Tuesday, July 24, 2012

ஜிகிர்தண்டா (இதயத்தை குளிர வைக்கும் பானம்)



தேவையான பொருட்கள்

பால் – ஒரு லிட்டர்

சர்க்கரை – 8 டேபிள் ஸ்பூன்

கடற்பாசி – 4 டேபிள் ஸ்பூன்

ரோஸ் சிரப் – 1 டேபிள் ஸ்பூன்

நன்னாரி ஸிரப் – 1 டேபிள் ஸ்பூன்

ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) – 1

பால் கோவா – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

* ஒரு லிட்டர் பாலை, சர்க்கரை சேர்த்து அடிகனமான வாணலியில் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் சேர்க்கவும்.

* பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் 6 மணி நேரங்கள் வைக்கவும்.

* கடற்பாசியை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை’ சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.

* குளிர்ந்த பாலை முதலில் நீளமான ஒரு கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஊற்றவும்.

* இப்போது பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும்.

* பிறகு ரோஸ் ஸிரப், நன்னாரி ஸிரப் ஊற்றவும்.

* தொடர்ந்து வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று கொடுக்கவும்.

* வெயிலில் தளர்ந்த உடலைக் குளிரவைத்து ஆனந்தத்தில் ஆழ்த்தி மனதிற்கு இதமளிக்கும் ஜில் ஜில் ஜிகிர்தண்டா தயார்.

:நன்றி:senthilvayal.wordpress.com

Engr.Sulthan

No comments: