Friday, October 26, 2012

T Azeez Luthfullah
Dr Abdul Huq Ansari, K. S. Sudarshan and an inspiring insight
Posted: 24 Oct 2012 12:28 AM PDT


Dr Abdul Huq Ansari

The following is the translation of the article written by Parvaz Rahmani in Dawat dated 8-10 October2012 issue. It conveys an inspiring insight.

டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி(ரஹ்)
டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி 1931-இல் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போல சின்ன வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராய்த் திகழ்ந்தார். மார்ககப் பற்றும் சமூகத் தொண்டார்வமும் நிறைந்தவராய் மிளிர்ந்தார். இதனால் மாணவப் பருவத்திலேயே இஸ்லாமிய இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். வசதி வாய்ப்பு இல்லாத நிலையிலும் தன்னுடைய கடின உழைப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம், ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் கல்லூரிப் படிப்பை முடித்தார். மேலும் படித்தார். முன்னேறிக் கொண்டே போனார். தர்ஸ்காஹ் இஸ்லாமியில் ஆலிம் பட்டம் பெற்றார். தொடர்ந்து அரபி மொழியில் இளங்கலைப் பட்டமும் ஃபிலாஸஃபியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். தொடர்ந்து அதே துறையில் பி.ஹெச்.டி பட்டமும் பெற்றார். அதற்கடுத்து அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் எம்.டி.எஸ் பட்டமும் பெற்றார். எந்த மார்க்கப் பற்றுடனும் சமூகத்தொண்டார்வத்துடனும் அவர் மாணவப் பருவத்தில் தன்னை இஸ்லாமிய இயக்கத்தில் இணைத்துக் கொண்டாரோ அந்த பற்றும் ஆர்வமும் அதிகமாகிக் கொண்டே போனது. அவர் சார்ந்த இயக்கமும் வளர்ந்து கொண்டே போனது. இறுதியில் அவர் அந்த இயக்கத்தின் அகில இந்திய தலைமைப் பொறுப்பை ஏற்றார். நான்காண்டுகள் அந்தப் பொறுப்பை வகித்த பிறகு அவர் 2007-இல் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். அதன் பிறகும் இயக்கத்திற்கான நூல்களை எழுதி வெளியிடுகின்ற பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். இதே நிலையில் அவர் தன்னுடைய 81-ஆவது வயதில் 2012 அக்டோபர் 13 ஆம் தேதியன்று தான் வாழ்நாள் முழுவதும் ஏற்று வந்த நம்பிக்கையிலும் கோட்பாட்டிலும் முழுமையான திருப்தி உள்ள நிலையில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அவருடைய தோழர்களும் உறவினர்களும் அளவற்ற அன்புடனும் வாஞ்சையுடனும் அவரை நல்லடக்கம் செய்தனர்.

மற்றும் கே.எஸ். சுதர்ஸன்
கே.எஸ். சுதர்ஸனும் 1931-இல் பிறந்தார். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பதைப் போல சின்ன வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராய்த் திகழ்ந்தார். வசதி வாய்ப்பு இல்லாத நிலையிலும் தன்னுடைய கடின உழைப்பு, கட்டுக்கடங்காத ஆர்வம், ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் படிப்பில் முன்னேறிக் கொண்டே போனார். நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்கிற உணர்வு அவருக்குள் மிகைத்திருந்தது. இதனால் இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தேசபக்தி முழக்கங்களால் கவரப்பட்டு அதன் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். படிப்பும் தொடர்ந்தது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் பி.ஈ பட்டமும் தங்கப் பதக்கமும் பெற்றார். நாட்டுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்பதற்காக அவர் எந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தாரோ அந்த அமைப்பின் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் நடை முறைப்படுத்துவதில் முனைப்புடன் மும்முரமாகச் செயலாற்றி வந்தார்.ஒரு கட்டத்தில் அதன் உச்சக்கட்ட பொறுப்பை சர்சங்சாலக் - அகில இந்தியத் தலைவர் பொறுப்பையும் ஏற்றார். ஒன்பது ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் இருந்த பிறகு 2009-இல் அந்தப் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால் பதவி விலகியதிலிருந்து எந்த இயக்கப் பணியிலும் ஈடுபடாமல் வாசிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். 15 செப்டம்பர், 2012 அன்று அவர் தன்னுடைய 81-ஆவது வயதில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். ஆனால் தன்னுடைய இறப்புக்கு இருபத்தேழு நாள்களுக்கு முன்பு அவர் தொடர்பாக வெளியான செய்தி ஒன்று பல்வேறு ஊகங்களுக்கும் எண்ணங்களுக்கும் வித்திட்டது. 20 ஆகஸ்ட் 2012 அன்று பெருநாள் பண்டிகையின் போது போபாலில் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வதற்காகவோ (அல்லது முஸ்லிம் சகோதரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்கோ) அவர் தாஜுல் மஸாஜித் பள்ளிவாசலுக்குப் போக விரும்பினார்.

இருவருக்குமிடையில் இருக்கின்ற ஒற்றுமை சுவையானது...! இருவரும் சந்தித்த முடிவோ முற்றிலும் மாறுபட்டது..!
இவ்விரு தலைவர்களின் வாழ்வில் சில விஷயங்களில் காணப்படுகின்ற ஒற்றுமை சுவையானவை. இவ்விருவருமே முற்றிலும் மாறுபட்ட நேர் எதிரான இயக்கங்களில் தம்மை வாழ்நாள் முழுவதும் இணைத்துக் கொண்டிருந்தனர். இருவருமே தாம் சார்ந்திருந்த இயக்கத்தின் அகில இந்தியத் தலைமைப் பொறுப்பை ஏற்கின்ற அளவுக்கு வளர்ந்தனர். ஆனால் இருவரின் இறுதி முடிவில் அடிப்படையான வேற்றுமையைப் பார்க்க முடிகின்றது. டாக்டர் அப்துல் ஹக் அன்சாரி அவர்களுக்கு தம்முடைய நம்பிக்கையிலும் கோட்பாட்டிலும் முழுமையான மனநிறைவு இருந்தது. அவை தொடர்பான எண்ணத் தெளிவுடனும் முழுமையான திருப்தியுடனுமே அவர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். அவருக்கு ஒரே ஒரு மனக்குறை இருந்திருக்க வேண்டும். இயக்கத்திற்கான நூல்களை எழுதித் தர வேண்டும் என்கிற தன்னுடைய நாட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாத குறை மட்டுமே அவரை வாட்டியிருக்க வேண்டும். அதற்கு நேர் மாறாக, சுதர்ஸன் அவர்கள் தம்முடைய கடைசி காலத்தில் ஒருவிதமான வேதனைக்கும் கவலைக்கும் ஆளாகி இருந்தார். குறைந்தபட்சம் இஸ்லாத்தைக் குறித்தும் முஸ்லிம்களைக் குறித்தும் தான் கொண்டிருந்த நிலைப்பாடு குறித்து அவர் பெரிதும் அதிருப்தியுற்றவராய், அதனை மீள்பார்வை செய்கின்றவராய் இருந்துவந்திருக்கின்றார். அவருடைய தோழர்கள் சொல்வதைப் போல் அவருடைய மனநிலை சரியில்லாமல் போய்விட்டது என்பதை சரி என எடுத்துக் கொண்டாலும் அவருடைய உள்மனத்துக்குள் ஏதோவொன்று நடந்திருக்க வேண்டும். அதுதான் அவரை தாஜுல் மஸாஜித் பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்லத் தூண்டியிருக்க வேண்டும். 16 செப்டம்பர், 2012 தேதிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் வெளியான செய்தியில் அவர் திருக்குர்ஆனை ஆழ்ந்து வாசித்து வந்தார் என்கிற தகவல் இடம் பெற்றுள்ளது.

எது எப்படியோ இந்த இரண்டு ஆளுமைகளின் வாழ்வில் எது நடக்க வேண்டுமோ அது நடந்து முடிந்துவிட்டது. இனி ஆகப் போவதைத் தீர்மானிக்கின்ற அதிகாரம் இறைவனின் கையில்..!
பர்வேஸ் ரஹ்மானி
தமிழில் டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

தஅவத் 8-10 அக்டோபர் 2012 இதழ்
happy eid mubarak
ஏக இறைவனின் திருப்பெயரால்...
>
> அரஃபா நாள் நோன்பு
>
>
> துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள்.
> அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர்.
>
>
>
> அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளது. ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள்
> அரஃபா நாளில் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
>
>
>
> அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த
> வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
> அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977.
>
>
>
> அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள்
> நாயகம்(
> ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:
> இப்னுமாஜா172
>
>
>
> அரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அதை நடைமுறைப்
> படுத்தினார்களோ அவ்வாறு தான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
>
>
>
> அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு
> ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரிக்க எந்த
> ஏற்பாடும் செய்யவில்லை.
>
>
>
> அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில் காணப்பட்ட
> பிறையின்படி ஒன்பதாம் நாள் நோன்பு நோற்றார்கள். மக்காவில் பிறை காணப்பட்டவுடன்
> அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ள வசதிகள் இருந்தும் நபிகள் நாயகம் (
> ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.
>
> எனவே சவூதி அரேபியாவில் அரஃபாவில் தங்கும் நாள், நாம் பிறை பார்த்த கணக்குப்
> படி எட்டாம் நாளாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்றத் தேவையில்லை. அதற்கு
> நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நாம் பிறை பார்த்த கணக்குப் படி ஒன்பதாம்
> நாளில் நோன்பு நோற்க வேண்டும்.
>
>
>
>
>
>
>
>
>
> அதனடிப்படையில் தாயகத்தில் வியாழன் இரவு ஸகர் செய்து வெள்ளி அன்று நோன்பு நோற்க
> வேண்டும் நீங்களும் நோன்பு நோற்று, உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும்
> நோன்பு நோற்க ஆர்வமூட்டுங்கள் அல்லாஹ் அருள்புரிவான்.
>

Monday, October 22, 2012

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

பேரீச்சம் பழத்தின் பலன்கள்!

பூமிக்கு நிறமும் அழகும் சேர்ப்பவை தாவரங்கள் தாவரங்களும் புல் பூண்டுகளும் இல்லாத ஒரு பூமி எவ்வாறு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள் மிகவும் கொடுமையான உஷ்ண மிகுதியாகவும், மறைந்து கொள்ள நிரந்தர மரங்களே இல்லாமல் விலங்கினங்களும் மனிதனும் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கும். அத்தகைய பெருமை வாய்ந்த தாவரங்கள் பூமிக்கு குளிர்ச்சியூட்டி பூமிக்கு பெருமை சேர்க்கின்றன. அத்தகைய தாவர இனத்திற்கே பெருமை சேர்ப்பவை பேரீச்சம்பழங்கள்.

மனிதன், முதன் முதலாக பயிரிட ஆரம்பித்த ஒரு சில தாவரங்களுள் முதன்மையானது பேரீச்ச மரங்களாகும்.

சுமார் 8000 ஆண்டுகளுக்கு முன்னதாக மெசபடோமியா பகுதியில் வாழ்ந்த மனிதன் முதலில் இம்மரங்களை பயிரிட ஆரம்பித்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன. அகழ்வாராய்ச்சிகளிலும் பாறைப் படிவங்களிலும் பேரீச்சம் மரம், இலை, காய்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முகமது நபி அவர்கள் பேரீச்சம் பழத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது கடவுள் முதல் மனிதனான ஆதாமை மண்ணிலிருந்து உருவாக்கினார். அந்த மண்ணின் மீதியிலிருந்து பேரீச்சம் பழங்களை உருவாக்கினார் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆரம்பத்தில் மெசபொட்டேமியா எகிப்து ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டு வந்த பேரீச்சம்பழம் பிற்காலங்களில் தான் பல நாடுகளுக்கும் பரவியுள்ளது. 1765க்கு பின்னர் தன் அமெரிக்க தீவுகளில் பயிரிடப்பட்டு உள்ளது. ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளாக அரேபிய பாலைவனங்களில் பயிரடப்பட்டு வந்துள்ளது. பாலைவனங்களில் பிரயாணம் செய்யும் பிரயாணிகளுககு தாகத்தை தீர்த்திடும் பழமாக திகழ்ந்துள்ளது.

அரபு நாட்டவர்களுக்கு பிரதான பழமாக விளங்கும் பேரீச்சம்பழம் இந்தியர்களும் ஒரு முக்கியமான பழமாகும் நம்மில் பலரும் ஏதோ சுவைக்காகவோ அல்லது அதிகமான விளம்பரத்திற்காகவோ அல்லது சாப்பிட வேண்டுமே என்று அதன் மருத்துவ குணங்களும் நன்மைகளும் தெரியாமலேயே அதனை சாப்பிட்டு வருகிறோம். பேரீச்சைகளில் அதன் சுவையை விடவும் அதிக நற்பலன்களும் மருத்துவ குணங்களும் நிரம்பியுள்ளன.

பேரீச்ச மரங்கள் மிகவும் பசுமையானவை மிகக் குறைந்த நீரில் இருந்தாலே உயிர் வாழக் கூடியவை. அதே சமயம் ஒரு ஹெக்டேருக்கு அதிக மகசூல் தரக்கூடிய மரங்களுள் முதன்மையானதும் பேரீச்சமரங்களேயாகும். ஒரு ஆண்டின் உலக பேரீச்சம்பழ உற்பத்தி சுமார் முப்பது லட்சம் டன் ஆகும்.

பேரீச்சம்பழங்கள் மிகவும் சத்தானவை, உடலுக்கு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிப்பவை. ஒரு கிலோ பேரீச்சம்பழம் சுமார் 3000 கலோரிக்கும் அதிகமான எரி சக்தியை தரக்கூடியது.

இது பிற உணவுகளையும் பழங்களையும் விட பல மடங்கு அதிகமானதாகும். இதில் மாவுச்சத்து பல விதமான சர்க்கரை ரகங்களாகக் காணப்படுகிறது. குளூகோஸ் ஃப்ரக்டோஸ்களாக பிரிக்கக் கூடிய மாவுச்சத்துக்கள் அடங்கியுள்ளது. சில ரகங்களில் முழுவதுமே மாவுப்பொருட்கள் உடல் எளிமையாக எடுத்துக் கொள்ளக் கூடிய விதத்தில் கிடைக்கின்றது. இத்தகைய பழங்களை உட்கொள்ளும் பொழுது உடல் அதிக சக்தியை எளிமையாக பெற்றிட முடியும்.

பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் மெக்னீசியம் காணப்படுகின்றது. (600மி.கி. 1 கிலோ பேரீச்சம்பழத்தில்) இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது பேரீச்சம்பழத்தை ஒரு நுண்ணூட்டச்சத்து சுரங்கம் என்றே அழைக்கலாம். ஏனெனில் அதில் எண்ணற்ற நுண்ணூட்டச்சத்துக்களும், தாதுப்பொருட்களும் உள்ளது.

பேரீச்சம்பழத்தை எரித்து சாம்பலாக ஆக்கி அந்த சாம்பலில் என்ன என்ன உலோகங்கள் தாதுப்பொருட்கள் உள்ளன என கண்டறிந்ததில் கீழ்க்கண்டவை இருப்பது தெரியவந்துள்ளது.

பொட்டாசியம்-50%, குளோரின்-15%, பாஸ்பரஸ்-8%, கால்சியம்-5%, இரும்பு-0.25%, மெக்னீசியம்-12% சல்பர்-10%.

மருத்துவ குணங்கள்
எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், உடனடி சக்தி தரும் ஊட்ட உணவு ஆகும். தொடர்ந்து பேரீச்சம் பழம் உண்பவர்களுக்கு வயிறு, குடல் நோய்கள் குணமடையும். வயிற்றில் உள்ள தூண் கிருமிகள் வெளியேறும். அதிக நார்ச்சத்து கொண்டதால் மலத்தை இளக்கி மலச்சிக்கலை போக்கிடும். ஆண்மை சக்தியையும் பெண்மை சக்தியையும் பெருக்கிடும்.

பெண்களுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்திட உதவும். இரத்த சோகையை தவிர்த்திடும். நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம். பழங்களை இரண்டாக நறுக்கி தேனில் ஊறப்போட்டு வைத்துக் கொண்டு தினசரி இரவு உண்ணலாம். பிற உணவுகளில் இனிப்பு சுவைக்காக பேரீச்சம் பழங்களை அரைத்து கலந்து உபயோகிக்கலாம். பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வர எடை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.

மலச்சிக்கல் நீங்கிட இரவு 5 பழங்களை நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைத்து அதிகாலையில் அதனை மசித்து பழரசமாக பருகலாம். குழந்தைகளுக்கு பேதி நீங்கிட ஒரு பேரீச்சம்பழத்தை ஒரு தேக்கரண்டி தேனில் சேர்த்து அரைத்து கொடுக்கலாம்.

பேரீச்சம்பழங்களை பெரும்பாலும் திறந்த வெளிகளில் உலர வைப்பதால் அவற்றில் அதிகளவு தூசி படிந்திருக்கும். எனவே அவற்றை நன்கு சுத்தம் செய்து உண்பது மிக அவசியம். பேரீச்சம்பழங்கள் மிக அதிக சர்க்கரை கொண்டவை எனவே, அவற்றை சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு உடையவர்கள் உண்பதை அவசியம் தவிர்த்திட வேண்டும்.

சமையல் முறைகள்
பேரீச்சம்பழ கேசரி
தேவை
பேரீச்சம்பழம்-10
டூட்டி புரூட்டி-50கிராம்
ரவை-1கப்
சீனி-2கப்
தண்ணீர்-2கப்
வென்னிலா எசன்ஸ்-1டீஸ்பூன்
முந்திரி, கிஸ்மிஸ்-1/2கப்
நெய்-2டே.ஸ்பூன்
எண்ணெய்-தேவையான அளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் விட்டு சீனியை போட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும். பிறகு அதனை கொதிக்க வைக்கவும். கொதி வந்தவுடன் அதில் பேரீச்சம்பழம், டூட்டி புரூட்டி, முந்திரி, கிஸ்மிஸ் போன்றவற்றை போட்டு பின்னர் அதில் ரவையை போட்டு கிளறவும். இடையிடையே சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி ரவை நன்றாக வெந்து கேசரி பதத்திற்கு வந்தவுடன் எசன்ஸ் ஊற்றி கிளறவும்.

பேரீச்சம்பழ பானம்
தேவை
பால்-250மி.லி.
தேன்-2டீஸ்பூன்
குங்குமப்பூ-சிறிது
ஏலக்காய்-2

செய்முறை
பாலை நன்றாக காய்ச்சி வைத்துக் கொண்டு அதில் பேரீச்சம்பழத்தை நன்றாக சுத்தம் செய்து சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு ஊற விடவும். அதில் குங்குமப்பூ மற்றும் ஏலக்காயைப் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த அரைத்த விழுதை சூடான பாலில் கலந்து விடவும்.


பேரீச்சம் பழ சூப்
தேவை
பேரீச்சம் பழம்-5
வெள்ளரிக்காய்-1
கேரட்-2
தேங்காய்-2கீற்று
புதினாஇலை-5
மிளகு-2
பச்சைமிளகாய்-1
கொத்தமல்லி -சிறிது

செய்முறை
வெள்ளரிக்காய், கேரட், பச்சைமிளகாய் முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து தேவையான தண்ணீர் கலந்து கொதிக்க விடவும், கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

பேரீச்சம் பழ அல்வா
தேவை
விதையில்லாத பேரீச்சம் பழம்-200கிராம்
சீனி-200கிராம்
பால்-100மிலி
நெய்-100கிராம்
ஏலக்காய் பொடி அல்லது எசன்ஸ்-1/2டீஸ்பூன்
முந்திரி-சிறிது

செய்முறை
பேரீச்சம் பழத்தை பால் ஊற்றி குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். பின்னர் இதனை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் சீனி கரையும் அளவு சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து பிசுக்குப் பதம் வரும் பொழுது அரைத்த பேரீச்சம் பழ விழுதைச் சேர்த்துக் கிளறவும். நடுவில் நெய் சேர்த்துக் கிளறவும். அல்வா பதம் வந்தவுடன், ஏலக்காய் பொடி அல்லது ஏதாவது ஓரு எஸன்ஸ், முந்திரி சேர்த்து இறக்கவும்.


பேரீச்சம் பழ ஜுஸ்
தேவை
பேரீச்சம் பழம்-50கிராம்
எலுமிச்சம்பழம்-1
உப்பு-1சிட்டிகை
சீரகத்தூள்-சிறிது
இஞ்சி-1துண்டு

செய்முறை
பேரீச்சம் பழத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். இஞ்சியை தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ளவும். பேரீச்சம் பழத்தையும், இஞ்சியையும் பேரீச்சம் பழம் ஊற வைத்த தண்ணீர் சிறிது சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் மீதியுள்ள ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின் எலுமிச்சம் ஜுஸ், உப்பு, சீரகத்தூள், ஐஸ் கட்டிகள் சேர்த்து கலக்கி பருகவும்.
பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலைத் தடுக்கும். இரத்த சோகையை தீர்க்கும்.


பேரீச்சம் பழ மில்க் ஷேக்
தேவை
பால்-250மி.லி
பேரீச்சம்பழம்-50கிராம்
குங்குமப்பூ- சிறிது
ஏலக்காய்-2
ஐஸ் க்யூப்-சிறிது

செய்முறை
பாலை காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும். பேரீச்சம்பழத்தில் கொட்டையை எடுத்து விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். நறுக்கிய பேரீச்சம் பழத்தில் காய்ச்சிய பாலை ஊற்றி உற விடவும். ஊறிய பேரீச்சம் பழத்துடன் குங்குமப்பூவைச் சேர்த்து அரைக்கவும். அரைத்த விழுது, பால், ஏலக்காய், ஐஸ் க்யூப் முதலியவற்றை மிக்ஸியில் போட்டு ஒரு அடி அடித்து ஜில்லென்று பருகவும்.
ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.

சளி இருமலுக்கு:
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சதீ

Sunday, October 21, 2012

Be Careful while you are in Makkah these days.



A friend of mine "Khalid". Two days ago he went to Makkah in his private car to visit his friend. He is a resident and not Saudi and his friend just came for Hajj only and stayed in hotel. Khalid sit with him for a while next to hotel then he took him by his car to have a round and eat together. They finished their meal and back to hotel. On the way to hotel and while driving the car, a policeman stopped them in check point, this is a normal in Makkah particularly these days in Makkah due to Hajj seasion. The policeman requested Khalid & His friend to present their ID 's, he showed his Iqama and his friend showed his Hajj card. Then the policeman accused Khalid that he is doing taxi business and Khalid tried to convince him that they are friends but no way. The policeman insisted to take him and his car into Jail. The policeman told him that we will send you back to your country but AlHamdulellah after severe attempt the policeman took the car only and released Khalid. And now it is so difficult to release his car.



However these days in Makkah there is a committee to search for those who are using their own cars as taxi regardless of thier nationality. Please be careful even if you are not doing a taxi business.

Saturday, October 20, 2012

To: Kaniyur Abdulrahman







The killer, Faisal al-Ameri, kisses the forehead of Rabi’a al-Dousary, the father of the young man he killed. (Photo courtesy al-Yawm newspaper)


By AL ARABIYA

A Saudi father pardoned his son’s killer if he successfully memorized the Holy Quran, a local newspaper reported on Saturday.

Rabi’a al-Dousary, father of the slain young man named Abdullah, promised to pardon the convicted felon, Faisal al-Ameri, if he successfully memorized all of the Holy Quran before leaving prison, al-Yawm Saudi newspaper reported.

Ameri was sentenced to death for killing Dousary during a quarrel that erupted in their neighborhood.

The Higher Committee of Correction in the Eastern Province of the Kingdom has persuaded the father to forgive and pardon Ameri.

The father, who refused to receive any blood money, to teach the Ameri a far more valuable lesson, insisted on one condition: the killer to fully memorize the Quran before his acquittal from prison.

http://ping.fm/UeN5W
போக்குவரத்தில் போவதற்கோ உயிர்கள்?.By சக்திவேல் மயில்சாமி



First Published : 19 October 2012 01:21 AM IST

.



வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயத்தில் தேசிய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறது தமிழகம். வருத்தப்பட வேண்டியது தமிழகம் மட்டுமல்ல; அதே விஷயத்தில் உலகளவில் முதலிடம் பிடித்திருக்கும் இந்தியாவும்தான்.



உலகளவில் விபத்துகளால் அதிகம் பேர் இறப்பது இந்தியாவில்தான். இரண்டாம் இடம் சீனாவுக்கு. அடுத்தடுத்த இடங்களில் அமெரிக்கா, ரஷியா, தென் ஆப்பிரிக்க நாடுகள் உள்ளன. இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடத்துக்கும் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழக்கிறார்.



தேசிய குற்றச்சம்பவங்கள் ஆவணப் பதிவக (என்சிஆர்பி) புள்ளிவிவரத்தின்படி, 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் சாலை விபத்துகளில் மட்டும் உயிரிழந்தவர்கள் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 72 பேர். இதில் ரயில் சார்ந்த விபத்துகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 834 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்.



இந்தியாவில் தினமும் 375 மனித உயிர்களைச் சாலை விபத்தில் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். கனரக வாகன விபத்தில் தினமும் 73 பேரும், இருசக்கர வாகன விபத்தில் 84 பேரும் உயிரிழக்கின்றனர். இவ்வாறு உயிரிழப்பவர்களில் 5 - 29 வயதுக்கு உள்பட்டவர்களே அதிகம்.



இந்தப் புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தின் நிலையும் கவலைக்குரியதாகவே இருக்கிறது.



2011ஆம் ஆண்டில் தமிழகத்தில் சாலை விபத்துகளில் 15 ஆயிரத்து 422 பேர் இறந்துள்ளனர். சராசரியாக அரை மணி நேரத்துக்கு ஒரு உயிரிழப்பு ஏற்படுகிறது.



சாலை விபத்துகளில் அதிக உயிர்களைப் பலிகொடுத்து இரண்டாம் இடத்தில் ஆந்திரப் பிரதேசமும் (15,158), மூன்றாம் இடத்தில் உத்தரப் பிரதேச (14,996) மாநிலமும் உள்ளன.



உயிரிழந்தவர்களில் அதிகபட்சமாக 22.4 சதவீதம் பேர் இரு சக்கர வாகன விபத்துகளில் இறந்திருக்கின்றனர்.



உயிரிழப்பை ஏற்படுத்தும் விபத்துகள் பெரும்பாலும் 7 காரணங்களால் நிகழ்கின்றன. அவை, 1. தாறுமாறாக வாகனம் ஓட்டுதல், 2. வேக உச்சவரம்பை மீறுதல், 3. போக்குவரத்து சிக்னல்களை மீறுதல், 4. சீட் பெல்ட் அணியாதது, 5. குடிபோதையில் வாகனம் ஓட்டுவது, 6. அபாயம் ஏற்படும் வகையில் முந்திச் செல்வது, 7. செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுவது.



இவ்வகை உயிரிழப்புகளுக்குக் காரணம் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை; போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுகின்றன என எளிதாகக் குற்றம் சாட்டிவிட முடியும்.



இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இந்த நிலைகளுக்கு யார் காரணம்? அரசின் நிர்வாகக் குறைபாடுதானே?



தமிழகத்தில் சட்டங்களின் மீது மக்களுக்குப் பயமில்லை. மனித உழைப்பைக் குறைப்பதற்காகவே தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அங்கும்கூட இரண்டு போக்குவரத்துக் காவலர்கள் நிற்க வேண்டியிருக்கிறது.



அதிகாரப்பூர்வ தகவலின்படி 2004ஆம் ஆண்டு சுனாமியால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் 12 ஆயிரத்து 405 பேர். அதன் மோசமான வடு இன்னும் மறையவில்லை. சுனாமி ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியாது. ஆனால், சாலை விபத்து அப்படியல்லவே?



ஆண்டுதோறும் ஒரு சுனாமி - சாலை விபத்து என்ற பெயரில் - தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பறித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு யார் பொறுப்பு?



போக்குவரத்து விதிமுறைகளை மதிக்கத் தேவையில்லை என்ற அலட்சிய மனோபாவத்தை மக்களிடம் வளர்த்துவிட்ட போக்குவரத்துப் போலீஸார்தான் இவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டும். சாலை விபத்தில் இறப்பவர்களே இல்லாமல் செய்து விடமுடியாது. ஆனால், 5 இலக்க சாவு எண்ணிக்கையை 4 இலக்கமாகவோ, 3 இலக்கமாகவோ குறைக்க முடியும்.



போக்குவரத்துப் போலீஸ் துறையில் சம்பளத்துக்காக மட்டுமே பணிபுரிபவர்களால் இதற்குத் தீர்வு காண முடியாது. திட்டமிடும் திறனும், அதைச் செயல்படுத்தும் முனைப்பும் கொண்டவர்கள் அத்துறையின் முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்பட வேண்டும்.



பள்ளிப்பாடங்களில் போக்குவரத்து விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். ஓட்டுனர் உரிமம் பெறும் விதிமுறைகள் கடுமையாக்கப்பட வேண்டும்.



ஆட்டோ தொழிலாளர்கள், வாடகை வாகனங்களை இயக்குபவர்கள் சங்கம், லாரி ஓட்டுநர் சங்கம், அரசு போக்குவரத்துத் தொழிலாளர் சங்க உறுப்பினர்களை அழைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.



சாலைகளில் சிறு விதிமீறலும் தண்டனைக்குரியதாக மாற்றப்பட வேண்டும். உயிரைவிட வேறெதுவும் மதிப்பு மிகுந்ததல்ல. சாலை விபத்துகளால் மரணம் சம்பவிப்பதைத் தடுக்க முயலாத அரசுதான் இந்த போக்குவரத்துக் "கொலை'களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். ஆம், இயற்கையாக ஏற்படாத எந்த மரணமும் "கொலை'தான்.

.
In The Name Of Alllah Most Gracious Most Merciful
-------------------------------------------------
Praise be to Allah the Almighty and gratitude is due to him alone, who has guided us to this (felicity) and never could we have found guidance, had it not been for the guidance of Allah the Almighty. And salutation of Allah the almighty to our master, Muhammad Sallallahu alaihi Wasallam the Apostle Of Allah, and his progeny and all his companions.

The virtue of these ten days of DhulHajj is based on many things: Allaah Subhanahu wa ta'ala swears an oath by them, and swearing an oath by something is indicative of its importance and great benefit. Allaah Subhanahu wa ta'ala says (interpretation of the meaning):

"By the dawn; by the ten nights" [al-Fajr 89:1-2].

Ibn ‘Abbaas, Ibn al-Zubayr, Mujaahid and others of the earlier and later generations said that this refers to the first ten days of Dhu’l-Hijjah. Ibn Katheer said: "This is the correct opinion." (Tafseer Ibn Katheer, 8/413)

The Prophet (peace and blessings of Allaah be upon him) testified that these are the best days of this world

The Prophet (peace and blessings of Allaah be upon him) encouraged people to do righteous deeds because of the virtue of this season for people throughout the world, and also because of the virtue of the place - for the Hujjaaj (pilgrims) to the Sacred House of Allaah
Subhanahu wa ta'ala .

The Prophet (peace and blessings of Allaah be upon him) commanded us to recite a lot of

Tasbeeh ("Subhan-Allaah"),
Tahmeed ("Al-hamdu Lillaah") and
Takbeer ("Allaahu akbar"),
During this time.

‘Abdullaah ibn ‘Umar (may Allaah be pleased with him and his father) reported that the Prophet (peace and blessings of Allaah be upon him) said: "There are no days greater in the sight of Allaah and in which righteous deeds are more beloved to Him than these ten days, so during this time recite a great deal of Tahleel ("La ilaaha ill-Allaah"), Takbeer and Tahmeed." (Reported by Ahmad, 7/224; Ahmad Shaakir stated that it is saheeh).

These ten days include Yawm ‘Arafaah (the Day of ‘Arafaah), on which Allaah perfected His Religion. Fasting on this day will expiate for the sins of two years. These days also include Yawm al-Nahar (the Day of Sacrifice), the greatest day of the entire year and the greatest day of Hajj, which combines acts of worship in a way unlike any other day.

These ten days include the days of sacrifice and of Hajj;

Praise be to Allah Who has created Time and has made some times better than others, some months and days and nights better than others, when rewards are multiplied many times, as a mercy towards His slaves. This encourages them to do more righteous deeds and makes them more eager to worship Him, so that the Muslim renews his efforts to gain a greater share of reward, prepare himself for death and supply himself in readiness for the Day of Judgment.

This season of worship brings many benefits, such as the opportunity to correct ones faults and make up for any shortcomings or anything that one might have missed. Every one of these special occasions involves some kind of worship through which the slaves may draw closer to Allah Subhanahu wa ta'ala, and some kind of blessing though which Allah bestows His favor and mercy upon whomsoever He will. The happy person is the one who makes the most of these special months, days and hours and draws nearer to his Lord during these times through acts of worship; he will most likely be touched by the blessing of Allah and will feel the joy of knowing that he is safe from the flames of Hell. [Ibn Rajab, al-Lataif, p.8]

Ibn 'Abbas reports that the Messenger of Allah (peace be upon him) said, "No good deeds done on other days are superior to those done on these days [meaning the ten days of Dhul-Hijjah]." The companions asked, "O Messenger of Allah, not even jihad in the way of Allah?" He said, "Not even jihad, except for the man who puts his life and wealth in danger [for Allah's sake] and returns with neither of them." [This is related by the group except Muslim and an-Nasa'i]

Ahmad and at-Tabarani record from Ibn 'Umar that the Messenger of Allah (peace be upon him) said, "There is no day more honorable in Allah's sight and no acts more beloved therein to Allah than those in these ten days. So say tahlil (There is no deity worthy of worship but Allah: La ilaha ill Allah), takbir (Allah is the greatest: Allahu Akbar) and tahmid (All praise is due to Allah: alhumdulillah) a lot [on those days]." [Reported by Ahmad, 7/224; Ahmad Shakir stated it is Sahih]

Abu Hurairah relates that the Messenger of Allah (peace be upon him) said, "There are no days more loved to Allah for you to worship Him therein than the ten days of Dhul Hijjah. Fasting any day during it is equivalent to fasting one year and to offer salatul tahajjud (late-night prayer) during one of its nights is like performing the late night prayer on the night of power. [i.e., Lailatul Qadr]." [This is related by at-Tirmidhi, Ibn Majah, and al-Baihaqi]

Ibn 'Umar narrated that at Mina, the Messenger of Allah (peace be upon him) said, "Do you know what is the day today?" The people replied, "Allah and His Messenger know it better." He said, "It is the forbidden (sacred) day. And do you know what town is this?" They replied, " Allah and His Messenger know it better." He said, "This is the forbidden (sacred) town (Mecca). And do you know which month is this?" The people replied, "Allah and His Apostle know it better." He said, "This is the forbidden (sacred) month." The Messenger added, "No doubt, Allah made your blood, your properties, and your honour sacred to one another like the sanctity of this day of yours in this month of yours in this town of yours."

Narrated Ibn 'Umar: On the Day of Nahr (10th of Dhul-Hijjah), the Messenger (peace be upon him) stood in between the Jamrat during his Hajj which he performed (as in the previous Hadith) and said, "This is the greatest Day (i.e. 10th of Dhul-Hijjah)." The Messenger (peace be upon him) started saying repeatedly, "O Allah! Be Witness (I have conveyed Your Message)." He then bade the people farewell. The people said, "(This is Hajjat-al-Wada)." [Bukhari 2.798]

In what follows, we will highlight some of the Sunnah regarding these days, hoping by this to provide an incentive to make the best out of them and gain Allah’s reward, insha’Allah.

Dhikr

Ibn ‘Abbas commented on the verse:

"…and to mention Allah’s name [plentifully] on Known days"
[Noble Quran 22:28]

by saying: (…these known days are the ten days [of Dhul Hijjah].) [Tafsir ibn Kathir]

Fasting

One of the wives of the Prophet, peace be upon him, said: "Allah’s Messenger used to fast the (first) nine days of Dhul Hijjah, the day of ‘Ashura’, and three days of each month. [Sahih Sunan Abi Dawud 2129]

Fasting on all these days, however, is not a Wajib (compulsory), nor is it a constant Sunnah that the Messenger, peace be upon him, never dropped. ‘A’ishah said:

"I never saw the Messenger, peace be upon him, fast the ten days." [Muslim]

Fasting Day of Arafat

The Day of ‘Arafah - The Best Day of the Whole Year

The day of ‘Arafah is the day when the pilgrims stand in worship on the Mountain of ‘Arafah.

"There is no day on which Allah frees people from the Fire as He does no the day of ‘Arafah. He comes close (to those standing on ‘Arafah) and then revels before His angels, saying: "What are these people seeking?" [Muslim]

Abu Qatadah reported that the Messenger of Allah (peace be upon him) said, "Fasting on the day of 'Arafah is an expiation for two years, the year preceding it and the year following it. Fasting the day of 'Ashura is an expiation for the year preceding it." [This is related by "the group," except for al-Bukhari and at-Tirmidhi]

Hafsah reported, "There are five things that the Messenger (peace be upon him) never abandoned: fasting the day of 'Ashura, fasting the [first] 10 [days of Dhul-Hijjah], fasting 3 days of every month and praying two Rak'ah before the dawn prayer." [This is related by Ahmad and an-Nasa'i]

'Uqbah ibn 'Amr reported that the Messenger of Allah (peace be upon him) said, "The day of 'Arafah, the day of sacrifice, and the days of Tashriq are 'ids for us--the people of Islam--and they are days of eating and drinking." [This is related by "the five," except for Ibn Majah. At-Tirmidhi grades it Sahih]

Abu Hurairah stated, "The Messenger of Allah (peace be upon him) forbade fasting on the day of 'Arafah for one who is actually at 'Arafah." [This is related by Ahmad, Abu Dawud, an-Nasa'i, and Ibn Majah]

At-Tirmidhi comments: "The scholars prefer that the day of 'Arafah be fasted unless one is actually at 'Arafah."

Takbir

It is Sunnah to say Takbir ("Allahu Akbar"), Tahmid ("Al-hamdu Lillah"), Tahlil ("La ilaha ill-Allah") and Tasbih ("Subhan Allah") during the first ten days of Dhul-Hijjah, and to say it loudly in the mosque, the home, the street and every place where it is permitted to remember Allah and mention His name out loud, as an act of worship and as a proclamation of the greatness of Allah, may He be exalted. Men should recite these phrases out loud, and women should recite them quietly.

Allah says (interpretation of the meaning):

"That they might witness things that are of benefit to them (i.e., reward of Hajj in the Hereafter, and also some worldly gain from trade, etc.), and mention the name of Allah on appointed days, over the beast of cattle that He has provided for them (for sacrifice)..."
[Noble Quran 22:28]

The majority of scholars agree that the "appointed days" are the first ten days of Dhul-Hijjah, because of the words of Ibn Abbas (may Allah be pleased with him and his father), "The appointed days are the first ten days (of Dhul-Hijjah)."

The Takbir may include the words "Allahu Akbar, Allahu Akbar, la ilaha ill-Allah; wa Allahu Akbar wa Lillahil- hamd (Allah is Most Great, Allah is Most Great, there is no deity worthy of worship but Allah; Allah is Most Great and to Allah be praise)," as well as other phrases.

Takbir at this time is an aspect of the Sunnah that has been forgotten, especially during the early part of this period, so much so that one hardly ever hears Takbir, except from a few people. This Takbir should be pronounced loudly, in order to revive the Sunnah and as a reminder to the negligent. There is sound evidence that Ibn Umar and Abu Hurairah (may Allah be pleased with them) used to go out in the market place during the first ten days of Dhul-Hijjah, reciting Takbir, and the people would recite Takbir when they heard them. The idea behind reminding the people to recite Takbir is that each one should recite it individually, not in unison, as there is no basis in Shari'ah for doing this.

The Day of Al-’Adha

The tenth of Dhul-Hijjah is Eid Al-Adha or the day of an-Nahr (slaughtering). It marks the conclusion of the major rites of Hajj, and commemorates Allah’s bounty on His Messenger Ibrahim, when He gave him a ram to sacrifice as ransom for his son Isma’il, peace be upon them.

"The day of al-Fitr [i.e. ‘Eid ul-Fitr], the day of an-Nahr, and the days of Tashriq are ‘Eid days for us Muslims. They are days of eating and drinking." [Ahmad, an-Nasa’i, Sahih ul-Jami’ 8192]

The Three Days Following ‘Eid ul-’Adha

On these days, the pilgrims complete their rites, Muslims continue with their ‘Eid celebrations, and are prohibited to fast.

"The days of Tashriq are days of eating, drinking and mentioning Allah." [Muslim]

The Sacrifice

Allah mentioned the sacrifice together with the first and foremost worship in Islam: prayer. This is a clear indication of its great importance. Thus He ordered His Messenger, peace be upon him, to slaughter sacrifices by saying:

"…Pray unto your Lord and slaughter [your sacrifice]"
[Noble Quran 109:2]

Ruling

The general consensus of the Muslim scholars is that the sacrifice is an important Sunnah, and a worship called for in the Law of Allah subhanahu wa ta'ala. However, they differ as to whether it is Nafl (voluntary) or Wajib (mandatory) for those who can afford it. Some scholars have explained the different hadiths on the subject by stating that the sacrifice is obligatory on those who can afford it and not obligatory on those who cannot.

Abu Hurairah reported that the Messenger, peace be upon him, said: "He who has the capacity, and does not sacrifice, may not approach our Musalla (place of prayer - on the ‘Eid)." [Ibn Majah, Ahmad and others, authenticated by Al-Albani in Sahih Sunan Ibn Majah, 2533]

Regarding this Hadith, Imam ash-Shaukani said: "Prohibiting the one who could afford to sacrifice, but did not do so, from approaching the Musalla indicates that he must have left off a Wajib, as it becomes useless to offer the Salah without this Wajib [obligation]." [Nayl ul-Awtar]

Avoid Cutting Hair or Nails;

The one who plans to sacrifice (normally, the head of household) is prohibited to cut his hair or nails from the first Dhul Hijjah until he offers the sacrifice. "For the one who has a slaughtering to perform (on ‘Eid then, once the Hilal (crescent) of Dhul Hijjah is observed, let him not cut any of his hair or nails until he sacrifices." And in another narration: "Once the ten days start, for those of you who have the intention to sacrifice, let them not cut any of their hair or nails (until they sacrifice)." [Muslim] This prohibition is the opinion of the majority of the scholars of the early generations of Muslims.

Our last call is all praise is to Allah and may His Salah and Salam be upon our Prophet Muhammad and his family and who those follow Him(peace be upon him).

Allah (SWT) says; “Think not who have been killed in the way of Allah as dead;rather they are alive with their Lord being provided with sustenance.”(Qur’an 3:169)

Noble Prophet(peace be upon him)Once said;
One who dost not fight of thinks of fighting in the way of allah will die the death of a hypocrite'', said the prophet, blessings andpeace be on him (muslim)He also; ''By him in whose hands is my life, I love that i die the way of allah and made alive, That i die again and again given life, Iagain die and once again given life, only to die again in the way of allah.''(Bukhari and Muslim)

http://ping.fm/aj6K4
http://ping.fm/Xzedt
http://ping.fm/9ODAD

with peace,
Shahjahan bin Mohamed Umer
md.shahjahan2001@gmail.com
+91 81972 81300
Banglore
"Help People"
இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும்.
வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும்.
அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும்.
ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும்.
தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும்.
ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்.
- நபி (ஸல்) , நூற்கள்: புகாரி,
Don't forget to Do Exercise daily 30 min for healthy life
நல்ல தகவல்களை நாலு பேருடன் பகிருங்கள் நண்பர்களே...
தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

__._,_.___
Congress is fulfilling its promise, when they said: GDP will rise this year.
The only thing we forgot to ask them its full form:
G= Gas & Gold
D= Diesel & Dollar
P= Petrol & Parties

Dear Father-in-Law,
I deeply regret taking a Car in dowry.
Please take your Daughter and Car back…
I cannot afford both.

Now Tata Nano’s fuel cost will be more than its EMI per month!

Soon, Rupee will be SENIOR CITIZEN (above Rs.60 per US Dollar);
Petrol has already become VERY SENIOR CITIZEN in Bangalore (Rs.81 per litre) !!!

Finally it has happened…
After decades,
Beer is now cheaper than petrol !!!
Now, there will be new slogan: JUST DRINK; DON'T DRIVE !!!

Expensive petrol will help solve the problem of traffic jams!

Drink and drive should not be a problem now.
After all, how many will be able to afford alcohol and petrol on the same day?

We have the world’s cheapest car and the world’s costliest petrol.

Sign board at Petrol pump: Buy Petrol worth Rs. 20,000 and get a TATA
NANO absolutely free
(scheme for आमआदमी Now he can get car with petrol! )

Man at Petrol Pump: Please fill up tank
Attendant: Sir, Please give your PAN Card copy.
Man: What? Why? How?
Attendant: Sir, it’s a HIGH VALUE TRANSACTION !!!._

Wednesday, October 17, 2012

பரவும் டெங்கு காய்ச்சல்: தடுக்கும் வழிமுறைகள்

[ டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.

நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.]

டெங்கு பாதிக்கப்பட்டோருக்கு, உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன் கூடிய தொடர் காய்ச்சல், இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கும். இரண்டு மாத இடைவேளைக்கு பின், இரண்டு வாரங்களாக, தமிழகத்தில், மீண்டும், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

சென்னை, வேலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த ஒன்பது மாதங்களில், 4,500-க்கும் மேற்பட்டோர், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில், சிறுவர், சிறுமியர் உட்பட 50-க்கும் அதிகமானோர், இதுவரை இறந்துள்ளனர். இருப்பினும், "டெங்கு காய்ச்சல் குறித்து, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை' என, மாநில சுகாதார துறை அதிகாரிகள் மூலம், மத்திய சுகாதார அமைச்சர் வரை, திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர்.

ஆனால், டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் இக்காய்ச்சலால் இறப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தங்கள் பிள்ளைகள், உறவினர்களுக்கு, காய்ச்சல் வந்தாலே, அது டெங்குவாக இருக்குமோ என அச்சப்படும் அளவிற்கு, பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த பீதியில் இருந்து விடுபடவும், டெங்கு வராமல் தடுக்க, பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நிலைய மருத்துவ அதிகாரி(ஆர்.எம்.ஓ.,) பொன்னுராஜேஸ்வரி, பேட்டி:

டெங்கு காய்ச்சல் எதனால் வருகிறது? எந்த பருவத்தில், இக்காய்ச்சல் அதிகம் பரவுகிறது?: பகல் நேரத்தில் மட்டும் மனிதர்களை கடிக்கும், "ஈடிஸ்' வகை கொசுக்கள் மூலம், டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு வைரஸ் இக்காய்ச்சலை உண்டாக்குகிறது. ஆண்டு முழுவதும் இக்காய்ச்சல் வந்தாலும், பருவமழை காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

டெங்குவின் அறிகுறிகள் என்ன?: டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.

இந்த அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?: நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.

டெங்கு அறிகுறியுடன் வருவோருக்கு, என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன? டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, முதலில், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், அவரவர் வயதிற்கேற்ப, 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை, தட்டணுக்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், அவர்களுக்கு டெங்கு இருக்க, அதிக வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்யவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, கூடவே, தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சிகிச்சையும் தரப்படும்.

டெங்குவில் எத்தனை நிலைகள் உள்ளன?: மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு, டெங்கு வைரஸ் பாதிப்பதால், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை, காய்ச்சல் இருக்கும். மற்றப்படி பெரிய பாதிப்புகள் இருக்காது.

இக்காய்ச்சல் வந்துபோன சில நாட்கள் இடைவெளியில், மீண்டும் டெங்கு வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோர், காய்ச்சலின் இரண்டாம் நிலையில் உள்ளவர்களாக கருதப்படுவர். இவர்களுக்கு, ரத்தம் உறைவதற்கு தேவையான தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தபோக்கு ஏற்படும். இந்நிலை முற்றியவர்கள், டெங்குவின் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு, ரத்தபோக்கின் காரணமாக, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்து, மயக்க நிலையை அடைவர். தோலில் ஆங்காங்கே சிகப்பு புள்ளிகள் உண்டாகும்.

டெங்கு தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு தான் உயிரிழக்கும் அபாயம் அதிகம்.

ஆனால், தற்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 90 சதவீதம் பேருக்கு, டெங்குவின் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை.

-- http://ping.fm/7hOo3


ALAVUDEEN
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
To:

First Published : 12 October 2012 03:17 AM IST
புகைப்படங்கள்

அதிக அளவுக்கு (103 டிகிரிக்கு மேல்) காய்ச்சல், கடும் தலைவலி, கண் வலி, குமட்டல், உடல் வலி, மூட்டு இணைப்புகளில் வலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கொடுங்கையூரில்.. சென்னை, புறநகர்ப் பகுதிகளில் கொசுக்களின் மூலம் பரவும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை கொடுங்கையூரில் கல்லூரி மாணவி ரேணுகா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அரசு மருத்துவமனைகளின் புற நோயாளிகள் பிரிவுக்கு காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை விகிதம் அதிகரித்துள்ளதையடுத்து இது ஊர்ஜிதமாகியுள்ளது. எந்த விதமான காய்ச்சலாக இருந்தாலும் மூன்று நாள்கள் தொடர்ந்து நோயாளியைக் கண்காணித்து விட்டு உரிய ரத்தப் பரிசோதனைகளைச் செய்து காய்ச்சலின் தன்மையைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நல்லது என்று அரசு டாக்டர்கள் தெரிவித்தனர்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும் காய்ச்சல் வராமல் தடுத்துக் கொள்வதில் பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். அரசு டாக்டர்கள் கூறிய யோசனைகள்: ""தமிழகம் முழுவதும் மின் வெட்டு பிரச்னை உள்ளது. இதனால் நீரை வாளிகளில் பொது மக்கள் தேக்கி வைக்கின்றனர். டெங்கு காய்ச்சலை பரப்பும் பகல் நேர கொசுக்கள் சுத்தமான நீரில் உற்பத்தியாகும். எனவே தண்ணீரை தேக்கி வைக்கும் வாளிகளை நன்கு மூடி பராமரிக்க வேண்டும். வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். காய்ச்சல், தலைவலி, மூட்டு வலி, கண் வலி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டவுடன் தாமதிக்காமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதும் அவசியம்' என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.


Basheer A Sahib

Operator, SFII Urea, SF2 OPERATIONS

Saudi Arabian Fertilizer Company
A SABIC Affiliate

Jubail Industrial City 31961
Saudi Arabia

T +966 (3) 341 1100-8523

F

E BSahib4056@safco.sabic.com
கரண்ட் "கட்'டைப் பற்றிக் கவலையில்லை!

http://ping.fm/JOqQH



விவசாயம் செய்ய முடியாமல், அதை விட்டுவிட்டு வேறு தொழிலுக்குப் போகிற விவசாயிகள் இந்தக் காலத்தில் அதிகம்.

ஆனால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த ஒருவர், விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, தனது வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கிவிட்டார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதுவும் தனது தோட்டத்துக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியின் மூலம் தயாரித்துக் கொள்கிறார் என்றால் வியப்பு இன்னும் அதிகமாகிறது.

கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள முருகன்பதி என்ற கிராமத்தில் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஆர். விஜயகுமாரிடம் பேசினோம்.

""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கலங்கல் கிராமம். புகழ்மிக்க விஞ்ஞானி ஜி.டி.நாயுடு எங்கள் ஊர்க்காரர்தான். எங்கள் குடும்பம் பழமையான விவசாயக் குடும்பம். எனவே விவசாயத்தில் இயல்பாகவே எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் இன்ஜினியராக வேண்டும் என்று ஆசை.

நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ராமகிருஷ்ணா ஸ்டீல் இன்டஸ்ட்ரி என்ற நிறுவனத்திலும் லக்ஷ்மி மிஷின் வொர்க்ஸ் நிறுவனத்திலும் வேலை செய்தேன். என்றாலும் எனது மனம் என்னவோ விவசாயத்திலேயே இருந்தது.

எனது சொந்த ஊரான கலங்கலில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் அங்கே தண்ணீர் தட்டுப்பாடு இருந்தது. எனவே கலங்கலில் இருந்த நிலங்களை விற்றுவிட்டு, கே.ஜி.சாவடிக்கு அருகே உள்ள முருகன்பதி என்ற ஊரில் 15 ஏக்கர் தோட்டத்தை வாங்கினேன். என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர விவசாயியாக மாறினேன்.

600 தென்னை மரங்களையும், 300 எலுமிச்சை மரங்களையும் எனது தோட்டத்தில் வளர்க்கிறேன். மாட்டுத் தீவனமான புல்லையும் பயிர் செய்கிறேன். இந்தப் பகுதியில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால், ஒருநாளைக்கு ஒன்றரை மணி நேரம்தான் மின்சாரம் கிடைக்கிறது. இந்த மின்சாரத்தை வைத்து எப்படி இவ்வளவு மரங்களையும் காப்பாற்றுவது? நினைக்கவே பயமாக இருந்தது.
ஜெனரேட்டர் ஒன்று வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஜெனரேட்டர் மூலமாக 1 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.22 வரை செலவாகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். அவ்வளவு செலவு செய்து தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்தால் இழப்புதான் ஏற்படும். அதைவிட சும்மா இருக்கலாம்.

அப்போதுதான் சூரிய ஒளி சக்தியின் மூலமாக, மின்சாரத்தைத் தயாரித்துப் பயன்படுத்தினால் என்ன? என்று தோன்றியது. யூபிவி சோலார் கம்பெனி என்ற நிறுவனத்தில் 5040 வாட்ஸ் சோலார் பேனலை வாங்கினேன். இதற்கு 5.5 லட்சம் செலவானது. ஆனால் இந்த சோலார் பேனல், 25 வருடங்களுக்கும் மேல் உழைக்கும் என்பதால் இந்தச் செலவைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதிலிருந்து 870 வோல்ட் டிசி மின்சாரம் அல்லது 415 வோல்ட் ஏசி மின்சாரம் கிடைக்கும். 3 பேஸிலும் கரண்ட் வரும். மின்னழுத்தம் சீராக இருக்கும். இதனால் மோட்டார் எரிந்து போய்விடும் என்று பயப்படத் தேவையில்லை.

இப்போது காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை எங்கள் தோட்டத்தில் நீர் இறைக்கும் மோட்டார் வேலை செய்கிறது. உச்சி வெயிலில் அதிகமாகத் தண்ணீர் வரும். நான் சொட்டு நீர்ப் பாசன முறையில் மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன். இப்போது கரண்ட் பில் கட்டத் தேவையில்லை. கரண்ட் கட் ஆகிவிடும் என்ற பயமுமில்லை; கவலையுமில்லை.

சோலார் பேனல் வாங்கினால் மத்திய அரசு 30 சதவிகிதம் மானியம் தருகிறது என்று கேள்விப்பட்டு "மினிஸ்ட்ரி ஆஃப் நியூ அன்ட் ரினிவபிள் எனர்ஜி' துறையை அணுகினேன். அவர்கள் "தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் அசோசியேஷன்' மூலமாகப் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். அவர்களிடம் கேட்டால், அவர்கள் குறிப்பிடும் சோலார் பேனல்களை வாங்கினால் மட்டும்தான் மானியம் என்றார்கள். நான் தொடர்ந்து முயற்சிக்கவில்லை.

மின்சாரப் பற்றாக்குறை அதிகமாக உள்ள இந்நாளில், சூரிய ஒளி மூலம் மின்சாரத்தைத் தயாரிப்பது மிகவும் நல்லது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாதது. ஆனால் சோலார் பேனல்களின் விலை அதிகமாக இருப்பதால் எல்லா விவசாயிகளும் வாங்கத் தயங்குவார்கள். விவசாயிகள் சூரிய ஒளி மின்சாரத்துக்கு மாற அரசு உதவி செய்ய வேண்டும்'' என்கிறார் ஆர்.விஜயகுமார்.

கருத்துகள்(24)

வியகுமார் உங்களைப் போன்றவர்தான் இனி இந்த நாட்டின் அவசியத் தேவை . நீங்கள் ஒரு முன் மாதிரி. வாழ்த்துக்கள் . வணக்கம். நன்றி.
பதிவுசெய்தவர் கவிஞர் தணிகை 10/07/2012 15:43 இதற்கான பதில் முறையற்ற கருத்து
அன்பர் விஜயகுமாரின் சாதனை மிகவும் போற்றத்தக்கது. இவர்களின் முயற்சிக்கும சாதனைக்கும் தமிழக அரசு மானியம் வழங்க ஆவன செய்யாமல் அவர்கள் குறிப்பிட்ட சோலார் பேனலைத்தான் வாங்கவேண்டும்; மற்றதை வாங்கியதால் மானியம் தரமுடியாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? ஒருவேளை அவர்கள் சொல்கிற கம்பெனிக்கும் தா. நா அரசுக்கும் கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களோ என்னவோ?
பதிவுசெய்தவர் சா விஸ்வநாதன், புனே 10/07/2012 23:06 இதற்கான பதில் முறையற்ற கருத்து
இப்படிப்பட்டவர்களை முதல் அமைச்சர் அழைத்து வாழ்த்தி பரிசுகள் வழங்க வேண்டும்.அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கவேண்டும். நாங்கள் சொல்கிற கம்பெனியில் தான் சோலார் வாங்க வேண்டும் இல்லாவிட்டால் உதவி தொகை தரமாட்டோம் என்பதெல்லாம் வீண் ஜம்பம். ஊழலுக்கு வழி வகுக்கும். பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் இப்படி பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ முன்வரலாமே. தங்கள் கல்லூரிகளில் இதை ஒரு பாடமாக வைத்து, சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்து புதுமை படைத்து நமது மாநிலத்தை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரலாமே, எத்தனை காலத்துக்கு இந்த அரசியல் வீணர்களின் வார்த்தைகளை நம்பிக்கொண்டு காலம் தள்ளுவது.தினமணி ஆசிரியர் அவர்களுக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது. மாற்றி யோசியுங்கள்..ஆட்சியை மாற்றிக்காட்டியவர்கள் நீங்கள்.
பதிவுசெய்தவர் mackie noohuthambi, kayalpatnam tamil nadu 10/08/2012 06:26 இதற்கான பதில்முறையற்ற கருத்து
சூப்பர் விஜயகுமார் சூரிய சக்தி மின்சார தேவை இப்போது நமக்கு தேவை...
பதிவுசெய்தவர் சத்தியசீலன் 10/08/2012 10:15 இதற்கான பதில் முறையற்ற கருத்து
well done Vijaykumar....keep it up......
பதிவுசெய்தவர் S.SETHURAMAN 10/08/2012 12:46 இதற்கான பதில் முறையற்ற கருத்து
Well Done....Vijaykumar.....Keep it up......
பதிவுசெய்தவர் S.SETHURAMAN 10/08/2012 12:48 இதற்கான பதில் முறையற்ற கருத்து
அரசு இவருக்கு மானியம் வழங்க ஆவன செய்ய வேண்டும்...
பதிவுசெய்தவர் ஆதி 10/08/2012 14:58 இதற்கான பதில் முறையற்ற கருத்து
டியர் விஜயகுமார் sir, I Salute you for your brilliant decision and implementation. Like Gujarat, let us develop TN Ekanath
பதிவுசெய்தவர் Ekanath 10/08/2012 19:17 இதற்கான பதில் முறையற்ற கருத்து
Subsidy / மானியம் பெற ஐ தொடர்பு கொள்ளவும் http://ping.fm/a3pK0 http://ping.fm/GGPnXsite/index/id/6m3f3j5R6U TamilNadu Energy Development Agency E.V.K Sampath Maaligai, 5th floor, No.68, College Road, Chennai-600 006 Ph: 28222973 Email: info@teda.in ஏற்கனவே ஒருவர் 1.7 லட்சம் செலவு செய்து 80,000 மானியம் பெற்றுள்ளார் -> http://ping.fm/uQX0S
பதிவுசெய்தவர் விஜய் 10/09/2012 06:05 இதற்கான பதில் முறையற்ற கருத்து
vijayakumar avarkalai vaaltha vayathillai வணகுகிறேன்.. மின்பற்றாக்குறை என்று புலம்பும் அதீத அணுஉலை பிரியர்களுக்கு இது உதவட்டும்..
பதிவுசெய்தவர் டென்சிங் 10/09/2012 13:57 இதற்கான பதில் முறையற்ற கருத்து
சார் உங்களைப்போல அறிவியல் ரீதியாக செய்யும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடையும்.உங்களை தொடர்புகொள்ள ஆசைபடுகிறேன்,எனக்கும் சூரிய ஒளியை பயன்படுத்த எனக்கு ஆசை!!!
பதிவுசெய்தவர் பூபதிராஜா ப 10/09/2012 18:14 இதற்கான பதில் முறையற்ற கருத்து
தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் அசோசியேஷன்' மூலமாகப் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். அவர்களிடம் கேட்டால், அவர்கள் குறிப்பிடும் சோலார் பேனல்களை வாங்கினால் மட்டும்தான் மானியம் என்றார்கள். நான் தொடர்ந்து முயற்சிக்கவில்லை. ....குறிப்பிட்ட கம்பனி பானல் வாங்கினால்தான் மான்யம் இந்த கழக அரசுகள் திருந்தவே செய்யாதா. கடவுளே. நல்லதை முயற்சித்தாலும் ஊக்காபடுதாத மக்கள் மெஜாரிட்டி அரசு.
பதிவுசெய்தவர் சபாஷ் 10/09/2012 18:21 இதற்கான பதில் முறையற்ற கருத்து
\ சோலார் பேனல் வாங்கினால் மத்திய அரசு 30 சதவிகிதம் மானியம் தருகிறது என்று கேள்விப்பட்டு "மினிஸ்ட்ரி ஆஃப் நியூ அன்ட் ரினிவபிள் எனர்ஜி' துறையை அணுகினேன். அவர்கள் "தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் அசோசியேஷன்' மூலமாகப் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். அவர்களிடம் கேட்டால், அவர்கள் குறிப்பிடும் சோலார் பேனல்களை வாங்கினால் மட்டும்தான் மானியம் என்றார்கள். நான் தொடர்ந்து முயற்சிக்கவில்லை. //// அங்கதான் இருக்குது கமிஷனே! சர்க்கார் அதிகாரிகளா? கொக்கா?
பதிவுசெய்தவர் @முத்துக்குமார்@ 10/09/2012 18:45 இதற்கான பதில் முறையற்ற கருத்து
Br vijaykumar I would like to meet u pl
பதிவுசெய்தவர் rtram 10/09/2012 19:43 இதற்கான பதில் முறையற்ற கருத்து
அவர்கள் குறிப்பிடும் சோலார் பேனல்களை வாங்கினால் மட்டும்தான் மானியம் என்றார்கள். நான் தொடர்ந்து முயற்சிக்கவில்லை. - குறிப்பிட்ட கம்பெனி மூலம் கிடைக்கும் கமிஷன் அந்த அதிகாரிக்கு கிடைக்காமல் போகும். நாட்டு நலத்தை பற்றி அந்த நாய்க்கு கவலை ஏன்.?
பதிவுசெய்தவர் SESHASAYEE 10/09/2012 21:55 இதற்கான பதில் முறையற்ற கருத்து
விஜயகுமார்அவர்கள் மிக நன்றாக நாடுக்கு நல்ல பனி செய்துள்ளார்
பதிவுசெய்தவர் பட்டபிசீதராமன் .R 10/10/2012 13:22 இதற்கான பதில் முறையற்ற கருத்து
நன்று பனி thodaradum
பதிவுசெய்தவர் பட்டபிசீதராமன்R 10/10/2012 13:26 இதற்கான பதில் முறையற்ற கருத்து
சகோதரர் விஜயகுமாருக்கு வாழ்த்துக்கள் உங்களைபோன்றோரின் சேவையும் பங்களிப்பும் எல்லாக்கரியங்களிலும் எல்லாகலத்திலும் இந்தியாவுக்கு தேவை. மேலும் கூடங்குளம் ஆதரவாளர்கள் யாராவது இருந்தால் உங்கள் வெற்றியை அவர்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்.
பதிவுசெய்தவர் கிராமத்தான் 10/10/2012 17:09 இதற்கான பதில் முறையற்ற கருத்து
சபாஷ்,தம்பி.......இதை யாராவத து முதல்வர் கவனத்துக்கு கொண்டுவந்து தமிழகத்துக்கு மின் வேட்டை குறைக்க வழ்ழி செய்யும் அர்ரசியால்வதீ உண்ட?.கண்ணனுக்கு தெரிந்தவரை யாரயும் காணவில்லை -ப.விசு .இங்கிலாந்து
பதிவுசெய்தவர் Dr .ப.visuwanathan 10/10/2012 21:41 இதற்கான பதில் முறையற்ற கருத்து
சபாஷ்,தம்பி.......இதை யாராவத து முதல்வர் கவனத்துக்கு கொண்டுவந்து தமிழகத்துக்கு மின் வேட்டை குறைக்க வழ்ழி செய்யும் அர்ரசியால்வதீ உண்ட?.கண்ணனுக்கு தெரிந்தவரை யாரயும் காணவில்லை -ப.விசு .இங்கிலாந்து
பதிவுசெய்தவர் Dr .ப.visuwanathan 10/10/2012 21:43 இதற்கான பதில் முறையற்ற கருத்து
I also wish to do like this.
பதிவுசெய்தவர் uduman 10/11/2012 07:40 இதற்கான பதில் முறையற்ற கருத்து
வெள்!
பதிவுசெய்தவர் சச்சின் கம்ளிஓல 10/11/2012 14:59 இதற்கான பதில் முறையற்ற கருத்து
சோலார் எஞ்ச்னியர் ங் என்று ஒரு டிபார் மென்ட் அரசு கல்லூரிகளில் உருவாக்க வேண்டும்.
பதிவுசெய்தவர் Parivel 10/11/2012 15:50 இதற்கான பதில் முறையற்ற கருத்து




--
MUDUVAI HIDAYATH

http://ping.fm/zAxzl

http://ping.fm/b80sP

--

Tuesday, October 16, 2012

Muhammad shahjahan 15 October 2012 18:14
Reply-To: tamil-muslim@yahoogroups.com
To: mohamed shahjahan





தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்


தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு[1].
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சை மாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.
குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல்பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.
2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.
வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும்.
வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும்.
இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.
சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.
இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.
ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.
நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.
ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.
ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.
இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட, இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது.
தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.
கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.
இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22%ஐ கழித்து விட்டால் கிடைக்கப் போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது[2].
எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.
***
கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும்.
“மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.
மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.
2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.
அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல்படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.
அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.
பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:
1. சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி ந�
JEDDAH: The decision of the Indian Ministry of External Affairs to increase the passport renewal fees and other passport related services, double fold, have raised the ire of many Indian expatriate workers.
The fee hike became effective Oct. 1.
The Federation of Kerala Associations in Saudi Arabia expressed its strongest protest and urged the Indian government to immediately withdraw its decision, said R. Muraleedharan president of the Federation.
“The decision of the Ministry of External Affairs to increase the fees for new passports and passport reissuing, is unjustifiable and discriminatory. It has to be taken into account that when compared to the fees in India, the External Affairs Ministry is already taking exorbitant passport related fees through the Indian Missions abroad,” said Muraleedharan.
Muraleedharan also added, for a 36-page passport of 10-year validity, the all-inclusive fees in India is only 1000 Indian Rupees (equivalent to SR 72). That means, with the new fees (SR 282), an NRI from Saudi Arabia must pay an increased cost of almost 400 percent, to renew his passport in Saudi Arabia. Not to mention the additional fees for the outsourcing agency, which amount to SR 15 and an additional SR 8 for the ICWF fee.
“With the new fees, an ordinary contract worker in Saudi Arabia has to pay almost one month’s salary for the passport alone. The average salary of a laborer is SR 350 per month,” he explained. The statement of the Ministry of External Affairs, justifying the reasons for the fee increase are unacceptable and unfounded. Since the blank passports are printed in India, the Ministry only has to bear the cost of transporting the passports from Delhi to Saudi Arabia. We request the Ministry of External Affairs to unify all passport related fees.”
According to a statement made by the Indian Government, passport related fees increased from SR 500 to SR 1,500. Consequently, the rates starting October 1 are, 1,500 Rupees for normal applications, 3,500 Rupees for ‘tatkal’ applications, a three-day renewal service, and 1,000 Rupees for minor applications. In addition, the fees for the police clearance certificate have also increased from 300 to 500 Rupees.
For Indian expatriates in Saudi Arabia, the costs for a new passport or for reissuing a passport containing 36 pages, with a validity of 10 years, is SR 282. Whilst renewing the passport through the faster ‘tatkal’ service amounts to SR 845. The passport renewal fees are yet higher for passports containing 60 pages, with a cost of SR 376, and SR 939 when issued through the ‘tatkal’ service.
Mohammed Shareef, a construction worker, who earns SR 1200 a month, said the charges would be too high for him to pay. “Companies don’t increase salaries often so why should the government raise prices this way? If they increase a little, it is reasonable. But to pay double is a
lot for people like us,” he
added.
Indian national Yousuf Amjad said the government should not add more burdens to the already encumbered NRIs. “I humbly request the passport authorities to reconsider their decision and bring back the previous fees in order to reduce the burden on low income NRIs,” said Amjad.
Azhar Zai, a specialist aviation administrator, said, “Looking at the volume of increase, it seems to me that a form of taxation is being imposed on NRIs indirectly. There must be a good reason for the increase in service fees; our Government is considerate, and we can request it to reconsider this decision, since the majority of the NRIs, particularly in the Middle East, are working but making meager salaries. With the rising inflation, NRIs are barely making enough to cover the costs of their basis amenities”.
Zai further added, “the induction of outsourcing, its charges and the time consumed in renewing a passport, have already affected us, and with this huge hike in the fees, it will surely accelerate the tempo of grievances. If unavoidable, a slight and reasonable increase should be proposed”.
Asimudeen Ansari another Indian said the rise was particularly steep for those with families, who need to renew more than one passport.
“They have to rethink this and lower the fees,” said Ansari.
மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்

மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற! என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்கள் தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்



கடுமையான மின்வெட்டுக்குக் காரணம் என்ன? தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின்வெட்டுக்கே ஆற்காடு வீராசாமியின் பெயரைச் சூட்டி, ஒரு அமைச்சரின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல்தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பதுபோல பிரச்சினையைச் சுருக்கி சித்தரித்தன ஊடகங்கள். மின்வெட்டு காரணமாக மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்ட ஜெயலலிதா, “ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின் பற்றாக்குறையைப் போக்குவேன்” என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்தார்.
சென்ற ஆண்டு டிசம்பரில் எப்.ஐ.சி.சி.ஐ. என்ற இந்தியத் தரகு முதலாளிகள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், “2012 இல் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது” என பிரகடனம் செய்தார். 2012ஆம் ஆண்டோ, எட்டு மணி நேர மின்வெட்டுடன் தொடங்கியிருக்கிறது. “2014இல் தமிழகம் மின் உபரி மாநிலமாக இருக்கும்” என்று இப்போது குறி சொல்லியிருக்கிறார் அமைச்சர்.
திட்டமிட்டபடி அனல் மின் நிலையங்கள் உற்பத்தியை தொடங்காதது, இருக்கின்ற மின்நிலையங்களில் பழுது காரணமாக உற்பத்தி குறைந்திருப்பது, மத்திய மின் தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காதது என்று தற்போதைய மின்பற்றாக்குறைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
2006இல் தமிழகத்தின் மின் தேவை 8500 மெகா வாட். 2012இல் 12,000 மெகாவாட். பெருகியிருக்கும் இந்த மின் தேவையை ஈடு செய்யும் விதத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின் உற்பத்தி பெருக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறது அ.தி.மு.க. கடந்த பத்து ஆண்டுகளில் அ.தி.மு.க; தி.மு.க. இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் அரசின் சார்பில் புதிதாக மின் நிலையம் எதுவும் அமைக்கப்படவில்லை என்பதே உண்மை.
இருப்பினும் மின்வெட்டு தீவிரமடைய அடைய, மக்களின் கோபம் இந்தக் கட்சிகளை நோக்கித் திரும்பாமல், அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம், இடிந்தகரை மக்களை நோக்கித் திட்டமிட்டே திருப்பப் படுகிறது. தினமலர், காங்கிரசு அமைச்சர் நாராயணசாமி, ப.சிதம்பரம், பாரதிய ஜனதாக் கட்சி, கருணாநிதி, போலி கம்யூனிஸ்டுகள் ஆகிய அனைவரும் ஒரே குரலில் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தை நடத்துகிறார்கள்.
குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதைதான். கடுமையானதொரு மின்பற்றாக்குறையில் நம்மைத் தள்ளிய குற்றவாளிகள் இவர்கள்தான். அணு மின்சாரம்தான் இதற்குத் தீர்வு என்று அடுத்த படுகுழியையும் இவர்கள் நமக்குத் தயார் செய்கிறார்கள்.
“மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற!” என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்ற பல்வேறு தரப்பினரும், தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள். மின்வெட்டுக்கு எந்த விதத்திலும் பொறுப்பாக்க முடியாத, கூடங்குளம் இடிந்தகரை மக்களைக் குற்றவாளிகளாக்குகிறார்கள்.
இப்படி ஒருபுறம் மக்களின் கோபம் குறி தவறிப் போக, இன்னொரு புறம், பிப். 16 அன்று தமிழகத்தின் பிரபல நாளேடுகளில் வெளிவந்த ஒரு விளம்பரம் மின்வெட்டு பிரச்சினையின் முக்கியமானதொரு பரிமாணத்தை நமக்கு காட்டியது.
“தமிழகத்தில் மின்பற்றாக்குறையின் அளவு 30%. இந்தப் பற்றாக்குறையை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, இலட்சக்கணக்கான சிறு தொழில்களுக்கும், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் 65% மின்வெட்டு விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சென்னையிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மின்வெட்டே இல்லை. மேற்கூறிய நிறுவனங்கள் தமக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தோ, தேசியத் தொகுப்பிலிருந்தோ வாங்கிக் கொள்ள ஏதுவாக கம்பித் தடங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றைக் காட்டிலும் தமிழக மின்வாரியம் அளிக்கும் மின்சாரத்தின் விலை குறைவு என்பதால், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த மின்சாரத்தை ஒட்ட உறிஞ்சுகிறார்கள். மின்சாரம் என்பது தமிழக மக்களின் பொதுச்சொத்து என்பதை உணர்ந்து, தாங்கள் அனுபவித்து வரும் இச்சலுகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தானாக முன்வந்து விட்டுக் கொடுக்க வேண்டும்”
என்று தமிழகத்தின் ஜவுளி, இஞ்சினியரிங் ஆலைகள், பவுண்டரிகள் மற்றும் சிறுதொழில் முனைவோரின் சங்கங்கள் அந்த விளம்பரத்தில் கோரியிருந்தனர். இதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் செவி சாய்க்கவில்லை. அரசாங்கமும் இந்த அநீதிக்கு பதிலளிக்கவில்லை.
எனினும் இந்த விளம்பரம், தமிழக மின்வெட்டின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும், அதில் பளிச்சென்று தெரியும் மறுகாலனியாக்க கொள்கையையும் அம்பலப் படுத்துகிறது. நோக்கியா, ஹூண்டாய், போர்டு, ரெனால்ட், நிஸ்ஸான், டைம்லர், அப்போலோ டையர்ஸ், செயின்ட் கோபெய்ன், நோக்கியா, சீமன்ஸ், மோசர் பேர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், வாசல் முதல் கழிவறை வரை குளிரூட்டப்பட்ட ஆடம்பர மால்கள், ஐ.டி. நிறுவனங்களுக்காக உள்நாட்டுத் தொழில்கள் காவு கொடுக்கப்படுவதை எடுத்துக் காட்டுகிறது.
இனி தமிழகத்தின் மின் உற்பத்தி, விநியோகம் தொடர்பான சில அடிப்படையான புள்ளி விவரங்களைப் பார்ப்போம். 2010-11ஆம் ஆண்டில் தமிழகம் பயன்படுத்திய மொத்த மின்சாரம் 7499 கோடி யூனிட்டுகள். இதில் மாநில அரசுக்கு சொந்தமான மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 2578.40 கோடி யூனிட்டுகள். மீதமுள்ள 4920.60 கோடி யூனிட்டுகளை மத்திய மின் தொகுப்பிலிருந்தும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்தும் தமிழக அரசு வாங்கியிருக்கிறது.
மொத்த மின்சாரத்தில் 18.5% கம்பித்தட இழப்பு மற்றும் திருட்டுக்குப் போய் விடுகிறது. இதன் மூலம் ஆண்டு தோறும் வாரியத்துக்கு ஏற்படும் இழப்பு மட்டும் ரூ.2000 கோடி.
மாநில அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை குறைந்த பட்சம் யூனிட்டுக்கு 0.21 காசுகள் (நீர்மின்சக்தி). அதிக பட்சம் யூனிட்டு ரூ.2.14 காசுகள்(அனல்மின்சக்தி). தமிழகத்திலுள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழக அரசு விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் விலை குறைந்த பட்சம் யூனிட்டுக்கு ரூ.3.96. அதிகபட்சம் ரூ.17.00.
201112 கணக்கீட்டின்படி மின்வாரியம் உற்பத்தி செய்கின்ற மற்றும் வாங்குகின்ற மொத்த மின்சாரத்தின் சராசரி அடக்க விலை யூனிட் ஒன்றுக்கு ரூ.5.31. விற்பனை செய்கின்ற மின்சாரத்தின் சராசரி விலை யூனிட் ஒன்றுக்கு 3.81. இந்த வகையில் தற்போது யூனிட் ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1.50. இதனை ஈடு செய்வதற்குத்தான் மின் கட்டண உயர்வு என்று ஜெயா அரசு கூறுகிறது.
தமிழகத்தின் மின்சாரம் வீடுகள் 27%, விவசாயம் 20.93%, வணிக நிறுவனங்கள் 10.43%, தொழிற்சாலைகள் 34.92% என்றவாறு நுகரப்படுகிறது. வீடுகளுக்கு ரூ.1.85 முதல் ரூ.2.90 வரை; வணிக நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.5.05 முதல் ரூ.6.00 வரை; தொழில் துறைக்கு ரூ.3.30 முதல் ரூ.4.05 வரை என்ற விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதில் வீடுகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு குறைந்த பட்சம் ரூ.2.00 இல் தொடங்கி அதிகபட்சம் ரூ.5.75 என்று உயர்த்தவிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
மேற்கூறிய விவரங்களிலிருந்து பெறப்படும் உண்மை என்ன? மாநில அரசானது, மின் உற்பத்தி நிலையங்களைத் தானே நிறுவாமல், தனியார் முதலாளிகளிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதால்தான் மின்சாரத்தின் விலை பன்மடங்கு அதிகரிக்கிறது. தமிழக மின்வாரியத்தின் 9% மின்சாரத் தேவையை நிறைவு செய்து விட்டு, வாரியத்தின் வருவாயில் 35 சதவீதத்தை தனியார் முதலாளிகள் விழுங்கிவிடுகின்றனர் (இந்தியா டுடே, பிப்,29, 2012).
மின் கட்டண உயர்வுக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், ‘தனியார் முதலாளிகளிடமிருந்து மின்சாரம் வாங்குவது ஏன்?’ என்று மக்கள் கேட்டதற்கு, “அவ்வாறு வாங்கவில்லையென்றால், 18 மணி நேர மின்வெட்டை அமல்படுத்த வேண்டியிருக்கும்” என்று பதிலளித்திருக்கிறார் தமிழக மின்வாரியத்தின் நிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால் (தினமலர், ஜன30, 2012). தமிழக மின்வாரியத்தின் தற்போதைய கடன் 56,000 கோடி ரூபாய் என்றும் இவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த 56,000 கோடி கடன் வந்தது எப்படி? விவசாயத்துக்கான இலவச மின்சாரம்தான் இதற்கு காரணம் என்று பலரும் இதற்கு பதிலளிக்கக் கூடும். அது உண்மைதானா என்பதை விவரங்களிலிருந்து பின்னர் பார்ப்போம். விவசாயத்துக்கு ஆற்றுத் தண்ணீரை விவசாயிகளுக்கு இலவசமாகத் தரக்கூடாது என்று கூறுவதும், இலவச மின்சாரம் கூடாது என்று கூறுவதும் ஒன்றே. நீர்ப்பாசனம் என்பது விவசாயத்துக்கான அடிப்படைக் கட்டுமான வசதியாகும். இதனை செய்து தருவது அரசின் கடமை. கால்வாய் அல்லது ஏரிப்பாசன வசதிகளை அரசு செய்து தரத் தவறியதால், தனது சொந்தச் செலவில், கிணறு/பம்புசெட் போட்டுக் கொள்ளும் விவசாயிக்கு மின்சாரத்தை வழங்குவது அரசின் கடமை. அது இலவசமல்ல, சலுகையுமல்ல.
ஆறு வழிச்சாலைகள், சலுகை கட்டணத்தில் சரக்கு ரயில்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம்தண்ணீர் உள்ளிட்ட வசதிகள், குறைந்த வட்டியில் வங்கிக் கடன்கள், பிட்டர்டர்னர் முதல் பொறியியல், மேலாண்மைத் துறைகள் வரையிலான அனைத்திலும் தகுதியான நபர்களை உருவாக்கி முதலாளிகளுக்கு வழங்கும் கல்லூரிகள், ஏற்றுமதி மானியங்கள், இறக்குமதி வரிச்சலுகைகள் என மக்களின் வரிப்பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக் கொட்டுகின்ற அரசு, இவற்றையெல்லாம் முதலாளிகளுக்கான ‘இலவசம்’ என்று அழைப்பதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
யூனிட் 17 ரூபாய் வரை விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்தை, ரூ.3.30 விலையில் கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தமிழக அரசு, இதனை மானியம் என்று கூறுவதில்லை. அதனால் ஏற்படும் இழப்பையும் கணக்கிட்டுக் கூறுவதில்லை. இதைத்தான் மின்வெட்டுக்காக சிறு தொழிலதிபர்கள் கொடுத்துள்ள விளம்பரம் அம்பலப்படுத்துகிறது.
அதேபோல, கம்பித்தட இழப்பு என்று கூறப்படும் சுமார் 18.5 சதவீதத்தில் பெரும்பகுதி ஆலை முதலாளிகள் செய்யும் மின்சாரத் திருட்டாகும். துணை மின்நிலையங்களிலிருந்தே நேரடியாகவே மின்சாரம் திருடப்பட்டாலும், அந்த மின்சாரமும் ‘இழப்பு’ என்று காந்திக் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகிறது. இவை ஒருபுறமிருக்க, “தகவல் தொழில் நுட்பத்தின் துணையுடன் இயங்கும் தொழில்களுக்கான (ITES) மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 5 ரூபாயிலிருந்து ரூ.3.50 ஆக குறைக்க வேண்டும்” என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது தமிழ்நாடு மின்வாரியம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மின்சாரத்தின் விலை என்ன என்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ள யாருமறியாத இரகசியம். இவை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பற்றிய விவரங்கள்.
இனி வாங்கப்படும் மின்சாரத்துக்கு வருவோம். மின் வாரியம் அளிக்கும் விவரங்களின்படியே, அரசாங்க மின்சாரத்தின் விலையை விட தனியார் மின்சாரத்தின் கொள்முதல் விலை பன்மடங்கு அதிகமாக இருப்பதுதான் மின் வாரியத்தின் நட்டத்துக்கு காரணம். இன்டிபென்டென்ட் பவர் புரொடியூசர்ஸ் (சுயேச்சையான மின் உற்பத்தியாளர்கள்) என்று அழைக்கப்படும் தனியார் முதலாளிகளிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து கொண்டும், மெர்ச்சென்ட் பவர் கார்ப்பரேசன் (வணி�
துல்ஹஜ் – 10, 11, 12, 13 ஆம் தினங்களில் வழங்கப்பட வேண்டிய உழ்ஹிய்யா ஒரு விளக்கம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி

நபி இப்ராஹீம்(அலை) அவர்களின் மகன் இஸ்மாயில்(அலை) அவர்களை அறுத்துப் பலியிடுமாறு அல்லாஹ் கனவின் மூலம் இப்ராஹீம்(அலை) அவர்களுக்குக் கட்டளையிட்டான். இறைவனின் இக்கட்டளையை நிறைவேற்ற முற்பட்டபோது அல்லாஹ் அதனைத் தடுத்து ஓர் ஆட்டைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இவர்களின் இந்தத் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் மற்றவர்களும் ஈதுல் அழ்ஹா தினத்தில் பிராணியைப் பலியிட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிடுகிறான். அல்குர்ஆனில் பின்வருமாறு இந்த விபரங்கள் கூறப்பட்டுள்ளன.

“எனவே, சகிப்புத்தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.

அவருடன் இணைந்து செயற்படும் பருவத்தை (இஸ்மாயீலாகிய) அவர் அடைந்த போது, “என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?” எனக் கேட்டார். அ(தற்க)வர், “என்னருமைத் தந்தையே! உங்களுக்கு ஏவப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்னைப் பொறுமையாளர்களில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்!” என்று கூறினார்.

அவ்விருவரும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (மகனாகிய) இவரை நெற்றி நிலத்தில் படக் கிடத்திய போது,

இப்றாஹீமே! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்திவிட்டீர் என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்.

நிச்சயமாக இது ஒரு தெளிவான சோதனையேயாகும்.

இவருக்குப் பகரமாக, மகத்தான ஒரு பலிப் பிராணியை ஆக்கினோம்.

பின்வருவோரில் அவர் மீது (புகழை) விட்டு வைத்தோம்”. (37:101-108)

குர்பானியின் நோக்கம் இறையச்சம் என்பதைத்தவிர வேறில்லை என்பதைப் பின்வரும் அல்குர்ஆன் வசனங்கள்; தெளிவு படுத்துகின்றன.

“குர்பானியின் மாமிசமோ, அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை அடைவதில்லை. எனினும், உங்களின் இறையச்சமே அவனை அடைகிறது”. (22:37)

உயர்ந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதன் அவசியத்தை மற்றுமொரு திருமறை வசனம் எடுத்துக் கூறுவதுடன் நபி(ஸல்) அவர்களைக் குர்பானி கொடுக்குமாறும் கட்டளையிடுகிறது.

“உமது இறைவனைத் தொழுது குர்பானி கொடுப்பீராக” (108:02)

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இக்கட்டளைக்கு அடிபணிந்து தமது வாழ்வில் குர்பானி எனும் அமலை நிறைவேற்றி யுள்ளார்கள்.

“நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள கறுப்புக் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளைத் தன் கரத்தால் அறுத்துப் பலியிட்டார்கள்”.
(அனஸ்(ரலி) – புகாரி, முஸ்லிம்)

இந்த வகையில் நபி(ஸல்) அவர்களின் உம்மத்தினரும் இக்கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குர்பானி கொடுப்பவர் செய்யக் கூடாதவை:
ஒருவர் குர்பானி கொடுப்பதாக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும்வரை நகம், முடி ஆகியவைகளை நீக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்;
“உங்களில் ஒருவர் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்பினால் துல் ஹஜ் மாதம் தலைப்பிறை முதல் அதனை நிறைவேற்றும் வரை தனது முடி, நகம் என்பவற்றைக் களைவதைத் தவிர்த்துக்கொள்ளட்டும்.
(உம்மு ஸல்மா(ரலி), முஸ்லிம்)

குர்பானிப் பிராணிகள்:
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளையே அறுத்துப் பலியிட வேண்டும். இவை அல்லாத ஏனைய பிராணிகளை அறுத்துப் பலியிட்டால் “உழ்ஹிய்யா” நிறைவேறாது.

“ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் (ஆடு, மாடு, ஒட்டகம்) நாற்கால் பிராணிகளிலிருந்து அவர்களுக்கு அவன் உணவாக கொடுத்தவற்றின் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் திருப்பெயரை அவர்கள் கூறுவதற்காக குர்பானியை நாம் ஏற்படுத்தினோம்”. (22:34)

பிராணியின் வயதெல்லை :
குர்பானி கொடுக்கப்பட வேண்டிய பிராணிகளில் ஒட்டகத்திற்கு ஐந்து வயதும், ஆடு, மாடுகளுக்கு இரண்டு வயதும் பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

“முஸின்னா”வைத் தவிர வேறு எதனையும் அறுக்காதீர்கள். அது கிடைக்க வில்லையானால் ஆறுமாதக் குட்டியைக் கொடுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், நஸஈ, இப்னுமாஜா, அஹ்மத் )

இங்கு “முஸின்னா” என்று கூறப்படும் வார்த்தை ஆடு மாட்டில் இரண்டு பல் முளைத்த பிராணிகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது. ஒட்டகம் ஐந்து வயது முடிந்தவுடனும், ஆடு, மாடு இரண்டு வயது முடிந்தவுடனும் இரண்டு பற்கள் வருவதால், ஒட்டகம் ஐந்து வயது, ஆடு, மாடு இரண்டு வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகின்றது.

“முஸின்னா” கிடைக்காவிட்டால் ஆறுமாதக் குட்டியாட்டை அறுப்பது இந்த ஹதீஸில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் பிறிதொரு ஹதீஸின் மூலம் அது ஒரு தோழருக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சலுகை என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

“இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச்சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்துகொள்வாரோ அவர் நமது வழியில் நடந்துகொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்தினருக்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபுர்தா(ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்துவிட்டார். அவர் (நபி(ஸல்) அவர்களிடம்) என்னிடத்தில் முஸின்னாவை விட சிறந்த ஆறுமாதக் குட்டியுள்ளது (அதைக் குர்பானி கொடுக்கலாமா) என்றார். முன் அறுத்ததிற்கு இதைப் பகரமாக்குவீராக (அறுப்பீராக). எனினும், உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இதை (குர்பானிகொடுக்க) அனுமதியில்லை” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (பரா(ரலி) – புகாரி, முஸ்லிம்)

இந்த ஹதீஸில் நபித்தோழர் “முஸின்னா”வை விட சிறந்த ஆறுமாதக்குட்டி உள்ளது என்ற கூற்று நபி(ஸல்) அவர்கள் “முஸின்னா”வைத்தான் குர்பானி கொடுக்க கட்டளையிட்டுள்ளார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. உமக்குத்தவிர வேறு எவருக்கும் இது அனுமதியில்லை என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளையும் முஸின்னாவைத் தான் கொடுக்கவேண்டும் என்பதை மிகத்தெளிவாக விளக்குகின்றது.

அறுத்துப் பலியிடத் தகாதவைகள்:
உழ்ஹிய்யாக் கொடுக்கப்படும் பிராணி குறையற்றுக் காணப்படல் வேண்டும்.

1) வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய்
2) வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருடு
3) வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம்
4) மிகவும் மோசமாக மெலிந்திருத்தல் போன்ற குறைகள் இருத்தல் கூடாது. (திர்மிதி)

அறுத்துப் பலியிடும் நேரம்:
ஹஜ்ஜுப் பெருநாள் சூரியன் உதயமாகி, பெருநாள் தொழுகையை நிறைவேற்றி முடித்தது முதல் அய்யாமுத் தஷ்ரீகின் கடைசி நாள் (துல்ஹஜ் மாதம் பதின்மூன்றாம் நாள்) வரை “உழ்ஹிய்யாவை” நிறைவேற்றலாம். பெருநாள் தொழுகைக்கு முன்னர் அறுக்கப்படுவது உழ்ஹிய்யாவாகக் கணிக்கப்பட மாட்டாது.

“நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் “யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டுக் குர்பானி கொடுக்கின்றாரோ, அவர்தான் அக்கடமையை நிறைவேற்றியவராவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ, அவர் கடமையை நிறைவேற்றியவராக மாட்டார்” என்று குறிப்பிட்டார்கள். (பரா(ரலி) – புகாரி)

குர்பானிப் பிராணிகளில் ஆணும், பெண்ணும்:
பெட்டை ஆடுகளையும், பசுக்களையும், கிடாய்களையும் முஸ்லிம்கள் வித்தியாசமாகவே பார்க்கின்றனர். சிலபகுதிகளில் பெட்டை ஆடுகள் சாப்பிடுவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டது போன்று கருதுகின்றனர். சாதாரண நேரத்தில் பெட்டை ஆடுகளைச் சாப்பிடக் கூடாது எனக் கருதக் கூடியவர்கள் குர்பானி கொடுப்பதற்கு பெட்டை ஆடுகள் அறவே தகுதியற்றவை என்று நினைக்கின்றனர்.

இது பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.

உண்பதற்கு அனுமதிக்கப் பட்டவைகளில் கிடாயும், பெண்ணாடும், காளையும் பசுவும், சேவலும் கோழியும் சமமானவைதான் என்பதை முஸ்லிம்கள் முதலில் நம்ப வேண்டும். பறவைகளில் இதை ஏற்கக் கூடியவர்கள் கால்நடைகளில் மட்டும் ஏற்கத் தயங்குகின்றனர். குர்பானி கொடுப்பதற்குக் காளையும் கிடாயும்தான் தகுதியானவை என்று திருக்குர்ஆனிலும் கூறப்படவில்லை; நபி(ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலும் கூறப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், “ஜத்உ” (கன்று) என்று ஆண் பாலில் கூறப்பட்டுள்ளது போன்றே, “ஜத்அத்” என்று பெண் பாலிலும் கூறப்பட்டுள்ளது. எனவே, ஆண் கால்நடைகளைத்தான் உழ்ஹிய்யாக் கொடுக்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

கூட்டுச் சேர்ந்து கொடுத்தல்:
உழ்ஹிய்யாவுக்காக அறுத்துப் பலியிடப்படும் பிராணி ஒட்டகம் அல்லது மாடாக இருப்பின் ஏழு நபர்கள் கூட்டாகச் சேர்ந்து கொடுக்க முடியும். என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.

“ஹுதைபியா என்ற இடத்தில் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேர் சேர்ந்து ஒரு மாட்டையும் நாங்கள் அறுத்துப் பலியிட்டோம்”
(ஜாபிர்(ரலி) – முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)

குர்பானிப் பிராணி ஆடாக இருப்பின் ஒருவர் தமக்காகவும், தமது குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டை அறுத்துப் பலியிட முடியும்.

“நபி(ஸல்) அவர்கள் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது என்று அபூ அய்யூப்(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒர் ஆட்டையே குர்பானி கொடுப்பார்.
(அதாஃ பின் யஸார்(ரலி) – திர்மிதி, இப்னு மாஜா முவத்தா)

அறுக்கும் முறை:
1) ஆடு-மாடுகளை ஒருக்கணித்து படுக்க வைத்து அறுக்க வேண்டும். (முஸ்லிம்)
2) ஒட்டகங்களை நிற்க வைத்து அறுக்க வேண்டும். (முஸ்லிம்)
3) அறுக்கும் போது “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” என்று கூறவேண்டும். (புகாரி)

தாமே அறுப்பது நபிவழி:
உழ்ஹிய்யாக் கொடுப்பவர் அறுக்கத் தெரிந்தவராய் இருந்தால் – தனது பிராணியைத் தானே அறுத்தல் சுன்னத்தாகும்.

நபியவர்கள் – அல்லாஹ்விற்காக அல்லாஹ்வின் பெயர் கூறித் தக்பீர் மொழிந்து “இறைவா! எனக்காகவும், உழ்ஹிய்யாக் கொடுக்காத என் உம்மத்தினர்களுக்காகவும்” என்று கூறி ஓர் ஆட்டை அறுத்தார்கள். (அபூதாவூத், திர்மிதீ)

உழ்ஹிய்யா மாமிசத்தைப் பங்கிடல்:
“உழ்ஹிய்யாக் கொடுப்பவர் தனது உழ்ஹிய்யாவிலிருந்து தானும் சாப்பிட்டு தனது உறவினர்களுக்கும் அன்பளிப்புச் செய்து ஏழைகளுக்கு தர்மமாகக் கொடுத்தல் சுன்னத்தாகும்.

“அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்: வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்”. (22:28)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்;
“மாமிசத்தை நீங்களும் சாப்பிட்டுப் பிறருக்கும் உண்ணக் கொடுங்கள், உங்களுக்காகச் சேமித்தும் வையுங்கள்”. (புகாரி, முஸ்லிம், நஸாயி)

குர்பானி மாமிசத்தை காபிர்களுக்குக் கொடுக்க எந்தத் தடையுமில்லை.

“(குர்பானிக்கான) ஒட்டகங்களை அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாக உங்களுக்கு நாம் ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மை உண்டு. எனவே, (அது உரிய முறையில்) நிற்கும் போது அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி (அறுத்து) விடுங்கள். அது தனது விலாப் புறங்களின் மீது சாய்ந்து விட்டால் அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். உள்ளதைக் கொண்டு திருப்தியடைபவனுக்கும், யாசிப்பவனுக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு இவ்வாறே அவற்றை உங்களுக்கு நாம் வசப்படுத்தியுள்ளோம்”. (22:36)

இந்த அல்குர்ஆன் வசனத்தில் பொதுவாக ஏழைகள் என்றும், யாசிப்பவர்கள் என்று஀
What Stops Us From Helping Others?

Nine Children were standing on the track to participate in a running event.
* Ready! * Steady! * Bang !!!
With the sound of Toy pistol, All Nine girls started running.
Hardly had they covered ten to fifteen steps, when one of the smaller girls slipped and fell down, due to bruises and pain she started crying.
When the other Eight girls heard the little girl cry they stopped running, stood for a while and turned back…
Seeing the girl on the track they all ran to help.
One among them bent down, picked her up and kissed her gently and enquired as to how she was.
They then lifted the fallen girl pacifying her.
Two of them held her firmly while all eight joined hands together and walked together towards the winning post…
There was pin drop silence at the spectator's stand.
Officials were shocked.
Slow claps multiplied to thousands as the spectators stood up in appreciation.
Many eyes were filled with tears

YES. This happened in Hyderabad [INDIA], recently!
The sport was conducted by National Institute of Mental Health.

All these special girls had come to participate in this event they were spastic children.
Yes, they were Mentally Challenged..

What did they teach the WORLD?
Teamwork?
Humanity?
Equality among all??

We can't do this!!! Is it because we have brains??



H ABDUR RAQEEB
Convenor, National Commitee on Islamic Banking
General Secretary, Indian Centre for Islamic Finance (ICIF)
D-309, Abul Fazl Enclave, Jamia Nagar,New Delhi-110025
Interesting advice....... Dr. Virend Somers, is a Cardiologist from the Mayo Clinic, who is lead author of the report in the July 29, 2008 issue of the Journal of the American College of Cardiology. Most heart attacks occur in the day, generally between 6 A.M.and noon. Having one during the night, when the heart should be most at rest, means that something unusual happened. Somers and his colleagues have been working for a decade to show that sleep apnea is to blame. 1. If you take an aspirin or a baby aspirin once a day, take it at night. The reason: Aspirin has a 24-hour "half-life"; therefore, if most heart attacks happen in the wee hours of the morning, the Aspirin would be strongest in your system. 2. For your info., Aspirin lasts a really long time in your medicine chest for years, (when it gets old, it smells like vinegar). Please read on. Something that we can do to help ourselves - nice to know. Bayer is making crystal aspirin to dissolve instantly on the tongue. They work much faster than the tablets. Why keep Aspirin by your bedside? It's about Heart Attacks - There are other symptoms of a heart attack, besides the pain on the left arm. One must also be aware of an intense pain on the chin, as well as nausea and lots of sweating; however, these symptoms may also occur less frequently. Note: There may be NO pain in the chest during a heart attack. The majority of people (about 60%) who had a heart attack during their sleep did not wake up. However, if it occurs, the chest pain may wake you up from your deep sleep. If that happens, immediately dissolve two aspirins in your mouth and swallow them with a bit of water. Afterwards:
- Call for medical help. - Phone a neighbor or a family member who lives very close by. - Say "heart attack!" - Say that you have taken 2 Aspirins. - Take a seat on a chair or sofa near the front door, and wait for their arrival of ambulance. ...DO NOT LIE DOWN! A Cardiologist has stated that if each person after receiving this e-mail, sends it to 10 people, probably one life could be saved! I have already shared this information. What about you? Please do forward this message. It may save lives!

With Best Wishes,

Abraham, Aizawl.
Creativity with interesting and spectacular food

Other than the US $, nothing is made in the USA anymore!

This is what a candidate spoke in USA while making a speech for up coming election
Other than the US $$, nothing is made in the USA anymore!
Actually, this is pretty sad.


please scroll down and read

John Smith started the day early having
set his alarm clock

(MADE IN JAPAN ) for 6 am ..

While his coffeepot

(MADE IN CHINA)

was perking, he shaved with his

electric razor

(MADE IN HONG KONG)

He put on a

dress shirt

(MADE IN SRI LANKA),

designer jeans

(MADE IN SINGAPORE)

and

tennis shoes

(MADE IN KOREA)

After cooking his breakfast in his new

electric skillet

(MADE IN INDIA)

he sat down with his

calculator

(MADE IN MEXICO)

to see how much he could spend today. After setting his

watch

(MADE IN TAIWAN )

to the radio

(MADE IN INDIA )

he got in his car

(MADE IN GERMANY )

filled it with GAS

(from Saudi Arabia )

and continued his search

for a good paying AMERICAN JOB.

At the end of yet another discouraging

and fruitless day

checking his

Computer

( made in MALAYSIA ),

John decided to relax for a while.

He put on his sandals

(MADE IN BRAZIL ),

poured himself a glass of

wine

(MADE IN FRANCE )

and turned on his

TV


(MADE IN INDONESIA ),

and then wondered why he can't

find a good paying job

in AMERICA


AND NOW HE'S HOPING HE CAN GET HELP FROM A PRESIDENT

MADE IN KENYA

Monday, October 15, 2012

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் கைதிகள்
குறித்து ஆய்வு

This is what happens to Muslims in India

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் கைதிகள்
குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, காவல்துறையினர் மத்தியில் முஸ்லிம்
எதிர்ப்பு மேலோங்கியுள்ள கடும் அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்துள்ளது.

Tata Institute Of Social Science (TISS) எனப்படும் உயர் கல்வி

நிறுவனத்தின் பேராசிரியர்கள் விஜய் ராகவன் மற்றும் டாக்டர் ரோஷினி நாயர்
ஆகியோர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் சுமார் 141 பக்கங்களை கொண்ட
ஆய்வறிக்கை இதன் பல்வேறு பரிமாணங்களை ஆய்ந்துள்ளது (இந்த ஆக்கத்தின்
முடிவில் முழுமையான வடிவத்தில் அந்த ஆய்வரிக்கை வழங்கப்பட்டுள்ளது ).

மகாராஷ்டிரா முழுவதிலும் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள 339 முஸ்லிம்
சிறைக்கைதிகளை, பெண்கள் உள்ளிட்டு, பேட்டி எடுத்து ஆய்வு செய்ததில் பல
நடுங்க வைக்கும் அநீதிகளை அவர்கள் எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.

குஜராத் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கு அடுத்ததாக, மாநிலத்தில்
உள்ள முஸ்லீம் சனத்தொகைக்கு எதிராக முஸ்லீம் ஜெயில் கைதிகளின் எண்ணிக்கை
விகிதாச்சாரத்தில் மிகவும் அதிகமாக உள்ளதும் இந்த ஆய்வறிக்கை மூலம்
தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா முழுவதிலும் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள 339 முஸ்லிம்
சிறைக்கைதிகளை, பெண்கள் உள்ளிட்டு, பேட்டி எடுத்து ஆய்வு செய்ததில் பல
நடுங்க வைக்கும் அநீதிகளை அவர்கள் எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.

மாநிலத்தில் உள்ள முஸ்லீம் சனத்தொகைக்கு எதிராக முஸ்லீம் ஜெயில்
கைதிகளின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தில் குஜராத் மற்றும் கேரளா ஆகிய இரு
மாநிலங்களில் உள்ளது போன்ற மிக அதிகமாக உள்ள மற்றுமொரு மாநிலமாக
மகாராஷ்டிரா திகழ்வது தெரியவந்துள்ளது.

கைதாகும் அப்பாவி, ஏழை, படிப்பறிவில்லா முஸ்லீம்களின் அவல நிலை:

குறிப்பாக முஸ்லீம் கைதிகளில் பெரும்பாலோர், எந்தவித குற்ற பின்னணியோ
அல்லது சமூக விரோத இயக்க தொடர்புகளோ இல்லாதவர்கள் என்பதும் இவர்களில்
கால்வாசி பேர் தங்களுக்காக வாதாட ஒரு வக்கீலை கூட அமர்த்த வசதியில்லாத
ஏழைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா அரசின் புள்ளிவிவரப்படி மொத்த ஜனத்தொகையில் முஸ்லிம்களின்
பங்கு 10.5% ஆகும். ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள ஜெயில்களில் உள்ள
முஸ்லிம்களின் விகிதச்சாரமோ மொத்த கைதிகளில் 32.3% ஆகும். அதாவது,
முஸ்லீம் ஜெயில் கைதிகளின் சதவீதம், மாநிலத்தின் முஸ்லிம்களின் சதவீதத்தை
விட மூன்று மடங்கு அதிகமாகும். இதில் 5.2% முஸ்லிம் பெண் கைதிகளும்
அடக்கம்.

பெண் கைதிகளை பற்றி குறிப்பிடும் இந்த ஆய்வறிக்கை, முஸ்லீம் ஆண் கைதிகளை
காட்டிலும் அதிகமாக அவர்கள் சிறைச்சாலைகளில் துன்புறுத்தப்படுவதையும்
சுட்டி கட்டியுள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் மட்டும் முஸ்லிம்
கைதிகளின் சதவிதம் 55.1% ஆகும். இது மகாராஷ்டிரா முஸ்லீம்களின்
ஜனத்தொகையை விட 5 மடங்கு அதிகம்.

முஸ்லிம் கைதிகளில் 96% பேர் குற்றமற்ற அப்பாவிகள். அதிலும் சுமார் 65.5%
முஸ்லீம் கைதிகள் 18 முதல் 30 வயதுடயவர்களே சுமார்.

இவர்களில் 58.2% கைதிகள் மட்டுமே அடிப்படை கல்வியை முடித்தவர்கள். சுமார்
31.4% சதவீதம் முஸ்லீம் கைதிகள் படிபறிவில்லாதவர்கள் எனவும் தெரிய
வந்துள்ளது.
இந்த அப்பாவி முஸ்லிம் கைதிகளில் 25% கைதிகள், தங்களுக்கான வக்கீல்கள்
கூட வைத்துக்கொள்ள முடியாத சூழலில் உள்ளனர்.

கொடுமையிலும் கொடுமையாக முஸ்லிம் கைதிகளில் 44% கைதிகளுக்கு தமது
குடும்பத்தினரை உடனடியாக சந்திக்க அனுமதி மறுக்கபடுகிறது. மேலும் ஒரு 38%
கைதிகளுக்கு உறவினர்களை சந்திக்கவும் அனுமதி தரப்படுவதேயில்லை.

முஸ்லிம் கைதிகளில் 23% கைதிகளுக்கு, தாங்கள் எந்த சிறையில்
அடைக்கப்பட்டுள்ளோம், என்பது கூட தெரியவில்லை.

வேடிக்கை என்ன வென்றால், 50% கைதிகள் வரும் 2013ம் ஆண்டில் விடுதலயாகவுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள மொத்த முஸ்லிம் கைதிகளில் 47% பேர் மீது மட்டும் தான்
குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகியுள்ளது.

இவர்கள் யாரும் பெரும் குற்றமிழைத்தவர்கள் அல்ல என்றும், தேடுதல் வேட்டை
என்ற பெயரிலும் விசாரணைகள் என்ற பெயரிலும் பொய்யான குற்றச்சாட்டுக்களில்
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர்.

நீதி விசரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 47.4% கைதிகள் மீது மட்டுமே
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் வெறும் 3.8%
கைதிகளின் விசாரணை மட்டுமே தீர்ப்பு வழங்கும் நிலையில் உள்ளது.

முஸ்லீம் கைதிகள் இழைக்கும் குற்றங்களும் காவல்துரையினரின் பாரபட்சமும்:

முஸ்லீம்களின் குற்ற செயல்கள் பற்றி கூறுகையில், “முஸ்லீம் கைதிகள்
ஈடுபடும் பெரும்பாலான குற்றங்களில் குடும்ப சண்டைகள், பணம் மற்றும்
சொத்து விவகாரங்கள், காதல் பிரச்சனைகள், நண்பர்களுடனான மோதல்கள் மற்றும்
பழிக்கும் பழி ஆகியவைகளாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த கைதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட
15 விவகாரங்களிலும் காவல்துறை அத்துமீறலும், கொடுமையும் தெளிவாக
தெரிகிறது”, என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முஸ்லீம் கைதிகள் தெரிந்தும்,
தெரியாமலும், பழிவாங்கும் நோக்கிலும் இழைக்கும் பல குடும்ப மற்றும் சமூக
குற்றங்களே அவர்களை சிறைச்சாலைகளின் இந்த கொடும நிலைகளுக்கு ஆளாகி
விடுகிறது.

எளிதாக சமரசமாக சென்று விடக்கூடிய பல குற்றங்களில் முஸ்லீம் கைதிகள்
காவல்துறையின் பாரபட்ச போக்கினால் நீண்ட கால சிறை தண்டனைகளில் சிக்க
வைக்க படுகின்றனர்.

முஸ்லீம்கள் செய்ய வேண்டியது என்ன?

முஸ்லீம்கள் இவ்வாறு சிறை சென்று கொடுமை அனுபவிக்க காவல்துரையினரின்
பாரபட்சம் முதல் காரணியாக இருந்தாலும், முஸ்லீம்களின் படிப்பறிவின்மை,
ஏழ்மை, நீதி இல்லாத நடத்தை, மன்னிக்க விரும்பாத பழி வாங்கும் போக்கு
யாவையும் இந்த அவல நிலைக்கு காரணிகள் என்பதையும் மறுக்க இயலாது.

இதற்கு முதலாவதாக செய்ய வேண்டியது, ஒவ்வொரு பள்ளிவாசல் ஜமாத்திலும் உள்ள
இளைஞர்கள் குறித்த தகவல்களான, கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்பு
குடும்பசூழல் குறித்த தரவுகளையும் சேகரித்தல் வேண்டும்.

அடுத்ததாக சமூக சேவை எண்ணம் கொண்ட ஒரு குழுவினர் இந்த இளைங்கர்களுக்கு
எழும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தகுந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டலை வழங்க
துவங்க வேண்டும்.

இதற்கு அடுத்த படியாக, கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், குடும்ப வாழக்கை
ஆகிவற்றில் உதவியும் செய்ய ஆவன செய்தல் வேண்டும்.

குறிப்பாக குடும்பங்களில் எழும் தீவிரமான பிரச்சனைகளை இந்த ‘சமூக
சேவகர்களிடம்’ பகிர்ந்து கொள்ள யாவரையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

அடுத்ததாக காவல்துறை மற்றும் அரசுத்துறைகளுடன் நல்ல தொடர்பும் அனுபவமும்
பெற்றவர்களை வைத்தும் குறிப்பாக டாக்டர்கள், வக்கீல்கள் மற்றும் அரசு
ஊழியர்களை கொண்ட ஒரு சமூக சேவை குழுவை அமைத்து, பிரச்சனைகள் எழும் பொது
தீர்வு கிடைக்க முயற்சி செய்ய வேண்டும்.

அரசுத்தரப்பில் முஸ்லீம்களுக்கு செய்ய வேண்டியது என்ன?

அரசுத்தரப்பில் முஸ்லீம்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி அவர்களுக்கு
கல்விக்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டியதுதான். ஏனெனில், இது ஒன்றே
முஸ்லீம்களின் பிரச்சனைகளுக்கு நீண்ட கால தீர்வாக அமைய முடியும்.

இதற்காக அரசு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கூட பெரிய அளவில் செலவு செய்ய
வேண்டாம். காரணம் இப்போதுள்ள முஸ்லீம் மதரசாக்களில் இலவசமாக வழங்கப்படும்
இஸ்லாமிய பாட திட்டத்தோடு இணைந்த பொதுக்கல்வியை வழங்க அரசு உதவினாலே இது
பெரிய அளவில் வெற்றி பெரும்.

அடுத்ததாக, முஸ்லீம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தொழில் முனைவு
ஆகிவற்றிக்கு அரசு சிறு அளவிலாவது உதவிகளை செய்ய துவங்க வேண்டும்.

முஸ்லீம் இளைஞர்கள் அதிக அளவில் பிந்தங்குவது உயர் கல்வியிலும், தொழில்
கல்விலும் தான். எனவே அவர்களை உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி
நிலையங்களில் பயிற்சி பெற வசதியான முறையில் முஸ்லீம்கள் அதிகம் வாழும்
பகுதிகளில் இத்தகு கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களை அமைத்தல் வேண்டும்.

குறிப்பாக, காவல்துறை மற்றும் நீதித்துறை மற்றும் இன்ன பிற
அரசுத்துறைகளில் முஸ்லீம்களை அதிக அளவில் நேரடியாக தேர்ந்தெடுக்க ஆவன
செய்யவேண்டும். இதற்கான முதல் படியாக அரசுப்பணி தேர்வாணையங்களில்
முஸ்லீம் அதிகாரிகளை கண்டிப்பான முறையில் பணியிலமர்த்த ஏற்பாடுகள்
செய்தல் வேண்டும்.

முக்கியமாக, முஸ்லீம்களை கொள்கை வகுப்பாலர்களாக அரசின் பல்வேறு
மட்டங்களில் பணியிலமர்த்த அரசு ஆவண செய்தல் வேண்டும். குறைந்த பட்சம்
முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகள் குறித்த திட்டங்களை நிறைவேற்றும்
துறைகளைலாவது முஸ்லீம் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படல் வேண்டும்.

முஸ்லீம்கள் பிரச்சனையின் அங்கமல்ல, தீர்வின் அங்கம்!!!

அரசின் மனப்போக்கில் ஏற்பட வேண்டிய மாற்றங்களில் முக்கியமானது
என்னவென்றால், “முஸ்லீம்கள் பிரச்சனையின் அங்கமல்ல, தீர்வின் அங்கம்”,
என்பதை உணரத்தலைப்படுவது தான்.

குறிப்பாக இந்தியா தற்போது இருக்கும் சூழலில் அரசியல் ரீதியாகவும்,
போருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல்வேறு சவால்களை தேசம்
எதிர்கொண்டுள்ளது யாவரும் அறிந்ததே.

அமேரிக்கா போன்ற வல்லரசுகளின் சர்வதேச அரசியல் நிர்பந்தம், சீனா,
பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் சூழ்ச்சி, உள்நாட்டில் மாவோயிஸ்ட்களின்
கிளர்ச்சி, ஜனநாயக அமைப்பில் ஊழல், நிர்வாகத்துறை, நீதித்துறை மற்றும்
அரசுத்துறைகளில் உள்ள அலட்சியம் மற்றும் அசமந்தம், நூறு கோடி மக்களின்
நலனை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஆகிவற்றோடு மல்லுக்கட்டும் இந்த
நேரத்தில் இந்தியாவின் மிகபெரிய சிறுபான்மையினரான முஸ்லீம் சமுகத்தை
அலட்சிபடுத்துவதால், பெருந்தீமை தான் விளையும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்கள் சமர்பித்த சச்சார்
அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கைகளை எடுத்து முஸ்லீம்களின்
கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிவகைகளை ஆராய்ந்து அரசுகள்
செயல்படுத்த வேண்டும்.

முஸ்லீம்களின் கல்வி, பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு ஆகிவற்றில் அரசுகள்
உரிய கவனம் செலுத்தினால், சுதந்திர இந்தியாவில் மிகவும் பிற்பட்ட
நிலைக்கு ஆளாகி, சிறைப்பறவைகளாக மாறும் அவல நிலையில் துன்புறும் ஒரு
பெரும் சமுதாயத்தை இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உறுதுணையான ஒரு
சமுதாயமாக மாற்ற இயலும்.

S.AYUB ALI

அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================

Source: TISS Report: Prisons Muslims Study Maharashtra

அதிரை தமீம் அன்சாரி கைது – முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரானது?!
கடந்த 17.09.2012 அன்று கியூபிரான்ச் போலிஸாரால் பாக்கிஸ்தான் உளவாளி
என்று அதிராம் பட்டிணத்தை சேர்ந்த தமீன் அன்சாரி என்பவர் கைது
செய்யப்பட்டார்?
எங்கே கைது செய்தார்கள் என்பதையே போலிஸார் குழப்புகிறார்கள். 1.TVS Toll
Gateல் கைது. 2. திருச்சி ஏர்போட்டில் கைது 3 – திருச்சி பேருந்து
நிலையத்தில் கைது.
இப்படி ஆரம்பமே குழப்பத்தில் உள்ளது.
இந்தியா டுடே(oct3-2012 உளவு உண்மையா? கதையா?),
ஜூனியர் விகடன்(30.09.12 – அன்சாரி அப்பாவியா?),
குமுதம் ரிப்போர்ட்டர்(30.09.12 – தமிழகம் முழுக்க உளவாளிகள்)
மேற்கண்ட இதழ்களில் இருந்து அன்சாரி குறித்த தகவல்களின் அடிப்படையில்
இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அன்சாரி யார்? ஒரு சமூக ஆர்வலர், முஸ்லிம் அடையாளங்களை துறந்தவர்,
உருளைகிழங்கு, வெங்காய வியாபாரி, இல�