Thursday, November 3, 2011

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் ரோமன் கத்தோலிக்ககிறிஸ்தவ கன்னியாஸ்திரி!

கட்டுரைப் பற்றிய சிறு குறிப்பு:

- இது முன்னாள் ரோமன் கத்தோலிக்ககிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன்இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோதொகுப்பிலிருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.
வீடியோ வெளியீட்டாளர் : Truth Vision World wide

நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவகன்னியாஸ்திரி Irena Handono

நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச்சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றிபயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழுசெலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக்கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள்இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின்அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.
பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த “Liaision Maria” என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன்.

Maria என்பது ஈஸா (அலை)அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்தநிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் “Stray Sheeps”என்று சொல்லப்படக் கூடிய “காணாமல் போன ஆடுகளை”தேடுவதாகும். “காணாமல் போன ஆடுகள்” என்று அவர்கள்குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹாபெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளைஅல்ல. மாறாக “காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள்குறிப்பிடுவது, “கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை”. அதாவதுஇந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்றமுஸ்லிம்களை அவர்கள் “காணாமல் போன ஆடுகள் என்றுகுறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒருமிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக்கொண்டிருக்கிறது.
ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிகஅளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின்தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒருகிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.
சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்றஎண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான்கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம்நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடையஎண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடையஅடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.
பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான்மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப்படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால்உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிகமோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

“இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால்இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்” என்றுஎங்களுக்கு விளக்கினார்கள்.
இந்தோனேசியாவில்,
- ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? -இஸ்லாம்
- முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? -இஸ்லாம்
- வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளைதொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்
- ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம்என்ன? - இஸ்லாம்
- தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? -இஸ்லாம்
இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடையநன்பர்கள் அனைவரும் “இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமானமதம்” என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில்நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானதுஎன்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான்அவர்களிடம், “நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது,மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்”என்று கூறினேன்.

உதாரணமாக,
பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும்,படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடையமதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்ககிறிஸ்தவர்கள்.
மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும்,திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும்,சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூடஇஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்ககிறிஸ்தவர்கள்!
அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப்பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில்,சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒருமுஸ்லிம் கூட இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்கமற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான்.அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலைசெய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை “அயர்லாந்தின்தீவிரவாதிகள்” என்று கருதுகிறது. அவர்கள் “ஐரோப்பியதீவிரவாதிகள்” என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.
இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள்,சூதாட்டக்காரர்கள் - இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர்.அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.
அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், “இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே”கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை,இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒருகோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, “நான் இஸ்லாத்தின்பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்” என்றகட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.
நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக “இறைவன்ஒருவனே! ஒரே ஒருவன் தான்” என்று வலியுறுத்தியது. அது நான்கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற “திரித்துவக் கடவுள்கொள்கைக்கு” (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது.ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்),இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோதேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார்அவர்கள் போதித்த போது “கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில்இருக்கிறார் (திரித்துவம் - Trinity) என்று போதித்தார். அதனால் அந்தஇரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது.என் ஆழமான உள் மனது “இறைவன் ஒருவனே! என்றும் மேலும்இது (குர்ஆன்) உண்மையானது தான்” என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடையபாதிரியாரிடம், விவாதித்தேன்.
“கடவுளின் திரித்துவக் கொள்கை” (Trinity of God) என்பது பற்றி எனக்குசரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.
கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின்திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல்இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும்ஆச்சரியமடைந்தார்.
அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார்.பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார்என்று கூறினார்.
அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்.எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம்.எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்கசாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்றுகேட்டேன்
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ”இதற்குசாத்தியமே இல்லை” என்று கூறினார். அதற்கு நான், இதுசாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தைவரைந்தேன். முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப்போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners)இருக்கின்றனவே என்று கூறினேன்.
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ‘முடியாது’ என்றுகூறினார். முன்பு ‘இதற்கு சாத்தியமே இல்லை’ என்று கூறிய அவர்,தற்போது ‘முடியாது’ என்று மட்டும் கூறினார்.
நான் கேட்டேன், ஏன்?

அதற்கு பாதியார், ‘இது நம்பிக்கை’. நீ புரிந்துக் கொண்டாயோஇல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதைவிழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே!கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள்எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்விகேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.
இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவுகுர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம்எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக்குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்யவிரும்பினேன்.
ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ‘இந்த மேசைகளைஉருவாக்கியது யார் என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்கவிரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.
அதற்கு நான் ‘ இந்த மேசைகளை உருவாக்கியது “தச்சர்கள்” (Carpenters) என்றேன்.
ஏன்? - பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்குமுன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்குமுன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும்மேசைகளாகவே இருக்கின்றன. இந்த மேசைகள் எப்போதும்“தச்சார்களாக” (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசைகூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.
நீ என்ன சொல்ல வருகிறாய்? - பாதிரியார் கேட்டார்.
அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்படஉயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளேபடைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால்அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவேஇருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவேதான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்கமுடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.
அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில்உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்துஅவரை தங்களின் “ஜெனரலாக” தேர்தெடுத்தால் அந்த தேர்வுசெல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரைதேர்வு செய்திருப்பினும் சரியே!
நீ என்ன சொல்ல வருகியாய்? - பாதிரியார்

அதற்கு நான், “மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ளஅனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால்அந்த தேர்வு செல்லாதது” என்று நான் அந்த பாதிரியாரிடம்விளக்கினேன்.
பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான்என்னுடைய பாதிரியாரிடம், “என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும்,மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம்ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்”என்று கூறினேன்.
இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்தபாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.
பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தைவலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தைதழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவமதத்தைச் சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போதுஇந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்றஅமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமியஅழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.
அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.

வீடியோ இணைப்பு : நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - �

No comments: