Saturday, April 11, 2009

சிக்கியர்களுக்கு நியாயம் வழங்கிய சோனியா காங்கிரசே எங்கள் சகோதரர்களுக்கு நீதி எப்போது

அமைதி படையால் பாதிக்கபட்டனர் அன்று  சத்தமில்லாமல் சென்ற இந்திய படையினரால் பாதிக்கபடுகின்றனர் இன்று 
சிக்கியர்களுக்கு நியாயம் வழங்கிய சோனியா காங்கிரசே எங்கள் சகோதரர்களுக்கு நீதி எப்போது 
புணித கோவில்
1984 முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தி சுட்டு கொல்லபட்டார். அவரை சுட்டு கொன்றவர் அவரது பாதுகாவலர்களான சீக்கியர் இருவர். ஏன் சுட்டு கொண்றனர் சீக்கியர்களின் புணித ஸ்தலம் அவர்களின் தலைமை புனிதஸ்தலம் உலகத்தின் ராஜா வந்தாலும் பாதங்களை கழுவாமல் உள்ளே செல்ல அனுமதி இல்லை, இதற்காகவென்றே தனியாக பொற்றாமரை குளம் ஒன்று கட்டி வைத்தனர். உடலில் மட்டுமல்ல உள்ளத்திலும் அசுத்தம் இன்றி செல் , பசி இன்றி செல் என்று சொல்வது போது இலவச உணவு, தியானம் போன்றவற்றை செய்து விட்டு தங்களது புணித கோவிலுக்குள் செல்வர் சீக்கியர்கள். ஆனால் அந்த புனித கோவிலில் ஆயுதம் ஏந்திய ராணுவம் நுழைந்தது. 
600 பேருக்கு மேற்பட்டோர்
அப்போதைய காலீஸ்தான் என்னும் தனி நாடு கேட்டு போராடும் தீவிரவாதிகள் அங்கு இருப்பதாகவும், அவர்களிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும் கூறி இந்திரா காந்தி ராணுவத்தை நுழைய அணுமதித்து உத்தரவிட்டார். அன்று நடந்த மோதல்களில் 972 பேர் இறந்தனர். இதில் 600 பேருக்கு மேற்பட்டோர் பொதுமக்கள் (பஞ்சாப் கேசரி) (த டைம்ஸ் ஆப் இந்தியா) (சமாச்சார் சாகர்). அங்கு நடந்த பயங்கரம் இன்று வரை பலரது முகத்தில் தீராத சோகம். உலகம் முழுவதும் இருந்த கோடிக்கணக்கான சீக்கியர்களின் வெறுப்பு, கோபம், ஒன்றாக சேர்ந்து அனைவரது மனதில் எழுந்த ஆறாத காயமாக ஆக்கிவிட்டது. 
காயத்திற்கு மருந்து
இந்த காயத்திற்கு மருந்து போடும் விதமாகத்தான் பியாந்த சிங் இந்திராகாந்தியை சுட்டு கொன்றார். இது சீக்கிய மக்களின் கருத்து அதனால் தான் இந்தியாவிலேயே அதிக வோட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றார் பியாந்த் சிங்கின் மனைவி . ஏனேனில் பியாந்த் சிங்கின் செய்கையை பஞ்சாபியர்கள் நியாயம் என்று கொண்டனர். ஆனால் அதன் பிறகு இந்திரா காந்தியின் மரணத்திற்கு பிறகு பஞ்சாபியர்கள் நாடு முழுவதும் வேட்டையாடபட்டனர். இந்திராகாந்தியின் மரன ஊர்வலத்தின் போது சில காங்கிரஸ் தலைவர்கள் மக்களை வன்முறை கொள்ளசொல்லும் படி பேச்சு நடத்தினார்கள். இந்திராகாந்தியின் உடலில் பாய்ந்த குண்டிற்கு குண்டாலே பழிவாங்வோம் போன்ற வன்முறை பேச்சினாலும், சில உள்ளூர்காங்கிரஸ் தலைவர்களின்
ரவுடித்தனத்தாலும் டில்லியில் வன்முறை வெடித்தது இதில் 3000 சீக்கியர் இறந்தனர். கடந்த 24 வருடமாக இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் அரசு தனது ஆட்சியின் காலத்தில் வன்முறைக்கு காரணமானவர்களை காப்பாற்றியது மட்டுமல்லாது அவர்களுக்கு ஆட்சியில் பங்கு தந்து அவரகளை எம் பி பதவியில் வைத்து
செருப்படி வாங்கிய சிதம்பரம்
மகிழ்ந்தது. காரணம் சீக்கியர்கள் இந்திராகாந்தி கொலையை அடுத்து நடந்த வன்முறையை மறந்து விட்டார்கள் என்ற நினைப்பில் ஆனால் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஜர்னைல் சிங் என்ற தனி நபரால் நாங்கள் எங்கள் இனத்தின் மீது நடந்த கொடுமையை மறக்க வில்லை என்று சொல்ல வைத்தார்.
விளைவு சோனியா காந்தி , மன்மோகன் சிங், பிரணாப் முகர்சி, போன்ற பெரிய தலைவர்கள் சீக்கியரிடம் மன்னிப்பு கேட்க்கிறார்கள். ஜக்தீஷ் டைட்லர் மற்றும் சச்சன் குமார் போன்றோருக்கு சீட் கொடுக்காமல் விரட்டி விட்டு உங்களுக்கு அநியாயம் செய்தவர்களை தண்டிக்கிறோம் பாருங்கள் என்று சொல்லாமல் சொல்லில் சீக்கியர்களிடம் மன்னிப்பு கேட்கிறார்கள். இது இந்தியாவின் வடமுனையில் உள்ள ஒரு வீரம் விளைந்த மண்ணின் மைந்தர்களான சீக்கியர்களின் கதை அந்த சீக்கியர்கள் ஒன்று பட்டு போராடியதால் தங்களின் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறார்கள் ஆட்சியாளர்.. 
அகிம்சாமுறையில்
இந்திராகாந்தி இறந்த உடன் அவரது மகன் ராஜிவ் காந்தி பதவியேற்கிறார். 60 ஆண்டுகாலமாக எம் தமிழீழ மக்களுக்கு எதிராக நடக்கும் அநியாயத்தை எதிர்த்து அகிம்சாமுறையில் கேட்டவர்களை கொண்று கழித்தது சிங்கள் ராணுவம். வார்த்தையில் வராத அநியாயங்கள் செய்து கொக்கரித்தது சிங்கள ஆட்சியாளர்கள், இதனால் ஆயுதம் எடுப்பதை தவிர வேறு வழியில்லை என்று இறங்கினார்கள் விடுதலை புலிகள். அரை நூற்றாண்டுகளாக நடந்து வரும் பிரச்சனைக்கு தீர்வு காண்கிறேன் என்ற பெயரில் பல பசப்பு வார்த்தைகளை கூறி புலிகளை கட்டுபடுத்த பார்த்தார்கள்
நிரந்தர சுதந்திரமான வாழ்வே
 ஆனால் தங்களின் தீர்மானம் ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர சுதந்திரமான வாழ்வே என்ற கொள்கையில் இருந்து விலகாததால் அமைதிபடை என்று ஒரு அரக்கர் படையை அனுப்பினார் ராஜீவ் காந்தி. அந்த படை செய்த கொடுமைகள் கொஞ்சமா நஞ்சமா உலகமே தனது காதுகளையும் கண்களையும் பொத்தி கொண்டது. ஏனெனில் அங்கு சென்றவர்கள் ஹிட்லரின் நாஜி படைகள் கிடையாது. அகிம்சையின் வழியில் வந்த இந்தியாவின் ராணுவபடைகள்
அம்மா, அக்காவை வலுக்கட்டாயமாம துக்கி சென்றார்கள்
தற்போது இத்தாலியில் வாழும் மோகன் சித்திரை தாசன்  என்பவர் தனது அனுபவத்தை இவ்வாறு கூறினார்" எனக்கு வயது 13 இருக்கும் எனது அக்காவிற்கு வயது 17 அப்போது அமைதிப்படை எங்கள் ஊரின் தான் கேம்ப் போட்டு இருந்தார்கள் தினமும் இந்திய சிப்பாய்கள் எங்கள் கிராமத்திற்கு வந்து பெண்களை தூக்கி செல்வர், பல நாட்கள் எங்களின் கிராமத்தில் பெண்களின் கதறல்கள் கேட்டு கொண்டே இருக்கும் எங்கள் கிராமத்தில் உள்ள 7 ஆண்களை சுட்டு கொன்றனர். தனது மகளை தனது சகோதரியை ஏன் தூக்கி செல்கிறீர்கள் என்று கேட்டதுதான் அவர்கள் மீதான குற்றமாம். இறந்த உடன் அவர்கள் வி புலிகளுக்கு உளவு சொல்பவர்கள் என்று சொல்லி அவர்களின் உடலை புதைத்து விட்டது அவ்வாறு தூக்கி சென்ற பெண்களை என்ன செய்தார்கள் என்று இன்றுவரை எங்களுக்கு தெரியாது. அன்று எனது விட்டில் நடந்தது எனது அக்காவும் நானும் அம்மாவும் இரவு ஒரு 7 மணி அளவில் வீட்டில் உட்கார்ந்து இருந்தோம். எனது அப்பா எப்போதும் 5 மணிக்கெல்லாம் வீட்டிற்கு திரும்பி விடுவார் ஆனால் அன்று இரவு 7 ஆகியும் திரும்பவில்லை நாங்கள் கவலையுடனும் பயத்துடனும் வீட்டில் உட்கார்ந்து இருக்கையில் எங்களின் வீட்டிற்கு 5 இந்திய சிப்பாய்கள் வந்தார்கள் அவர்களுடன் எங்களின் தந்தையும் இருந்தார் அவரது முகம் முழுவது பலத்த காயம் அவரை வீட்டில் வைத்தும் அடித்தார்கள், அவரிடம் ஏதோ கேட்டார்கள் ஆனால் எனது தந்தைக்கு அவர்களின் மொழி புரியவில்லை, அதில் இருந்த ஒருவர் எனது அம்மாவிடம் உங்க புருசன் வி.புலி அதனால் தான் நாங்க அவனைவிசாரிக்கிறோம் சொல்லு இந்த வீட்டில் வி.புலிகள் வந்தார்களா என்று எனது அம்மாவை மிரட்ட 
ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் எங்கள் வீட்டை சோதனை செய்தவர்கள் எனது தந்தை, அம்மா, அக்காவை வலுக்கட்டாயமாம துக்கி சென்றார்கள். அப்போது எங்கள் வீட்டில் இருந்த ஆட்டையும் பிடித்து சென்றனர். என்னையும் ஒரு சிப்பாய் இழுத்து சென்றான் தொருவெல்லாம் கதறிகொண்டு சென்றோம் 
 
அம்மா எனது  தங்கை இருவரது கதறல் கேட்டது
ஆனால் யாரும் தட்டி கேட்க வரவில்லை, சிப்பாய்கள் கைகளில் துப்பாக்கிகளை வைத்து தெரிவில் வந்த அனைவரையும் மிரட்டி கொண்டு சென்றனர். எங்கள் அனைவரையும் ஒரு சிறிய கூடாரத்தில் கட்டி போட்டார்கள் சிறிது நேரத்திற்கு பிறகு ஒருவர் வந்து எனது தந்தையிடம் உண்மையை சொல்லிவிடு உனது 
குடும்பத்தை விட்டு விடுகிறோம் நீ விடுதலை புலிதானே என்றார் அதற்கு எனது தந்தை இல்லை நான் விவசாயி என்னை விட்டு விடுங்கள் என்று கொஞ்சினார். பின்னர் அந்த சிப்பாய் சென்ற சிறிது நேரத்தில் ஐந்து பேர் உள்ளே வந்து எனது தங்கை எனது அம்மாவை துக்கி சென்றனர். சிறிது நேரத்தில் எனது அம்மா எனது  தங்கை இருவரது கதறல் கேட்டது, எனது தந்தை என்னை கட்டி கொண்டு அழுது கொண்டு இருந்தார் சிறிது நேரத்தில் எங்கள் அறையில் வந்தவர்கள் எனது தந்தையை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர். அதன் பிறகு நான் எனது தந்தை, அம்மா, அக்காவை இன்றுவரை பார்க்கவில்லை. என்னை துப்பாக்கியால் அடித்தனர், சிறிது நேரத்திற்கு பிறகு எங்கள் ஊரில் இருந்து ஒருவரை அழைத்து வந்து இந்த பையனின் பெற்றோர்கள் விசாரனைக்காக அழைத்து செல்ல பட்டுள்ளனர் அவர்கள் விரைவில் வந்துவிடுவார்கள் இவனை அழைத்து செல் என்று சொல்லிவிட்டனர். நான் வழியியெல்லாம் எங்கள் ஊர்காரரிடம் எனது அம்மாவை, அப்பா, அக்காவை காப்பாற்றுங்கள் என்று அழுதுகொண்டு சொல்லிகொண்டே வந்தேன். 
தமிழர்களாக பிறந்தது பாவமா
இறுதியாக எனது பெரிய அம்மா என்னை அழைத்துகொண்டு நெதர்லாந்து வந்துவிட்டார். நான் மரணிக்கும் வரை எனக்கு அந்த காட்சிகள் எனது மனதை விட்டு மறையாது நாங்கள் தமிழர்களாக பிறந்தது பாவமா என்ற கேள்வி எனது மனதில் இருந்து கொண்டே இருந்தது. இன்றும் இருக்கிறது. இது ஒரு உதாரணம் அமைதிபடை சென்று இலங்கைக்கு சென்று அவிழ்த்து விட்ட நரிக்கூட்டங்கள் போல் பல குடும்பங்களை சின்னாபின்ன படுத்திவிட்டது.
அமைதிபடை தளபதி ஒப்புகொண்டார் குற்றத்தை
(இதை அமைதிபடைக்கு தலைமை தாங்கி சென்ற ஒருவர் எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார்) " பல வருத்ததக்க சம்பவங்கள் நடந்துவிட்டன அது எங்களின் கட்டளைகளையும் மீறி சில ராணுவ வீரர்கள் செய்த செயல்கள் இதற்கு யார் பொருப்பேற்க வேண்டும் என்பதை எங்களை அனுப்பிய அரசுதான் பதில் சொல்ல வேண்டும்"முன்பு போலவே உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் உள்ளத்தில் எழுந்த காயம், தந்திரமாக சில உள்வேலைகளை செய்தி ராஜீவ் காந்தியை கொலை செய்து விட்டு அந்த கொலையில் விடுதலை புலிகளின் பெயரையும் சேர்த்து தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கு ஆதரவான அலையை திசை திருப்பியது மட்டுமல்லாமல் அவர்களது அமைப்பை இந்தியாவில் தடை செய்தார்கள். 
அன்று சீக்கியரகளின் உணர்விற்கு மதிப்பளித்து மன்னிப்பு கேட்ட காங்கிரஸ் அரசும் , அதன் தலைவி சோனியா காந்தியும் பல்லாயிரம் எங்கள் தமிழ் சகோதர சகோதரிகளின்  வாழ்க்கையை சூரையாடிய, ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய அரக்கர்படை நடத்திய கொடுமைகளுக்கு எப்போது மன்னிப்பு கேட்பார்கள். சீக்கியர்கள் ஒற்றுமையானவர்கள் அவர்களின் கோபம் கட்டுக்கு அடங்காதது என்று அவர்களது இனத்தவர்களை பிரதம மந்திரியாக்கி அவர்களின் காயங்களுக்கு மருந்து போடும் சோனியா காங்கிரஸே எங்களது சகோதரர்களின் குடும்பங்களுக்கு செய்த கொடுமைகளை எத்தனை வருடம் மூடி மறைக்கப் போகிறாய், தமிழர்கள் ஒற்றுமை அற்றவர்கள் அவர்களின் சுரனை அற்றவர்கள் என்ற ஒரே நினைப்பில் தானே கடந்த 20 வருடங்களான இந்த கொடுமைகளை குப்பை காரணங்களை கொண்டு மறைத்துவைத்தாய் தமிழினத்திற்கு செய்த கொடுமைகளுக்கு காங்கிரஸ் சோனியாவே எப்போது தீர்வு கூறுவாய்
செறுப்பால் அடிக்காமல் கூட்டம் போட்டல் கூடி வந்து கைதட்டுகிறானே என்ற எகத்தாளமா??
உங்களது கொடுமைகளை தட்டி கேட்ட சீமான் அண்ணா, ஐயா கொளத்தூர் மணி ,நாஞ்சல் சம்பத போன்றவரகளுக்கு இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்று சொல்லி தேசிய பாதுகாப்பு சட்டம் போடுகிறாயே.
லட்சக்கணக்கான அப்பாவி குடும்பங்களை கொண்று கூறுபோட்டு உலகிற்கு தெரியாமல் புதைத்த ராஜபக்சே குடும்பத்தார்க்கும், அவரக்ளுக்கு துணை நின்ற சோனியா த‌லைமையினால் ஆன காங்கிரஸ் தலைவர்களுக்கும், அவர்களின் செயலுக்கு சாமரசம் வீசி விடும் தமிழக தலைவர்களுக்கு  என்ன தண்டனை கொடுக்க
மும்பை சரவணா
 
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum


No comments: