Wednesday, July 13, 2011

வழக்கொழிந்த சில தமிழ் வார்த்தைகள் - இணையத்தில் இருந்து......

அங்கதம் - மரபுகளை, பழக்க வழக்கங்களை கிண்டல் செய்தல்
அஞ்சனம் - கண்ணில் தீட்டிக் கொள்ளும் மை
ஆதனம் - சொத்து
ஆரம் - மாலை
ஆலிங்கனம் - தழுவுதல்
இடாப்பு - பதிவேடு
இரண்டகம் - நம்பிக்கைத் துரோகம்
ஈடாட்டம் - உறுதி குலைதல்
ஈனம் - இழிவு, கேவலம்
உத்தரீயம் - மேலாடை
உற்பாதம் - தீய விளைவு
ஊடு - பொய்க்கோபம் கொள்ளுதல்
ஊசு - பதம் கெட்டுப்போதல்
எத்தனம் - முயற்சி
எதேஷ்டம் - தேவைக்கு அதிகம்
ஏகாலி - சலவைத் தொழிலாளி
ஏனம் - பாத்திரம்
ஐது - அடர்த்திக்குறைவு
ஐமிச்சம் - சந்தேகம்
ஒக்கிடு - பழுது பார்த்தால்
ஒழுகலாறு - பழக்க வழக்கம்
ஓந்தி - ஓணான்
ஓம்பு - பேணுதல்
ஔஷதம் - மருந்து
இனி உயிர்மெய் எழுத்துக்களில் தொடங்கும் வார்த்தைகள்..
கச்சு - பெண்கள் மார்பில் அணியும் துணி
கபோலம் - கன்னம்
சண்டமாருதம் - பெரும் காற்று, சூறாவளி
சதிபதி - தம்பதி
ஞாலம் - பூமி
டாம்பீகம் - ஆடம்பரம்
தசம் - பத்து
தந்துகி - மிக நுண்ணிய ரத்தக்குழாய்
நயனம்- கண்
நிகண்டு - அகராதி நூல்
பத்தாயம் - எலிப்பொறி
பரதவர் - மீனவர்
மதலை - குழந்தை
மாச்சரியம் - பகைமை
யாக்கை - உடல்
ரோகம் - நோய்
லோபி - கருமி
வயணம் - சரியான விவரம்
விகசித்தல் - மலர்தல்
வைரி - எதிரி

சூதானம் - பத்திரம்
வெஞ்சனம் - சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ளும் பதார்த்தம்
முக்கு - தெரு முடியும் இடம்
வெங்கப்பய - உருப்படாதவன்
சொளகு - முறம்
சோப்ளாங்கி - சோர்ந்து போனவன்
மெனா - பைத்தியம் போல் இருப்பவன்
தளை - கட்டு, கைவிலங்கு
தடாகம் - குளம்
அன்னம் - சாதம்
தொன்மை - பழமை
இலக்கம் - எண்
வைக்கப்படப்பு- வைக்கோல் சேமித்து வைக்கும் இடம்

கொச்சக்கயிறு _ தென்னை நாரினால் பின்னிய கயிறு

சட்டகப்பை - தோசை திருப்பும் கரண்டி

கருக்கல் - மாலை மயங்கிய வேளை

ஆச்சி - அப்பாவின் அம்மா.

இப்படி, மறந்தும் மறைந்தும்போன வார்த்தைகளும், வாழ்க்கைமுறைகளும் எத்தனை எத்தனையோ...
அன்றைய நெல்லை மாவட்டப் பகுதிகளில், வசவுச்சொற்கள் பல வழக்கில் இருந்தாலும் ரொம்பவும் வித்தியாசமாக, நாசமத்துப் போறவனே/வளே என்ற வார்த்தை என்னை மிகவும் கவந்ததுண்டு. நாசமாய்ப்போ என்று சபிப்பதை விடுத்து, நாசம் + அற்றுப் போ, அதாவது "அழிவில்லாமல் இரு" என்று சபிப்பதுபோல வாழ்த்துவது இந்த வார்த்தை. எத்தனை அருமையான நாகரிகம் பாருங்கள்...

ஆக, நாசமத்துப்போற மக்கா, மறந்துபோன நல்லதெல்லாம் மறுபடியும் நினைவில்கொண்டு நல்லதமிழை எல்லாரும் பேசிடுவோம்.

(இப்போதைக்கு இது போதும்.. )


Engr.Sulthan

No comments: