ ஞை ஞையன்னா
ட் இட்டன்னா ட் + ஐ டை டையன்னா
ண் இண்ணன்னா ண் + ஐ ணை ணையன்னா
த் இத்தன்னா த் + ஐ தை தையன்னா
ந் இந்தன்னா ந் + ஐ நை நையன்னா
ப் இப்பன்னா ப் + ஐ பை பையன்னா
ம் இம்மன்னா ம் + ஐ மை மையன்னா
ய் இய்யன்னா ய் + ஐ யை யையன்னா
ர் இர்ரன்னா ர் + ஐ ரை ரையன்னா
ல் இல்லன்னா ல் + ஐ லை லையன்னா
வ் இவ்வன்னா வ் + ஐ வை வையன்னா
ழ் இழ்ழன்னா ழ் + ஐ ழை ழையன்னா
ள் இள்ளன்னா ள் + ஐ ளை ளையன்னா
ற் இற்றன்னா ற் + ஐ றை றையன்னா
ன் இன்னன்னா ன் + ஐ னை னையன்னா
வரிவடிவம்

தமிழில் ஐகார ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் இப்போதுள்ளவாறே எப்போதும் இருந்ததில்லை. மிகப் பழைய காலத்தில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஐகாரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் அவ்வக்காலத்துக் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.


ஐகாரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஐகாரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் ஏகாரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன.


பிரெய்லியில் ஏகாரம்

கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆறு புள்ளிக்கான இடங்கள் உள்ளன. இதில் முதலாவது வரிசையில் வலது பக்கப் புள்ளியும் மூன்றாவது வரிசையில் இடது பக்கப் புள்ளியும் புடைத்து இருப்பின் அது ஐ யைக் குறிக்கும். இதை கீழே உள்ள படம் காட்டுகிறது.


பாரதி பிரெய்லியில் ஐகாரம்
ஒ தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இவ்வெழுத்து தமிழ் நெடுங்கணக்கில் பத்தாவதாக உள்ளது. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கக்கூடும். இவ்வெழுத்தை "ஒகரம்" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "ஓனா" என்பது வழக்கம்.


"ஒ" வின் வகைப்பாடு
தமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் ஒ உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து எனப்படுகின்றது. குற்றெழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]
இனவெழுத்துக்கள்

எழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் உயிரெழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் இனங்கள் பிரிக்கப்படுகின்றன. இம்மூன்று வித அடிப்படையிலும், ஒ என்பது ஓ க்கு இன எழுத்தாக அமையும்[2].
"ஒ" யும் மெய்யெழுத்துக்களும்

ஒ வுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து ஒகர உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. ஒகர உயிர் மெய்களில் ஒகரத்தைக் குறிக்க ஒற்றைக் கொம்புக் குறியும், கால் குறியும் அகரம் ஏறிய மெய்களுடன் சேர்த்தே எழுதப்படுகின்றன.

18 மெய்யெழுத்துக்களோடும் ஒகரம் சேரும்போது உருவாகும் உயிர்மெய் எழுத்துக்களையும் அவற்றின் பெயர்களையும் கீழேயுள்ள அட்டவணை காட்டுகின்றது.
மெய்யெழுத்துக்கள் சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர் வரிவடிவம் பெயர்
க் இக்கன்னா க் + ஒ கொ கோனா
ங் இங்ஙன்னா ங் + ஒ ஙொ ஙோனா
ச் இச்சன்னா ச் + ஒ சொ சோனா
ஞ் இஞ்ஞன்னா ஞ் + ஒ ஞொ ஞோனா
ட் இட்டன்னா ட் + ஒ டொ டோனா
ண் இண்ணன்னா ண் + ஒ ணொ ணோனா
த் இத்தன்னா த் + ஒ தொ தோனா
ந் இந்தன்னா ந் + ஒ நொ நோனா
ப் இப்பன்னா ப் + ஒ பொ போனா
ம் இம்மன்னா ம் + ஒ மொ மோனா
ய் இய்யன்னா ய் + ஒ யொ யோனா
ர் இர்ரன்னா ர் + ஒ ரொ ரோனா
ல் இல்லன்னா ல் + ஒ லொ லோனா
வ் இவ்வன்னா வ் + ஒ வொ வோனா
ழ் இழ்ழன்னா ழ் + ஒ ழொ ழோனா
ள் இள்ளன்னா ள் + ஒ ளொ ளோனா
ற் இற்றன்னா ற் + ஒ றொ றோனா
ன் இன்னன்னா ன் + ஒ னொ னோனா

சொல்லில் ஒகரம் வரும் இடங்கள்



'ஒ' எழுதும் முறை
தனி ஒ சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், ச், த், ந், ப், ம் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் ஒ சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்[3]. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ஙொ, ஞொ, டொ, ணொ, யொ, ரொ, லொ, வொ, ழொ, ளொ றொ, னொ ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. எனினும், தற்காலத்தில் பிற மொழிப் பெயர்களையும் சொற்களையும் எழுதுபவர்கள் டொ, யொ, ரொ, லொ, வொ போன்ற எழுத்துக்களும் முதலில் வரும்படி எழுதுகின்றனர். டொனால்ட் (இலங்கை வழக்கு), யொரூபா, ரொட்டி, லொள்ளு, வொட்கா (இலங்கை வழக்கு) என்னும் சொற்கள் இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள்.

உயிரளபடைகளில் சொல்லுக்கு இறுதியில் ஒ இட்டு எழுதுவது வழக்கு என்பதால் ஒகரம் சொல்லுக்கு இறுதியில் வரும் என்கிறது தொல்காப்பியம்[4]. அது நெட்டுயிர்களின் மாத்திரை மிகுந்து ஒலிப்பதைக் காட்டுவதற்கான ஒரு குறியீடாக எழுதப்படுகிறதே அன்றி அது தனி ஒகரமாக நிற்பதில்லை. எனவே ஒகரம் தனித்து நின்று சொல்லுக்கு இறுதியாக வருவதில்லை என்பது நன்னூலின் கருத்து. மெய்களுள் நகர மெய்யுடன் சேர்ந்து மட்டுமே ஒகாரம் சொல்லுக்கு இறுதியில் வரும். ஒகரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்[5].
வரிவடிவம்

தமிழில் ஒகர ஒலியைக் குறிக்கும் வரிவடிவம் ஒன்றுபோலவே தொடக்க காலத்தில் இருந்தே இருந்ததில்லை. ஏறத்தாழ கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பல்வேறு காலகட்டங்களிலும் தமிழில் ஒகரத்தைக் குறிக்கப் பயன் பட்ட வரிவடிவங்கள் பற்றிய தகவல்கள் கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. சில காலங்களில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வரிவடிவங்கள் பயன்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. கிமு மூன்றாம் நூற்றாண்டுக்குப் பின்னர் தமிழை எழுதுவதற்கு தமிழ்ப் பிராமி, வட்டெழுத்து, தமிழ் எழுத்து ஆகிய எழுத்துக்கள் பயன்பட்டுள்ளன.


தொல்காப்பியம் ஒகரத்தின் இயற்கை புள்ளி பெற்று நிற்றல் என்று கூறுவதால், ஒகரத்துக்கும் ஓகாரத்துக்கும் இருந்த வேறுபாடு ஒரு புள்ளியே என உணரலாம். இதனால் ஒகர எழுத்தின் வடிவம் ஓகாரக் குறியீட்டுடன் புள்ளியும் சேர்ந்ததாக அமைந்தது தெளிவு. ஆனால் தமிழ் கல்வெட்டுக்களில் ஒகரமும், ஓகாரமும் வேறுபாடு இன்றி எழுதப்பட்டது தெரிகிறது. பிற்காலத்தில் வீரமாமுனிவர் ஓகாரத்திற்கு அடியில் சிறிய சுழியொன்றைச் சேர்த்து அதனை ஒகரத்திலிருந்து வேறுபடுத்தினார் என்கிறார்கள்.

ஒகரம் பல்வேறு மொழிகளிலும் பொதுவாக உள்ள ஒரு ஒலி. தென்னிந்திய மொழிகளிலும் சில அயல் மொழிகளிலும் ஒகரத்தின் வரிவடிவம் எவ்வாறு உள்ளது என்பதைக் கீழுள்ள படம் காட்டுகிறது. பிராமி இந்திய மொழிகள் பலவற்றின் எழுத்து முறைகளுக்கு அடிப்படை என்னும் கருத்து உள்ளதாலும், பல தென்னிந்திய மொழிகளினதும், சிங்களம் முதலிய அயல்நாட்டு மொழிகளினதும் வரிவடிவங்கள் கிரந்தத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் இருப்பதால் பிராமி, கிரந்தம் ஆகியவற்றின் எகரத்துக்கான வரிவடிவங்கள் ஒப்பீட்டுக்காகத் தரப்பட்டுள்ளன. பிராமி, கிரந்தம் ஆகிய எழுத்து முறைகளிலும், வட இந்திய மொழிகளின் எழுத்து முறைகளிலும் ஒகரம் கிடையாது. ஆனால் இந்திய-ஆரிய மொழியாக வகைப்படுத்தப்பட்டுள்ள சிங்கள மொழியில் ஒகரம் உள்ளது.


பிரெய்லியில் எகரம்

கண்பார்வையற்றோர் படிப்பதற்கு உதவும் பிரெய்லி முறைப்படி தமிழ் எழுத்துக்களை எழுதுவதற்கும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்திய மொழிகளுக்கென உருவாக்கப்பட்டுள்ள "பாரதி பிரெய்லி" தமிழ் எழுத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆறுபுள்ளி முறையைப் பின்பற்றி அமைக்கப்பட்டுள்ள இம்முறையில் ஒரு எழுத்துக்கான இடம் ஒரு வரிசையில் இரண்டிரண்டாக மூன்று வரிசையில் ஆற�

No comments: