Wednesday, April 25, 2012

சிரியாவில் நடப்பது என்ன? - உண்மைச்சூழல் !
18
அதிரைநிருபர் குழு |

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

அண்மைகாலங்களில் இஸ்லாமிய நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு உண்மை மறைக்கப்ட்ட போராட்டங்களாக நடைபெறும் நாடுகளில் ஒன்றுதான் சிரியா என்பது நாம் அனைவரும் அறிந்திருக்கிறோமா என்பது கேள்விக்குறியே !?.

உலக வல்லரசாக ஆட்கொண்டிருக்கும் அமெரிக்கா, அரபு நாடுகளுக்கு எதிராக போர் / தாக்குதல் தொடுத்தாலோ அல்லது மிரட்டல் அறிக்கை விட்டாலோ உடனே நாமும் பொங்கியெழுந்து எதிர்க்கிறோம். அமெரிக்கா ஏதாவது ஒரு இஸ்லாமிய நாடு(?)க்கு எதிராக ஏன் போர் தொடுக்கிறார்கள்? என்ற பின்னனியறியாமலே போராட்டங்கள், கண்டனங்கள் என்று வீதியில் இறங்கி அறிந்தோ அறியாமலே போராடுகிறோம். இதுபோன்ற போராட்டங்கள் அமெரிக்காவுக்கு ஐரோப்ப நாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் சரியா? அல்லது தவறா? என்பதை அலசவல்ல இந்த பதிவு.


முஸ்லீமாகிய எம்மக்கள் எப்படி தங்களின் ஈமானுடன் சிரியா போன்ற நாடுகளில் அல்லாஹ்வின் மார்க்கத்தை இவ்வுலகில் நிலைநிறுத்த போராடுகிறார்கள் என்பதனை உண்மைச் சம்வங்களோடு காணொளிகள் காட்டுடன் இங்கே உங்களின் பார்வைக்கும் இறையச்சம் உடைய மக்களின் இறைஞ்சலுக்குமாக வைக்கிறோம். மேலும், இஸ்லாத்திற்கு எதிரான இணைவைப்புகளை கொண்டு ஆட்சியாளர்கள் எப்படியெல்லாம் மக்களை நிர்பந்திக்கிறார்கள் என்பதையும் வேதனையுடன் இந்த காணொளிகளில் காண இருக்கிறீர்கள். இதில் நமக்கு மிகப்பெரிய படிப்பினைகள் நிறைய உள்ளது.

இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் வெற்றி வாகை சூடிய கலீபாக்களில் உமர் (ரழி) அவர்கள் முதன்மையானவர்கள். இவர்கள் ஆட்சிகாலத்தில் வெற்றி கொள்ளப்பட்டு இஸ்லாமிய ஆட்சி நிலைநாட்டப்பட்டு இணைவைப்பாளர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது இங்கே. ஆனால் இன்றோ நிலைமை தலைகீழ்.

சிரியாவின் ஆட்சியாளர் அலாவி(!!??) என்ற மதத்தை சார்ந்தவர்கள், குர்ஆன் சுன்னா இவர்களின் வழியல்ல, அலி(ரழி) அவர்களை அல்லாஹ்வாக ஏற்றுக்கொண்ட கூட்டம் தான் இந்த அலாவி மத்தத்தவர். இந்த இனத்தின் வந்த சிரியா அதிபர் அஸாத் பஸரை முன்னிருத்தி அல்லாஹ்வுக்கு இணையாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள் அங்குள்ள ஆட்சியாளரின் அபிமானிகளும் கைக்கூலிகளும் அந்த நாட்டின் கேடுகெட்ட பாதுகாப்பு படையினரும். இதோ இந்த காணொளியை பாருங்கள்.. அல்லாஹ்வையும் பின் தள்ளுவோம் என்று நெஞ்சலுத்தத்துடன் சொல்லும் இந்த இணைவப்பவர்களின் சிரியா அரசு பிரதிநிதி ஒருவன். சுப்ஹானல்லாஹ்.. அபூஜஹலின் கொடூர சரித்திரம் ஞாபகத்துக்கு வரும் இவந்த கொடுங்கோலர்களின் செயல்.


இஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக ஜும்மா மேடைகளில் பிரச்சாரம் செய்து அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் ஆட்சியாளர்களையல்ல என்று மக்களை நேர்வழியில் பக்கம் அழைத்து வருகிறார்கள். அப்படி செய்யும் இஸ்லாமிய மார்க்க பிரச்சார்களை (தாயிக்களை) தேடிப்பிடித்து கொலை செய்கிறார்கள் இந்த கொடுங்கோலன் அசாத் பஷார் கூட்டத்தார்கள். சுப்ஹானல்லாஹ்! இந்த மனிதர் படும் பாட்டை பாருங்கள். வேறு வழியில்லாமல் தன் உயிரை காப்பாற்ற அஸாத் பற்றிய இணைவைப்பு வாசகத்தை சொல்லுகிறார், பிறகு கொடூரமாக கொள்ளப்படுகிறார் இந்த தாடிவைத்த ஒரு முஸ்லீம். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஃவூன்.

தயைகூர்ந்து இலகியமனம் படைத்தவர்கள், சிறுவர்கள், பெண்கள் இந்த காணொளிகளை கானுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டுகிறோம். காண சகிக்காத காட்சிகள். இத்தகைய காணொளிகள் நம்முடைய ஈமானை பலப்படுத்தவும் எந்த நிலையிலும் நம்முடைய இறையச்சம் ஊசலாடாமல் பாதுகாக்கவும் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி நன்நோக்கத்தில் பதியப்பட்டிருக்கிறது.


இதோ பாருங்கள் அல்லாஹ்வின் இறையில்லங்கள் தாக்கப்படுகிறது






இந்த இறையில்லங்களை இடிக்கும்போது அம்மக்கள் சத்தத்துடன் அழும் குரல் பார்க்கும் அனைத்து முஸ்லீம்களுக்கும் கண்ணீர் வரும். சுப்ஹானல்லாஹ்..

சுதந்திரம் வேண்டும் என்று போராடும் நம் முஸ்லீம் மக்கள் நடத்தும் போராட்டத்தில் நடந்த இந்த போர்களத்தை பாருங்கள்.



பெற்ற தாயை மருத்துவமனைத்து அழைத்துச்சென்ற மகனும் தாயும் தாய் ஷஹீதாஹிவிட்டார், மகன் படுகாயமடைந்து விட்டார். காயமடைந்த உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த சகோதரனை மீட்டெடுக்கும் காட்சியை பாருங்கள். உலகத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள எந்த ஒரு கொடுரமான திரை மற்றும் காணிளி காட்சிகளிலுல் கூட காண்டிருக்க மாட்டீர்கள்.


அசத் பஷாரை அல்லாஹ் என்று சொல்ல மறுக்கும் ஒரு முஃமீன் ஷஹாதா சொல்லிக்கொண்டிருக்கும் போது பெட்ரோல் ஊற்றி எரித்து உடனே கழுத்தை அறுத்து கொல்லப்படுகிறார்…

இதன் காணொளி தற்போது யூடியூபால் தடை செய்யப்பட்டுள்ளது.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

சிரியாவில் நடக்கும் இந்த நிகழ்வுகளில் நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது.

அல்லாஹ்வை ஏகனாக ஏற்று முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக ஏற்ற ஒரே காரணத்துக்காக, அக்கிரமக்கார ஆட்சியாளர்களால் சிரியா மக்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த கஷ்டமான காலகட்டத்திலும் அல்லாஹு அக்பர் என்று அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டிருகிறார்கள் இந்த மக்கள்.

அல்லாஹ் நமக்கு நல்ல சூழ்நிலைகளை தந்தும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் தொழுகை இபாதத்துக்களில் எவ்வளவு பொடுபோக்காக இருக்கிறோம் என்பதை சிறிதேனும் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

எவ்வளாவுதான் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாலும் அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் வணங்கமாட்டேன் என்ற உறுதியில் ஷஹாபாக்களின் வரலாறுகளை படித்திருப்போம் கேட்டிருப்போம். ஆனால், இன்று சிரியாவில் குர்ஆன் சுன்னாவை அடிப்படை நெறியாக கொண்டுள்ள சிரியா மக்களிடமிருந்து நமக்கு நிறைய படிப்பினைகள் உள்ளது.

மிகப்பெரிய மார்க்க மேதைகளை உருவாக்கிய இந்த சிரியா நாட்டில் முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் நாம் செய்ய வேண்டிய பரிகாரம் அவர்களுக்காக துஆ செய்வது தான் இத்தருணத்தில் கட்டாயம் தேவை.

யா அல்லாஹ்! சிரியா முஸ்லீம் மக்களுக்கு பொறுமையை வழங்குவாயாக…

யா அல்லாஹ்! பெற்ற தாய் தந்தையர்கள், பிள்ளைகள் இழந்து வாடும் சிரியா மக்களுக்கு அல்லாஹ் மன நிம்மதியை அளித்தருள்வாயாக..

அவர்களுக்கு நல்லருள் புரிவாயாக..

யா அல்லாஹ்! இந்த அசாத் பஷாரை தண்டிப்பாயாக…! உன்னுடைய சாபத்தை அவன்மீது உண்டாக்குவாயாக…

யா அல்லாஹ்! சிரியாவில் உள்ள முஸ்லீம் உம்மத்திற்கு வெற்றியை தந்தருள்வாயாக...

தயைகூர்ந்து நம் ஒவ்வொருவரின் பிரார்த்தனையிலும் சிரியாவில் வாழும் முஸ்லீம்கள் அனைவரின் பாதுகாப்பிற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் கையேந்துவோம், அவர்களுகாக பிரார்த்தனை செய்யுமாறு உங்கள் அனைவரையும் உருக்கத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.

தொகுப்பு: அதிரைநிருபர் குழு
__._,_.___

No comments: